tag:blogger.com,1999:blog-59152298304982152732024-03-05T07:34:14.372+01:00அடுத்த வீட்டு வாசம் அடுத்த வீட்டு வாசம் koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.comBlogger348125tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-50059218453743913102017-10-09T15:39:00.000+02:002017-10-09T15:39:01.579+02:00பார்த்திபன் கனவு - புதினம் -77 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 40 -கனவு நிறைவேறியது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: xx-small;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0pt2Mx5uEf19HN6YkLxnLM71Z4_Inyyba6onh3giE57O_JrlE1GQgTrUq8SL7vWOAuc3IRAg9U37e8FJJFs3jwQw7-bk-Lhj3T9JrkhjMWnvsnzDhd_KM-pmoFCsCJ5bFyy_yql7ws_eG/s1600/ss_3168348f.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="483" data-original-width="636" height="243" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0pt2Mx5uEf19HN6YkLxnLM71Z4_Inyyba6onh3giE57O_JrlE1GQgTrUq8SL7vWOAuc3IRAg9U37e8FJJFs3jwQw7-bk-Lhj3T9JrkhjMWnvsnzDhd_KM-pmoFCsCJ5bFyy_yql7ws_eG/s320/ss_3168348f.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div>
<span style="font-size: xx-small;"><div>
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கம் வாசகர்களே ,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்துடன் இந்த நீண்ட தொடரை முடிவுக்கு கொண்டு வருகின்றேன். இந்தப்புதினத்தை வாசித்து கருத்திட்ட அனைத்து வாசகர்களுக்கும் மிக்க நன்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேசமுடன் கோமகன்</div>
<div style="text-align: justify;">
</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">00000000000000000000</span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன் நரசிம்மப் பல்லவரிடம் சென்று அவருடைய ஆசியைக் கோரியபோது, சக்கரவர்த்தி, "குழந்தாய்! எக்காலத்திலும் பார்த்திப மகாராஜாவின் புதல்வன்' என்னும் பெருமைக்குப் பங்கமில்லாமல் நடந்துகொள்வாயாக, அதற்கு வேண்டிய மனோதிடத்தைப் பகவான் உனக்கு அருளட்டும்" என்று ஆசீர்வதித்தார். அவ்விதமே குந்தவி அருள்மொழித் தேவியை நமஸ்கரித்தபோது, "அம்மா! உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும். 'நரசிம்ம சக்கரவர்த்தியின் திருமகள், பார்த்திப மகாராஜாவின் மருமகள்' என்னும் பெருமைக்கு உரியவளாக எப்போதும் நடந்துகொள்" என்று ஆசி கூறினாள்.</div>
</span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமனும், குந்தவியும் உறையூர் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, சோழ வளநாடு எல்லாத் துறைகளிலும் செழித்தோங்கியது. மாதம் மும்மாரி பொழிந்து நிலங்கள் மூன்று போகம் விளைந்தன. கிராமந்தோறும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டன. சிற்பம், சித்திரம் முதலிய கலைகள் சிறந்தோங்கின. திருமகளும் கலைமகளும் காவேரி நதிக்கரையில் கைகோத்துக் குலாவினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனாலும், பார்த்திப மகாராஜாவின் கனவு விக்கிரமனுடைய காலத்தில் பூரணமாக நிறைவேறவில்லை. சூரியனுக்குப் பக்கத்தில் மற்றக் கிரகங்களெல்லாம் ஒளி மங்கிவிடுவதுபோல் காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தியின் மகிமையானது விக்கிரமனுடைய புகழ் ஓங்குவதற்குப் பெரிய தடையாயிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பார்த்திப மகாராஜாவின் வீரமரணமும், விக்கிரமனுடைய வீரச் செயல்களும் கூட மாமல்லரின் புகழ் மேலும் வளர்வதற்கே காரணமாயின.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நரசிம்மவர்மருக்குப் பின்னரும் வெகுகாலம் பல்லவர் பெருமை குன்றவில்லை. சோழநாடு ஒரு குறுகிய எல்லைக்குள் கட்டுப்பட்டுத்தான் கிடந்தது. ஆனால், விக்கிரமனும் அவனுடைய சந்ததியர்களும் பார்த்திப மகாராஜாவின் கனவை மட்டும் மறக்கவில்லை. வழிவழியாக அவரவர்களுடைய புதல்வர்களுக்குப் பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றிச் சொல்லி, உறையூர் சித்திர மண்டபத்தில் தீட்டியிருந்த பார்த்திப மன்னரின் கனவுச் சித்திரங்களைக் காண்பித்து வந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சோழ நாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய இராஜராஜ சோழன், அவனுடைய புதல்வனான இராஜேந்திர சோழன் - இவர்களுடைய காலத்திலேதான் பல்லவர் பெருமை குன்றிச் சோழ நாடு மகோன்னதமடையத் தொடங்கியது. சோழநாட்டு வீரர்கள் வடக்கே கங்கை வரையிலும், தெற்கே இலங்கை வரையிலும், கிழக்கே கடல்களுக்கு அப்பாலுள்ள கடாரம் வரையிலும் சென்று வீரப்போர் புரிந்து புலிக்கொடியை வானளாவப் பறக்கவிட்டார்கள். புலிக்கொடி தாங்கிய கப்பல்களில் சோழநாட்டு வீரர்கள் கடல்களில் நெடுந்தூரம் பிரயாணம் செய்து சாவகம், புஷ்பகம் முதலிய தீவுகளைக் கைப்பற்றிச் சோழர்களின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்கள். சோழவள நாடெங்கும் அற்புதமான கோயில்களும், கோபுரங்களும் சோழ மன்னர்களின் வீரப் புகழைபோல் வானளாவி எழுந்து, அக்காலத்திய சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்துக்கு அழியாத ஞாபகச் சின்னங்களாக இன்றைக்கும் விளங்குகின்றன. இவ்வாறு, பார்த்திப சோழன் கண்ட கனவு, அவன் வீர சொர்க்கம் அடைந்து முந்நூறு வருஷங்களுக்குப் பிறகு பரிபூரணமாக நிறைவேறியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #3d85c6;">கல்கியின் பார்த்திபன் கனவு முற்றிற்று</span></i></b></div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-84372634966254508362017-10-08T16:01:00.000+02:002017-10-08T16:01:11.618+02:00பார்த்திபன் கனவு - புதினம் -76 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 39 -சிரசாக்கினை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAoQgv94FelFwO02dBFZsqKJ1xbCZ1SQyNc62KwGP0wiiL6l-1iGyA8GDkQ_Ld7U-7y8sMQ52eIIzPSqTH3vGlDRwAP5eySF4AjYLPBZfS1T33AyjoBDR5B6NuEk3s6C5zj3ILLylERvKQ/s1600/2373cafa9260b8c1d90a23aa48a611f8.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="375" data-original-width="500" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAoQgv94FelFwO02dBFZsqKJ1xbCZ1SQyNc62KwGP0wiiL6l-1iGyA8GDkQ_Ld7U-7y8sMQ52eIIzPSqTH3vGlDRwAP5eySF4AjYLPBZfS1T33AyjoBDR5B6NuEk3s6C5zj3ILLylERvKQ/s320/2373cafa9260b8c1d90a23aa48a611f8.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆகா இது உறையூர்தானா?" என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்த்திப மகாராஜா போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை பெயர்ந்து சென்ற லக்ஷ்மி தேவி மீண்டும் இன்றுதான் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறாள் என்று சொல்லும்படியிருந்தது. உறையூர் வாசிகளிடையே வெகுகாலத்திற்குப் பிறகு இன்று கலகலப்பும் உற்சாகமும் காணப்பட்டன. வெளியூர்களிலிருந்து ஜனங்கள் வண்டிகளிலும், பலவித வாகனங்களிலும் கால்நடையாகவும் வந்து கொண்டிருந்தார்கள். வீதிகளில் ஆங்காங்கு ஜனங்கள் கூட்டமாய் நின்று கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி உறையூரில் பொது ஜன சபை கூட்டுகிறார் என்றும், இதற்காகச் சோழ நாட்டின் பட்டினங்களிலும் கிராமங்களிலும் உள்ள பிரமுகர்களையெல்லாம் அழைத்திருக்கிறார் என்றும் பிரஸ்தாபமாயிருந்தது. அன்று நடக்கப்போகும் சபையில் பல அதிசயங்கள் வெளியாகுமென்றும் பல விசேஷ சம்பவங்கள் நிகழுமென்றும் ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். அருள்மொழித் தேவியும், இளவரசர், விக்கிரமரும் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறார்களென்றும் செய்தி பரவியிருந்தது. இன்னும் இளவரசர் இரத்தின வியாபாரி வேஷத்தில் வஸந்த மாளிகையில் வந்திருந்தாரென்றும், குந்தவி தேவிக்கும் அவருக்கும் காதல் உண்டாகிக் கல்யாணம் நடக்கப் போகிறதென்றும் இதனால் உறையூரும் காஞ்சியும் நிரந்தர உறவு கொள்ளப்போகிறதென்றும் சிலர் சொன்னார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேறு சிலர் இதை மறுத்து, "தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளான இளவரசரைச் சக்கரவர்த்தி விசாரணை செய்து பொதுஜன அபிப்பிராயத்தையொட்டித் தீர்ப்புக் கூறப்போகிறார்" என்றார்கள். நாலு நாளைக்கு முன்னால், அமாவாசை இரவில், கொல்லி மலைச்சாரலில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், மாரப்ப பூபதியின் மரணத்தைப் பற்றியும் ஜனங்கள் கூட்டியும் குறைத்தும் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். பொன்னனும் வள்ளியும் அன்று உறையூர் வீதிகளின் வழியாக வந்த போது, ஆங்காங்கே ஜனங்கள் அவர்களை நிறுத்தி, "பொன்னா! இன்று என்ன நடக்கப் போகிறது?" என்று விசாரித்தார்கள். பொன்னனோ, தலையை ஒரே அசைப்பாக அசைத்து "எனக்கு ஒன்றும் தெரியாது, சாயங்காலமானால், தானே எல்லாம் வெளியாகிறது. ஏன் அவசரப்படுகிறீர்கள்?" என்றான். வள்ளியை அழைத்துக் கேட்ட பெண் பிள்ளைகளிடம் வள்ளியும் அதே மாதிரிதான் மறுமொழி சொன்னாள். பொன்னனுக்கும், வள்ளிக்கும் அன்று இருந்த கிராக்கிக்கும் அவர்களுக்கு அன்று ஏற்பட்டிருந்த பெருமைக்கும் அளவேயில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சபை கூடியிருப்பதைப் பார்த்தவர்கள் யாரும் திரும்பி வந்து நமக்கு அந்தச் சபையைப்பற்றிக் கூறியது கிடையாது. ஆனால் அன்று உறையூரில் கூடிய மாமல்ல நரசிம்மச் சக்கரவர்த்தியின் சபையைப் பார்த்தவர்கள், "தேவேந்திரனுடைய சபை கிட்டதட்ட இந்த மாதிரிதான் இருக்க வேண்டும்!" என்று ஏகமனதாக முடிவு கட்டினார்கள். அவ்வளவு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்த சபா மண்டபத்தில் சபை கூடிற்று. குறிப்பிட்ட நேரத்திற்குள் 'தேவேந்திரனைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு ஒரு பக்கத்தில், வசிஷ்டரையும் வாமதேவரையும்போல், சிவனடியாரும், சிறுத்தொண்டரும் வீற்றிருந்தார்கள். சிம்மாசனத்தின் மற்றொரு பக்கத்தில் சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தாற்போல் அருள்மொழித்தேவியும் சிறுத்தொண்டரின் தர்ம பத்தினி திருவெண்காட்டு நங்கையும் காணப்பட்டனர். அவர்களுக்கு மத்தியில் சிறுத்தொண்டரின் அருமைப் புதல்வன் சீராள தேவன் உட்கார்ந்து, அதிசயத்தினால் விரிந்த கண்களினால், நாலாபுறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களுக்குப் பின்னால் பொன்னனும் வள்ளியும் அடக்க ஒடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு நேர் எதிரே, சற்றுத் தூரத்தில் பல்லவ சேனாதிபதியும் இன்னும் சில பல்லவ வீரர்களும் சூழ்ந்திருக்க விக்கிரமன் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி இருந்த பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன் எவ்வளவோ பிடிவாதமாக மனத்தை உறுதிப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தானென்றாலும் சில சமயம் அவனை அறியாமலே அவனுடைய கண்கள் அந்தப் பக்கம் நோக்கின. அதே சமயத்தில் குந்தவியும் தன்னை மீறிய ஆவலினால் விக்கிரமனைப் பார்க்கவும், இருவரும் திடுக்கிட்டுத் தங்களுடைய மன உறுதி குலைந்ததற்காக வெட்கப்பட்டுத் தலை குனிய வேண்டியதாயிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் அந்த மகத்தான சபையில், மந்திரிகளும் படைத்தலைவர்களும் தனாதிகாரிகளும் பண்டிதர்களும் கலைஞர்களும் கவிராயர்களும் பிரபல வர்த்தகர்களும் கிராமங்களிலிருந்து வந்த நாட்டாண்மைக்காரர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் எல்லாரையும் காட்டிலும் அந்தச் சபையில் அதிகமாக அனைவருடைய கவனத்தையும் கவர்ந்த ஒருவர் சக்கரவர்த்தி குமாரன் மகேந்திரனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருடைய உருவமும் உடையும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரல்லர் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறின. சபையினர் அவரைச் சுட்டிக் காட்டி தங்களுக்குள்ளேயே, "சீன தேசத்திலிருந்து வந்திருக்கும் உலக யாத்திரிகர் இவர்தான்!" என்று பேசிக் கொண்டார்கள் யுவான் சுவாங்க் என்றும் அவருடைய பெயரைப் பலரும் பலவிதமாக உச்சரித்து நகையாடினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சீன யாத்திரிகரைத் தவிர இன்னும் சில அயல் நாட்டாரும் அந்த மகாசபையில் ஒரு பக்கத்தில் காணப்பட்டார்கள். அவர்கள் நடை உடையினால் அயல்நாட்டாராகத் தோன்றினாலும், அவர்கள் பேசுகிற பாஷை தமிழாகத்தான் தெரிந்தது. சற்றே அவர்களை உற்றுப் பார்த்தோமானால், ஏற்கெனவே பார்த்த முகங்கள் என்பது நினைவு வரும். ஆம்; செண்பகத் தீவிலிருந்து வந்த கப்பலில் இரத்தின வியாபாரி தேவசேனனுடன் வந்தவர்கள் தான் இவர்கள். அச்சபையில் நடக்கவிருந்த விசாரணையின் முடிவாகத் தங்கள் மகாராஜாவுக்கு என்ன கதி நேரப் போகிறதோ என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கிருப்பது இயற்கையேயல்லவா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சபை முழுவதிலும் ஆங்காங்கு பணியாட்களும் பணி பெண்களும் நின்று வெண்சாமரங்களினால் விசிறியும் சந்தனம் தாம்பூலம் முதலியவை வழங்கியும் சபையினருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பிட்ட நேரம் ஆகியும் சக்கரவர்த்தி வராதிருக்கவே சபையில், "ஏன் சக்கரவர்த்தி இன்னும் வரவில்லை?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் சப்தம் எழுந்தது. இவ்விதம் பல குரல்கள் சேர்ந்து பேரிரைச்சலாகிவிடுமோ என்று தோன்றிய சமயத்தில், சிறுத்தொண்டர் எழுந்திருந்து, கையமர்த்தி, "சபையோர்களே! சக்கரவர்த்தி சபைக்கு வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்று செய்தி வந்திருக்கிறது. அதுவரையில், இந்தச் சபை கூடியதின் நோக்கம் இன்னதென்பதை உங்களுக்கு எடுத்து உரைக்கும்படி எனக்குச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்!" என்று இடி முழக்கம் போன்ற குரலில் கூறியதும், சபையில் நிசப்தம் உண்டாயிற்று. எல்லாரும் பயபக்தியுடன் சிறுத்தொண்டருடைய முகத்தையே பார்க்கலானார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுத்தொண்டர் மேலும் கூறினார்:-</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வீர சொர்க்கமடைந்த என் அருமைத் தோழரான பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வர் விக்கிரம சோழர், இன்று உங்கள் முன்னால் குற்ற விசாரணைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார். சக்கரவர்த்தியின் தேசப்பிரஷ்டத் தண்டனையை மீறி அவர் இந்நாட்டுக்குள் பிரவேசித்துக் கையும் மெய்யுமாய்க் கண்டுபிடிக்கவும் பட்டார். அவர் இவ்விதம் சக்கரவர்த்தியின் ஆக்ஞையை மீறி வந்ததின் காரண காரியங்களை விசாரணை செய்து, உங்கள் எல்லாருடைய அபிப்பிராயத்தையும் கேட்டு, சர்வ சம்மதமான நியாயத் தீர்ப்புக் கூறவேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம். இதற்காகத்தான் இந்தச் சபை கூடியிருக்கிறது. நீங்கள் அபிப்பிராயம் கூறுவதற்கு முன்னால் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிரம சோழர் சக்கரவர்த்தியின் கட்டளையை மீறியது குற்றமானாலும், அதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. இதோ என் பக்கத்தில் வீற்றிருக்கும் என் தோழர் அதற்குப் பெரும்பாலும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறார்!" என்று சிறுத்தொண்டர் கூறியதும் சபையில் எல்லாருடைய கவனமும் சிவனடியார் மேல் திரும்பியது. அவருடைய முகத்தில் குடிகொண்டிருந்த தேஜஸைப் பார்த்து அனைவரும் பிரமித்தார்கள். "இவர் யார் இந்தப் பெரியவர்? அப்பர் பெருமானோ இறைவன் பதமடைந்துவிட்டார். சம்பந்த சுவாமியோ இளம் பிராயத்தவர். மஹான் சிறுத்தொண்டரோ இங்கேயே இருக்கிறார். வேறு யாராக இருக்கும்? விக்கிரம சோழர் விஷயத்தில் இவர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன?" என்று எண்ணமிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகு சிறுத்தொண்டர், பத்து வருஷங்களுக்கு முன் பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு உறையூரிலிருந்து கிளம்பியதையும் வெண்ணாற்றங்கரையில் நடந்த பயங்கர யுத்தத்தையும் சபையோருக்கு ஞாபகப்படுத்தினார். பார்த்திப மகாராஜாவுடன் கிளம்பிய பத்தாயிரம் பேரில் ஒருவர்கூடத் திரும்பாமல் போர்க்களத்திலேயே மடிந்ததைச் சொன்னபோது சபையோர் புளகாங்கிதம் அடைந்தனர். அந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்றிரவு, இந்தச் சிவனடியார் போர்க்களத்தில் வீரமரணமடைந்த தீர மன்னரின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று அவருடைய உடலைத் தேடியலைந்ததை எடுத்துக் கூறினார். கடைசியில் இவர் தம் முயற்சியில் வெற்றியடைந்ததையும், பார்த்திப மகாராஜாவின் உடலில் இன்னும் உயிர் இருந்ததையும், மகாராஜா சிவனடியாரிடம், "என் மகனை வீர சுதந்திரப் புருஷனாக வளர்க்க வேண்டும்" என்று வரங்கேட்டதையும்; சிவனடியார் அவ்விதமே வரங்கொடுத்ததையும் எடுத்துச் சொன்னபோது, அந்தப் பெரிய சபையின் நாலா பக்கங்களிலும் 'ஆஹா'காரம் உண்டானதுடன், அநேகருடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின்னர், சிவனடியார் உறையூருக்கு வந்து அருள்மொழித் தேவியைப் பார்த்துத் தேற்றியது முதல், விக்கிரமன் சுதந்திரக் கொடியை நாட்ட முயன்றது, தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளானது, செண்பகத் தீவின் அரசானது, தாயாரையும் தாய் நாட்டையும் பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் திரும்பி வந்தது, வழியில் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகள் எல்லாவற்றையும் சிறுத்தொண்டர் விவரமாகக் கூறினார். இதற்கிடையில், நீலகேசி 'மகா கபால பைரவர்' என்ற வேஷத்தில் செய்த சூழ்ச்சிகளையும், ராணி அருள்மொழித் தேவியை அவன் கொண்டுபோய் மலைக் குகையில் வைத்திருந்ததையும், சிவனடியாரின் தளரா முயற்சியினால் அவனுடைய சூழ்ச்சிகள் வெளிப்பட்டதையும் சென்ற அமாவாசை இரவில் நடந்த சம்பவங்களையும் விக்கிரமன் தன் உயிரைப்பொருட்படுத்தாமல் சிவனடியாரைக் காப்பாற்ற முன்வந்ததையும் விவரித்தார். இவ்வளவையும் சொல்லிவிட்டுக் கடைசியாக, "சபையோர்களே, உங்களையெல்லாம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என் தோழர் சிவனடியார் போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக - நீங்கள் அபிப்பிராயப்படுகிறீர்களா? பார்த்திப மகாராஜாவின் குமாரர் விக்கிரமர் வீர சுதந்திரப் புருஷராக வளர்க்கப்பட்டிருக்கிறாரா?" என்று கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது சபையில் ஏகமனதாக, "ஆம், ஆம்" என்ற மகத்தான பெருங்கோஷம் எழுந்து அந்த விசாலமான மண்டபம் முழுவதும் வியாபித்து, வெளியிலும் சென்று முழங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோஷம் அடங்கியதும், சிறுதொண்டர் கையமர்த்தி, "இன்னும் ஒரு முக்கிய விஷயம் உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்கு இந்த மகா புருஷர் வாக்குறுதி கொடுத்த பிறகு மகாராஜா இவரைப் பார்த்து, 'சுவாமி! தாங்கள் யார்?' என்று கேட்டார். அப்போது இந்த வேஷதாரி, தமது பொய் ஜடாமகுடத்தை எடுத்துவிட்டு உண்மை ரூபத்துடன் தோன்றினார். இவர் யார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு பார்த்திப மகாராஜா தம் மனோரதம் நிறைவேறும் என்ற பூரண நம்பிக்கை பெற்று நிம்மதியாக வீர சொர்க்கம் அடைந்தார்!" என்று கூறியபோது சபையிலே ஏற்பட்ட பரபரப்பைச் சொல்லி முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் சிறுத்தொண்டர், "இந்த வேஷதாரியின் உண்மை வடிவத்தைப் பார்க்க நீங்கள் எல்லாருமே ஆவலாகயிருக்கிறீர்கள் இதோ பாருங்கள்!" என்று கூறி, சிவனடியார் பக்கம் திரும்பி, ஒரு நொடியில் அவருடைய ஜடாமகுடத்தையும் தாடி மீசையையும் தமது இரண்டு கையினாலும் நீக்கிவிடவே, மாமல்ல நரசிம்ம சக்ரவர்த்தியின் தேஜோ மயமான கம்பீர முகத்தை எல்லாரும் கண்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது அச்சபையில் மகத்தான அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. குந்தவி தன் ஆசனத்திலிருந்து எழுந்து, "அப்பா!" என்று கதறிக் கொண்டே ஓடிவந்து வேஷம் பாதி கலைந்து நின்ற சக்கரவர்த்தியின் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சையாகி விழும் நிலைமையில் இருந்த அருள்மொழித் தேவியைச் சிறுத் தொண்டரின் பத்தினி தாங்கிக் கொண்டு ஆசுவாசம் செய்தாள். விக்கிரமன் கண்ணிமைக்காமல், பார்த்தவண்ணம் நின்றான். அந்தப் பரபரப்பில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் பொன்னன், வள்ளியின் கையைப்பிடித்துக் குலுக்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி வாழ்க" என்று ஒரு பெரிய கோஷம் எழுந்தது. "ஜெய விஜயீ பவ!" என்று சபையினர் அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள். சிறிது நேரம் இத்தகைய கோஷங்கள் முழங்கிக்கொண்டிருந்த பிறகு பொன்னனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, திடீரென்று உரத்த குரலில், "விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!" என்று கோஷித்தான். அதையும் சபையோர் அங்கீகரித்து, "ஜய விஜயீ பவ!" என்று முழங்கினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தக் குழப்பமும் கிளர்ச்சியும் அடங்கியபோது இத்தனை நேரமும் சிவனடியார் அமர்ந்திருந்த இடத்தில் அவர் இல்லை என்பதைச் சபையோர் கண்டார்கள். சிறுத்தொண்டர், "சபையோர்களே! நீங்கள் கலைந்து போவதற்கு முன்னால் இன்னும் ஒரே ஒரு காரியம் பாக்கியிருக்கிறது. மாமல்லச் சக்கரவர்த்தி தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்து விக்கிரம சோழரின் குற்றத்தைப் பற்றி முடிவான தீர்ப்புக் கூறுவார்!" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறிது நேரத்துக்கெல்லாம் நரசிம்மச் சக்கரவர்த்தி தமக்குரிய ஆடை ஆபரணங்களைத் தரித்தவராய்க் கம்பீரமாக அச்சபைக்குள் பிரவேசித்தார். அவர் சபைக்குள் பிரவேசித்த போதும், சபையில் நடுநாயகமாக இருந்த தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்தபோதும், "ஜய விஜயீ பவ!" என்னும் முழக்கம் வானளாவ எழுந்தது. சத்தம் அடங்கியதும், சக்கரவர்த்தி எழுந்து, "விக்கிரம சோழரைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் இன்னதென்பதைத் தெரிந்து கொண்டேன். தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளானவர்கள் திரும்பி வந்தால், அதற்குத் தண்டனை சிரசாக்கினையாகும். எனவே, இதோ புராதனமான சோழ மன்னர்களின் மணிமகுடத்தை விக்கிரம சோழர் இனிமேல் தனியாகவே தலைமேல் தாங்க வேண்டுமென்னும் சிரசாக்கினையை விதிக்கிறேன்! இன்று முதல் சோழ நாடு சுதந்திர ராஜ்யமாகிவிட்டது. இதன் பாரம் முழுவதையும் விக்கிரம சோழரும் அவருடைய சந்ததிகளும் தான் இனிமேல் தாங்கியாக வேண்டும்!" என்று கூறியபோது, சபையிலே உண்டான கோலாகல ஆரவாரத்தை வர்ணிப்பதற்குப் புராண இதிகாசங்களில் சொன்னது போல், ஆயிரம் நாவுள்ள ஆதிசேஷன்தான் வந்தாக வேண்டும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-44698320015011150322017-10-07T16:01:00.002+02:002017-10-07T16:01:54.072+02:00பார்த்திபன் கனவு - புதினம் -75 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 38 -என்ன தண்டனை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: xx-small;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi-5Qs_R6XYW_K1Ev1E5mfcj3SpSWyD6BNvbmFJVHimtHRhELdXNJkkXjjbyfqkZ7hmuKulxVnqpP8LLE3A0nHT8RYi18SWZ_PMXSVAt8qq2vjtGgObnGWd5KgBU9wADah7IOmVzzVoTts/s1600/Screenshot_2016-02-02-12-36-42.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="800" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi-5Qs_R6XYW_K1Ev1E5mfcj3SpSWyD6BNvbmFJVHimtHRhELdXNJkkXjjbyfqkZ7hmuKulxVnqpP8LLE3A0nHT8RYi18SWZ_PMXSVAt8qq2vjtGgObnGWd5KgBU9wADah7IOmVzzVoTts/s320/Screenshot_2016-02-02-12-36-42.png" width="200" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமாவாசையன்றைக்கு மறுநாள் பொழுது புலர்ந்ததிலிருந்து மாமல்லபுரத்து அரண்மனையில் குந்தவி தேவிக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி அரண்மனை உப்பரிகை மாடத்தின் மேல் ஏறுவதும், நாலாபுறமும் பார்ப்பதும், மறுபடி அவசரமாகக் கீழிறங்குவதும், பணியாட்களுக்கு ஏதேதோ கட்டளையிடுவதும், உறையூரிலிருந்து அவளுடன் வந்திருந்த வள்ளியிடம் இடையிடையே பேசுவதுமாயிருந்தாள். என்ன பேசினாலும், எதைச் செய்தாலும் அவளுடைய செவிகள் மட்டும் குதிரைக் குளம்படியின் சத்தத்தை வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தன. பணியாட்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று பேச்சை நிறுத்தி காதுகொடுத்துக் கேட்பாள். விக்கிரமனையும் பொன்னனையுந்தான் அவள் அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லவேண்டியதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமனும் பொன்னனும் வந்தவுடனேயே என்ன செய்ய வேண்டுமென்று குந்தவி தீர்மானித்து வைத்திருந்தாள். விக்கிரமனுடன் அதே கப்பலில் தானும் போய்விடுவது என்ற எண்ணத்தை அவள் மாற்றிக் கொண்டு விட்டாள். அதனால் பலவிதச் சந்தேகங்கள் தோன்றி மறுபடியும் விக்கிரமன் பிடிக்கப்படுவதற்கு ஏதுவாகலாம். இது மட்டுமல்ல; தந்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் அவ்விதம் ஓடிப் போவதற்கும் அவளுக்கு மனம் வரவில்லை! நரசிம்மச் சக்கரவர்த்தியின் பரந்த கீர்த்திக்குத் தன்னுடைய செயலால் ஒரு களங்கம் உண்டாகலாமா! அதைக் காட்டிலும் விக்கிரமன் முதலில் கப்பலேறிச் சென்ற பிறகு, தந்தையிடம் நடந்ததையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விக்கிரமனையே தான் பதியாக வரித்து விட்டதையும் தெரிவிப்பதே முறையல்லவா? அப்போது சக்கரவர்த்தி தன்னை கட்டாயம் மன்னிப்பதுடன், கப்பலில் ஏற்றித் தன்னைச் செண்பகத் தீவுக்கும் அனுப்பிவைத்துவிடுவார். 'உன்னுடைய கல்யாணத்துக்காக நான் ஒரு பிரயத்தனமும் செய்யப் போவதில்லை. உன்னுடைய பதியை நீயேதான் ஸ்வயம்வரம் செய்து கொள்ளவேண்டும்' என்று சக்கரவர்த்தி அடிக்கடி கூறிவந்திருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, இப்போது தன் இஷ்டத்திற்கு அவர் ஏன் மாறு சொல்ல வேண்டும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய தீர்மானத்துடன் குந்தவி விக்கிரமனுடைய வரவுக்கு வழி நோக்கிக் கொண்டிருந்தாள். வானவெளியில் சூரியன் மேலே வர வர, குந்தவியின் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியாக, கிட்டதட்ட நடு மத்தியானத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டபோது, குந்தவியினுடைய இருதயம் விம்மி எழுந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. மறுபடியும் ஒரு தடவை விக்கிரமனைக் கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டுத் தான் பின் தங்குவதா? கதையிலே, காவியத்திலே வரும் வீரப் பெண்மணிகள் எல்லாரும் அவ்விதந்தானா செய்திருக்கிறார்கள்? அர்ச்சுனனோடு சுபத்திரை கிளம்பிப் போய்விடவில்லையா? கிருஷ்ணனோடு ருக்மணி போகவில்லையா? தான் மட்டும் எதற்காகப் பின்தங்க வேண்டும்? விக்கிரமனுக்கு விடை கொடுத்தனுப்புவது தன்னால் முடியாத காரியம் என்று அவளுக்குத் தோன்றிற்று. குதிரைகளின் காலடிச் சத்தம் நெருங்க நெருங்க அவளுடைய மனக்குழப்பம் அதிகமாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வந்த குதிரைகள் அரண்மனை வாசலில் வந்து நின்றன. வாசற்காப்பாளருக்கு, இரத்தின வியாபாரி தேவசேனர் வந்தால் உடனே தன்னிடம் அழைத்து வரும்படிக் குந்தவி கட்டளையிட்டிருந்தாள். இதோ, குதிரையில், வந்தவர்கள் இறங்கி உள்ளே வருகிறார்கள். அடுத்த வினாடி அவரைப் பார்க்கப் போகிறோம்! ஆகா! இதென்ன? உள்ளே வருகிறது யார்! சக்கரவர்த்தியல்லவா? குந்தவியின் தலை சுழன்றது. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டாள். சிறிது தடுமாற்றத்துடன், "அப்பா! வாருங்கள்! வாருங்கள்! இத்தனை நாளாய் எங்கே போயிருந்தீர்கள்?" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சக்கரவர்த்தி ஆவலுடன் குந்தவியின் அருகில் வந்து அவளைத் தழுவிக் கொண்டார். உடனே, திடுக்கிட்டவராய், "ஏன் அம்மா! உன் உடம்பு ஏன் இப்படிப் பதறுகிறது?" என்று கேட்டார். "ஒன்றுமில்லை, அப்பா! திடீரென்று வந்தீர்களல்லவா?" என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இவ்வளவுதானே? நல்லது, உட்கார், குழந்தாய்! நீ உறையூரிலிருந்து எப்போது வந்தாய்? எதற்காக இவ்வளவு அவசரமாய் வந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தி அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். குந்தவிக்கு அப்போது ஏற்பட்ட இதயத் துடிப்பைச் சொல்ல முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அப்பா இங்கே இருக்கும்போது அவர் வந்து விட்டால் என்ன செய்கிறது? இப்பொழுது வருகிற சமயமாச்சே! அரண்மனைக்குள் வராமல் நேரே போய்க் கப்பலேறச் செய்வதற்கு வழி என்ன?' என்றெல்லாம் எண்ணி அவள் உள்ளம் தவித்தது. அவளுடைய தவிப்பைக் கவனியாதவர் போல் சக்கரவர்த்தி, "குழந்தாய்! இன்று சாயங்காலம் நான் உறையூருக்குக் கிளம்புகிறேன். நீயும் வருகிறாயா? அல்லது உறையூர் வாசம் போதுமென்று ஆகிவிட்டதா?" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உறையூருக்கா? எதற்காக அப்பா?" என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ரொம்ப முக்கியமான காரியங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன, அம்மா! அருள்மொழித்தேவி அகப்பட்டு விட்டார்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆகா!" என்று அலறினாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம், அருள்மொழித் தேவியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி சொல்வாயே, யாரோ வேஷதாரிச் சிவனடியார் என்று, அவர்தான்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன! என்ன!.. தேவி எங்கே இருந்தார்? யார் கொண்டு போய் வைத்திருந்தார்கள்? அந்தப் போலிச் சிவனடியார்... ஒருவேளை அவரேதான்..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சக்கரவர்த்தி புன்னகையுடன், "இன்னும் உனக்குச் சந்தேகம் தீரவில்லையே, அம்மா! இல்லை. அந்தச் சிவனடியார் அருள்மொழி ராணியை ஒளித்து வைத்திருக்கவில்லை. ராணியைக் கொண்டு போய் வைத்திருந்தவன் நான் முன்னமேயே ஒரு தடவை சொன்னேனே - அந்தக் கபாலிகக் கூட்டத்தின் பெரிய பூசாரி - மகாக் கபால பைரவன். சிவனடியார் அருள்மொழி ராணியைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததின் பலன், அவருடைய உயிருக்கே ஆபத்து வருவதாயிருந்ததாம். நேற்று இராத்திரி மகாக் கபால பைரவன் சிவனடியாரைக் காளிக்குப் பலிகொடுப்பதாக இருந்தானாம். அவரைக் கட்டிப் பலிபீடத்தில் கொண்டு வந்து போட்டாகிவிட்டதாம். கழுத்தில் கத்தி விழுகிற சமயத்தில் சிவனடியாரை யார் வந்து காப்பாற்றினார்களாம் தெரியுமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"யார் அப்பா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"செண்பகத் தீவிலிருந்து வந்திருந்தானே - இரத்தின வியாபாரி தேவசேனன் - அவனும் படகோட்டி பொன்னனும் நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றினார்களாம்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் வார்த்தை ஒன்றும் வெளியில் வரவில்லை. அவளுடைய அழகிய வாய், மாதுளை மொட்டின் இதழ்கள் விரிவது போல் விரிந்து அப்படியே திறந்தபடியே இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இன்னும் ஒரு பெரிய அதிசயத்தைக் கேள், குழந்தாய்! இரத்தின வியாபாரி தேவசேனன் என்பது உண்மையில் யார் தெரியுமா? அவனும் ஒரு வேஷதாரிதான். தேசப் பிரஷ்டனான சோழநாட்டு இளவரசன் விக்கிரமன்தான் அம்மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு அவனுடைய தாயாரையும் தாய்நாட்டையும் பார்ப்பதற்காக வந்தானாம்! என்ன தைரியம், என்ன துணிச்சல், பார்த்தாயா குழந்தாய்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி விம்மிய குரலுடன், "அப்பா! அவர்கள் எல்லாரும் இப்போது எங்கே?" என்று கேட்டாள். "யாரைக் கேட்கிறாய், அம்மா! விக்கிரமனையும், பொன்னனையுமா? அவர்களை உறையூருக்குக் கொண்டு போகச் சொல்லியிருக்கிறேன். நானே நேரில் வந்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறேன். அதற்காகத் தான் முக்கியமாக உறையூருக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தனை நேரமும் குந்தவி அடக்கி வைத்துக் கொண்டிருந்த துக்கமெல்லாம் இப்போது பீறிக்கொண்டு வெளியில் வந்தது. தந்தையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு 'கோ' என்று கதற ஆரம்பித்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வளவு நேரமும் புன்னகையுடன் பொலிந்து கொண்டிருந்த சக்கரவர்த்தியின் முகபாவத்தில் இப்போது மாறுதல் காணப்பட்டது. அவருடைய கண்களின் ஓரத்தில் ஒரு துளி ஜலம் முத்துப்போல் பிரகாசித்தது. குந்தவியின் தலையையும் முதுகையும் அவர் அன்புடன் தடவிக் கொடுத்து, "குழந்தாய்! உனக்கு என்ன துக்கம்? உன் மனத்தில் ஏதோ வைத்துக் கொண்டு சொல்லாமலிருக்கிறாய். என்னிடம் மறைப்பானேன்! எதுவாயிருந்தாலும் சொல்!" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி கொஞ்சங் கொஞ்சமாக எல்லாவற்றையும் சொன்னாள். காஞ்சி நகரின் வீதியில் சங்கிலிகளால் கட்டுண்டு சென்ற விக்கிரமனைச் சந்தித்ததிலிருந்து தன்னுடைய உள்ளம் அவனுக்கு வசமானதைத் தெரிவித்தாள். பிறகு, மகேந்திர மண்டபத்தில் ஜுரத்துடன் உணர்வு இழந்து கிடந்த விக்கிரமனைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றதிலிருந்து இன்று அவனைக் கப்பலேற்றி அனுப்ப உத்தேசித்திருந்த வரையில் எல்லாவற்றையும் கூறினாள். கடைசியில், "அப்பா! அந்தச் சோழ ராஜ குமாரனையே என் நாதனாக வரித்து விட்டேன். மற்றொருவரை மனதிலும் நினைக்கமாட்டேன்" என்று கூறி விம்மினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சக்கரவர்த்தி அப்போது அன்பு கனிந்த குரலில் கூறினார். "குழந்தாய், இந்த உலகில் அன்பு ஒன்றுதான் சாசுவதமானது; மற்றதெல்லாம் அநித்தியம். இரண்டு இளம் உள்ளங்கள் அன்பினால் ஒன்று சேரும்போது, அங்கே அன்பு வடிவமான கடவுளே சாந்நித்தியமாயிருக்கிறார். அவ்விதம் அன்பினால் சேர்ந்த உள்ளங்களுக்கு மத்தியில் நின்று தடைசெய்ய யாருக்குமே பாத்தியதை கிடையாது; தாய் தகப்பனுக்குக்கூடக் கிடையாதுதான். ஆகையால், நீ சோழ நாட்டு இளவரசனை மணம் புரிய விரும்பினாயானால், அதை ஒரு நாளும் நான் தடை செய்யேன். ஆனால், குழந்தாய்! நமது பல்லவ வம்சம் நீதிநெறி தவறாது என்று புகழ் பெற்றது. பல்லவ சாம்ராஜ்யத்தில் ராஜகுலத்தினருக்கும் ஒரு நீதிதான்; ஏழைக் குடியானவனுக்கும் ஒரு நீதிதான். ஆகையால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் ராஜ்ய நீதிக்கிணங்க விசாரணை நடைபெறும். குற்றத்துக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும். அதற்குப் பிறகும், நீ அந்த ராஜகுமாரனை மணக்க விரும்பினால், நான் குறுக்கே நிற்கமாட்டேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்ட குந்தவி, "அப்பா! தேசப்பிரஷ்டமானவர்கள் திரும்பி வந்தால் தண்டனை என்ன?" என்றாள். "சாதாரணமாக, மரண தண்டனைதான்; ஆனால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் யோசிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன அப்பா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீதான் அடிக்கடி சொல்வாயே, அந்த ராஜகுமாரனுடைய காரியங்களுக்கெல்லாம் அவன் பொறுப்பாளியல்ல - போலிச் சிவனடியாருடைய போதனைதான் காரணம் என்று. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. அந்தச் சிவனடியாரும் இப்போது அகப்பட்டிருக்கிறார். அவரையும் விசாரித்து உண்மையறிய வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது குந்தவி, மனதிற்குள், 'ஆமாம், அந்தப் போலிச் சடை சாமியாரால் தான் எல்லா விபத்துக்களும் வருகின்றன. அவர் அநாவசியமாக நேற்றிரவு ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்டிராவிட்டால், இத்தனை நேரம் அந்த வீரராஜகுமாரர் கப்பலில் ஏறி இருப்பாரல்லவா?" என்று எண்ணமிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதோடு இன்னும் ஒரு விஷயமும் யோசிக்க வேண்டியிருக்கிறது. செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்குக் குதிரை கொடுத்துச் சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தது யார்? ஞாபகம் இருக்கிறதா, குழந்தாய்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்பா!" என்று வியப்பும் ஆனந்தமும் கலந்த குரலில் குந்தவி கூச்சலிட்டாள். ஒற்றர் தலைவன் வேஷத்திலிருந்த சக்கரவர்த்தி குதிரை கொடுத்து அனுப்பித்தானே விக்கிரமன் சோழ நாட்டுக்குப் போனானென்பது அவளுக்கு நினைவு வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியானால் எப்படி தண்டனை ஏற்படும் அப்பா?" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எல்லாம், விசாரிக்கலாம் குழந்தாய்! விசாரித்து எது நியாயமோ, அப்படிச் செய்யலாம். பல்லவ ராஜ்யத்தில் நீதி தவறி எதுவுமே நடக்காது" என்றார் சக்கரவர்த்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-16066089312991288912017-10-06T15:32:00.000+02:002017-10-06T15:32:16.587+02:00பார்த்திபன் கனவு - புதினம் -74 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 37 -நீலகேசி.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: xx-small;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQjeDxcIoJ7VsQjknH-sim8cIPhaL2iwV3XTxmhZvkQCVtVoP4DjyoHgsAPckr4albUpThnLlWose9ZhlUu1xAMH14VfMb92HAOFw5LQVyN_ETukW_xBnsrC24wOKUpil5bS0QYRZwYuoj/s1600/sri-radhe-krishna-hd-wallpaper-1366x768.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="755" data-original-width="1600" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQjeDxcIoJ7VsQjknH-sim8cIPhaL2iwV3XTxmhZvkQCVtVoP4DjyoHgsAPckr4albUpThnLlWose9ZhlUu1xAMH14VfMb92HAOFw5LQVyN_ETukW_xBnsrC24wOKUpil5bS0QYRZwYuoj/s320/sri-radhe-krishna-hd-wallpaper-1366x768.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாறை மறைவிலிருந்து சிறுத் தொண்டர் வெளிப்பட்ட சில வினாடிகளுக்கெல்லாம் இன்னும் சில அதிசயங்கள் அங்கே நிகழ்ந்தன. பாறைகளின் பின்னாலிருந்தும் மரங்களின் மறைவிலிருந்தும், இன்னும் எங்கிருந்துதான் வந்தார்கள் என்று சொல்லமுடியாதபடியும், இந்திர ஜாலத்தினால் நிகழ்வதுபோல், திடீர் திடீரென்று ஆயுத பாணிகளான போர் வீரர்கள் அங்கே தோன்றிக் கொண்டிருந்தார்கள். இதைவிடப் பெரிய மகேந்திர ஜாலவித்தை ஒன்றும் அங்கே நடந்தது. பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் எப்படியோ திடீரென்று அக்கட்டுக்களிலிருந்து விடுபட்டு எழுந்து பலிபீடத்திலிருந்து கீழே குதித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கிடையில், சிறுத்தொண்டர் நேரே மகா கபால பைரவர் நின்ற இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், கபால பைரவரின் முகத்தில் தோன்றிய பீதி நம்ப முடியாதாயிருந்தது. சிறுத்தொண்டர் அருகில் நெருங்க நெருங்க, அவருடைய பீதி அதிகமாயிற்று. அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. இன்னும் சிறுத்தொண்டர் அவருடைய சமீபத்தில் வந்து நேருக்கு நேராக முகத்தை ஏறிட்டுப் பார்த்து, "ஓ கபாலிக வேஷதாரியே! மகா காளியின் சந்நிதியில் நீ யார் என்று உண்மையைச் சொல்!" என்று கேட்டபோது கபால பைரவர் இரண்டடி பின்வாங்கி, பிறகு நடக்கவும் நிற்கவும் சக்தியற்றவராய்த் தள்ளாடித் தொப்பென்று கீழே விழுந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது அங்கே சூழ்ந்திருந்த காளி உபாசகர்களிடையில் "ஹாஹாகாரம்" உண்டாயிற்று. வெறியில், மூழ்கிக் கிடந்த அந்தக் கபாலிகர்களால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று விக்கிரமன் கூடச் சிறிது துணுக்கமடைந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனோ, வியப்பு, பயபக்தி முதலிய பலவித உணர்ச்சிகள் பொங்க, தன்னை மறந்து செயலற்று நின்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபால பைரவர் கீழே விழுந்து நாலாபுறமிருந்தும் கபாலிகர்கள் ஓடிவரத் தொடங்கிய சமயத்தில், சிறுத்தொண்டர் சட்டென்று பலிபீடத்தின் மீது ஏறிக் கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகா ஜனங்களே! காளி மாதாவின் பக்தர்களே! நெருங்கி வாருங்கள். 'மகா கபால பைரவர்' என்று பொய்ப் பெயருடன் உங்களையெல்லாம் இத்தனை காலமும் ஏமாற்றி வஞ்சித்து வந்த ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய உண்மையைச் சொல்லுகிறேன்" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுத்தொண்டரைப் பார்த்தவுடனே கபால பைரவர் பீதியடைந்து கீழே விழுந்ததினால் ஏற்கனவே அக்கபாலிகர்களின் மனத்தில் குழப்பம் உண்டாயிருந்தது. எனவே, சிறுத்தொண்டர் மேற்கண்டவாறு சொன்னதும், அவர்கள் பலிபீடத்தைச் சூழ்ந்து கொண்டு, அவரையே பார்த்த வண்ணமாய் நின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுத்தொண்டர் கம்பீரமான குரலில், காடு மலையெல்லாம் எதிரொலி செய்யுமாறு பேசினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'கேளுங்கள்! நாம் பிறந்த இந்தத் தமிழகமானது மகா புண்ணியம் செய்த நாடு. எத்தனையோ மகா புருஷர்கள் இந்நாட்டிலே தோன்றி மெய்க் கடவுளின் இயல்பையும் அவரை அடையும் மார்க்கத்தையும் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள். திருமூல மகரிஷி,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்.</i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று அருளியிருக்கிறார். வைஷ்ணவப் பெரியார்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக</i></div>
<div style="text-align: justify;">
<i>இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி</i></div>
<div style="text-align: justify;">
<i>ஞானச் சுடர் விளக்கேற்றினேன்</i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தகைய மகோன்னதமான தர்மங்களுக்கு உறைவிடமாயுள்ள நமது நாட்டில், கபாலிகம், பைரவம் என்னும் அநாசாரக் கோட்பாடுகளையும், நரபலி, மாமிசப்பட்சணம் முதலிய பயங்கர வழக்கங்களையும் சிலர் சிறிது காலமாகப் பரப்பி வருகிறார்கள். அன்பே உருவமான சிவபெருமானும் கருணையே வடிவமான பராசக்தியும் நரபலியை விரும்புகிறார்கள் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை? சிவபெருமான் கையில் மண்டை ஓட்டை வைத்திருப்பதாகவும், பராசக்தி கபால மாலையைத் தரிப்பதாகவும் புராணங்களில் சொல்லியிருப்பதெல்லாம் தத்வார்த்தங் கொண்டவை என்பதை நமது பெரியோர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவ்விதமிருக்க இப்புண்ணிய நாட்டில் நரபலியென்னும் கொடிய வழக்கம் பரவுவதற்குக் காரணம் என்ன? இந்தத் தீய பிரசாரத்தின் மூலவேர் எங்கே இருக்கிறது? - இதைக் கண்டுபிடிப்பதற்காக நானும் சற்றுமுன் இந்தப் பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த என் தோழர் சிவனடியாரும் பெருமுயற்சி செய்து வந்தோம். கடைசியாக, அந்த முயற்சியில் என் தோழர் வெற்றி பெற்றார்; உண்மையைக் கண்டுபிடித்தார்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது ஒரு குரல், "அவர் யார்?" என்று கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அவர் எங்கே?" என்று பல குரல்கள் கூவின. உண்மை என்னவெனில், சிறுத்தொண்டர் திடீரென்று தோன்றியவுடன் ஏற்பட்ட குழப்பத்தில் சிவனடியார் ஒருவரும் கவனியாதபடி அந்த இடத்தைவிட்டு அகன்று விட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுத்தொண்டர் மேலும் சொல்வார்:- "இன்னும் இரண்டு நாளில் உறையூரில் நடக்கப்போகும் வைபவத்துக்கு நீங்கள் வந்தால், அந்த மகான் யார் என்பதை அறிவீர்கள். தற்போது இதோ இங்கே கீழே விழுந்து பயப்பிராந்தியினால் நடுங்கிக் கொண்டிருக்கும் கபால பைரவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புகழ் பெற்ற நமது மகேந்திரச் சக்கரவர்த்தியின் காலத்தில் - இருபது வருஷத்துக்கு முன்னால் - வாதாபி அரசன் புலிகேசி நமது தமிழகத்தின் மேல் படையெடுத்து வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..." என்று சிறுத்தொண்டர் கேட்டு நிறுத்தியபோது பல குரல்கள், " ஞாபகம் இருக்கிறது!" என்று கூவின.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அந்த ராட்சதப் புலிகேசியும் அவனுடைய படைகளும் நம்பிக்கைத் துரோகம் செய்து, இச்செந்தமிழ் நாட்டின் பட்டணங்களிலும் கிராமங்களிலும் செய்து விட்டுப் போன அட்டூழியங்களையெல்லாம் நீங்கள் மறந்திருக்க முடியாது. மகேந்திரச் சக்கரவர்த்தி காலமான பிற்பாடு தரும ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவரும், நானும் பெரும்படை கொண்டு புலிகேசியைப் பழிவாங்குவதற்காக வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றதையும் நீங்கள் அறிவீர்கள். வாதாபி நகரத்தின் முன்னால் நடந்த கொடிய யுத்தத்தில், நமது வீரத்தமிழ்ப்படைகள் புலிகேசியின் படைகளையெல்லாம் ஹதா ஹதம் செய்தன. யுத்தக் களத்துக்கு வந்த புலிகேசியின் படைகளிலே ஒருவராவது திரும்பிப் போக விடக்கூடாது என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருந்தார். ஆனால், அவருடைய கட்டளைக்கு மாறாக ஒரே ஒருவனை மட்டும் திரும்பிப் போகும்படி நான் அனுமதித்தேன். போரில் கையை இழந்து, "சரணாகதி" என்று காலில் விழுந்தவனைக் கொல்வதற்கு மனமில்லாமல் அவனை ஓடிப்போக அனுமதித்தேன். அந்த ஒற்றைக் கை மனிதன் தான் இதோ விழுந்து கிடக்கும் நீலகேசி. புலிகேசியை விடக்கொடிய அவனுடைய சகோதரன் இவன்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில், "ஆகா!" "அப்படியா?" "என்ன மோசம்!" "என்ன வஞ்சகம்!" என்ற பலவிதமான பேச்சுக்கள் கலகலவென்று எழுந்தன. சிறிது பேச்சு அடங்கிய பிறகு சிறுத்தொண்டர் மீண்டும் கூறினார்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இவனை நான் மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினேன் என்று தெரிவித்தபோது சக்கரவர்த்தி, 'நீ பிசகு செய்தாய்; இதனால் ஏதாவது விபரீதம் விளையும்' என்று சொன்னார். அது உண்மையாகிவிட்டது. இந்த நீலகேசி, கபாலிக வேஷத்தில் நமது புண்ணியத் தமிழகத்தில் வந்து இருந்துகொண்டு, பஞ்சத்தினால் ஜனங்களுடைய புத்தி கலங்கியிருந்த காலத்தில் கபாலிகத்தையும், நரபலியையும் பரப்பத் தொடங்கினான். எதற்காக? வீரத்தினால் ஜயிக்க முடியாத காரியத்தைச் சூழ்ச்சியினால் ஜயிக்கலாம் என்றுதான். கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களுக்கெல்லாம் புகழ் பரவியிருக்கும் நமது மாமல்லச் சக்கரவர்த்திக்கு விரோதமாக உங்களையெல்லாம் ஏவி விட்டுச் சதி செய்விக்கலாம் என்றுதான். இந்த உத்தேசத்துடனேயே இவன் கொல்லி மலையின் உச்சியிலுள்ள குகைகளில் ஆயிரக்கணக்கான கத்திகளையும் கோடாரிகளையும் சேர்த்து வைத்திருந்தான்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆ!" என்று கபால பைரவனின் கோபக்குரல் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆம்; அந்த ஆயுதங்களையெல்லாம் சக்கரவர்த்தியின் கட்டளையினால் இன்று அப்புறப்படுத்தியாகிவிட்டது. இன்னும் இந்தச் சோழநாட்டு இளவரசன் விக்கிரமனையும் தன்னுடைய துர்நோக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள எண்ணியிருந்தான். அதற்காகவே பார்த்திப சோழ மகாராஜாவின் வீரபத்தினி அருள்மொழித் தேவியைச் சிறைப்படுத்தி வைத்திருந்தான்..." அப்போது மகாக் கபால பைரவர் தரையிலிருந்து சட்டென்று எழுந்து நின்று, "எல்லாம் பொய்; கட்டுக்கதை; இதற்கெல்லாம் சாட்சி எங்கே?" என்று கேட்டார். அப்போது ஒருவாறு அவருடைய பீதி தெளிந்ததாகக் காணப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபால பைரவர் "சாட்சி எங்கே?" என்று கேட்டதும் "இதோ நான் இருக்கிறேன், சாட்சி!" என்றது ஒரு குரல். திடீரென்று ஒரு வெள்வேல மரத்தின் மறைவிலிருந்து மாரப்ப பூபதி தோன்றினான். "ஆமாம், நான் சாட்சி சொல்கிறேன். இந்தக் கபால பைரவர் என்னும் நீலகேசி உண்மையில் கபாலிகன் அல்ல, வேஷதாரி. இவன் மகா ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்தான். அந்தச் சதியில் என்னையும் சேரும்படிச் சொன்னான். நான் மறுத்துவிட்டேன். அதன்மேல், இந்தத் தேசப்பிரஷ்ட இளவரசனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினான். சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காஞ்சிக்கு நான் அனுப்பிய இந்த இளவரசனை இவன் வழியில் மறித்து இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்தான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது சிறுத்தொண்டர், "போதும், மாரப்பா! உன் சாட்சியம் போதும்!" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாரப்பன் மனத்திற்குள் என்ன உத்தேசித்தானோ தெரியாது. தன்னைப் புறக்கணித்துவிட்டு மகாக் கபால பைரவர் விக்கிரமனுக்கு யுவராஜா பட்டம் கட்டுவதாகச் சொன்னதைக் கேட்டு அவனுக்கு ஆத்திரம் உண்டாகியிருக்கலாம். அல்லது சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த குற்றம் தன் பேரில் ஏற்படாமலிருக்க வேண்டுமென்று எண்ணியிருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் உத்தேசம் எதுவாயிருந்தாலும், அப்போது யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை அவன் செய்தான். கையில் உருவிய கத்தியுடன் மகாக் கபால பைரவர் நின்ற இடத்தை அணுகினான். "சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த இந்தச் சாம்ராஜ்யத் துரோகி இன்று காளிமாதாவுக்குப் பலியாகட்டும்!" என்று கூறிய வண்ணம் யாரும் தடுப்பதற்கு முன்னால் கத்தியை ஓங்கி வீசினான். அவ்வளவுதான்; கபால பைரவனின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் கீழே விழுந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாரும் பிரமித்துத் திகைத்து நிற்கும்போது மாரப்ப பூபதி பலி பீடத்தண்டை வந்து சிறுத்தொண்டருக்கு முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பிரபோ! ஆத்திரத்தினால் செய்து விட்டேன். நான் செய்தது குற்றமானால் மன்னிக்க வேண்டும்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அச்சமயம் யாரும் எதிர்பாராத இன்னொரு காரியம் நிகழ்ந்தது. கையில் கத்தியுடன் சித்திரகுப்தன் எங்கிருந்தோ வந்து பலி பீடத்தருகில் குதித்தான். படுத்திருந்த மாரப்பனுடைய கழுத்தில் அவன் வீசிய கத்தி விழுந்தது! அக்குள்ளனை உடனே சில பல்லவ வீரர்கள் பிடித்துக் கொண்டார்கள். குள்ளனோ 'ஹீஹீஹீ' என்று சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில நிமிஷ நேரத்தில் நடந்துவிட்ட இக்கோர சம்பவங்களைப் பார்த்த விக்கிரமன் மிகவும் அருவருப்பை அடைந்தான். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று போரிட்டு ஒருவரையொருவர் கொல்லுவது அவனுக்குச் சாதாரண சம்பவமானாலும், இம்மாதிரி எதிர்பாராத கொலைகள் அவனுக்கு வேதனையளித்தன. உடனே, அருகில் நின்ற பொன்னனைப் பார்த்து, "பொன்னா! நாம் போகலாம் வா!" என்றான். அப்பொழுதுதான் தன்னையும் பொன்னனையும் சூழ்ந்து நின்ற பல்லவ வீரர்களை அவன் கவனிக்க நேர்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த வீரர்களின் தலைவன் தன் கையிலிருந்த ஓலையை விக்கிரமனிடம் காட்டினான். அதில் நரசிம்மச் சக்கரவர்த்தியின் முத்திரை பதித்த கட்டளை காணப்பட்டது. உறையூரிலிருந்து காஞ்சிக்கு வந்து கொண்டிருக்கும் சோழ இளவரசன் விக்கிரமனை வழியில் திருப்பி உறையூருக்கே மீண்டும் கொண்டு போகும் படிக்கும் விசாரணை உறையூரிலேயே நடைபெறுமென்றும் அவ்வோலையில் கண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் அந்த ஓலையைப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான். அவனுடைய கையானது உடைவாளின் மேல் சென்றது. அப்போது பொன்னன், "மகாராஜா! பதற வேண்டாம்!" என்றான். இதையெல்லாம் கவனித்த சிறுத்தொண்டர், பல்லவ வீரர் தலைவனைப் பார்த்து, "என்ன ஓலை?" என்று கேட்டார். வீரர் தலைவன் அவரிடம் கொண்டுபோய் ஓலையைக் கொடுத்தான். சிறுத் தொண்டர் அதைப் படித்து பார்த்துவிட்டு, "விக்கிரமா! நீ இந்தக் கட்டளையில் கண்டபடி உறையூருக்குப் போ! நானும் உன் தாயாரை அழைத்துக் கொண்டு உறையூருக்குத்தான் வரப் போகிறேன். இன்று நீ புரிந்த வீரச்செயலைச் சக்கரவர்த்தி அறியும்போது, அவருடைய மனம் மாறாமல் போகாது. அவசரப்பட்டு ஒன்றும் செய்ய வேண்டாம்!" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த நிமிஷம் விக்கிரமனும் பொன்னனும் பல்லவ வீரர்கள் புடைசூழ அந்த மயான பூமியிலிருந்து கிளம்பிச் சென்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்புறம் சிறிது நேரம் அங்கே கூடியிருந்தவர்களுக்கு மெய்க் கடவுளின் ஸ்வரூபத்தையும், நரபலியின் கொடுமையையும் பற்றிச் சிறுத்தொண்டர் விரித்துரைத்தார். அதன் பயனாக, அன்று பலியாக இருந்தவர்களும், பலி கொடுக்க வந்தவர்களும் மனம் மாறி, தங்களைத் தடுத்தாட்கொண்ட மகானைப் புகழ்ந்து கொண்டே தத்தம் ஊர்களுக்குச் சென்றார்கள். பலிபீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் யாராயிருக்கலாமென்று அவர்கள் பலவாறு ஊகித்துப் பேசிக்கொண்டே போனார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும் </div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-75493378487275145362017-10-05T20:50:00.001+02:002017-10-05T20:50:33.626+02:00பார்த்திபன் கனவு - புதினம் -73 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 36 -பலி பீடம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: xx-small;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitIjj16kdZE7eQkQKbPl_ul02MI7mtIfKf_fYqp_XXoUvWG-Ov3eA_hryOqMiY6Cm3MDlf44Za_RNEFJQwQg9Eq1mOWHB33lOkqJihMYuzrsGLUAtJlpofW2Qw8NbtNEEPzfvuWug28a0B/s1600/Thiruchengodu_Kailasanathar_Temple-palipeedam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="720" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitIjj16kdZE7eQkQKbPl_ul02MI7mtIfKf_fYqp_XXoUvWG-Ov3eA_hryOqMiY6Cm3MDlf44Za_RNEFJQwQg9Eq1mOWHB33lOkqJihMYuzrsGLUAtJlpofW2Qw8NbtNEEPzfvuWug28a0B/s320/Thiruchengodu_Kailasanathar_Temple-palipeedam.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காட்டாற்றங்கரையோடு மேற்கு நோக்கி இரண்டு நாழிகை வழி தூரம் போனதும் குள்ளன் தென்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றான். காட்டைத் தாண்டியதும் அப்பால் ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டின் மேல் குள்ளன் வெகு லாவகமாக ஏறினான். குதிரைகள் ஏறுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டன. மேட்டின் மேல் ஏறியதும், அது ஒரு ஏரிக்கரை என்று தெரிந்தது. "அதோ!" என்று குள்ளன் சுட்டிக் காட்டிய இடத்தை விக்கிரமனும் பொன்னனும் நோக்கினார்கள். மொட்டை மொட்டையான மலைக்குன்றுகளும், அவற்றின் அடிவாரத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த குட்டையான மரங்களும் நூற்றுக்கணக்கான தீவர்த்திகளின் வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிந்தன. அந்த மலையடிவாரக் காட்டில் நடமாடிக் கொண்டிருந்த உருவங்கள் மனிதர்களாய்த்தானிருக்க வேண்டுமென்றாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது பேய் பிசாசுகள் தான் நடமாடுகின்றனவோ என்று எண்ணும்படியிருந்தது. பயங்கரத்தை அதிகமாக்குவதற்கு அந்த இடத்திலிருந்து தாரை தப்பட்டைகளின் முழக்கம், உடுக்கு அடிக்கும் சத்தம் - இவையெல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன், பொன்னன் இருவருக்குமே உள்ளுக்குள் திகிலாய்த்தானிருந்தது. ஆனாலும் அவர்கள் திகிலை வெளிக்குக் காட்டாமல் குள்ளனைப் பின்பற்றி ஏரிக்கரையோடு சென்றார்கள். குள்ளனுடைய நடை வேகம் இப்போது இன்னும் அதிகமாயிற்று. அவன் ஏரிக் கரையோடு சற்றுத் தூரம் போய் ஜலம் வறண்டிருந்த இடத்தில் இறங்கி, குறுக்கே ஏரியைக் கடந்து செல்லலானான். அவனைப் பின் தொடர்ந்து விக்கிரமனும் பொன்னனும் குதிரைகளைச் செலுத்தினார்கள். குதிரைகளும் பீதி அடைந்திருந்தன என்பது அவற்றின் உடல் நடுக்கத்திலிருந்து தெரிய வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னொரு கால் நாழிகைக்கெல்லாம் அவர்கள் குன்றின் அடிவாரத்துக் காட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே குதிரைகள் நடுக்கம் அதிகமானபடியால் விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீதிருந்து இறங்கி அவற்றை மரத்தில் கட்டினார்கள். பிறகு காட்டுக்குள் பிரவேசித்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தீவர்த்திகளின் வெளிச்சத்தில் ஆங்காங்கே ஜனங்கள் ஆவேசம் வந்ததுபோல் ஆடுவதையும் சிலர் மஞ்சள் வஸ்திரம் தரித்துக் கண் மூடித் தியானத்தில் இருப்பதையும், சிலர் அடுப்பு மூட்டிப் பொங்கல் வைப்பதையும், இன்னும் சிலர் கத்திகளைப் பாறைகளில் தீட்டிக் கொண்டிருப்பதையும், சிலர் உடுக்கு அடிப்பதையும் பார்த்துக் கொண்டு போனார்கள். திடீரென்று மரங்கள் இல்லாத வெட்டவெளி தென்பட்டது. அந்த வெட்டவெளியில் வலது புறத்தில் ஒரு மொட்டைக் குன்று நின்றது. அதில் பயங்கரமான பெரிய காளியின் உருவம் செதுக்கப்பட்டு, அதன்மேல் பளபளப்பான வர்ணங்கள் பூசப்பட்டிருந்தன. காளியின் கண்கள் உருட்டி விழித்துப் பார்ப்பது போலவே தோற்றமளித்தன. அந்த உருவத்துக்குப் பக்கத்தில் சிலர் கும்பலாக நின்றார்கள். அவர்களுக்கு நடு மத்தியில் எல்லாரையும் விட உயர்ந்த ஆகிருதியுடனும், தலையில் செம்பட்டை மயிருடனும், கழுத்தில் கபால மாலையுடனும், நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டு, கபால பைரவர் நின்றார். அவருக்குப் பின்னால் ஒருவன் நின்று உடுக்கை அடித்துக் கொண்டிருந்தான். கபால பைரவருடைய கண்கள் அப்போது மூடியிருந்தன. அவருடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவருடம்பு லேசாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகா கபால பைரவர் நின்ற குன்றின் அடிவாரத்துக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு சிறு பாறை இருந்தது. இயற்கையாகவே அது பலி பீடம்போல் அமைந்திருந்தது. அந்தப் பலி பீடத்தின்மேல் சிவனடியார் கையும் காலும் உடம்பும் கயிறுகளால் கட்டப்பட்டுக் கிடந்தார். அவருடைய கண்கள் நன்றாகத் திறந்திருந்தன. அங்குமிங்கும் அவருடைய கூரிய கண்கள் சுழன்று சுழன்று பார்த்துக் கொண்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலி பீடத்துக்குப் பக்கத்தில் ஒரு ராட்சத உருவம் கையிலே பிரம்மாண்டமான கத்தியுடன் ஆயத்தமாய் நின்றது. மகா கபால பைரவர் கண்ணைத் திறந்து பார்த்து ஆக்ஞை இடவேண்டியதுதான். உடனே சிவனடியாரின் கழுத்தில் கத்தி விழுந்துவிடச் சித்தமாயிருந்தது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலே விவரித்த காட்சியையெல்லாம் விக்கிரமன் ஒரு நொடிப் பொழுதில் பார்த்துக் கொண்டான். பின்னர், ஒரு கணங்கூட அவன் தாமதிக்கவில்லை. கையில் கத்தியை எடுத்து வீசிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் பலி பீடத்துக்கருகில் சென்றான். அந்த ராட்சத உருவத்தின் கையிலிருந்த கத்தியைத் தன் கத்தியினால் ஓங்கி அடிக்கவும், அது தூரத்தில் போய் விழுந்தது. உடனே, சிவனடியாரின் பக்கத்திலே வந்து நின்று கொண்டான். தன்னைப் பின் தொடர்ந்து வந்திருந்த பொன்னனைப் பார்த்து, "பொன்னா! ஏன் நிற்கிறாய்? கட்டுக்களை உடனே அவிழ்த்து விடு!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வளவும் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது. சுற்றிலும் நின்றவர்கள் எல்லோரும், "ஹா! ஹா!" என்று கூச்சலிட்டதைக் கேட்டு கபால பைரவர் கண்விழித்துப் பார்த்தார். நிலைமை இன்னதென்று தெரிந்து கொண்டார். நிதானமாக நடந்து பலிபீடத்துக்கு அருகில் வந்து விக்கிரமனை உற்றுப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஹா ஹா ஹா!" என்று அவர் நகைத்த ஒலி குன்றுகளும் பாறைகளும் அடர்ந்த அந்த வனாந்திரப் பிரதேசமெல்லாம் பரவி எதிரொலி செய்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் மயிர்க் கூச்சு உண்டாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குள் என்னவோ மிகவும் நடக்கிறது என்று அறிந்து நாலாபக்கத்திலிருந்தும் ஜனங்கள் ஓடிவந்து பலி பீடத்தைச் சூழ ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட மகாக் கபால பைரவர் தமது ஒற்றைக் கையைத் தூக்கி, "ஹும்!" என்று கர்ஜனை செய்தார். அவ்வளவுதான் எல்லோரும் சட்டென்று விலகிச் சென்று சற்று தூரத்திலேயே நின்றார்கள். கீழே விழுந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்த ராட்சதனும் அந்த ஹுங்காரத்துக்குக் கட்டுபட்டுத் தூரத்தில் நின்றான். பொன்னனும் நின்ற இடத்திலேயே செயலிழந்து நின்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகா கபால பைரவர் விக்கிரமனை உற்றுப் பார்த்த வண்ணம் கூறினார் :- "பிள்ளாய்! நீ பார்த்திப சோழனின் மகன் விக்கிரமன் அல்லவா? தக்க சமயத்தில் நீ வந்து சேர்வாய் என்று காளிமாதா அருளியது உண்மையாயிற்று, மாதாவின் மகிமையே மகிமை!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்த சக்தி பொருந்திய அவருடைய சிவந்த கண்களின் பார்வையிலிருந்து விலகிக் கொள்ள முடியாதவனாய் விக்கிரமன் பிரமித்து நின்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பிள்ளாய்! உன்னைத் தேடிக் கொண்டு நான் மாமல்லபுரத்துக்கு வந்தேன். அதற்குள் அந்தப் பித்தன் மாரப்பன் தலையிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டான். ஆனாலும் இன்றிரவு நீ இங்கு எப்படியும் வருவாய் என்று எதிர்பார்த்தேன்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மந்திரத்தினால் கட்டுண்ட நாக சர்ப்பத்தின் நிலைமையிலிருந்த விக்கிரமன், விம்முகின்ற குரலில், "நீர் யார்? எதற்காக என்னை எதிர்பார்த்தீர்?" என்றான். "எதற்காகவா? இன்றிரவு இந்தத் தக்ஷிண பாரத தேசத்தில் காளிமாதாவின் சாம்ராஜ்யம் ஸ்தாபிதமாகப் போகிறது. இந்த சாம்ராஜ்யத்திற்கு உனக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டுமென்று மாதாவின் கட்டளை!" என்றார் கபால பைரவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது எங்கிருந்தோ 'க்ளுக்' என்று பரிகாசச் சிரிப்பின் ஒலி எழுந்தது. கபால பைரவரும் விக்கிரமனும் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் சிரித்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க யாதொரு வழியும் தென்படவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமனை அத்தனை நேரமும் கட்டியிருந்த மந்திர பாசமானது மேற்படி சிரிப்பின் ஒலியினால் அறுபட்டது. அவன் சிவனடியாரை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக் கபால பைரவரை நேருக்கு நேர் நோக்கினான்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீர் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. எனக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போவதாகச் சொல்கிறீர். அது உண்மையானால், முதலில் நான் செய்யப்போகும் காரியத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம். இதோ இந்தப் பலிபீடத்தில் கட்டுண்டு கிடக்கும் பெரியார் எங்கள் குலத்தின் நண்பர். எனக்கும் என் அன்னைக்கும் எவ்வளவோ பரோபகாரம் செய்திருக்கிறார். அவரை விடுதலை செய்வது என் கடமை. என் கையில் கத்தியும் என் உடம்பில் உயிரும் இருக்கும் வரையில் அவரைப் பலியிடுவதற்கு நான் விடமாட்டேன்!" என்று சொல்லி விக்கிரமன் பலிபீடத்தை அணுகி, சிவனடியாரின் கட்டுக்களை வெட்டிவிடயத்தனித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நில்...!" என்று பெரிய கர்ஜனை செய்தார் கபால பைரவர். அஞ்சா நெஞ்சங் கொண்ட விக்கிரமனைக்கூட அந்தக் கர்ஜனை சிறிது கலங்கச் செய்துவிட்டது. அவன் துணுக்குற்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். சிவனடியாரின் கட்டுக்களை வெட்டுவதற்காக அவன் நீட்டிய கத்தி நீட்டியபடியே இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபால பைரவர் மறுபடியும் உரத்த குரலில், "பிள்ளாய் விக்கிரமா! இந்தப் போலிச் சிவனடியார் - இந்த வஞ்சக வேஷதாரி - இந்தப் பொய் ஜடாமகுடதாரி யார் என்று அறிந்தால், இவ்விதம் சொல்லமாட்டாய்! இவரைக் காப்பாற்றுவதற்கு இவ்வளவு முனைந்து நிற்கமாட்டாய்!" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவருடைய குரலில் தொனித்த ஆத்திரமும் அழுத்தமும் விக்கிரமனைத் திகைப்படையச் செய்தன. சிவனடியார் பல்லவ ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் என்று தான் முன்னமே சந்தேகித்ததும் அவனுக்கு நினைவு வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபால பைரவர் மீண்டும், "இந்த வேஷதாரியையே கேள், "நீ யார்?' என்று; தைரியமிருந்தால் சொல்லட்டும்!" என்று அடித் தொண்டையினால் கர்ஜனை செய்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சிவனடியாரைப் பார்த்தான். அவருடைய முகத்தில் புன்னகை தவழ்வதைக் கண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே சமயத்தில், "விக்கிரமா! கபால மாலையணிந்த இந்த வஞ்சக வேஷதாரி யார் என்று முதலில் கேள்; தைரியமிருந்தால் சொல்லட்டும்!" என்று இடிமுழக்கம் போன்ற ஒரு குரல் கேட்டது. இவ்வாறு கேட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்த பாறையின் மறைவிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. அங்கிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும் அந்த உருவத்தின் மேல் விழுந்தன. தீவர்த்தி வெளிச்சம் அந்த முகத்தில் விழுந்தபோது, "ஆ!" என்ற வியப்பொலி ஏககாலத்தில் அநேகருடைய வாயிலிருந்து எழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விபூதி ருத்திராட்சமணிந்து, முகத்தில் ஞான ஒளி வீசித் தோன்றிய அப்பெரியாரைப் பார்த்ததும் விக்கிரமனுக்கு என்றுமில்லாத பயபக்தி உண்டாயிற்று. வந்தவர் வேறு யாருமில்லை; பல்லவ சாம்ராஜ்யத்தின் பழைய சேனாதிபதியும், வாதாபி கொண்ட மகாவீரருமான சிறுத் தொண்டர்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-43609377048000145152017-10-04T20:33:00.003+02:002017-10-04T20:33:57.264+02:00பார்த்திபன் கனவு - புதினம் -72 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 35 -தாயும் மகனும்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: xx-small;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlzbXA5QoBJBLv4D_h3bA4BTCgmkx89u6bId_OOzKkFqVww6B0Weatg7rt8D4ubA8oEMzmz0CXiJBWSmHrRrYc41lPMwEi7BMcWssvy82xF7lmbcUmDZlOnZtmvJVG21sPuMcbAj3UjPTd/s1600/1491762620a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="691" data-original-width="946" height="233" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlzbXA5QoBJBLv4D_h3bA4BTCgmkx89u6bId_OOzKkFqVww6B0Weatg7rt8D4ubA8oEMzmz0CXiJBWSmHrRrYc41lPMwEi7BMcWssvy82xF7lmbcUmDZlOnZtmvJVG21sPuMcbAj3UjPTd/s320/1491762620a.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகாராணி அகப்பட்டுவிட்டார்" என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது உள்ளேயிருந்து, "குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!" என்று ஒரு பேச்சுக்குரல் கேட்டது. அது மகாராணி அருள்மொழி தேவியின் குரல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div>
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">"அம்மா!" என்று அலறிக்கொண்டு விக்கிரமன் மகேந்திர மண்டபத்துக்குள் நுழைந்தான். பொன்னனும் பின்னோடு சென்றான்.</span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது அந்த இருளடைந்த மண்டபத்துக்குள்ளேயிருந்து ஒரு பெண் உருவம் வெளியே வந்தது. அது அருள்மொழி ராணியின் உருவந்தான். ஆனால், எவ்வளவு மாறுதல்? விக்கிரமன் கடைசியாக அவரைப் பார்த்தபோது இன்னும் யெளவனத்தின் சோபை அவரை விட்டுப் போகவில்லை. இப்போதோ முதுமைப் பருவம் அவரை வந்தடைந்துவிட்டது. மூன்று வருஷத்துக்குள் முப்பது வயது அதிகமானவராகக் காணப்பட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் ஒரே தாவலில் அவரை அடைந்து சாஷ்டாங்கமாய்க் கீழே விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டான். அருள்மொழி ராணி கீழே உட்கார்ந்து விக்கிரமனுடைய தலையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமனைப் பின்தொடர்ந்து மண்டபத்துக்குள் நுழைந்த பொன்னன் மேற்படி காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக அவனுடைய பார்வை மண்டபத்தின் ஒரு பக்கத்தில் கட்டுண்டு கிடந்த உருவத்தின் மேல் விழுந்தது; மங்கலான தீவர்த்தியின் வெளிச்சத்தில் அது குள்ளனுடைய உருவம் என்பதைப் பொன்னன் கண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனுடைய பார்வை குள்ளன்மீது விழுந்ததும் குள்ளன், "ஹீஹீஹீ" என்று சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தச் சிரிப்பைக் கேட்டு விக்கிரமனும் அவனைப் பார்த்தான். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆம், மகாராஜா! மாமல்லபுரத்திலிருந்து தங்களுக்கு வழிகாட்டி வந்த சித்திரக்குள்ளன்தான் இவன்!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருள்மொழி ராணி எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள். யாரை என்ன கேட்பது என்று தெரியாமல் திகைப்பவளாகக் காணப்பட்டாள். கடைசியில் "பொன்னனைப் பார்த்து, பொன்னா எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. அந்த மலைக்குகையில் எத்தனை நாள் இருந்தேன் என்பதே தெரியாது. கடைசியில் அருவியில் விழுந்து உயிரை விடலாம் என்று எத்தனித்தபோது சிவனடியார் வந்து தடுத்துக் காப்பாற்றினார். 'உன் மகன் திரும்பி வந்திருக்கிறான், அவனை எப்படியும் பார்க்கலாம்' என்று தைரியம் கூறினார். பொன்னா, காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனை நீ காப்பாற்றினாயாமே?" என்று கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது விக்கிரமன், "வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதுதானா? சக்கரவர்த்தியின் சிரசாக்ஞையிலிருந்து - காளிக்குப் பலியாவதிலிருந்து - இன்னும் எவ்வளவோ விதத்தில் பொன்னன் என்னைக் காப்பாற்றினான்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"காளிக்குப் பலியா?" என்று சொல்லிக் கொண்டு அருள்மொழி நடுநடுங்கினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று பயங்கரமாய்ச் சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பலி! பலி! இன்று ராத்திரி ஒரு பெரிய பலி - விழப்போகிறது! காளியின் தாகம் அடங்கப் போகிறது!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லோரும் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இன்று அர்த்த ராத்திரியில் சிவனடியார் பலியாகப் போகிறார்! மகாபத்திர காளியின் இராஜ்யம் ஆரம்பமாகப் போகிறது! அப்புறம் ஹா ஹா ஹா!.. அப்புறம் ... மண்டை ஓட்டுக்குப் பஞ்சமே இராது!" என்றான் குள்ளன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் அப்போது துள்ளி எழுந்து, "பொன்னா! இவன் என்ன உளறுகிறான்? சிவனடியாரைப் பற்றி...." என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஹிஹிஹி! உளறவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன். அந்தக் கபடச் சாமியாரை இத்தனை நேரம் காலையும் கையையும் கட்டிப் பலிபீடத்தில் போட்டிருப்பார்கள். நடுநிசி ஆச்சோ, இல்லையோ, கத்தி கழுத்திலே விழும்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது அருள்மொழித் தேவி விக்கிரமனைப் பார்த்து, "குழந்தாய்! இவன் முன்னேயிருந்து இப்படித்தான் சொல்லி என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஐந்தாறு நாளைக்கு முன்னால் நான் குகையிலிருந்து தப்பி அருவியில் விழப்போன போது சிவனடியார் தோன்றி, சீக்கிரத்தில் என்னை மீட்டுக் கொண்டுபோக ஆட்கள் வருவார்கள் என்று தெரிவித்தார். அந்தப்படியே இவர்கள் வந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள். வழியில் மறைந்து நின்ற இந்தக் குள்ளனையும், பிடித்துக் கொண்டு வந்தார்கள். இங்கு வந்து சேர்ந்தது முதல் இவன் இன்று ராத்திரி சிவனடியாரைக் கபாலிகர்கள் பலிகொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஐயோ! எப்பேர்ப்பட்ட மகான்! நமக்கு எத்தனை ஒத்தாசை செய்திருக்கிறார்....! அவருக்கா இந்தப் பயங்கரமான கதி!" என்று அலறினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! நீ என்ன சொல்கிறாய்? இந்தக் கொடும் பாதகத்தைத் தடுக்காவிட்டால் நாம் இருந்து என்ன பிரயோஜனம்?" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதெப்படி முடியும், மகாராஜா! உங்கள் நிலைமையை மறந்து பேசுகிறீர்களே! நாளைப் பொழுது விடிவதற்குள் நாம் மாமல்லபுரம் போய்ச் சேராமற்போனால்..." சேராமற்போனால் என்ன? கப்பல் போய்விடும், அவ்வளவுதானே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது பொன்னன் அருள்மொழி ராணியைப் பார்த்து, "அம்மா, இவரைப் பெரும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. தேசப் பிரஷ்டமானவர் திரும்பி வருவதற்குத் தண்டனை என்னவென்று தங்களுக்குத் தெரியாதா? இவர் இங்கே வந்திருப்பது மாரப்ப பூபதிக்குத் தெரிந்து காஞ்சிச் சக்கரவர்த்திக்கும் தெரியப்படுத்தி விட்டார். நாளைக் காலைக்குள் இவர் மாமல்லபுரம் போய்க் கப்பலில் ஏறியாக வேண்டும். இல்லாவிட்டால் தப்புவது அரிது. இப்போது சிவனடியாரைக் காப்பாற்றுவதற்காகப் போனால், பிறகு இவருடைய உயிருக்கே ஆபத்துதான். நீங்களே சொல்லுங்கள் இவர் என்ன செய்யவேணுமென்று?" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருள்மொழி ராணி பெருந் திகைப்புக்குள்ளானாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் அன்னையைப் பார்த்து, "அம்மா! பார்த்திப மகாராஜாவின் வீரபத்தினி நீ! இந்த நிலைமையில் நான் என்ன செய்யவேண்டும், சொல்! நமக்குப் பரோபகாரம் செய்திருக்கும் மகானுக்கு ஆபத்து வந்திருக்கும்போது, என்னுடைய உயிருக்குப் பயந்து ஓடுவதா? என் தந்தை உயிரோடிருந்தால் இப்படி நான் செய்வதை விரும்புவாரா?" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சுவரை வைத்துக் கொண்டு தான் சித்திரம் எழுத வேண்டும். இவர் பிழைத்திராவிட்டால் பார்த்திப மகாராஜாவின் கனவுகளை நிறைவேற்றுவது எப்படி?" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருள்மொழி ராணி இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தாள். கடைசியில், பொன்னனைப் பார்த்து,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! என்னைக் கல்நெஞ்சமுடையவள், பிள்ளையிடம் பாசமில்லாதவள் என்று ஒருவேளை நினைப்பாய். ஆனாலும் என் மனத்திலுள்ளதைச் சொல்கிறேன். நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்திருக்கும் ஒருவருக்கு ஆபத்து வந்திருக்கும்போது என் பிள்ளை உயிருக்குப் பயந்து ஓடினான் என்ற பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை!" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடனே விக்கிரமன், தாயாரின் பாதங்களில் நமஸ்கரித்து, எழுந்து, "அம்மா! நீதான் வீரத்தாய்! பார்த்திப மகாராஜாவுக்குரிய வீர பத்தினி!" எனக் குதூகலத்துடன் உரைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகு பொன்னனைப் பார்த்து, "கிளம்பு, பொன்னா! இன்னும் என்ன யோசனை?" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எங்கே கிளம்பிப் போவது? பலி எங்கே நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஹீஹீஹீ! நான் வழி காட்டுகிறேன்; என்னைக் கட்டவிழ்த்து விடுங்கள்" என்று சித்திரக் குள்ளன் குரல் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குள்ளனுடைய கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. அவன் கையில் ஒரு தீவர்த்தியைக் கொடுத்தார்கள். விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மேல் ஏறிக் கொண்டார்கள். குள்ளன் கையில் தீவர்த்தியுடன் மேற்கு நோக்கிக் காட்டு வழியில் விரைந்து செல்ல, விக்கிரமனும் பொன்னனும் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">தொடரும் </span></div>
</div>
</div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-58185053217477611882017-10-03T20:37:00.000+02:002017-10-03T20:37:39.894+02:00பார்த்திபன் கனவு - புதினம் -71 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 34 -"ஆகா! இதென்ன?".<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQpyOYI5HcKDqvvSkHzH7H2AaLSTGHQzMzhRiwpkcCA6W4JkGIKJUFAf449PpscR1g0URRjo79CCq5Gms1HJ8mgTQAA6DI4zCBDjiomMv380hW6dmF8ty5sJVaX0IGuTqyQa7UU9cYP1tt/s1600/Shocked_Eye_by_stereotypical_female.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQpyOYI5HcKDqvvSkHzH7H2AaLSTGHQzMzhRiwpkcCA6W4JkGIKJUFAf449PpscR1g0URRjo79CCq5Gms1HJ8mgTQAA6DI4zCBDjiomMv380hW6dmF8ty5sJVaX0IGuTqyQa7UU9cYP1tt/s320/Shocked_Eye_by_stereotypical_female.jpg" width="320" /></a></div>
<br />
<span style="font-size: xx-small;"><br /><br /><div style="text-align: justify;">
விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!" என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம், மகாராஜா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சிறைக்குள்ளிருந்தபோது நீ என்னை மறந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நான் ஒருவேளை மறந்தாலும், என்னை மறக்க விடாதவர் ஒருவர் இருக்கிறாரே!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"யார் அது?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வேறு யார்? தங்களை யமன் வாயிலிருந்து மீட்ட தேவிதான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்டதும் விக்கிரமனுடைய உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளிற்று. குந்தவியைப் பற்றி மேலும் விசாரிக்க வேண்டுமென்கிற ஆவல் உண்டாயிற்று. ஆனால் சிறிது தயக்கமாகவுமிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சற்றுப் பொறுத்து, "எங்கே போகிறோம் இப்போது?" என்றான் விக்கிரமன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மாமல்லபுரத்துக்கு, மகாராஜா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன, மகாராஜா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நாளைக் காலைக்குள் மாமல்லபுரம் போய்விட வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம், மகாராஜா! அதனால்தான் ஒரு கணம் கூடத் தாமதிப்பதற்கில்லை என்று நான் சொன்னேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நாளை மத்தியானம் வரையில் அங்கே கப்பல் காத்துக் கொண்டிருக்கும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதற்குள் நாம் போய்விடலாம், மகாராஜா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்றுப் பொறுத்து மறுபடியும், "தேவி எங்கே இருக்கிறார், பொன்னா! அவரிடம் கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொண்டு கிளம்பியிருந்தால், எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும்!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அது முடியாது, மகாராஜா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எது முடியாது?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தேவியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புவது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; முடியாதுதான்! இனி உறையூருக்கு மறுபடியும் எப்படிப் போக முடியும்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தேவி உறையூரில் இல்லை, மகாராஜா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தேவி உறையூரில் இல்லையா? பின் எங்கே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மாமல்லபுரத்தில்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆ!" என்றான் விக்கிரமன். சில நாட்களாகச் சிறைப்பட்டிருந்த பிறகு விடுதலையடைந்த உற்சாகம், குளிர்ந்த இரவு நேரத்தில் குதிரைமீது செல்லும் கிளர்ச்சி, இவற்றுடன், 'குந்தவி மாமல்லபுரத்தில் இருக்கிறாள்' என்னும் செய்தியும் சேர்ந்து அவனுக்கு எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியானால் அவரிடம் விடைபெற முடியாது என்று சொன்னாயே, ஏன்? பொன்னா! ஒரு கண நேரமாவது அவரை நான் அவசியம் பார்க்க வேண்டும். பார்த்து நன்றி செலுத்த வேண்டும். அதோடு என் தாயாரைக் கண்டுபிடித்துப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்புவிக்க வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதுதான் முடியாது!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஏன் அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தேவியின் உறுதி எனக்கும் தெரிந்திருப்பதினாலே தான். தங்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் உத்தேசம் அவருக்குக் கிடையாது. தங்களோடு அவரும் புறப்படச் சித்தமாயிருக்கிறார்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆகா! நிஜமாகவா? - இவ்வளவு முக்கியமான செய்தியை முன்னமே எனக்கு ஏன் சொல்லவில்லை?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இப்போதுகூட நான் சொல்லியிருக்கக்கூடாது. தாங்கள் கப்பல் ஏறிய பிறகு தங்களை அதிசயப்படுத்த வேண்டும் என்று தேவி உத்தேசித்திருந்தார் அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று, "அதோ பாருங்கள் மகாராஜா!" என்று பொன்னன் கூறியதும் விக்கிரமன் சிறிது திடுக்கிட்டுப் பார்த்தான். சாலையில் ஒரு பக்கத்து மரத்தடியில் பத்துப் பன்னிரண்டு பேர் கும்பலாக நின்றார்கள். அவர்களில் ஒருவன் தீவர்த்தி வைத்துக் கொண்டிருந்தான். தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் கோரமான காட்சி அளித்தன. அவர்களுடைய கழுத்தில் கபால மாலைகள் தொங்கின. அவர்களுடைய கைகளில் கத்திகள் மின்னின. நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் நின்ற இடத்தைக் குதிரைகள் தாண்டிய போது ஒரு கணம் விக்கிரமனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவர்களைக் கடந்து சிறிது தூரம் சென்றது, "அப்பா! என்ன கோரம்" என்றான் விக்கிரமன். "மகாராஜா! தங்களுக்காகத்தான் இங்கே இவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களிடம் தங்களை ஒப்பிவித்துவிடும்படிதான் மாரப்ப பூபதி கடைசியாகத் தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார். நான் இவர்களை முந்திக் கொண்டேன். தாங்கள் குதிரை மேல் இவ்விதம் தனியாகப் போவீர்கள் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இன்னும் ரொம்ப நேரம் காத்திருப்பார்கள். பிறகு கபால பைரவரிடம் போய்த் தாங்கள் வரவில்லையென்று தெரிவிப்பார்கள். இன்று கபால பைரவருக்கு மாரப்பபூபதி மேல் பிரமாதமான கோபம் வரப்போகிறது!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! சக்கரவர்த்தியின் சிரஸாக்கினை, கபாலிகர்கள் பலி இந்த இரண்டுவித ஆபத்துக் களிலிருந்துமல்லவா என்னை நீ தப்புவித்திருக்கிறாய்? முன்னே காட்டாற்றில் போனவனை எடுத்து உயிர் கொடுத்துக் காப்பாற்றினாய். சோழ வம்சத்தின் குலதெய்வம் உண்மையில் நீதான். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நாளைய தினம் உன்னைவிட்டுப் பிரிவேன். மறுபடியும் எப்போது காண்பேனோ, என்னவோ?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"லட்சணந்தான்!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன சொல்கிறாய்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்னை விட்டாவது தாங்கள் பிரியவாவது?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இன்னொரு தடவை தங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு நான் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? இங்கே எனக்கு என்ன வேலை? வள்ளி ஏற்கெனவே குந்தவி தேவியுடன் மாமல்லபுரத்தில் இருக்கிறாள். நானும் அவளும் தங்களுடன் வரப்போகிறோம்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "பொன்னா! நீ சொல்வது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியளிக்கிறது. நீயும் வள்ளியும் என்னுடன் வந்தால், சோழ நாடே வருகிற மாதிரிதான். ஆனால் , ஒரு விஷயந்தான் என் மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது. மகாராணியின் கதி என்ன? அவரை யார் தேடிக் கண்டுபிடிப்பார்கள்? அவருக்கு யார் உன்னைப் பற்றிச் சொல்வார்கள்? - நான் தாய்நாட்டுக்கு வந்ததின் முக்கிய நோக்கம் மகாராணியைப் பார்ப்பதற்கு, அவரைப் பார்க்காமலே திரும்பிப் போகிறேன். அவருக்கு என்னைப் பற்றிச் செய்தி சொல்லவாவது யாரேனும் இருக்க வேண்டாமா!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனுடைய மனத்திலும் அந்த விஷயம் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியாரிடம் தான் சொன்னபடி ஒன்றுமே செய்யவில்லை. அவர் என்ன ஆனாரோ, என்னவோ? மகாராணியை ஒருவேளை கண்டுபிடித்திருப்பாரோ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனுடைய மனத்தில் சமாதானம் இல்லாவிட்டாலும், வெளிப்படையாக, "மகாராணியைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். மகாராஜா! அவரைச் சிவனடியார் பாதுகாப்பார். சிவனடியாரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. மகாசக்தி வாய்ந்தவர்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; அவர் நம்மை மாமல்லபுரத்துக்கருகிலுள்ள சிற்ப வீட்டில் சந்திப்பதாகச் சொன்னாரல்லவா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அது இப்போது முடியாத காரியம்; சிவனடியாரைப் பார்க்கத் தங்கினோமானால், கப்பலைப் பிடிக்க முடியாது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உண்மைதான். ஆனாலும் அன்னையையும் சிவனடியாரையும் பார்க்காமல் போவதுதான் மனத்திற்கு வேதனை அளிக்கிறது" என்றான் விக்கிரமன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது "ஆகா! இதென்ன?" என்று வியப்புடன் கூவினான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குள் அவர்கள் காட்டாற்றைச் சமீபித்து அதன் இக்கரையிலுள்ள மகேந்திர மண்டபத்துக்கருகில் வந்து விட்டார்கள். அந்த மண்டபத்தின் வாசலில் தோன்றிய காட்சிதான் பொன்னனை அவ்விதம் வியந்து கூவச் செய்தது. அங்கே ஏழெட்டு ஆட்கள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். இரண்டு பேர் கையில் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் வாசல் ஓரமாக ஒரு பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இன்று ராத்திரி என்னவெல்லாமோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன!" என்று பொன்னன் முணுமுணுத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இந்த வேளையில் இங்கே யார், பொன்னா?" என்றான் விக்கிரமன். "தெரியவில்லை, மகாராஜா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இவர்கள் கபாலிகர்கள் இல்லை, நிச்சயம். வேறு யாராயிருக்கலாம்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒரு வேளை குந்தவி தேவிதான் நமக்கு உதவிக்காக இன்னும் சில ஆட்களை அனுப்பியிருக்கிறாரோ, என்னவோ? ஆனால் பல்லக்கு என்னத்திற்கு?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மகேந்திர மண்டபத்தின் வாசல் வந்துவிட்டது. குதிரைகளை இருவரும் நிறுத்தினார்கள். அங்கு நின்ற ஆட்களில் ஒருவனை எங்கேயோ பார்த்ததாகப் பொன்னனுக்கு நினைவு வந்தது. எங்கே பார்த்திருக்கிறோம்? - ஆகா! திருச்செங்காட்டாங்குடியில்! பரஞ்சோதி அடிகளின் ஆள் குமரப்பன் இவன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த மனிதனும் பொன்னன் முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஓ! பொன்னனா? என்று அவன் ஆச்சரியத்துடன் கூறி, "பொன்னா! சமாசாரம் தெரியுமா? உறையூர் மகாராணி அகப்பட்டு விட்டார்! இதோ இந்த மண்டபத்துக்குள்ளே இருக்கிறார். உன்னைப் பற்றிக்கூட விசாரித்தார்" என்றான்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">தொடரும்.</span></div>
</div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-11556079007993856582017-10-03T20:20:00.000+02:002017-10-03T20:20:18.739+02:00பார்த்திபன் கனவு - புதினம் -70 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 33 - அமாவாசை முன்னிரவு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
<span style="color: #3d85c6;"> </span></h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.iscenglish.com/fm1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.iscenglish.com/fm1.jpg" height="211" width="320" /></a></div>
<div>
<span style="color: #3d85c6;"><br /></span></div>
<span style="font-size: xx-small;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;"><br /></span></div>
<span style="font-size: xx-small;">
<div style="text-align: justify;">
படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, "படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்து இரகசியமாக மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். அவரை இந்த அமாவாசையன்று செண்பகத் தீவு செல்லும் கப்பலில் ஏற்றிய பிறகுதான் நமக்கு நிம்மதி" என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் வியப்புடன், "தேவி! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் மகாராஜா இங்கே ஜுரம் அடித்துக் கிடந்தாரல்லவா, பொன்னா? அப்போது அவர் தம்மை அறியாமல் கூறிய மொழிகளிலிருந்து அவர் யார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு அமாவாசையன்றும் அவருக்காகச் செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து காத்திருக்கும். அடுத்த அமாவாசை வருவதற்குள்ளே அவரைத் தப்புவித்து இரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும்!" என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அம்மணி! கோபித்துக் கொள்ளக்கூடாது. எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை, எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தங்கள் தகப்பனாருக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதாதா?" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என் தகப்பனாரை நீ சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை. பொன்னா! ஆனால் மாரப்பன் தெரிந்து கொண்டிருக்கிறான். அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்; நீதி என்றால் நீதிதான். சக்கரவர்த்திக்குத் தெரிவதற்கு முன்னால், உங்கள் மகாராஜா கப்பலில் ஏறினால்தான் தப்பலாம். நல்ல வேளையாக, என் தந்தை இப்போது காஞ்சியில் இல்லை. ஏதோ காரியமாய் மாறு வேஷத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நமக்குச் சமயம்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விதம் குந்தவி கூறிவந்ததைக் கேட்டபோது பொன்னனுக்கு ஒரு நிமிஷம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் தான் சிவனடியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் அவர் என்ன முக்கிய நோக்கத்துடன் இம்மாதிரி இரகசியமாய்க் காரியங்கள் செய்து வருகிறாரோ, தெரியாது. அந்த நோக்கத்துக்குத் தன்னால் பங்கம் விளையக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, குந்தவியின் மொழிகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தான். கடைசியில், "தேவி! விக்கிரம மகாராஜாவின் க்ஷேமம் ஒன்றைத் தவிர எனக்கு உலகில் வேறு ஒன்றும் பொருட்டில்லை. தங்கள் கட்டளைப்படி எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சந்தோஷம். நான் மாளிகைக்குப் போகிறேன். நீ முதலில் போய் வள்ளியை இங்கே அழைத்து வா!" என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவியின் கட்டளையின் பேரில் கிடைத்த படகை எடுத்துக் கொண்டு பொன்னன் அக்கரைக்குச் சென்றான். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. பொன்னனுடைய கைகள் படகைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனுடைய உள்ளம் அலைந்து கொண்டிருந்தது. உறையூர் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தவேண்டிய விக்கிரம மகாராஜா இன்று இரவு அதே உறையூரில் சிறையில் படுத்திருப்பார் என்பதை எண்ணியபோது அவனுடைய நெஞ்சு புண்ணாயிற்று. அன்றிரவே உறையூருக்குப் போய் ஊர் ஜனங்களிடமெல்லாம், "உங்கள் மகாராஜா சிறையில் இருக்கிறார்!" என்ற செய்தியைப் பரப்பி ஒரு பெரிய கலகத்தை உண்டு பண்ணலாமா என்று பொன்னன் நினைத்தான். பிறகு, அது நடக்காத காரியம் என்று அவனுக்கே தோன்றியது. சோழ நாட்டு மக்கள் இப்போது வீரமிழந்த கோழைகளாகப் போய்விட்டார்கள். அயல் மன்னனின் ஆதிபத்தியத்தை ஒப்புக் கொண்டு வாழ்கிறார்கள். மாரப்பனைப் போல் பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளைகளை அடிபணிந்து நிறைவேற்றவும் காத்திருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன்னுடைய நிலைமையும் அதுதானோ என்ற எண்ணம் பொன்னனுக்குத் தோன்றியபோது அவனுடைய உடம்பு வெட்கத்தினால் குறுகியது. சிவனடியாரின் வேஷத்தையும் அவருடைய பேச்சையும் முழுவதும் நம்பலாமா? அவர் கூறியதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை தானே ஏமாந்து போயிருக்கலாமல்லவா.... விக்கிரம மகாராஜாவிடம் உண்மையான அன்பு கொண்டு அவரைக் காப்பாற்றக் கவலை கொண்டிருப்பவர் குந்தவி தேவி என்பதில் சந்தேகமில்லை. யமன் வாயிலிருந்தே அவரை மீட்டு வரவில்லையா? - இவ்விதம் பலவாறாக யோசித்துக் கடைசியில் பொன்னன் குந்தவிதேவியின் விருப்பத்தின்படிக் காரியம் செய்வதென்று உறுதி செய்து கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படகு அக்கரையை அடைந்ததும் பொன்னன் தன் குடிசையை அடைந்து கதவு சாத்தித் தாளிட்டிருப்பதைப் பார்த்து அதிசயத்துக் கதவைத் தட்டினான். "யார் அது?" என்று வள்ளியின் அதட்டுங் குரல் கேட்டது. பொன்னனின் குரலைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவள் கதவைத் திறந்தாள். 'கதவை அடைப்பானேன்?' என்று கேட்டபோது அவள் கூறிய விவரம் பொன்னனுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் உண்டாக்கிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் வருவதற்குச் சற்று முன்னால், இருட்டுகிற சமயத்தில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டு வள்ளி குடிசைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். பேச்சுக் குரல் குடிசையின் பக்கம் நெருங்கி வந்தது. ஒரு பயங்கரமான பேய்க்குரல், "நீ இங்கேயே இருந்து பூபதியை அழைத்துக் கொண்டு வா! நான் கோயிலுக்குப் போகிறேன்" என்றது. இன்னொரு குரல், "மகாப் பிரபோ! இந்தக் குடிசையில் தங்கியிருக்கலாமே!" என்றது. "நீ இருந்து அழைத்து வா!" என்று முதலில் பேசிய பயங்கரக் குரல் கூறிற்று. சற்றுப் பொறுத்து வள்ளி மெதுவாகத் திறந்து பார்த்த போது தூரத்தில் இருவர் போவது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அவர்களில் ஒருவன் நெட்டையாக வளர்ந்தவன்; அவனுக்கு ஒரு கை இல்லை என்பதைக் கண்டதும் நெஞ்சுத் துணிவுள்ள வள்ளிகூடப் பயந்து நடுங்கிவிட்டாள். காவேரி சங்கமத்தில் சூரிய கிரகணத்தின்போது அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்ற உருவம் இதுதான் என்பது அவளுக்கு நினைவு வந்ததினால் திகில் அதிகமாயிற்று. அவனுக்குப் பக்கத்திலே போனவன் ஒரு சித்திரக்குள்ளனாகத் தோன்றினான். இந்தக் குள்ளனுக்குப் பக்கத்தில் அந்த நெட்டை உருவம் இன்னும் நெடியதாய்க் காணப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நெடிய ஒற்றைக்கை மனிதன் சாலையோடு கிழக்கே போய்விட்டான். குள்ளன் சாலை ஓரத்தில் ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டான். வள்ளி மறுபடியும் கதவைச் சாத்திக் கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதையெல்லாம் சொல்லிவிட்டு வள்ளி சுற்றுமுற்றும் பார்த்தாள். பொன்னனுடைய கையைச் சட்டென்று பிடித்துக் கொண்டு, "அதோ பார்" என்றாள். சாலை ஓரத்து மரத்தடியில் அந்தக் குள்ள உருவம் காணப்பட்டது. அவன் குடிசைப் பக்கம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் சற்று யோசித்துவிட்டு, "வள்ளி! வா! இன்று ராத்திரி உனக்கு வேலை இருக்கிறது" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எங்கே வரச் சொல்லுகிறாய்! உறையூருக்கா?" என்று வள்ளி கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை; வஸந்தத் தீவுக்குத்தான். குந்தவி தேவி உன்னை அழைத்துவரச் சொன்னார்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியா? இளவரசர் - மகாராஜா - சௌக்கியமா? அவர் யாரென்று தேவிக்குத் தெரியுமா?" என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ரொம்ப விஷயம் இருக்கிறது. எல்லாம் படகில் சொல்கிறேன் வா!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு பேரும் நதிக்கரைக்குச் சென்றார்கள். பொன்னன் வேண்டுமென்றே அதிகமாகச் சத்தப்படுத்திப் படகை அவிழ்த்து விட்டதோடு, சலசலவென்று சப்திக்கும்படியாகக் கோலைப் போட்டு படகைத் தள்ளினான். படகு போவதை அந்தக் குள்ள உருவம் கவனிக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நடுநிசிக்கு ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் பொன்னன் மறுபடியும் படகைத் தள்ளிக்கொண்டு காவேரியின் தென்கரைக்கு வந்தான். இப்போது அவன் தோணித் துறைக்குப் படகைக் கொண்டு வராமல் கொஞ்சம் கிழக்கே கொண்டு போய்ச் சத்தம் செய்யாமல் நிறுத்திவிட்டுக் கரையேறினான். சாலையோரத்தில் தான் முன் பார்த்த இடத்திலேயே குள்ளன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். குடிசைச் சுவரின் பக்கத்தில் தானும் உட்கார்ந்து உறையூர்ச் சாலையைக் கவனிக்கலானான். ஏதோ முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறதை எதிர்பார்த்து அவனுடைய உள்ளம் பெரிதும் பரபரப்பை அடைந்திருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'டக் டக்' 'டக்டக்' என்ற குதிரைக் குளம்பின் சத்தத்தைக் கேட்டுப் பொன்னன் விழிப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆம், உறையூர்ப் பக்கத்திலிருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் குதிரை அருகில் வந்துவிட்டது. அதன்மேல் அமர்ந்திருப்பது சாக்ஷாத் மாரப்ப பூபதிதான் என்று நட்சத்திர வெளிச்சத்தில் பொன்னன் தெரிந்து கொண்டான். நடுச் சாலையில் நின்ற குள்ளனருகில் வந்து குதிரையும் நின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-53145706523421378562017-08-25T21:42:00.002+02:002017-08-25T21:50:20.114+02:00பார்த்திபன் கனவு - புதினம் -69 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 32 - உறையூர் சிறைச்சாலை. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
</h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.swisspungudutivu.com/wp-content/uploads/2014/08/741717128Untitled-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.swisspungudutivu.com/wp-content/uploads/2014/08/741717128Untitled-1.jpg" height="216" width="320" /></a></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
</span><div style="text-align: justify;">
<div style="font-size: x-small;">
விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய தந்தை அரசு செலுத்திய காலத்து ஞாபகங்கள் அடிக்கடி வந்தன. பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு கிளம்பிய காட்சி அவன் மனக்கண் முன்னால் பிரத்யட்சமாக நின்றது. அதற்கு முதல்நாள் மகாராஜா இரகசிய சித்திர மண்டபத்துக்குத் தன்னை அழைத்துச் சென்று தம்முடைய கையால் எழுதிய கனவுச் சித்திரங்களைக் காட்டியதெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. ஐயோ! அவையெல்லாம் 'கனவாகவே போகவேண்டியதுதான் போலும்!" தந்தைக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலாமென்னும் ஆசை அவனுக்கு இதுவரையில் இருந்தது. இப்போது அடியோடு போய்விட்டது. பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளையை எதிர்பார்த்து இந்தச் சிறைச்சாலையில் எத்தனை நாள் கிடக்கவேண்டுமோ தெரியவில்லை. அவரிடமிருந்து என்ன கட்டளை வரும்? மரண தண்டனையை நிறைவேற்றும்படி தான் அநேகமாகக் கட்டளை வரும். மாரப்பன் அந்தக் கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருப்பான். தன்னுடைய கதியைப் பற்றி யாருக்கும் தெரியவே போவதில்லை. பார்த்திப மகாராஜாவின் பெயராவது ஜனங்களுக்குச் சில காலம் ஞாபகம் இருக்கும். தன் பெயரைக் கூட எல்லாரும் மறந்துவிடுவார்கள்.</div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
செண்பகத் தீவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன்? - என்னும் கேள்வியை விக்கிரமன் அடிக்கடி கேட்டுக் கொண்டான். சின்னஞ்சிறு தீவாயிருந்தாலும் அங்கே சுதந்திர ராஜாவாக ஆட்சி செய்தது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது! அதைவிட்டு இப்படித் தன்னந்தனியே இங்கே வரும் பைத்தியம் தனக்கு எதற்காக வந்தது? </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
அந்தப் பைத்தியத்தின் காரணங்களைப் பற்றியும் அவை எவ்வளவு தூரம் நிறைவேறின என்பது பற்றியும் விக்கிரமன் யோசித்தான். செண்பகத் தீவிலிருந்தபோது பொன்னி நதியையும் சோழ வள நாட்டையும் எப்போது பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் மீண்டும் மீண்டும் அவனுக்கு ஏற்பட்டு வந்தது. ஆனால், சோழ நாட்டின்மேல் அவனுக்கு எவ்வளவு ஆசை இருந்தாலும் சோழநாட்டு மக்கள் சுதந்திரத்தை மறந்து, வீரமிழந்து பல்லவ சக்கரவர்த்திக்கு உட்பட்டிருப்பதை நினைக்க அவன் வெறுப்பு அடைவதும் உண்டு. அந்த வெறுப்பு இப்போது சிறையில் இருந்த சமயம் பதின்மடங்கு அதிகமாயிற்று. வீரபார்த்திப மகாராஜாவின் புதல்வன் உள்ளூர்ச் சிறைச்சாலையில் இருப்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் தானே இந்த ஜனங்கள் இருக்கிறார்கள். </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒன்று இருந்தது, அதுவும் நிறைவேறவில்லை. நிறைவேறாமலே சாகப்போகிறோமோ, என்னவோ? </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
அப்புறம், குந்தவி! - அவளை நினைக்காமலிருப்பதற்கு விக்கிரமன் ஆனமட்டும் முயன்றான். ஆனால் முடியவில்லை. குந்தவியை நினைத்ததும், விக்கிரமனுக்குப் பளிச்சென்று ஓர் உண்மை புலனாயிற்று. செண்பகத் தீவிலிருந்து கிளம்பி வந்ததற்குப் பல காரணங்கள் அவன் கற்பித்துக் கொண்டிருந்தா னென்றாலும், உண்மையான காரணம் - அவனுடைய மனத்தின் அந்தரங்கத்தில் கிடந்த காரணம் இப்போது தெரிய வந்தது. குந்தவிதான் அந்தக் காரணம். இரும்பு மிகவும் வலிமை வாய்ந்ததுதான்; ஆனாலும் காந்தத்தின் முன்னால் அதன் சக்தியெல்லாம் குன்றிவிடுகிறது. காந்தம் இழுக்க, இரும்பு ஓடிவருகிறது. குந்தவியின் சந்திரவதனம் - சீ, இல்லை!- அவளுடைய உண்மை அன்பு தன்னுடைய இரும்பு நெஞ்சத்தை இளக்கி விட்டது. அந்தக் காந்த சக்திதான் தன்னை செண்பகத் தீவிலிருந்து இங்கே இழுத்துக் கொண்டு வந்தது. ஜுரமாகக் கிடந்த தன்னை எடுத்துக் காப்பாற்றியவள் அவள் என்று தெரிந்த பிறகுகூட விக்கிரமனுக்குக் குந்தவியின் மேல் கோபம் இருந்தது; தன்னுடைய சுதந்திரப் பிரதிக்ஞையை நிறைவேற்றுவதற்கு அவள் குறுக்கே நிற்பாள் என்ற எண்ணந்தான் காரணம். ஆனால், கடைசி நாள் அவளுடைய பேச்சிலிருந்து அது தவறு என்று தெரிந்தது. 'இவரை மன்னிக்கும்படி நான் என் தந்தையிடம் கேட்கமாட்டேன்; ஆனால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் இவரை மணம் புரிந்து கொள்ள அனுமதி கேட்பேன்' என்று எவ்வளவு கம்பீரமாய்க் கூறினாள்! இத்தகைய பெண்ணின் காதலை அறிவதற்காகச் செண்பகத் தீவிலிருந்து தானா வரலாம்? சொர்க்க லோகத்திலிருந்து கூட வரலாம் அல்லவா? ஆகா! இந்த மாரப்பன் மட்டும் வந்து குறுக்கிட்டிராவிட்டால், குந்தவியும் தானும் வருகிற அமாவாசையன்று கப்பலேறிச் செண்பகத் தீவுக்குக் கிளம்பியிருக்கலாமே! </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
அமாவாசை நெருங்க நெருங்க, விக்கிரமனுடைய உள்ளக் கிளர்ச்சி அதிகமாயிற்று. அமாவாசையன்று செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்துக்கு வரும். அப்புறம் இரண்டு நாள் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். எப்படியாவது இச்சிறையிலிருந்து தப்பி அமாவாசையன்று மாமல்லபுரம் போகக் கூடுமானால்! </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
இவ்விதம், விக்கிரமன் எண்ணாததெல்லாம் எண்ணினான். ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு ஒரு யுகமாயிருந்தது. கடைசியில் அமாவாசைக்கு முதல்நாள் மாலை மாரப்பபூபதி வந்தான். விக்கிரமனைப் பார்த்து நகைத்துக் கொண்டே, "ஓ! இரத்தின வியாபாரியாரே! காஞ்சியிலிருந்து கட்டளை வந்துவிட்டது" என்றான். </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
ஒரு கணம் விக்கிரமன் நடுங்கிப்போனான். கட்டளை என்றதும், மரண தண்டனை என்று அவன் எண்ணினான். மரணத்துக்கு அவன் பயந்தவனல்ல என்றாலும், கொலையாளிகளின் கத்திக்கு இரையாவதை அவன் அருவருத்தான். </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
ஆனால், மாரப்பன், "காஞ்சிக்கு உன்னைப் பத்திரமாய் அனுப்பி வைக்கும்படி கட்டளை, இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் கிளம்பவேண்டும், சித்தமாயிரு" என்றதும் விக்கிரமனுக்கு உற்சாகம் பிறந்தது. வழியில் தப்புவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேரிடலாமல்லவா? அல்லது போராடி வீர மரணமாவது அடையலாமல்லவா? இது இரண்டும் சாத்தியமில்லாவிட்டால், சக்கரவர்த்தியின் முன்னிலையில் இன்னொரு தடவை, "அடிமை வாழ்வை ஒப்புக் கொள்ள மாட்டேன்; சுதந்திரத்துக்காக உயிரை விடுவேன்" என்று சொல்வதற்காவது ஒரு சந்தர்ப்பம் ஏற்படலாமல்லவா? ஆகா! குந்தவியும் பக்கத்தில் இருக்கும்போது இம்மாதிரி மறுமொழி சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதைவிடப் பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்? </div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
தொடரும்</div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
<br /></div>
<div style="font-size: x-small;">
<br /></div>
</div>
</div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-39585353233286287882017-08-25T21:42:00.001+02:002017-08-25T21:42:20.762+02:00பார்த்திபன் கனவு -புதினம் 68 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 31 - பைரவரும் பூபதியும். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://maduraivaasagan.files.wordpress.com/2011/04/karupasamy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://maduraivaasagan.files.wordpress.com/2011/04/karupasamy.jpg" width="320" /></a></div>
<div>
<b><span style="color: #3d85c6;"><br /></span></b></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?" என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு, பின்வரும் சம்பாக்ஷணை நடந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அய்யனார் கோவிலில் இருக்கிறார். என்னை இங்கே இருந்து உங்களுக்கு வழிகாட்டி அழைத்து வரும்படி சொன்னார்... ஆமாம், அவன் எங்கே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எவன்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அவன்தான். பல பெயர் கொண்டவன்... இரத்தின வியாபாரி... தேவசேனன்... உம்முடைய தாயாதி....ஹிஹிஹி, என்று குள்ளன் கீச்சுக் குரலில் சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அவனா? ஹா ஹா ஹா!" என்று மாரப்பனும் பெருங் குரலில் சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த நள்ளிரவில் அவர்கள் இருவரும் சிரித்த சிரிப்பின் ஒலி பயங்கரமாகத் தொனித்தது. மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த பட்சி ஜாதிகளை எழுப்பி விட்டது. சில பறவைகள் சிறகுகளை அடித்துக் கொண்டன. வேறு சில பறவைகள் தூக்கக் கலக்கத்தில் பீதியடைந்து தீனக் குரலில் சப்தித்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அவன் பத்திரமாகயிருக்கிறான் நீ கவலைப்படாதே. அடே! அன்றைக்கு அந்த இரத்தின வியாபாரிக்கு வழிக்காட்டிக் கொண்டு போனாயே, அந்த மாதிரிதான் எனக்கும் வழி காட்டுவாயோ?" என்று கூறி மாரப்பன் மறுபடியும் உரத்த குரலில் சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சித்திர குப்தன் கூறிய மறுமொழி பொன்னன் காதில் விழவில்லை. மீண்டும் மாரப்பன், 'ஓஹோஹோ! எனக்கு வழிகாட்டி அழைத்து வரச் சொன்னாரா? எங்கே? அழைத்துப் போ, பார்க்கலாம்" என்று சொல்லித் தன் கையிலிருந்த சவுக்கைச் சடீரென்று ஒரு சொடுக்கச் சொடுக்கினான். சவுக்கின் நுனி சித்திரகுப்தன் மீது சுளீரென்று பட்டது. சவுக்கு சொடுக்குகிற சத்தத்தைக் கேட்டதும் குதிரை பிய்த்துக் கொண்டு பாய்ந்து சென்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குள்ளன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பின்னால் விரைவாகச் சென்றான். அவன் இவ்வளவு வேகமாக நடக்க முடியுமென்பதைக் கண்ட பொன்னனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அவனைச் சற்று தூரத்தில் பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாகப் பொன்னனும் போனான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நாழிகை தூரம் சாலையோடு கிழக்கே போன பிறகு, சாலையில் குதிரை நிற்பதும், பக்கத்தில் மாரப்பன் நிற்பதும் தெரிந்தது. சித்திரகுப்தன் மாரப்பனைப் பார்த்து, "ஏன் நிற்க வேண்டும்? போவதுதானே?" என்று கேட்க, "ஏண்டா, காட்டுப் பூனை! இருட்டு ராஜாவாகிய நீ வழிகாட்டிதான் இனிமேல் போகவேண்டும்" என்றான் மாரப்பன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆகா! வழி காட்டுகிறேன், ஆனால் காட்டுப் பூனையிடம் நீ சற்று ஜாக்கிரதையாகயிரு. விழுந்து புரண்டினாலும் புரண்டி விடும்!" என்று சொல்லிவிட்டுப் குள்ளன் சாலைக்கு வலது புறத்தில் புதர்களும் கொடிகளும் மண்டிக் கிடந்த காட்டில் இறங்கிப் போகலானான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனுக்கு அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது இப்போது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. பாழடைந்த அய்யனார் கோவிலுக்குத்தான் அவர்கள் போகிறார்கள். செடி, கொடிகளில் உராய்வதினால் சத்தம் கேட்கக் கூடுமாதலால் பொன்னன் சற்றுபின்னால் தங்கி அவர்கள் போய்க் கால்நாழிகைக்குப் பிறகு தானும் அவ்வழியே சென்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நள்ளிரவில் அந்தக் காட்டுவழியே போகும்போது பொன்னனுக்கு மனதில் திகிலாய்த்தானிருந்தது. திகிலை அதிகப்படுத்துவதற்கு ஆந்தைகள் உறுமும் குரலும், நரிகள் ஊளையிடும் குரலும் கேட்டன. மரம், செடிகள் அசைந்தாடும் போது, தரையில் கிடந்த இலைச் சருகுகளின் சரசரவென்னும் சத்தம் கேட்கும்போதும் பொன்னனுக்கு என்னவோ செய்தது. ஆனால் ஏதோ ஒரு முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறது - முக்கியமான இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் - என்ற ஆவலினால் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அய்யனார் கோயில் உள்ள திசையை நோக்கிச் சென்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சற்று நேரத்துக்கெல்லாம் தூரத்தில் ஒரு தீவர்த்தியின் வெளிச்சம் தெரிந்தது. சரி, அதுதான் ஐயனார் கோயில். கிட்ட நெருங்க நெருங்கக் கோயிலுக்கு முன்னால் வைத்திருந்த பிரம்மாண்டமான வீரர்களின் சிலைகளும் மண் யானைகளும், குதிரைகளும் தீவர்த்தி வெளிச்சத்தில், கோரமாகக் காட்சியளித்தன. இந்த ஏகாந்தக் காட்டுப் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கோவிலுக்குப் பட்டப்பகலில் வந்தபோதே பொன்னனுக்குத் திகிலாயிருந்தது. இப்போது கேட்க வேண்டியதில்லை. கோயிலின் வாசற்படிக்கருகில் பொன்னன் கண்ட காட்சி அவனுடைய திகிலை நூறு மடங்கு அதிகமாக்கிற்று. அங்கே, புராணங்களில் வர்ணித்திருப்பது போன்ற கோர ராட்சஸ ரூபமுடைய ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நெடிய கம்பீர உருவமும் வஜ்ரசரீரமும் கொண்ட மகாகபால பைரவர் நின்று கொண்டிருந்தார். தீவர்த்தியின் சிவந்த ஒளியில் அவருடைய நெற்றியில் அப்பியிருந்த சந்தனமும் குங்குமமும் இரத்தம் மாதிரி சிவந்து காட்டின. அவருடைய கழுத்தில் தொங்கிய கபால மாலை பொன்னனுக்குக் குலை நடுக்கம் உண்டாக்கிற்று. அவன் நடுங்கிக் கொண்டே கோயிலுக்குப் பின்புறமாகச் சென்று கோயில் வாசற்படிக்கு அருகில் இருந்த பெரிய வேப்பமரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான். அதே சமயத்தில் சித்திரகுப்தனும், மாரப்பனும் மகா கபால பைரவரின் முன்னால் வந்து நின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகாப் பிரபோ!" என்று மாரப்பன் பைரவருக்கு நமஸ்கரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சேனாதிபதி! மாதாவின் ஆக்ஞையை நிறைவேற்றினாயா? பலி எங்கே?" என்று கபால பைரவரின் பேய்க் குரல் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தக் குரல் - மகேந்திர மண்டபத்தின் வாசலில் அன்றிரவு கேட்ட குரல் - ஏற்கனவே பயப் பிராந்தியடைந்திருந்த பொன்னனுடைய உடம்பில் மயிர்க்கூச்சு உண்டாக்கிற்று. அடித் தொண்டையிலிருந்து அதற்கும் கீழே இருதயப் பிரதேசத்திலிருந்து - வருவதுபோல் அந்தக் குரல் தொனித்தது. எனினும், உரத்துப் பேசிய மாரப்பனுடைய குரலைக் காட்டிலும் தெளிவாக அக்குரல் பொன்னனுடைய செவிகளில் விழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபால பைரவரின் கேள்விக்கு மாரப்பன், "மகாப்பிரபோ! பலி பத்திரமாயிருக்கிறது" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எங்கே? ஏன் இவ்விடம் கொண்டு வரவில்லை? காளிமாதாவின் கட்டளையை உதாசீனம் செய்கிறாயா, சேனாதிபதி!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை, இல்லை. மகாப் பிரபோ! இன்று சாயங்காலந்தான் இளவரசனைக் கைப்பற்ற முடிந்தது. உடனே இவ்விடம் கொண்டு வருவதில் பல அபாயங்கள் இருக்கின்றன, பிரபோ! அந்த ஓடக்காரன் இங்கே தான் இருக்கிறான்..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்டதும் மரத்தின் பின்னால் மறைந்து நின்ற பொன்னனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனுடைய அடிவயிறு மேலே நெஞ்சுக்கு வந்துவிட்டது போலிருந்தது. மாரப்ப பூபதியின் அடுத்த வார்த்தையினால் அவனுக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"...அவனைக் கைப்பற்ற முடியவில்லை. சக்கரவர்த்தியின் மகள் குறுக்கே நின்று மறித்தாள். மகாப்பிரபோ! குந்தவி தேவியும் இன்னும் இங்கேதான் இருக்கிறாள். இளவரசனைத் தப்புவிப்பதில் முனைந்திருக்கிறாள். ஆகையால் நாம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காரியம் கெட்டுப் போய் விடும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகா கபால பைரவர் இப்போது ஒரு சிரிப்புச் சிரித்தார். அந்த வேளையில் அந்தப் பயங்கரத் தொனியானது நாலா பக்கமும் பரவி எதிரொலி செய்தபோது, பல நூறு பேய்கள் ஏக காலத்தில் சிரிப்பது போலிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சேனாதிபதி! நீதானா பேசுகிறாய்? காளிமாதாவின் கட்டளையை நிறைவேற்றப் பயப்படுகிறாயா? அதுவும் ஒரு பெண் பிள்ளைக்கும் ஒரு ஓடக்காரனுக்கும் பயந்தா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை, சுவாமி, இல்லை! நான் பயப்படுவதெல்லாம் காளி மாதாவின் கைங்கரியத்துக்குப் பங்கம் வந்து விடுமோ என்பதற்குத்தான். மகாப் பிரபோ! தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை எப்படியும் நிறைவேற்றுவேன். அமாவாசையன்று இரவுக்குள் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சேர்க்காவிட்டால்....?" என்றது கபால பைரவரின் கடூரமான குரல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்னையே மாதாவுக்குப் பலியாக அர்ப்பணம் செய்வேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வேண்டாம். பூபதி! வேண்டாம். உன்னால் மாதாவுக்கு இன்னும் எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டும். இந்தச் செழிப்பான தமிழகத்தில் மகா காளியின் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது நீதான் பிரதம தளகர்த்தனாயிருக்க வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகாப்பிரபுவின் கட்டளையையும், காளி மாதாவின் ஆணையையும் எப்போதும் சிரமேற் கொள்ளக் காத்திருக்கிறேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மாரப்பா! மாதாவுக்கு உன் பேரில் பூரண கிருபை இருக்கிறது. மேலும் மேலும் உனக்குப் பெரிய பதவிகளை அளிக்கப் போகிறாள்.... இருக்கட்டும்; இப்போது எந்த இடத்தில் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பாய்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அமாவாசையன்று முன் ஜாமத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டி மகேந்திர மண்டபத்துக்கு அருகில் கொண்டு வந்து சேர்ப்பேன். அங்கே சாலை வழியில் தங்களுடைய ஆட்களை அனுப்பி ஏற்றுக் கொள்ளவேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஏன் அந்த வேலையை எனக்குக் கொடுக்கிறாய்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகாப்பிரபோ! இங்கே உள்ள ஆட்களிடம் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. சக்கரவர்த்தியின் கட்டளைப் பிரகாரம் இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லித்தான் அனுப்பப் போகிறேன். அவர்களைத் தொடர்ந்து சற்றுப் பின்னால் நான் வருவேன். தங்களுடைய ஆட்கள் வந்து வழிமறித்து இளவரசரைக் கொண்டு போக வேண்டும். ஆனால், நான் அனுப்பும் ஆட்கள் அவ்வளவு அசகாயசூரர்களாயிருக்க மாட்டார்கள். தங்களுடைய திருநாமத்தைச் சொன்னால், உடனே கத்திகளைக் கீழே போட்டுவிட்டு நமஸ்கரிப்பார்கள்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியே யாகட்டும், சேனாதிபதி! ஆனால் ஜாக்கிரதை! காளிமாதா அடுத்த அமாவாசை இரவில் அவசியம் பலியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இன்னொரு விஷயம் தெரிவிக்க வேணும். மகாபிரபோ!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சீக்கிரம் சொல்; பொழுது விடிவதற்குள் நான் ஆற்றைத் தாண்ட வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இந்த ஓடக்காரப் பொன்னனைச் சில நாளாகக் காணவில்லை. அவன் மகாராணியைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. அவனைப் பற்றி அறிய நான் ஆள் விட்டிருந்தேன். நேற்றுத்தான் அவனைப்பற்றித் தகவல் கிடைத்தது. பொன்னனும் இன்னொரு மனிதனும் குதிரை மேல் காட்டாற்றோடு கொல்லிமலைப்பக்கம் போனதாக என்னுடைய ஒற்றன் வந்து சொன்னான்..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஓடக்காரன் இங்கே இருக்கிறான் என்றாயே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; இன்றைக்குத்தான் இங்கே வந்து சேர்ந்தான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அவ்வளவுதானே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னனுடன் போன இன்னொரு மனிதன் யார் தெரியுமா, பிரபோ?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"யார்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தங்களுக்கும் எனக்கும் ஜன்ம விரோதிதான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன? யார் சீக்கிரம் சொல்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொய் ஜடாமுடி தரித்த அந்த போலிச் சிவனடியார் தான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்டதும் மகா கபால பைரவனின் முகத்தில் ஏற்பட்ட பயங்கரமான மாறுதலைப் பார்த்து பொன்னன் திகைத்துப் போனான். ஏற்கெனவே கோரமாயிருந்த அந்த முகத்தில் இப்போது அளவில்லாத குரோதமும் பயமும் பகைமையும் தோன்றி விகாரப்படுத்தின. அதைப் பார்த்து "ஐயோ!" என்று பொன்னன் அலறிய குரல் நல்ல வேளையாகப் பயத்தின் மிகுதியால் அவன் தொண்டையிலேயே நின்றுவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபால பைரவரும் சித்திரகுப்தனும் மாரப்ப பூபதியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். தீவர்த்தி பிடித்துக் கொண்டு நின்ற ராட்சதன் அவர்களுக்கெல்லாம் முன்னால் போனான். சற்று நேரத்துக்கெல்லாம் தீவர்த்தி வெளிச்சம் மறைந்தது. கீழ்வானத்திலே இளம்பிறைச் சந்திரன் உதயமாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் போய்க் கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு தான் பொன்னன் அங்கிருந்து கிளம்பினான். அவனுடைய உடம்பு மிகவும் தளர்ச்சியடைந்திருந்தாலும், மனத்தில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டிருந்தது. விக்கிரம மகாராஜாவை இந்த நரபலிக்காரர்களிடமிருந்து தப்புவிக்கும் வழி அவனுடைய மனத்தில் உதயமாகியிருந்தது. மாரப்பனுடைய தந்திரம் இன்னதென்பது அவனுக்கு இப்போது ஒருவாறு புலப்பட்டது. இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதில் பிரயோஜனமில்லை என்று மகாக் கபால பைரவரின் நரபலிக்கு அவரை அனுப்ப மாரப்பன் எண்ணியிருக்கிறான். ஆனால், தன் பேரில் குற்றம் ஏற்படாதபடி இந்தக் கரியத்தைத் தந்திரமாகச் செய்ய உத்தேசித்திருக்கிறான். அவனுடைய தந்திரத்துக்கு மாற்றுத் தந்திரம் செய்து விக்கிரம மகாராஜாவை விடுவிக்க வேண்டும். விடுவித்து நேரே மாமல்லபுரம் துறைமுகத்துக்கு அழைத்துப் போகவேண்டும். குந்தவி தேவியின் உதவியைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும்... இவ்விதமெல்லாம் சிந்தித்துக்கொண்டு பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் பொன்னன் தோணித் துறையை அடைந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-59572305542197775472017-08-25T21:28:00.002+02:002017-08-25T21:28:50.722+02:00பார்த்திபன் கனவு - புதினம் - 70 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 33 - அமாவாசை முன்னிரவு . <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
<br /></h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://i1.tribune.com.pk/wp-content/uploads/2013/08/587526-moon-1375819306-461-640x480.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://i1.tribune.com.pk/wp-content/uploads/2013/08/587526-moon-1375819306-461-640x480.jpg" height="240" width="320" /></a></div>
<div>
<span style="color: #3d85c6;"><br /></span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்னும் பின்னும் வண்டியில் சில வீரர்கள் ஏறிக் கொண்டார்கள். அவ்விதமே வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் நின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறைவாசலில் மாரப்பன் அந்த வீரர்களின் தலைவனாகத் தோன்றியவனைக் கூப்பிட்டு அவன் காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். பிறகு உரத்த குரலில், "கிளம்பலாம்!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடனே வண்டிக்காரன் வண்டியை ஓட்ட, முன்னாலும் பின்னாலும் நின்ற வீரர்களும் போகத் தொடங்கினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உறையூர் வீதிகளின் வழியாக வண்டி போய்க் கொண்டிருந்தது. முன்னெல்லாம்போல் இப்போது இரவில் விளக்குகள் எரியாமல் நகரம் இருளடைந்து கிடப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு என்னமோ செய்தது! ஆகா! சோழ நாட்டுத் தலைநகரமான உறையூர்தானா இது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஏனுங்க சாமிங்களே! இந்தப் பிள்ளையாண்டான் யாரு? இவனை எங்கே அழைத்துப் போறீங்க!" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா? இருக்கிறது? அப்படியும் இருக்க முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீரர்களில் ஒருவன், "உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு? பேசாமல் வண்டியை ஓட்டு!" என்றான். அதற்கு வண்டிக்காரன் "எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம்! இரத்தின வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தானாம். சக்கரவர்த்தி மகள் குந்தவி தேவியையே ஏமாற்றி விட்டானாம். அப்பேர்பட்டவனை நம்ம சேனாதிபதி கண்டுபிடித்துவிட்டாராம். அப்படியெல்லாம் ஊரிலே பேச்சாயிருக்கே. அவன் தானா இவன் என்று கேட்டேன்" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம். அவன்தான் என்று வைத்துக் கொள்ளேன்" என்றான் ஒரு வீரன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எங்கே அழைத்துக் கொண்டு போறீங்களோ?" என்று வண்டிக்காரன் கேட்க, "எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க? காஞ்சிமா நகருக்குத்தான்" என்று மறுமொழி வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அடே அப்பா! அவ்வளவு தூரமா போக வேண்டும்? நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா? வழியிலே இவனுக்கு யாரளுறுவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க?" என்றான் வண்டிக்காரன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேசுகிறவன் உண்மையில் பொன்னன்தானோ? தனக்குத்தான் சமிக்ஞைச் செய்தி தெரிவிக்கிறானோ? வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ? இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், "யார் அங்கே? என்ன பேச்சு!" என்று அதட்டவே மௌனம் குடிகொண்டது. பிறகு வண்டிக்காரனாவது வீரர்களாவது பேசவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காவேரிக் கரைக்கு வந்ததும் வண்டி நின்றது. விக்கிரமனும் வண்டியிலிருந்த வீரர்களும் இறங்கினார்கள். ஆற்றங்கரையோரமாக ஒரு படகு ஆயத்தமாயிருந்தது. அங்கே ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாரும் கீழிறங்கியதும் வண்டிக்காரன் வண்டியைத் திருப்பிக் கொண்டே, "போயிட்டு வரீங்களா? ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா! வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம்!" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன? வழியில் காட்டாற்றின் சமீபத்தில் தன்னை விடுவிக்க வருவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் விக்கிரமனுக்கு மிகுந்த உற்சாகம் உண்டாயிற்று. படகில் ஏறி ஆற்றைக் கடந்தபின் அவர்கள் நடுஜாமம் வரையில் கால்நடையாகப் பிரயாணம் செய்தார்கள். பிறகு சாலையோரம் இருந்த ஒரு மண்டபத்தில் படுத்துத் தூங்கினார்கள். மீண்டும் அதிகாலையில் எழுந்து மாட்டுவண்டி பிடித்துக் கொண்டு பிரயாணமானார்கள். அன்று பொழுது சாயும் சமயத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனிச் சிறிது தூரத்தில் காட்டாறு வந்துவிடும் என்று விக்கிரமன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அந்த வண்டிக்காரன் பொன்னனாயிருக்கும் பட்சத்தில், இங்கே தான் தனக்கு உதவிக்கு வரவேண்டும் "யார் வருவார்கள்; எப்போது வருவார்கள்?" என்றெல்லாம் எண்ணி விக்கிரமனுடைய உள்ளம் பரபரப்பை அடைந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அஸ்தமித்து இரண்டு நாழிகை இருக்கும். அந்த அமாவாசை இருட்டில் சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டு விக்கிரமன் வியந்தான். ஆங்காங்கு சிறுசிறு கும்பலாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குப் போகிறவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டார்கள். வெறிபிடித்தவர்களைப்போல் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் போனார்கள். சிலர் மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கும்பலிலும் ஒருவன் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்தக் கும்பல்களில் சிலர் நீண்ட கத்திகளை எடுத்துச் சென்றது விக்கிரமனுக்கு ஒருவாறு பயங்கரத்தையளித்தது. இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? கையில் கத்திகள் என்னத்திற்குக் கொண்டு போகிறார்கள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் காட்சிகளைப் பார்த்த மாரப்பனுடைய வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் விக்கிரமனுடைய காதிலும் விழுந்தன. "பத்திரகாளி", "நரபலி", "கபால பைரவர்" என்னும் சொற்கள் அவனுக்குத் திகைப்பையும் பயத்தையும் உண்டாக்கின. மகேந்திர மண்டபத்தின் வாசலில் மகாக் கபால பைரவரும், மாரப்பனும் பேசிக் கொண்டது அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ! இன்றைக்கு அமாவாசை இரவல்லவா? மாரப்பன் ஒருவேளை தன்னைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி உண்மையில் கபால பைரவனின் பலிக்குத் தான் அனுப்பியிருப்பானோ! இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே "ஓம் காளி ஜய காளி!" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. "ஓம் காளி, ஜய காளி" என்ற கோஷங்களுக்கு மத்தியில் "எங்கே பலி?" என்று ஒரு பயங்கரமான குரல் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குள் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வந்த உறையூர் வீரர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வண்டியில் இருந்தவர்களும் தொப்புத் தொப்பென்று குதித்து ஓட்டம் பிடித்தார்கள். வண்டிக்காரன் அந்தர்த்தானமாகிவிட்டான். விக்கிரமன் கைகள் சங்கிலிகளால் வண்டியின் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் அவனால் மட்டும் வண்டியிலிருந்து குதிக்க முடியவில்லை. அப்போது வண்டியின் பின்புறத்தில் ஒரு குரல், "மகாராஜா! பதற வேண்டாம்! நான்தான்" என்றது. உடனே பொன்னன் வண்டியில் ஏறிச் சங்கிலிகளை அவிழ்த்தெறிந்தான். விக்கிரமன் வண்டியிலிருந்து குதித்ததும், இரண்டு உயர்ஜாதிக் குதிரைகள் சித்தமாய் நிற்பதைக் கண்டான். "மகாராஜா ! ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-66263939486805637602017-03-19T15:29:00.000+01:002017-08-25T20:26:50.227+02:00பார்த்திபன் கனவு 66 - புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 29 - சக்கரவர்த்தி கட்டளை. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
</h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://tamilandvedas.files.wordpress.com/2012/06/chola-flag-2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="176" src="https://tamilandvedas.files.wordpress.com/2012/06/chola-flag-2.jpg" width="320" /></a></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! எடு வாளை!" என்று கூவினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். விக்கிரமனுடைய குரல் கேட்டதும், அவன் விரைந்து விக்கிரமன் அருகில் வந்து, "மகாராஜா! எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வரங்கேட்க நல்ல சமயம் பார்த்தாய், பொன்னா! சீக்கிரம் கேட்டுவிடு. ஆனால், என்னிடம் என்ன இருக்கிறது நீ கேட்பதற்கு?" என்று சிறிது வியப்புடன் கூறினான் விக்கிரமன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகாராஜா! மாரப்பபூபதியின் ஆட்களுடன் தாங்கள் சண்டையிடக்கூடாது. அவர்கள் ரொம்பப் பேர், நாமோ இரண்டு பேர்தான்..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! நீதானா இப்படிப் பேசுகிறாய்? உனக்கும் சோழ நாட்டு வீர வாசனை அடித்துவிட்டதா?" என்றான் விக்கிரமன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை, மகாராஜா! என் உயிருக்கு நான் பயப்படவில்லை. இந்த அற்ப உயிரை எந்த விநாடியும் விட்டுவிடச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் வேறு காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்போது சண்டையிட்டால் எல்லாம் கெட்டுப் போய்விடும். மகாராஜா! தங்களுடைய அன்னை அருள்மொழித் தேவியைப் பார்க்க வேண்டாமா? இன்னொரு முக்கிய விஷயம். தங்களுடைய மூதாதைகளின் வீரவாளைக் கொண்டு முதன் முதலில் உங்களுடைய சொந்தக் குடிகளையா கொல்லுவீர்கள்?" என்று பொன்னன் கேட்டபோது, விக்கிரமனுடைய முகம் வாடியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சரி பொன்னா! போதும், இனிமேல் ஒன்றும் சொல்ல வேண்டாம். நான் வாளைத் தொடவில்லை" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகு குந்தவியைப் பார்த்து, "தேவி! இந்தப் பெட்டியைப் பத்திரமாய் வைத்திருக்க வேண்டும். மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் கொடுக்க வேண்டும்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் குந்தவியின் செவிகளில் அவன் கூறியது விழுந்ததோ, என்னமோ தெரியாது. அவளுடைய முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. ஆவேசம் வந்தவள் போல் நெருங்கி வந்த படகுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படகுகள் கரையை அடைந்தன. மாரப்ப பூபதி முதலில் படகிலிருந்து குதித்தான். மரியாதையாகக் குந்தவி தேவியை அணுகி, "பெருமாட்டி! தங்கள் அனுமதியில்லாமல் இங்கே வந்ததற்காக மன்னிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக வந்தேன்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "எந்தச் சக்கரவர்த்தி? என்ன கட்டளை?" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தங்களுடைய சகோதரர் மகேந்திர பல்லவரின் கட்டளைதான். செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் ஒற்றனைக் கைப்பற்றி ஜாக்கிரதையாகக் காஞ்சிக்கு அனுப்பும்படிக் கட்டளை இதோ பாருங்கள்!" என்று மாரப்பன் ஓர் ஓலையை நீட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதில் மகேந்திரனின் முத்திரையுடன் மேற்கண்ட விதமான கட்டளை எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் குந்தவி, "செண்பகத்தீவின் ஒற்றன் யார்?" என்று கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இதோ நிற்கிறானே, இவன் தான், தேவி!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை; இவர் ஒற்றன் இல்லை. நீர் திரும்பிப் போகலாம்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தேவி! இவன் ஒற்றன் இல்லாவிட்டால் வேறு யார்? மனமுவந்து சொல்லவேண்டும்!" என்று மாரப்பன் கள்ள வணக்க ஒடுக்கத்துடன் கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பூபதி! யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறாய்? உன்னை மறந்து விட்டாயா?" என்று கண்களில் கனல் பொறி பறக்கக் குந்தவி கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை; என்னை நான் மறக்கவில்லை. எனக்கு அவ்வளவாக ஞாபக மறதி மட்டும் கிடையாது. இதோ இவனுடைய முகம்கூடப் பார்த்த முகமாக என் ஞாபகத்தில் இருக்கிறது. ஆம்; இதோ ஞாபகம் வந்துவிட்டது. தேவி! இவன், மகா மேன்மை பொருந்திய தர்ம ராஜாதிராஜ நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியினால் தேசப்பிரஷ்ட தண்டனைக்குள்ளானவன் என்பதாய் ஞாபகம் வருகிறது. இவன் ஒற்றன். இல்லையென்றால், தேசப்பிரஷ்டன்! தேசப்பிரஷ்டமானவன் திரும்பி வந்தால் என்ன தண்டனையென்று தங்களுக்கே தெரியும். தேவி! என் கடமையை நான் செய்ய வேண்டும். தர்ம ராஜாதி ராஜாவான பல்லவச் சக்கரவர்த்தி, தம் சொந்தப் புதல்வியின் வார்த்தைக்காகக்கூட நான் என் கடமையில் தவறுவதை ஒப்புக் கொள்ளமாட்டார்" என்றான். குந்தவியின் உடம்பெல்லாம் நடுங்கிற்று; அவளுடைய மார்பு விம்மிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சேனாதிபதி! இவர் என் விருந்தினர், இவருக்கு நான் பாதுகாப்பு அளித்திருக்கிறேன். இவருக்கு ஏதாவது நேர்ந்தால்...." என்று கூறி, விக்கிரமனை மறைத்துக் கொள்பவள் போல் அவன் முன்னால் வந்து நின்றாள். மாரப்பன் கலகலவென்று சிரித்தான். "ஆகா! சோழ வம்சத்தின் பெருமையை விளங்க வைக்கப்போகும் வீரசிங்கம் ஒரு பெண்ணின் முந்தானையில் ஒளிந்து கொள்கிறான்!" என்று கூறி மீண்டும் சிரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாணத்தினாலும் கோபத்தினாலும் விக்கிரமனுடைய கண்கள் சிவந்தன. அவன் நாலு எட்டாக நடந்து குந்தவிக்கு முன்னால் வந்து நின்று மாரப்பனைப் பார்த்து, "சித்தப்பா! இதோ நான் வரச் சித்தமாயிருக்கிறேன். அழைத்துப் போங்கள்!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாரப்பன் கேலிச் சிரிப்புடனே குந்தவியைப் பார்த்து, "ஏழைமேல் ஏன் இவ்வளவு கோபம்? இவனைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டுமென்றால், தங்கள் தந்தையையோ தமையனாரையோ வேண்டிக் கொண்டால் போகிறது. சக்கரவர்த்தி கருணையுள்ளவர், இவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கப்பமும் செலுத்த ஒப்புக் கொண்டால் கட்டாயம் மன்னித்து விடுவார்" என்றான். இந்த வார்த்தைகள் தான் எதிர்பார்த்தது போலவே விக்கிரமன், குந்தவி இருவருடைய முகங்களிலும் வேதனை உண்டாக்கியதை அறிந்த மாரப்பனுக்குக் குதூகலம் உண்டாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் உடனே விரைவாகச் சென்று படகில் ஏறிக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி விக்கிரமனை மிகுந்த ஆவலுடன் நோக்கினான். தன்னை அவன் திரும்பிப் பார்ப்பானென்றும், தன் கண்களினால் அவனுக்குத் தைரியம் கூறலாமென்றும் அவள் எண்ணியிருக்கலாம். ஆனால் விக்கிரமன் திரும்பிப் பார்க்கவேயில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாரப்பன் இந்த நாடகத்தைச் சிறிது கவனித்து விட்டுப் பிறகு பொன்னன்மீது தன் பார்வையைச் செலுத்தினான். "அடே படகோட்டி! நீயும் வா; ஏறு படகில்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அவன் ஏன் வரவேண்டும்? பொன்னனைப் பிடிப்பதற்கும் கட்டளையிருக்கிறதா?" என்று குந்தவி கேட்டு மாரப்பனைக் கண்களால் எரித்து விடுபவள் போல் பார்த்தாள். மாரப்பன் அந்தப் பார்வையைச் சகிக்க முடியாமல், "கட்டளையில்லை தேவி! ஆனால், இந்த ஒற்றனுக்கு தேசப் பிரஷ்டனுக்கு இவன் ஒத்தாசை செய்திருகிறான்..." என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னன் என்னுடைய ஆள்; எனக்குப் படகோட்ட வந்திருக்கிறான். அவனைக் கொண்டு போக உனக்கு அதிகாரமில்லை, ஜாக்கிரதை!" என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாரப்பன் அவளுடைய தொனியைக் கேட்டுத் தயங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி மறுபடியும், "தேசப் பிரஷ்டனுக்கு உதவி செய்ததற்காகப் பிடிப்பதென்றால், என்னை முதலில் பிடிக்க வேண்டும்!" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆம்; தேவி! சக்கரவர்த்தியின் கட்டளை வந்தால் அதுவும் செய்வேன்" என்றான் மாரப்பன். பிறகு அவன் படகோட்டிகளைப் பார்த்து, "விடுங்கள்" என்றான். படகுகள் உறையூரை நோக்கி விரைந்து சென்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-21161510447603422202016-12-06T21:17:00.000+01:002017-08-25T20:31:15.811+02:00பார்த்திபன் கனவு 65 -புதினம்- மூன்றாம் பாகம் - அத்தியாயம் 28 - குந்தவியின் நிபந்தனை. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
</h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/05/26/f-09-couple.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/05/26/f-09-couple.jpg" height="320" width="218" /></a></div>
<span style="font-size: xx-small;"></span><br />
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சோழநாட்டாரின் யோக்கியதை நன்றாய்த் தெரிந்து போய்விட்டது. இப்படித்தான் சொல்லிக் கொள்ளாமல் கூட ஓடிப் போகப் பார்ப்பார்களா?" என்றாள் குந்தவி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் மறுமொழி சொல்லாமல் சும்மா இருந்தான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வள்ளுவர் பெருமான், 'முயற்சி திருவினையாக்கும்' என்று மட்டுந்தானா சொல்லியிருக்கிறார்? 'நன்றி மறப்பது நன்றன்று' என்று சொல்லியிருப்பதாக எனக்குக் கேள்வியாயிற்றே?" என்று குந்தவி சொன்னபோது, விக்கிரமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ...." என்று மேலே பேசத் திணறினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; நீங்கள் குழி தோண்டிப் புதையல் எடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லாம் கேட்டுக் கொண்டுமிருந்தேன்." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உண்மையாகவா?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; உங்கள் பொய் வேஷத்தையும் தெரிந்து கொண்டேன்." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியானால் நான் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போக நினைத்ததில் என்ன ஆச்சரியம்? தேசப் பிரஷ்டன் - மரண தண்டனைக்குத் துணிந்து தாய் நாட்டுக்கு வந்தவன் - சொல்லாமல் திரும்பி ஓடப் பார்ப்பது இயல்பல்லவா?" என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உயிர் இழப்பதற்குப் பயந்துதானே?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; இந்த உயிர் இன்னும் கொஞ்சகாலத்துக்கு எனக்குத் தேவையாயிருக்கிறது. என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், இந்தத் தாய்த் திருநாட்டுக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்வதற்கும் இந்த உயிர் வேண்டியிருக்கிறது...." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆனால் உங்களுடைய உயிர் இப்போது உங்களுடையதல்லவே? மகேந்திர மண்டபத்தில் அந்தப் பழைய உயிர் போய்விட்டது. இப்போது இருப்பது நான் கொடுத்த உயிர் அல்லவா? இது எனக்கல்லவா சொந்தம்?" என்றாள் குந்தவி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு குந்தவியை உருக்கத்துடன் நோக்கி, "நீ சொல்லியது ஒரு விதத்தில் அல்ல; பல விதத்திலும் உண்மை. இந்த உயிர் உன்னுடையதுதான். மகேந்திர மண்டபத்தில் நீ என்னைப் பார்த்துக் காப்பாற்றியதனால் மட்டும் அல்ல; மூன்று வருஷத்துக்கு முன்பு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உன்னைப் பார்த்தபோதே என் உயிரை உன்னுடைய தாக்கிக் கொண்டாய்...." என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆ! இது உண்மையா?" என்றாள் குந்தவி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம். ஆகையினால் உன்னுடைய உயிரையே தான் நீ காப்பாற்றிக் கொண்டாய்...." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இது உண்மையானால், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடப் பார்த்தீர்களே, அது எப்படி? என்ன நியாயத்தில் சேர்ந்தது?" என்று குந்தவி கடுமையான குரலில் கேட்டாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அது தவறுதான். ஆனால், காரணம் உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டால் பிரிய மனம் வராது என்ற பயந்தான் காரணம். நீ விடை கொடுக்காவிட்டால் போக முடியாதே என்ற எண்ணந்தான் காரணம்..." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்னைப்பற்றி அவ்வளவு கேவலமாக ஏன் எண்ணினீர்கள்? நீங்கள் போவதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்களுடைய கடமையைச் செய்வதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நான் எண்ணியது பிசகு என்று இப்போது தெரிகிறது. உன்னிடம் நான் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். சொல்லி உன்னுடைய உதவியைக் கோரியிருக்க வேண்டும். மறைக்க முயன்றது பிசகுதான்." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"போனது போகட்டும்; இனிமேல் நடக்க வேண்டியதைப் பேசுவோம். உங்கள் படகோட்டி திரும்பிவரும் வரையில் இங்கே உட்காரலாம்" என்றாள் குந்தவி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படகோட்டி என்றதும் விக்கிரமன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. குந்தவியைச் சிறிது வியப்புடன் நோக்கினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இங்கே கட்டியிருந்த படகு எங்கேயென்று தெரியுமா?" என்று கேட்டான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தெரியும்; ஆற்றோடு போய்விட்டது. படகோட்டிக்கு வீண் அலைச்சல்தான்." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எப்படிப் போயிற்று? ஒரு வேளை நீ...." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆம்; நான்தான் படகின் முடிச்சை அவிழ்த்து விட்டேன். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போக நினைத்ததற்குத் தண்டனை!" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அது தான் முன்னமே சொன்னேனே. உன்னிடம் சொல்லிக் கொண்டால், பிரிந்து போக மனம் வருமோ, என்னவோ என்று பயந்தேன்" என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அம்மாதிரியெல்லாம் பயந்து கொண்டிருந்தால் உங்கள் மூதாதையான கரிகாலசோழர் தீவாந்திரங்களையெல்லாம் வென்றிருக்க முடியுமா?" என்று குந்தவி கேட்டாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"முடியாது. ஆகையால்தான் இப்போது தைரியமாக உன்னிடம் விடை கேட்கிறேன், உதவியும் கேட்கிறேன். இந்த நதியைத் தாண்டுவதற்குப் படகும், அப்பால் மாமல்லபுரம் போவதற்குக் குதிரையும் கொடுத்து உதவ வேண்டும்." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கொடுக்கிறேன். ஒரு நிபந்தனை இருக்கிறது." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நிபந்தனையா?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம் கண்டிப்பான நிபந்தனை. போன தடவையைப் போல் என்னைக் கரையில் நிறுத்திவிட்டு நீங்கள் கப்பலில் போய்விடக் கூடாது. நீங்கள் போகும் கப்பலில் என்னையும் அழைத்துப் போக வேண்டும்." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமனுக்கு அளவில்லாத திகைப்பு உண்டாயிற்று. குந்தவியின் மெல்லிய கரத்தைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில், "தேவி! என்ன சொன்னாய்? என் காதில் விழுந்தது உண்மையா? அவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு நான் என்ன செய்து விட்டேன்! உலகமெல்லாம் புகழ் பரவிய மகாபல்லவச் சக்கரவர்த்தியின் ஏக புதல்வியாகிய நீ இந்த தேசப்பிரஷ்டனுடன் கூடக் கடல்கடந்து வருவாயா!" என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி காவேரியின் பிரவாகத்தை நோக்கிய வண்ணம், "உங்களுக்கென்ன இவ்வளவு சந்தேகம். பெண் குலத்தைப் பற்றி நீங்கள் இழிவாக நினைக்கிறீர்கள்; அதனாலே தான் சந்தேகப்படுகிறீர்கள்" என்றாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லவே இல்லை. அருள்மொழியைத் தாயாகப் பெற்ற நான் பெண் குலத்தைப் பற்றி ஒரு நாளும் இழிவாக நினைக்கமாட்டேன். ஆனால் நீ என்னுடன் வருவது எப்படிச் சாத்தியம்? உன் தந்தை.. சக்கரவர்த்தி..சம்மதிப்பாரா?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என் தந்தை நான் கேட்டது எதையும் இதுவரை மறுத்ததில்லை. இப்போதும் மறுக்கமாட்டார்..." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது, "மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அந்தக் குரல் பொன்னனுடையதுதான். அவர்கள் உலகை மறந்து பேசிக் கொண்டிருந்த சமயம் பொன்னன் மெதுவாகப் பின்புறமாக வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தான். கடைசியாக, அவர்கள் பேசிய வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "எப்பொழுது வந்தாய், பொன்னா! படகு அகப்படவில்லையே? இந்தத் தேவிதான் படகை அவிழ்த்து விட்டு விட்டாராம். நமக்கு வேறு படகு தருவதாகச் சொல்கிறார்" என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"காதில் விழுந்தது, மகாராஜா! ஆனால், இவ்வளவு தொல்லையெல்லாம் என்னத்திற்கு என்று தான் தெரியவில்லை. தேவி சொல்வதை ஒரு நாளும் சக்கரவர்த்தி தட்டமாட்டார். தங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி..." </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி வீராவேசத்துடன் எழுந்து பொன்னனுக்கு எதிராக நின்றாள் "என்ன சொன்னாய், படகோட்டி! உங்கள் மகாராஜாவை மன்னித்துக் காப்பாற்றும்படி சக்கரவர்த்தியிடம் நான் சொல்லவேண்டுமா? ஒரு தடவை அந்தத் தவறு நான் செய்தேன்; இனிமேல் செய்யமாட்டேன். இவர் தமது கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் ஒரு சாண் பூமியை வென்று ராஜாவானால் அந்த சாண் பூமிக்கு நான் ராணியாயிருப்பேன். இவர் உன்னைப்போல படகோட்டிப் பிழைத்து ஒரு குடிசையில் என்னை வைத்தால், உன் மனைவி வள்ளியைப்போல் நானும் அந்தக் குடிசையில் ராணியாயிருப்பேன். இவரை மன்னிக்கும்படியோ, இவருக்குச் சோழ ராஜ்யத்தைக் கொடுக்கும்படியோ சக்கரவர்த்தியை ஒருநாளும் கேட்கமாட்டேன். எனக்காக நான் என் தந்தையிடம் பிச்சை கேட்பேன். ஆனால் இவருக்காக எதுவும் கேட்டு இவருடைய வீரத்துக்கு மாசு உண்டாக்க மாட்டேன்!" என்றாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன், "தேவி" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனைப் பேசவிடாமல், குந்தவி மீண்டும் "ஆம் இன்றைய தினம் இவருடைய வேஷம் வெளிப்பட்டு, இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டாலும் நான் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டேன். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் என்னை இவருக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று மட்டும் வரம் கேட்பேன்!" என்றாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தேவி; தாங்கள் அவ்விதம் வரம் கேட்க வேண்டி வருமென்றே தோன்றுகிறது. அதோ பாருங்கள்! படகுகளில் வீரர்கள் வருவதை" என்றான் பொன்னன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமனும் குந்தவியும் துணுக்கமடைந்தவர்களாகப் பொன்னன் கை காட்டிய திசையை நோக்கினார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து நாலு படகுகள் வந்து கொண்டிருந்தன. வஸந்தத் தீவில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள் இத்தனை நேரமும் அப்படகுகளை மறைத்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் அவை ஒரு முடுக்கத்தில் திரும்பி அவர்களுடைய கண்ணுக்குத் தெரிந்தன. படகுகளில் பொன்னன் சொன்னபடியே வேல்தாங்கிய வீரர்கள் கும்பலாயிருந்தார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படகுகள் கணத்துக்குக் கணம் கரையை நெருங்கி வந்து கொண்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
<div>
<span style="font-size: xx-small;"><b>
</b></span></div>
</div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-29104155484496273152016-10-20T07:53:00.000+02:002017-08-25T20:49:13.109+02:00மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல் - பாகம் 18 - கருந்துளைகள் 13-14.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<figure class="wp-caption aligncenter" data-shortcode="caption" id="attachment_584" style="background-color: white; box-sizing: inherit; clear: left; color: #7a7c84; float: left; font-family: "noticia text", serif; margin-bottom: 1em; margin-right: 1em; margin-top: 0px; max-width: 100%; width: 348px;"><img alt="mod3_q11_4" class="wp-image-584 " height="348" originalh="348" originalw="348" scale="1.5" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/mod3_q11_4.jpg?w=348&h=348" style="border: 0px; box-sizing: inherit; display: block; height: auto; margin-left: auto; margin-right: auto; max-width: 100%; vertical-align: middle;" width="348" /><figcaption class="wp-caption-text" style="border-bottom: 1px solid rgb(242, 242, 242); box-sizing: inherit; font-style: italic; line-height: 1.40625; margin: 0px; padding: 0.234375em 0px;"><span style="font-size: xx-small;">ஐன்ஸ்டீன் சிலுவை எனப்படும் இந்த நான்கு நீல நிற புள்ளிகள், உண்மையிலேயே ஒரே ஒரு குவேசார் ஆகும். இந்த குவேசாருக்கு முன்னுள்ள விண்மீன் பேரடையால் இது நான்கு வெவேறு நட்சத்திரங்கள் போல தெரிகிறது.</span></figcaption></figure><br />
<br />
<br />
<figure class="wp-caption aligncenter" data-shortcode="caption" id="attachment_586" style="background-color: white; box-sizing: inherit; clear: left; color: #7a7c84; float: left; font-family: "noticia text", serif; margin-bottom: 1em; margin-right: 1em; margin-top: 0px; max-width: 100%; width: 310px;"><img alt="கருந்துளையைச் சுற்றி ஒளியானது வளைந்துள்ள விதத்தை இப்படம் (CGI) காட்டுகிறது" class="size-medium wp-image-586" height="184" originalh="184" originalw="300" scale="1.5" src-orig="https://parimaanam.files.wordpress.com/2015/02/12574-2.jpg?w=300&h=184" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/12574-2.jpg?w=450&h=276" style="border: 0px; box-sizing: inherit; display: block; height: auto; margin-left: auto; margin-right: auto; max-width: 100%; vertical-align: middle;" width="300" /><figcaption class="wp-caption-text" style="border-bottom: 1px solid rgb(242, 242, 242); box-sizing: inherit; font-style: italic; line-height: 1.40625; margin: 0px; padding: 0.234375em 0px;"><span style="font-size: xx-small;">கருந்துளையைச் சுற்றி ஒளியானது வளைந்துள்ள விதத்தை இப்படம் (CGI) காட்டுகிறது</span></figcaption></figure><br />
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">ஒளி வளைந்து செல்லுமா?</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைகளைப் பற்றி நிறைய விடயங்களை பார்த்துவிட்டோம். சில பல கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். கருந்துளைகளை நம்மால் சுற்றிவரமுடியும் என்று பார்த்தோம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றைப் பார்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒளி எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் என்று நாம் படித்திருப்போம். அது உண்மைதான். ஆனால் நேர்கோடு என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் சுருக்கமாக, இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள மிகக் குறுகிய தூரம் என்று எடுத்துக் கொள்ளலாம். அனால் ஒரு பிரச்சினை என்னவென்றால் இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரத்தை இணைக்கும் பாதை நேர்கோட்டுப் பாதையாக இருக்கவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. குழப்பமாக இருக்கலாம், விளக்குகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறிய பரிசோதனையை செய்து நாம் இந்த குழப்பத்திற்கான முடிவை அடையலாம். ஒரு A4 வெள்ளைக் கடதாசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குறுக்காக ஒரு நேர்கோட்டை வரைந்துகொள்ளுங்கள். இப்போது கடதாசியை மேசையில் வைத்துவிடுங்கள். இப்போது கடதாசியில் ஒரு நேர்கோடு ஒன்று இருக்கும் அப்படித்தானே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி, இப்போது இந்த கடதாசியை எடுத்து அந்தக் கோட்டின் இரு முனைகளும் சந்திக்குமாறு சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது அந்தக் கடதாசி வளைந்துள்ளது. அந்தக் கடதாசியில் வரைந்துள்ள கோடு நேர்கோடாக இருந்தாலும், கடதாசியே வளைந்திருப்பதால், அந்தக் கோடும் வளைந்திருக்கிறது. இங்கு நாம் இரு பரிமாணத்தில் (கடதாசியின் மேற்பரப்பு – இருபரிமாணப் பரப்பு) கோடு வரைந்துள்ளோம். அந்தக் கோடுதான் ஒளி செல்லும் பாதை என்று கொண்டால், கடதாசிதான் வெளி (space). இயற்கையில் இது முப்பரிமாண வெளியில் நடைபெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் ஏற்கனவே ஈர்ப்புவிசை வெளிநேரத்தை வளைக்கும் என்று பார்த்துள்ளோம். ஆனால் நாம் முன்பு, வெளிநேரத்தில் (space-time), இந்த ஈர்ப்புவிசை எப்படி நேரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்றே பார்த்துள்ளோம். இப்போது இது எப்படி வெளியில் செல்வாக்கு செலுத்துகிறது என்று பார்க்கப் போகிறோம். இயற்பியலில், வெளிநேரம் என்று சேர்த்து அழைப்பதற்கு காரணமே இவை இரண்டும் வேறு வேறு அல்ல என்பதே ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படி ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் நேரம் துடிக்கும் வேகம் குறைகிறதோ, அதேபோல ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் வெளியும் மிக அதிகமாக வளைகிறது. ஆம்! வெளியை ஈர்ப்பினால் வளைக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தத் தொடரின் முடிவில், கருந்துளையைப் பற்றி நீங்கள் வியந்ததை விட ஈர்ப்பு விசை எப்படி இந்த பிரபஞ்சத்தை ஆளுகிறது என்றே வியப்படைவீர்கள். இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான ஹீரோ, ஈர்ப்பு விசை தான். கருந்துளை என்பது, ஈர்ப்பு விசையின் பல்வேறு முகமூடிகளில் ஒன்று மட்டுமே! சரி மீண்டும் விடயத்துக்குள் சென்றுவிடுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஈர்ப்பு விசை கொண்ட அனைத்துப் பொருட்களுமே அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது. குறிப்பிட்ட பொருட்களின் திணிவிற்கு ஏற்ப இந்த வளைவின் அளவு மாறுபடுகிறது. குறிப்பாக கருந்துளைகளின் ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருப்பதால், கருந்துளையை சுற்றி வெளியானது மிக அதிகமாகவே வளைகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சூப்பர் ஜீனியஸ் ஐன்ஸ்டீன் தான் இந்த விளைவைப் பற்றிக் கூறியவர். அவரது பொதுச் சார்புக் கோட்பாடு, இந்த ஈர்ப்பு விசை என்பதே, திணிவானது (mass) அதனைச் சுற்றியுள்ள வெளிநேரத்தை வளைப்பதால் உருவாகும் ஒரு தோற்றம் என்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். அது மிகத் திணிவான ஒரு பொருள். ஆகவே அது தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து வைத்துள்ளது. கோள்கள் எல்லாம் உண்மையில் நேர்கோட்டில் தான் பயணிக்கின்றன. ஆனால் அந்தக் கோடே, அதாவது அந்த நேர்கோட்டுப் பாதையே சூரியனது ஈர்ப்பினால் வளைக்கப் பட்டுள்ளதால் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதாவது அந்த A4 கடதாசியை நீங்கள் முதலில் வளைத்தது போல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திணிவானது எப்படி அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைகிறது என்று மேலுள்ள வீடியோவில் பார்க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
இன்னுமொரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். ஒரு சைக்கில் டயரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெறும் டயரில் ஒரு சிறிய கல்லைப் போட்டு, இப்போது இந்த டயரை வேகமாக சுழற்றினால், அந்தக் கல்லானது அந்த டயரினுள்ளே சுழன்றுகொண்டு இருக்கும். அந்தக் கல்லைப் பொறுத்தவரை அது நேர்கோட்டில் தான் செல்லுகிறது, ஆனால் இந்த டயர் வளைந்து இருப்பதனால், அது வட்டப் பாதையில் செல்வதுபோல நமக்கு தோன்றும். அவ்வளவும்தான்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு நாம் கவனிக்கவேண்டியது, ஒளியும் இந்த வெளியில் பயணிக்கும் ஒரு வஸ்துவே! ஆகவே, வெளிநேரமானது வளைந்திருக்கும் பட்சத்தில், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்துதான் பயணிக்கும். ஒளியை ஈர்ப்புவிசை வளைக்கிறது என்று கருதுவதை விட பின்வருமாறு இலகுவில் விளங்கிக் கொள்ளுமாறு எடுத்துக் கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="240" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/gravitational-lensing-galaxyapril12_2010-1024x768.jpg?w=1098&h=824" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திணிவு அதிகமான பொருட்கள், தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, வெளியே வளைந்திருப்பதனால், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்து செல்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி ஒளி வளைவதை ஈர்ப்பு வில்லை (gravitational lensing) என்று அழைகின்றனர். அதாவது ஒரு ஒளிமுதலில் (light source) இருந்து வரும் ஒளியை எப்படி ஒரு வில்லை வளைக்குமோ, அதேபோல நட்சத்திரங்களில் இருந்து எம்மை நோக்கி ஒளி வரும்போது, குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கும் எமக்கும் இடையில் ஈர்ப்புவிசை அதிகமான ஒரு பொருள், அதாவது விண்மீன் பேரடை அல்லது கருந்துளை வரும் போது, குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருந்துவரும் ஒளியானது எப்படி ஒரு வில்லையினூடாக செல்லும்போது வளையுமோ அதேபோல இந்த ஈர்ப்பு விசை அதிகமான பொருளும் இந்த நட்சத்திர ஒளியை வளைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img src="https://parimaanam.files.wordpress.com/2015/02/220px-black_hole_lensing_web.gif?w=325&h=260" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமக்கும், ஒரு விண்மீன் பேரடைக்கும் இடையில் கருந்துளை ஒன்று வரும்போது, அது எப்படி ஒளியை வளைகிறது என்று இங்கே பார்க்கலாம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி ஈர்ப்புவில்லை மூலமாக வளைக்கப்பட்ட ஒளியானது பூமியை வந்தடையும் போது, அதை தொலைக்காட்டி மூலம் பார்க்கும் ஒருவருக்கு, சற்று விசித்திரமான வகையில் அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் தெரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிலவேளைகளில் ஒரே நட்சத்திரம் அல்லது வேறு ஒளிமுதல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தெரியும். சிலவேளைகளில், ஈர்ப்பு வில்லையாக செயற்பட்ட வின்மீன்பேரடையை சுற்றி ஒரு வளையம் போலவும் தெரியலாம். இது குறிப்பிட்ட ஒளிமுதல், ஈர்ப்பு வில்லை மற்றும் அவதானிப்பவரின் அமைவிடத்தைப் பொறுத்து மாறுபடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைகள் மிக மிக அதிகளவான ஈர்ப்புவிசைக் கொண்டுள்ளதால், கருந்துளையைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த ஈர்ப்பு வில்லைச் செயற்பாடு மிக அதிகமாக ஒளியை வளைக்கிறது. இப்படி வளைவது மட்டுமின்றி, கருந்துளைக்கு மிக அருகில் வரும் ஒளியானது, ஒரு கோள், எப்படி நட்சத்திரத்தை சுற்றிவருமோ அதேபோல கருந்துளையையும் சுற்றுகிறது – காரணம், அந்தளவுக்கு கருந்துளை தன்னைச் சுற்றியுள்ள வேளிநேரத்தை வளைத்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது சூரியனும் இப்படி ஒளியை சற்று வளைப்பதை நாம் அவதானித்துள்ளோம். பூமியில் இருந்து சில பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் சில விண்மீன் பேரடைகள் சற்று அதிகமாகவே ஒளியை வளைப்பதைக் கூட நாம் அவதானித்துள்ளோம். ஆனால் இர்துவரை கருந்துளைக்கு அருகில் இப்படியான ஈர்ப்பு வில்லை செயற்பாட்டின் மூலம் ஒளியானது வளைவதை நாம் நேரடியாக அவதானிக்கவோ இல்லை அதை புகைப்படம் எடுக்கவோ இல்லை. அதற்கு காரணம் நாம் இதுவரை அவதானித்த கருந்துளைகள் மிக மிக தொலைவில் இருப்பது, நமது தற்போதைய தொலைக்காடிகள் அவ்வளவு தொலைவில் இருக்கும் கருந்துளைகளை அவ்வளவு தெளிவாக காட்டக் கூடியளவு சக்திவாய்ந்தவை அல்ல என்பதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனிவரும் காலங்களில் நாம் தொழில்நுட்பத்தில் வளர்ந்து, அதன்பலனாக இப்படியான கருந்துளையைச் சுற்றி நடக்கும் ஈர்ப்பு வில்லை செயற்பாட்டை அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">சுற்றியிருக்கும் அரக்கன்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே வெளிநேரத்தில் தான் அமைந்துள்ளது. வெளிநேரம் என்ற ஒன்றே இந்த பிரபஞ்சம் என நாம் கருதலாம். அதாவது வெள்ளை கான்வஸில் ஓவியம் வரைவதுபோல; இந்த கன்வாஸ் தான் வெளிநேரம், அதில் உள்ள ஓவியம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களும். நான், நீங்கள், உங்கள் வீட்டு டோமி நாய்க் குட்டி, உலகம், சூரியன், நட்சத்திரங்கள், விண்மீன் பேரடைகள், கருந்துளைகள் என எல்லாமே இந்த ஓவியத்தில் இருப்பவையே! சரி குழப்பாமல் விசயத்திற்கு வருகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த கருந்துளைகளைப் பொறுத்தவரை, நாம் ஏற்கனவே நாம் பார்த்த வரை, வெளிநேரம் என்ற ஒன்றை அது அளவுக்கதிகமாக இழுத்து வளைக்கிறது. நிகழ்வெல்லை (even horizon) என்ற ஒன்றைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த நிகழ்வெல்லையை நாம் கருந்துளையின் எல்லை என்றும் அழைக்கலாம். அதாவது இந்த நிகழ்வெல்லையிலே தான் கருந்துளையின் உட்பகுதி ஆரம்பமாகிறது. அதாவது இந்த நிகழ்வெல்லையில் ஈர்ப்பு விசை அதிகரித்து, அந்தப் பகுதியின் விடுபடு திசைவேகம் ஒளியின் வேகத்தை அடைகிறது, ஆக இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து எதுவும் வெளிவர முடியாது. (பொதுச் சார்புக் கோட்பாட்டுப் படி எதுவும் ஒளியைவிட வேகமாக பயணிக்க முடியாதே!).</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிகழ்வெல்லையை நோக்கி நாம் செல்லும் போது, நம்மை அவதானித்துக் கொண்டு இருப்பவருக்கு, நாம் எதோ ஸ்லொவ் மோசன் படத்தில் வருவது போல தெரியும், நாம் கருந்துளையை நெருங்க நெருங்க, நமது இயக்க வேகம் குறைவது போல தெரியும், அதேவேளை நாம் பார்க்க சிவப்பாகிக் கொண்டே வருவோம். அதற்கும் காரணம் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளையை நெருங்க நெருங்க, அது வெளிநேரத்தை இழுக்கும் அளவும் அதிகரிக்கும். அபோது இதில் பயணிக்கும் ஒளியும் விரிவடையும். ஒரு ஸ்ப்ரிங்கை இருகைகளிலும் பிடித்து இழுப்பதைப் போல சிந்தித்துப் பாருங்கள். ஒளியும் ஒரு மின்காந்த அலைதான். அதுவும், நாம் பார்க்கும் நிறங்கள், அதாவது வானவில்லில் தெரியுமே எழு நிறங்கள், அவை இந்த அலைவடிவத்தில் தான் இருக்கிறது. அலைகளுக்கு அலைநீளம் என்று ஒன்று உண்டு. இதையும் இலகுவில் விளங்க வேண்டும் என்றால், கடலில் பார்க்கும் அலைகளை நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சந்தர்பத்தில் 2 செக்கன் இடைவெளியில் இரண்டு அலைகள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். பிறகு சிறிது நேரத்தில் இரண்டு அலைகள் 10 செக்கன் இடைவெளியில் வருகின்றன. இப்போது இவற்றை வைத்துப் பார்த்தால், முன் வந்த அலைகள் அலை நீளம் குறைந்தவை, அதான் வேகமாக வந்துவிட்டதே, பின் வந்த இரு அலைகளும் அலைநீளம் கூடியவை. மிகச் சுத்தமான உதாரணம் இல்லாவிடினும் உங்களுக்கு விளங்குவதற்காக கூறினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே போலதான் ஒவ்வொரு நிறத்திற்கும் அலைநீளம் உண்டு. அதில் மிகவும் அலைநீளம் கூடியது சிவப்பு (அலைநீளம் 620-750 நானோமீட்டர்). மிக மிக அலைநீளம் குறைந்தது ஊதா (அலைநீளம் 380-450 நானோமீட்டர்). இங்கு ஊதா ஒளியின் அலைநீளத்தை படிப்படியாக அதிகரிக்க, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு கடைசியாக சிவப்பு என்று இந்த எழு நிறங்களும் வரும்.</div>
<div style="text-align: justify;">
<img height="130" src="https://parimaanam.files.wordpress.com/2015/03/03.jpg?w=990" width="320" /></div>
<div style="text-align: justify;">
மின்காந்த அலைகளின் முழு அலைக்கற்றைத் தொகுதி. “VISIBLE” என்ற பகுதியில், வலப்பக்கத்தில் ஊதா நிறமும், இடப்பக்கத்தில் சிவப்பு நிறமும் இருப்பதை அவதானிக்க. அலைக்கற்றைக்கு கீழுள்ள பகுதியில், குறிப்பிட்ட மின்காந்த அலையில், அலைநீளத்தோடு ஒப்பிடக் கூடிய பொருட்களை குறித்திருக்கிறார்கள். (படத்தை கிளிக் செய்தது பெரிதாக்கி பாருங்கள்)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி, சிவப்பின் அலைநீளத்தை இன்னும் இழுத்து பெரிதாக்கினால் என்ன ஆகும்? அது இப்போது அகச்சிவப்பு (infrared) அலையாக மாறிவிடும். அதேபோல ஊதா ஒளியின் அலைநீளத்தை குறைத்தால் அது புறஊதாக் கதிர்களாக (ultraviolet) மாறிவிடும். இவை எல்லாமே மின்காந்த அலைவீச்சில் இருக்கும் கதிர்களே. அனால் எம்மால், சிவப்பில் இருந்து ஊதா வரையுள்ள அலைவீச்சை மட்டுமே கண்களால் பார்க்க முடியும். இது புலனாகும் நிறமாலை (visible spectrum) / புலனாகும் அலைவீச்சு என்று அழைக்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதெல்லாம் ஏன் சொல்கிறேன்? கரணம் உண்டு. இங்கு நாம் பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் இந்த நிகழ்வெல்லையனது அதனைச் சுற்றியுள்ள வெளியை மிகக்கடுமையாக இழுப்பதனால், வெளி விரிவடைகிறது, அதில் பயணிக்கும் ஒளியும் விரிவடைகிறது, அதாவது அதன் அலைநீளம் அதிகரிக்கிறது (அந்த ஸ்ப்ரிங் உதாரணத்தை நினைத்துக் கொள்ளுங்கள்). இப்படி விரிவடைந்து, விரிவடைந்து ஒரு கட்டத்தில் எல்லா நிறங்களும் சிவப்பு நிறத்தின் அலைநீளத்திற்கு வந்துவிடும். அதானால் தான் தொலைவில் இருந்து பார்ப்பவருக்கு நிகழ்வெல்லைக்குள் விழுந்துகொண்டிருக்கும் எதுவாயினும், சிவப்பாக தெரியும். ஆனாலும் இந்த சிவப்பு நிரந்தரம் இல்லை. நிகழ்வெல்லையை நெருங்க நெருங்க ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், சிவப்பின் அலை நீளமும் அதிகரிக்கும், ஒரு கட்டத்தில் அது புலனாகும் சிவப்பில் இருந்து விடுபட்டு, அகச்சிவப்பு கதிர்களாக மாறிவிடும் (அதைத் தொடர்ந்து படிப் படியாக அலைநீளம் அதிகரித்து மைக்ரோவேவ், ரேடியோவேவ் என்று செல்லும்), அதனை நம்மால் பார்க்க முடியாது. ஆக கருந்துளையின் நிகழ்வெல்லையை நோக்கி விழுபவர் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பாக மாறி, பின் மங்கலாக சென்று ஒரு கட்டத்தில் நிகழ்வெல்லையை கடக்கும் போது மறைந்துவிடுவார். ஆனால் இதெல்லாம் தூரத்தில் இருந்து பார்ப்பவருக்குதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளையின் நிகழ்வெல்லையை நோக்கி செல்லுபவருக்கு இப்படி நிறங்கள் மாறுவது தெரியாது, ஏன் என்றால் அவரும் சேர்ந்துதான் வெளியோடு (space) சேர்ந்து இழுபடுகிறாரே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி வெளியோடு சேர்ந்து இழுபடுவதில் இன்னுமொரு நிகழ்ச்சியை தூரத்தில் இருந்து அவதானிப்பவர் பார்க்கக்கூடும். அதாவது நீங்கள் (கருந்துளையை நோக்கி செல்பவர்) கருந்துளையை நோக்கி தரையிறங்குவது போல செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் கால்கள் கருந்துளையை நோக்கியும், தலை கருந்துளைக்கு எதிர் திசையிலும் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். இப்போது உங்கள் தலையை இழுப்பதை விட கால்களை கருந்துளையின் ஈர்ப்பு வேகமாக இழுக்கும், இப்படி தலைக்கும் காலுக்கும் வேறுபட்ட ஈர்ப்பு விசையானது, உங்களை அப்படியே நீட்டிவிடும், அதாவது சப்பாத்தி மாவை தயார் செய்து விட்டு, அந்த உருண்டைகளை இழுத்துப் பார்த்து இருகிறீர்களா, அப்படியே இழுபட்டுக் கொண்டே வருமே, அதேபோல நீங்களும் இழுபட்டுக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் உங்கள் உடம்பில் உள்ள அணுக்கள் வரை இப்படி இழுபட்டு சிதைந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="320" src="https://parimaanam.files.wordpress.com/2015/03/blackhole_pastabarbecue_2_0.png?w=900" width="158" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெளியில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு, நாம் கருந்துளையின் நிகழ்வெல்லையை கடப்பதை பார்க்கவே முடியாது. எப்படி நிகழ்வேல்லை வெளியை இழுக்கிறதோ, அதேபோலே அது நேரத்தையும் அல்லவா இழுக்கிறது. இதப் பற்றி நாம் ஏற்கனவே தெளிவாக பார்த்துவிட்டோம், இருந்தும் இங்கு மீண்டும் சொல்வதற்கான காரணம், மீண்டும் ஒருமுறை புரியவைப்பதற்காகவே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெளியில் இருந்து பார்ப்பவருக்கு, நிகழ்வெல்லையை கடக்க முடிவிலி அளவு நேரம் ஆகும் போல தோன்றும். ஏன் என்றால் கருந்துளையின் நிகழ்வெல்லை வெளிநேரத்தை (space-time) மிக மிக அதிகமாக, கிட்டத்தட்ட முடிவிலி அளவிற்கு இழுத்து வளைத்துள்ளது. ஆனால் நிகழ்வெல்லையை கடப்பவருக்கு இந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை, அவர் சாதாரணமாக நிகழ்வெல்லையை கடந்துசென்றுவிடுவார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் உள்ளே கடந்து சென்றுவிட்டால் தான் திரும்ப முடியாதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைக்குள் என்ன இருக்கும்? அதாவது நிகழ்வெல்லையின் உட்பகுதியில் என்ன இருக்கும் என்று பார்க்கலாம். அதற்கு முதல் ஒரு சிறிய எச்சரிக்கை. இனி நாம் பார்க்கபோகும் விடயங்கள், கணிதவியல் / இயற்பியல் துறையின் ஒரு எல்லையில் இருக்கும் கருத்துக்கள். இவை இன்னமும் பூரணமாக ஆராயப்படாத ஒன்று. நமக்குத் தெரிந்த இயற்பியல் / கணிதவியல் விதிகளைப் பயன்படுத்தி இப்படித்தான் இருக்கலாம் என்று கருதுகிறோம். எதிர்காலத்தில் இவற்றை வாய்ப்புப் பார்க்க சந்தர்பங்கள் அமையலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி செல்வோம் உள்ளிருக்கும் அரக்கனை நோக்கி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி :https://parimaanam.wordpress.com/2015/03/03/bh-14-monster-outside/</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-30970282647177524232016-09-16T15:12:00.000+02:002017-08-25T20:51:33.470+02:00பார்த்திபன் கனவு 64 புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 27 - புதையல்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
</h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://tamil.adaderana.lk/news_images/1258407542WH.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://tamil.adaderana.lk/news_images/1258407542WH.jpg" height="246" width="320" /></a></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான். அந்த அடிக்கிளையின் பட்டையில் சிறு கத்தியினால் ஓர் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால் அது ஒரு புலியின் உருவம் என்று தெரிந்து கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் அதைப் பார்த்துவிட்டு நின்றான். அந்தப் புலி உருவத்துக்கடியில் தரையில் கிடந்த மாஞ் சருகுகளையெல்லாம் ஒதுக்கினான். பிறகு அங்கே தரையைத் தோண்டத் தொடங்கினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் பரபரப்புடன் தானும் மண்வெட்டியை எடுத்த போது பொன்னன் கைமறித்து, "மகாராஜா! தங்களுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை. இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்வதற்கு இருக்கின்றன. சற்றும் நேரம் மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்" என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்விதமே விக்கிரமன் மரத்தடிக்குச் சென்று வேரின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்தன. குழந்தைப் பருவத்தில் இந்த வஸந்தத் தீவில் எவ்வளவு ஆனந்தமாக நாட்கள் கழிந்தன! இதே இடத்தில் ஒரு அன்னியப் பெண்ணின் தயவில் தங்கவேண்டிய காலமும் வந்ததல்லவா? - நல்ல வேளை, இன்றோடு அந்த அவமானம் தீர்ந்துவிடும். பெட்டியை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பிவிட வேண்டியதுதான்.... இனிமேல் ஒரு விநாடி நேரமும் இங்கே தங்கக்கூடாது... செண்பத் தீவிலிருந்தபோது இந்தத் தாய் நாட்டைப் பார்க்க வேணுமென்று தனக்கு ஏற்பட்டிருந்த ஆவலையும், இப்போது இங்கிருந்து கிளம்பினால் போதுமென்று இருப்பதையும் நினைத்தபோது விக்கிரமனுக்குச் சிரிப்பு வந்தது. "இங்கே எதற்காக வந்தோம்? என்ன பைத்தியகாரத்தனம்?" என்று தோன்றியது. பார்த்திப மகாராஜா சுதந்திரமாக ஆண்ட அந்தச் சோழ நாடு அல்ல இது. பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் மிதிபட்டுக் கிடக்கும் நாடு. தேசத் துரோகியும் குலத்துரோகியும் கோழையுமான மாரப்ப பூபதியைச் சேனாதிபதியாகப் பெற்றிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாட்டின் மண்ணை உதறிவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் போகிறோமோ, அவ்வளவுக்கு நல்லது! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நாடு என்ன செய்யும்? - மனுஷ்யர்கள் கேடுகெட்டுப் போயிருந்தால்?" என்ற எண்ணம் தோன்றியதும் விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்புவதற்கு முன் தன்னைச் சித்திர மண்டபத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் அவருடைய கனவுச் சித்திரங்களையெல்லாம் காட்டியதை நினைத்துக் கொண்டான். அந்தக் கனவு நிறைவேறப் போகிறதா? இல்லை கனவாகத்தான் போய்விடுமோ? இங்கே எல்லாரும் பல்லவ சக்கரவர்த்தியின் புகழிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். நேற்றுத்தான் காஞ்சியிலிருந்து ஒரு ஆள் வந்தான். சீன தேசத்திலிருந்து வந்த ஒரு தூதனுக்குக் காஞ்சியில் நடந்த வரவேற்பு வைபவங்களைப் பற்றியெல்லாம் அவன் வர்ணித்தான். விக்கிரமன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்கக் கேட்க அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தச் சீன தேசத்துத் தூதன் தான் போகுமிடங்களிலெல்லாம் பல்லவ சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போவான். சீன தேசத்திலும் போய்ச் சொல்வான். சோழ நாட்டைப் பற்றியோ, சோழ நாட்டின் சுதந்திரத்துக்காக வீரப்போர் புரிந்து மரணமடைந்த பார்த்திப மகாராஜாவின் பெயரையோ யார் கேட்கப் போகிறார்கள்? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டு எழுந்தான். குழியில் நின்ற பொன்னன் குனிந்தான். அவன் மறுபடி நிமிர்ந்தபோது அவனுடைய கைகளில் கெட்டியான தோலினால் சுற்றப்பட்ட பெட்டி இருந்தது. பொன்னன் அந்தத் தோலை எடுத்தெறிந்தான். பழைய ஆயுதப் பெட்டி - சித்திர வேலைப் பாடமைந்த பெட்டி காணப்பட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் விரைந்து சென்று கையை நீட்டி அந்தப் பெட்டியை ஆவலுடன் வாங்கித் திறந்தான். உள்ளே சிறிதும் மலினமடையாமலிருந்த ஓலைச் சுவடியைக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு பட்டாக்கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டான். பொன்னனைப் பார்த்துச் சொன்னான்: </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! சற்று முன்னால் என் மனத்தில் தகாத கோழை எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. இந்தச் சோழ நாட்டின் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. "இந்த நாட்டுக்கு விமோசனம் ஏது? எப்போதும் பல்லவர்களின் கீழ் அடிமைப்பட்டிருக்க வேண்டியதுதான்!" என்று எண்ணினேன். எதற்காக இவ்வளவு அபாயங்களுக்குத் துணிந்து, இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்தோம் என்று நினைத்தேன் - அந்த மயக்கம், மாயை எல்லாம் இந்தக் கத்தியைக் கண்டவுடன் மாயமாய்ப்போய் விட்டது. பொன்னா! இந்தக் கத்தி ஒரு காலத்தில் உலகை ஆண்டது. கரிகாலச் சோழரும் நெடுமுடிக் கிள்ளியும் இந்தக் கத்தியினால் கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களையெல்லாம் வென்று சோழ மகாராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். கரிகாலச் சக்கரவர்த்தியின் காலத்தில் செண்பகத் தீவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள் தான் அந்தத் தீவில் இன்று வசிக்கிறார்கள். அத்தகைய மகாவீர புருஷர்களுடைய சந்ததியில் பிறந்தவன் நான். அவர்கள் கையில் பிடித்த வீரவாள் இது. அவர்களால் முடிந்த காரியம் என்னால் ஏன் முடியாது? பொன்னா! இந்தக் கத்தியுடனே என் தந்தை எனக்கு அளித்த இந்தத் தமிழ்மறை என்ன சொல்கிறது? 'முயற்சி திருவினையாக்கும்!' ஆகா? அந்தப் புனித வாக்கைக்கூட அல்லவா மறந்துவிட்டேன்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது என்னவோ நேர்ந்துவிட்டது. இங்கே அடிக்கும் காற்றே மனச்சோர்வு தருகிறது. இங்கே இனி ஒரு கணங்கூட நிற்கமாட்டேன். வா, போகலாம்!" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விதம் விக்கிரமன் பேசிக் கொண்டிருந்தபோது பொன்னன் அவனுடைய முகத்தைப் பார்த்தவண்ணமே பிரமித்து நின்றான். அப்போது விக்கிரமனுடைய முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த வீரதேஜஸ் அவ்விதம் அவனைப் பிரமிக்கச் செய்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகு சட்டென்று அந்தப் பிரமையிலிருந்து நீங்கினவனாய், மளமளவென்று மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். அந்த இடத்தின் மேல் மாஞ் சருகுகளைப் பரப்பிய பிறகு இருவரும் காவேரியை நோக்கி விரைந்து சென்றார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நதிக்கரையையடைந்து படகு கட்டியிருந்த இடத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் பகீர் என்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இதென்ன, பொன்னா! படகு! எங்கே?" என்றான் விக்கிரமன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒருவேளை இடம்மாறி வந்து விட்டோ மோ?" என்று பொன்னன் திகைப்புடன் கூறி அங்குமிங்கும் நோக்கினான். ஆனால், வேரில் கட்டிய கயிறு இருப்பதைப் பார்த்ததும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போயிற்று. கயிற்றின் முடிச்சு எப்படியோ அவிழ்ந்து படகு ஆற்றோடு போயிருக்க வேண்டுமென்றுதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! என்ன யோசிக்கிறாய்? நீந்திப் போய் விடலாமா?" என்றான் விக்கிரமன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கொஞ்சம் பொறுங்கள், மகாராஜா! கரையோடு ஓடிப்போய் எங்கேயாவது படகு தங்கியிருக்கிறதா என்று இதோ பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் பொன்னன் நதிக்கரையோடு ஓடினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-13644071500465871952016-08-25T20:30:00.001+02:002017-08-25T20:52:36.247+02:00பார்த்திபன் கனவு 63 - புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 26 - படகு நகர்ந்தது! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
</h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidJvZkir6vfhOpP6jwSq5nwbZOjKDWz76szcE9IvgeN4lI8mfTq9In2ipS8jJ-Ofj2aOZ_1kLQqQHl1i2SI8_t-VHBLk4YKUlf8LRo2ZuflJ5Dn-ouCS6XZ_UYfkDfxFnnPk-HunUSRDw/s1600/DSC00884.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidJvZkir6vfhOpP6jwSq5nwbZOjKDWz76szcE9IvgeN4lI8mfTq9In2ipS8jJ-Ofj2aOZ_1kLQqQHl1i2SI8_t-VHBLk4YKUlf8LRo2ZuflJ5Dn-ouCS6XZ_UYfkDfxFnnPk-HunUSRDw/s320/DSC00884.JPG" width="320" /></a></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
படகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்கிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். "மகாராஜா! மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே!" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன், "பொன்னா! சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்.... அதோ பார், பொன்னா! படகு நகர்கிறது முதலில் அதைக் கட்டு" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் ஓடிப்போய்ப் படகைப் பிடித்து இழுத்துக் கரையோரமிருந்த ஒரு மரத்தின் வேரில் அதைக் கயிற்றினால் கட்டிவிட்டு வந்தான். இருவரும் ஜலக்கரையில் மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! அப்புறம் என்ன செய்தி சொல்லு! அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய்? ஏன் பிரிந்து போனாய்?" என்று விக்கிரமன் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐயோ, மகாராஜா; நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்து வைத்தியனை அழைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, உங்களைக் காணவில்லை, அப்போது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வைத்தியனை அழைத்துவரப் போனாயா? எப்போது? எல்லாம் விவரமாய்ச் சொல்லு, பொன்னா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ! அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மறுநாள் காலையில், நாம் உறையூருக்குக் கிளம்புவதென்று தீர்மானித்துக் கொண்டல்லவா படுத்தோம்? அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா? தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா? எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம்! எனக்குப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்புறம் என்னதான் செய்தாய்?" என்று விக்கிரமன் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் பிறகு தான் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, குள்ளனைக் கண்டது, குந்தவிதேவி தன் பல்லக்கில் அவரை ஏற்றிக் கொண்டு போனதைத் தெரிந்து கொண்டது. பராந்தகபுரம் வரையில் தொடர்ந்து வந்து கண்ணால் பார்த்துத் திருப்தியடைந்து, பிறகு மாமல்லபுரம் போய்ச் சிவனடியாரை சந்தித்தது. அவரும் தானுமாகக் கொல்லி மலைச்சாரலுக்கு போனது. இரகசிய வழியைக் கண்டுபிடித்தது, சிவனடியாரை மலைமேல் விட்டுவிட்டுத் தான் மட்டும் உறையூர் வந்தது ஆகிய விவரங்களை விவரமாகக் கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் சிவனடியாரைச் சிற்ப மண்டபத்தில் சந்தித்த செய்தி விக்கிரமனுக்கு வியப்பை அளித்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன்? அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா! எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது" என்றான் விக்கிரமன். "என்ன மகாராஜா, சந்தேகம்?" "அந்த ஒற்றர் தலைவன் ஒரு வேளை நமது சிவனடியார் தானோ என்று."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆம், மகாராஜா! ஒற்றர் தலைவன் வீரசேனர்தான் சிவனடியார். நான் மாமல்லபுரத்துச் சாலையிலிருந்து குறுக்குவழி திரும்பியபோது எனக்கு முன்னால் ஒரு குதிரை வீரன் போவதைப் பார்த்தேன். தாங்கள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவர்தான் வீரசேனர் என்று ஊகித்துக் கொண்டேன். அவரே சிற்ப வீட்டுக்குள் நுழைந்துவிட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தபோது ஜடாமகுடத்துடன் சிவனடியாராக வந்தார்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐயோ! அப்படியானால் நான் உண்மையில் யார் என்று பல்லவச் சக்கரவர்த்தியின் ஒற்றர் தலைவனுக்குத் தெரியும்.... ஆனால் ஆதி முதல் நமக்கு உதவி செய்து வந்திருப்பவர் அவர்தான் அல்லவா? இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒரு நாளும் மாட்டார், சுவாமி! அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆனால் என்ன, பொன்னா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வேறொரு பெரும் அபாயம் இவ்விடத்தில் இருக்கிறது. மாரப்ப பூபதிதான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதி, தெரியுமல்லவா? அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா! நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா! நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்" என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அது என்ன அபாயம், மகாராஜா?" என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளில் உள்ள அபாயந்தான்" என்று கூறி விக்கிரமன் காவேரி நதியைப் பார்த்தான். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு விக்கிரமன் சொன்னான்:-</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? பொன்னா! மூன்று வருஷத்துக்கு முன்னால் என்னை இங்கிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போன போது காஞ்சி நகரின் வீதியில் பல்லக்கில் சென்ற ஒரு பெண் என்னைப் பார்த்தாள். அவளே மறுபடியும் மாமல்லபுரத்தில் நான் கப்பல் ஏறியபோதும் கடற்கரையிலே நின்று என்னைக் கனிவுடன் பார்த்தாள். செண்பகத்தீவுக்குப் போய் மூன்று வருஷ காலமான பிறகும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. அதிசயத்தைக் கேள், பொன்னா! அதே பெண்தான் மகேந்திர மண்டபத்தில் நான் ஜுரமடித்துக் கிடந்தபோது என்னைப் பார்த்து இங்கே எடுத்து வந்து காப்பாற்றினாள்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மகாராஜா! அப்பேர்ப்பட்ட புண்யவதி யார்? அந்தத் தேவியைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது! பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! விஷயத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐயோ, அது என்ன?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா! கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி! அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா? அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்...!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் குறுக்கிட்டு, "மகாராஜா! நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சொல்லு பொன்னா? உனக்கு அனுமதி வேண்டுமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"விசுவாமித்திர ரிஷி மேனகையினால் கெட்டதை மட்டும் சொல்கிறீர்கள். ஆனால், பெண்களால் மேன்மையடைந்தவர்கள் இல்லையா, மகாராஜா! சீதையால் ராமர் மேன்மையடையவில்லையா? கிருஷ்ணன் போய் ருக்மணியை எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தார்? அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா? முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன்? அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! சரியான கேள்விதான் கேட்கிறாய். சீதையினால் ராமரும், ருக்மணியால் கிருஷ்ணனும், சுபத்திரையினால் அர்ச்சுனனும், வள்ளியினால் முருகனும் மேன்மையடைந்தது மட்டுமல்ல. அருள்மொழி ராணியினால் பார்த்திப மகாராஜாவும், வள்ளியினால் பொன்னனும் மேன்மையடைகிறார்கள்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படிச் சொல்லுங்கள்! பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கேள், பொன்னா! பெண் காதலினால் மனிதர்கள் சிலர் தேவர்களாகியிருக்கிறார்கள், அவர்கள் பாக்கியசாலிகள். ஆனால், தேவர்கள் சிலர் பெண் காதலினால் தேவத்தன்மையை இழந்து மனுஷ்யர்களிலும் கேடு கெட்டவர்களாகியிருக்கிறார்கள். நான் அத்தகைய துர்ப்பாக்கியன். என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பெண் அத்தகையவளா யிருக்கிறாள். நான் என்னுடைய தர்மத்தையும், என்னுடைய பிரதிக்ஞையையும் கைவிடுவதற்கு அவளுடைய காதல் தூண்டுகோலாயிருக்கிறது. ஜுரம் குணமானதிலிருந்து எனக்கு அந்தப் பெண்ணின் நினைவைத் தவிர வேறு நினைவேயில்லை. அவளைப் பிரிந்து ஒரு நிமிஷமாவது உயிர் வாழ முடியாதென்று தோன்றுகிறது. அவளுக்காக சுவர்க்கத்தைக்கூடத் தியாகம் செய்யலாமென்று தோன்றும் போது, சோழ நாடாவது சுதந்திரமாவது? அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனுக்கு தூக்கி வாரிப் போட்டது. "விக்கிரமனுக்கு இது கடைசித் சோதனை" என்று சிவனடியார் கூறியது அவனுக்கு நினைவு வந்தது. "ஐயோ! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உறையூர்ச் சித்திர மண்டபத்தில் பார்த்திப மகாராஜாவிடம் தாங்கள் செய்த சபதம் ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஞாபகம் இருக்கிறது பொன்னா! இன்னும் மறந்து போகவில்லை. ஆனால், எத்தனை நாளைக்கு ஞாபகம் இருக்குமோ, தெரியாது. தினம் தினம் என்னுடைய உறுதிகுலைந்து வருகிறது. ஆகையினால்தான் உடனே கிளம்பி விடவேண்டுமென்று சொல்கிறேன். இப்போதே உன்னுடன் வரச் சித்தமாயிருக்கிறேன்; கிளம்பலாமா?" என்றான் விக்கிரமன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கிளம்பலாம் சுவாமி! ஆனால் இந்தத் தீவில் நமக்கு ஒரு காரியம் இருக்கிறதே! மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பார்த்தாயா! அதைக்கூட மறந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன்! இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய்?" என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தோண்டி எடுக்க வேண்டுமல்லவா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்லிப் பொன்னன் படகின் அடியிலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு பேரும் விரைவாக நடந்து அந்த அடர்ந்த மாந்தோப்புக்குள்ளே போனார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் சமீபத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து குந்தவிதேவி வெளியில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நதிக் கரையில் படகு கட்டியிருந்த இடத்துக்குச் சென்றாள். இன்னும் ஒரு கள்ளப் பார்வை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, படகை மரத்தின் வேருடன் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டாள். படகு மெதுவாக நகர்ந்தது. பிறகு வேகமாய் நகர்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெள்ளப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்டு அதிவேகமாய்ச் சுழன்று செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவியின் முகத்தில் குறுநகை பூத்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-14625736013272997972016-07-28T13:16:00.000+02:002017-08-25T21:00:13.366+02:00பார்த்திபன் கனவு 62 -புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 25 - வள்ளி சொன்ன சேதி. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;"><br /></span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
வழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப் போயிருந்தாள். அவள் பக்தியும் மரியாதையும் வைத்திருந்த சோழ ராஜ குடும்பத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாய் நேர்ந்த விபத்துக்களெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது கொஞ்ச நாளாய்ப் பொன்னனையும் பிரிந்திருக்க நேர்ந்தபடியினால் அவள் அடியோடு உற்சாகம் இழந்திருந்தாள். எனவே, பல தினங்களுக்குப் பிறகு பொன்னனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வா! வா!" என்று சொல்லி அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, "இளவரசர் போனது போல் நீயும் எங்கே கப்பல் ஏறிப் போய்விட்டாயோ, அல்லது ஒருவேளை உன்னை யாராவது காளிக்குத்தான் பலிகொடுத்து விட்டார்களோ என்று பயந்து போனேன். தினம் காளியம்மன் கோயிலுக்குப் போய், 'என் உயிரை எடுத்துக் கொண்டு என் புருஷனைக் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாய் வந்தாயே! என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்? நல்ல சேதிதானே?" என்று மூச்சு விடாமல் பேசினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நல்ல சேதி, கெட்ட சேதி, கலப்படமான சேதி எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சொல்ல முடியாது. பசி பிராணன் போகிறது, வள்ளி! உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது! அகப்பட்டபோது அகப்பட்டதைத் தின்று...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியெல்லாம் பட்டினி கிடந்ததினால்தான் இன்னும் ஒரு சுற்று அதிகமாய்ப் பெருத்துவிட்டாயாக்கும். பாவம்! கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய்?" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியா சமாசாரம்? நான் பெருத்திருக்கிறேனா, என்ன? ஆனாலும் நீ ரொம்பவும் இளைத்திருக்கிறாய் வள்ளி! ரொம்பக் கவலைப்பட்டாயா, எனக்காக?" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; ஆனால் என்னத்துக்காகக் கவலைப்பட்டோம் என்று இப்போது தோன்றுகிறது. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போய்விட்டு வந்த சேதியை முதலில் சொல்லு. சொன்னால் நானும் ஒரு முக்கியமான சேதி வைத்திருக்கிறேன்" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சுருக்கமாகச் சொல்லுகிறேன். நமது விக்கிரம மகாராஜா தாய்நாட்டுக்குத் திரும்பி, வந்திருக்கிறார்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன? என்ன? நிஜமாகத்தானா?" என்று சொல்லி ஆவலுடன் கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; நானே இந்தக் கண்களால் அவரைப் பார்த்துப் பேசினேன்..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இப்போது எங்கேயிருக்கிறார்...?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதுதான் சொல்ல மாட்டேன், இரகசியம்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சரி, அப்புறம் சொல்லு."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ராணி உள்ள இடத்தைக் கிட்டதட்டக் கண்டு பிடித்தாகிவிட்டது. இப்போது சிவனடியார் ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்குள் அவசியம் கண்டுபிடித்திருப்பார்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆகா! சிவனடியாரா?" "வள்ளி! நீ பொல்லாத கள்ளி! சிவனடியார் யார் என்று என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினாயல்லவா? அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நிஜமாகவா? யார் அவர்?" என்றாள் வள்ளி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"யாரா? வேறு யார்? செத்துப் போனானே உன் பாட்டன் வீரபத்திர ஆச்சாரி, அவன்தான்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வள்ளி புன்னகையுடன், "இப்படியெல்லாம் சொன்னால் போதாது, நீ இங்கேயிருந்து கிளம்பினாயே, அதிலிருந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லு, ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீ அடுப்பை மூட்டு" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வள்ளி அடுப்பை மூட்டிச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொன்னன் தான் போய் வந்த வரலாற்றையெல்லாம் விவரமாகக் கூறினான். கடைசியில், "நீ என்னமோ சேதி சொல்லப் போகிறேன் என்றாயே, அதைச் சொல்லு!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வள்ளி சொன்னாள்; - "நாலு நாளைக்குள் மாரப்பன் இங்கே ஐந்து தடவை வந்து விட்டான். அவன்தான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதியாம். அவனுடைய ஜம்பம் பொறுக்க முடியவில்லை. 'வஸந்த மாளிகையில் யாரோ ஒரு இரத்தின வியாபாரி வந்திருக்கிறானாமே? அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே?' என்று என்னவெல்லாமோ கேட்டு என் வாயைப் பிடுங்கிப் பார்த்தான். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்து விட்டேன். அப்புறம் இங்கே அடிக்கடி வந்து, நீ திரும்பி வந்து விட்டாயா என்று விசாரித்து விட்டு போனான். இன்றைக்கும் கூட ஒருவேளை வந்தாலும் வருவான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்ட பொன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, "வள்ளி! தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா! குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா?" என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்?" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செலுத்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நானும் இதையேதான் கேட்டேன். பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னமும் வேஷம் போடுவதாகச் சொல்கிறார்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகு பொன்னனும், வள்ளியும் சீக்கிரத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, உறையூரிலிருந்து புறப்பட்டுக் காவேரி நதிப்பாதையில் சென்றார்கள். அவர்களுடைய குடிசையை அடைந்ததும், கதவைத் திறந்து, உள்ளே இருந்த படகை இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டுபோய் நதியில் போட்டார்கள். பொன்னன், "பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி, கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டுப் படகைச் செலுத்தினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல தினங்களுக்குப் பிறகு மறுபடியும் காவேரியில் படகு விட்டது பொன்னனுக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. ஆனாலும் பார்த்திப மகாராஜாவின் காலத்தில் இராஜ குடும்பத்துக்குப் படகு செலுத்தியது நினைவுக்கு வந்து அவனுடைய கண்களைப் பனிக்கச் செய்தது. தீவிலே இளவரசரைப் பார்ப்போமா? அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா? அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா? - இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய்ப் படகு விட்டுக் கொண்டே போனவன் திடீரென்று கரைக்கு அருகே வந்து விட்டதைக் கவனித்தான். படகு வந்த இடம் தீவில் ஒரு மூலை. ஜனசஞ்சாரம் இல்லாத இடம். அந்த இடத்தில் படகை கட்டிவிட்டுத் தீவுக்குள் ஜாக்கிரதையாகப் போய் புலன் விசாரிப்பதென்று அவன் தீர்மானித்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுதடவை அவன் தீவின் கரைப்பக்கம் பார்த்தபோது அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. அங்கே விக்கிரம மகாராஜாவே நின்று கொண்டிருந்தார். ஒரு கால் தண்ணீரிலும் ஒரு கால் கரையிலுமாக நின்று படகையும் பொன்னனையும் ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தார். பொன்னன் கோலை வாங்கிப் போட்டு இரண்டே எட்டில் படகை அவர் நின்ற இடத்துக்குச் சமீபமாகக் கொண்டு வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-11136848352148182962016-07-08T18:57:00.002+02:002017-08-25T21:03:24.660+02:00பார்த்திபன் கனவு -புதினம் -61- மூன்றாம் பாகம் - அத்தியாயம் 24 - பொன்னன் பிரிவு .<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
<br /></h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://pp.vk.me/c629507/v629507246/23e6e/irBt3nSsp9I.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://pp.vk.me/c629507/v629507246/23e6e/irBt3nSsp9I.jpg" width="320" /></a></div>
<b style="background-color: white;"><span style="color: #3d85c6;"><br /></span></b>
<br />
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
பொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது, சிவனடியார் அவனைப் பார்த்து ஏதோ கூறியதுடன் சமிக்ஞையினால் "வா" என்று அழைத்தார். அருவியின் பேரோசையினால் அவர் சொன்னது என்னவென்று பொன்னன் காதில் விழவில்லை ஆனால், சமிக்ஞை புரிந்தது. முன்னால் சுவாமியார் போன மாதிரியே இவனும் குளத்தின் ஓரமாகப் பாறைகளைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிச் சென்று அவர் நின்ற இடத்தை அடைந்தான். தூரத்தில் நின்று பார்த்தபோது குறுகலாகத் தோன்றிய அருவியின் தாரை உண்மையில் முப்பது அடிக்குமேல் அகலமுள்ளது என்பதைப் பொன்னன் இப்போது கண்டான். சாமியார் அவனுடைய கையைப் பிடித்துப் பாறைச் சுவருக்கும் அருவியின் தாரைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அழைத்துச் சென்றார். இந்த இடைவெளி சுமார் ஐந்து அடி அகலமுள்ளதாயிருந்தது. மிகவும் மங்கலான வெளிச்சம்; கீழே பாறை வழுக்கல்; கொஞ்சம் கால் தவறினால் அருவியின் தாரையில் அகப்பட்டுக் கொண்டு, அந்தப் பாதாளக் குளத்திற்குள் போகவேண்டியதுதான்! ஆகவே இரண்டு பேரும் நிதானமாகக் காலை ஊன்றி வைத்து நடந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாலைந்து அடி நடந்ததும் சிவனடியார் நின்று பாறைச் சுவரில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிட்டதட்ட வட்ட வடிவமாக ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அந்தத் துவாரம் சாய்வாக மேல் நோக்கிச் செல்வதாகத் தெரிந்தது. ஓர் ஆள் அதில் கஷ்டமில்லாமல் புகுந்து செல்லலாமென்று தோன்றியது. ஆனால் அந்தத் துவாரம் எங்கே போகிறது? எவ்வளவு தூரம் போகிறது? ஒன்றும் தெரியவில்லை. ஐந்தாறு அடிக்கு மேல் ஒரே இருட்டாயிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவனடியார் பொன்னனுக்குச் சைகை காட்டித் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அந்தத் துவார வழியில் ஏறத் தொடங்கினார். சாய்வான மலைப்பாறையில் ஏறுவது போல் கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி ஏறினார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறினான். இன்னதென்று தெரியாத பயத்தினால் அவனுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. சற்று ஏறியதும் ஒரே காரிருளாயிருந்த படியால் அவனுடைய பீதி அதிகமாயிற்று. ஆனால், கையினால் பிடித்துக் கொள்ளவும், காலை ஊன்றிக் கொள்ளவும் சௌகரியமாக அங்கங்கே பாறை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்த போது, கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. இவ்விதம் சிறிது நேரம் சென்ற பிறகு அந்தக் குகை வழியில் மேலேயிருந்து கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பிறகு வெளிச்சம் நன்றாய்த் தெரிந்தது. சிவனடியார் மேலே ஏறி அப்பால் நகர்ந்தார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறி, அடுத்த நிமிஷம் வெட்ட வெளியில் மலைப்பாறை மீது நின்றான். சுற்று முற்றும் பார்த்தான் ஆகா, அது என்ன அற்புதக் காட்சி!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலை அருவி விழுந்த செங்குத்தான பாறையின் விளிம்பின் அருகில் அவர்கள் நின்றார்கள். அங்கே பாறையில் கிணறு மாதிரி வட்ட வடிவமாக ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தின் நடுமத்தியில்தான் குகை வழி ஆரம்பமாகிக் கீழே சென்றது. பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சம் தூரத்தில் அருவி 'சோ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. அருவி விழுந்த திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற் போன்ற மலைத்தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி அந்தச் சமவெளியில் கண்ணுக்கெட்டிய தூரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்றை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ! பொன்னிற பூ!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பார்த்தாயா, பொன்னா! எப்பேர்ப்பட்ட அருமையான இடம்! இந்த இடத்தைக் கொண்டு போய்க் கடவுள் எவ்வளவு இரகசியமான இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார், பார்த்தாயா?" என்றார் சிவனடியார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம், சுவாமி! எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவனடியார் குறுநகை புரிந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆனால் பொன்னா! பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐயோ! சுவாமி! ஏன் அவ்விதம் சொல்கிறீர்கள்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; வெகு நாளாய் நான் அறிய விரும்பியதை இப்போது அறிந்தேன். மகா கபால பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் நான் இங்கிருந்து திரும்பி வருவேன், நீ ...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நானுந்தான் சுவாமி! உங்களைத் தனியே விட்டு விட்டு நான் போய் விடுவேன் என்று நினைத்தீர்களா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை பொன்னா! நீ போக வேண்டும். உனக்கு வேறு காரியம் இருக்கிறது. மிகவும் முக்கியமான காரியம்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எங்கள் ராணியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் என்ன சுவாமி?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதற்குத்தானே நான் வந்திருக்கிறேன், பொன்னா! ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா? 'என் பிள்ளை எங்கே?' என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ?..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சக்கரவர்த்தித் திருக்குமாரியின் இஷ்டத்துக்கு விரோதமாய் என்ன நடந்துவிடும், சுவாமி?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஏன் நடக்காது? தேவியின் சகோதரன் மகேந்திரன் கூட உறையூரில் இல்லை, பொன்னா! மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான்? அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐயோ!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதனால்தான் நீ உடனே உறையூருக்குப் போக வேண்டும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆனால், உங்களை விட்டுவிட்டு எப்படிப் போவேன்? ஆ! அந்த மகாகபால பைரவன் உங்களைப் பலிக்குக் கொண்டு வரும்படி சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், பொன்னா! என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன சந்தேகம், சுவாமி?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சமயம் வரும்போது உனக்குச் சொல்வேன், பொன்னா! இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ஏதாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தாங்கள் வராவிட்டால்....?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அடுத்த பௌர்ணமி வரையில் பார். அதற்குள் நான் உறையூரிலாவது மாமல்லபுரத்துச் சிற்ப மண்டபத்திலாவது வந்து உங்களைச் சந்திக்காவிட்டால், நீ என்னைத் தேடிக் கொண்டு வரலாம்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியே சுவாமி!" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரிடம் பிரியாவிடை பெற்று அந்தத் துவாரத்துக்குள் இறங்கிச் சென்றான். கீழே வந்து அருவிக் குளத்தைத் தாண்டிக் கரையேறியதும் மேலே ஏறிட்டுப் பார்த்தான். அருவிப் பாறையின் விளிம்பில் சிவனடியார் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரிக்க, அவரும் கையை நீட்டி ஆசீர்வதித்தார். பிறகு பொன்னன் விரைவாக அருவி வழியில் கீழே இறங்கிச் செல்லலுற்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-24674369880626861202016-07-03T22:32:00.001+02:002017-08-25T21:16:07.345+02:00மனிதனும் நட்சத்திரப் பயணங்களும் -அறிவியல்- பாகம் 17 -கருந்துளைகள் 09 - 12.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
நேரம் என்றால் என்னவென்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? சாதாரண வாழ்வில் எமக்கு நேரம் என்பது தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வஸ்து! என்னதான் நடந்தாலும் நேரம் என்பது அதன் போக்கில் போய்கொண்டே இருக்கும். ஒவ்வொரு செக்கன்களும் கழிந்துகொண்டே இருக்கும். சென்ற நேரத்தை திரும்பி பெற முடியாதில்லையா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ வெளிவரும் வரை அறிவியல், நேரத்தைப் பற்றி இப்படிதான் ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. குறிப்பாக நியூட்டன், நேரம் என்பது வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல அது தொடர்ந்து மாற்றமின்றி பயணிக்கும் என்றார். அவரைப் பொறுத்தவரை, நேரம் என்பது இந்த பிரபஞ்சம் எங்கும் ஒரேமாதிரியாக துடிக்கும் ஒரு விடயம். பூமியல் ஒரு செக்கன் என்பது, செவ்வாயிலும் ஒரு செக்கன், சூரியனிலும் ஒரு செக்கன், அதேபோல பிரபஞ்சத்திலுள்ள ஏனைய இடங்களிலும் ஒரு செக்கனே. வெளியை, சார்பானது என்று கருதிய நியூட்டன் நேரத்தை அறுதியானது என்றே கருதினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் ஐன்ஸ்டின் நேரத்தை ஆற்றில் பாயும் நீருக்கு ஒப்பிட்டார். ஆற்றில் இருக்கும் நீர் எப்படி, சிலவேளைகளில் வேகமாகவும், சிலவேளைகளில் மெதுவாகவும், சிலவேளைகளில் வளைந்து நெளிந்து போகுமோ, அதேபோல தான் நேரமும், வெளியும் என்றார் ஐன்ஸ்டின்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடு, நேரம், இடம், திணிவு மற்றும் வடிவியலை (geometry) தொடர்பு படுத்திக்கூறும் ஒரு கோட்பாடாகும். ஐன்ஸ்டீனின் இந்த கோட்பாடு, இடம் / வெளி(space), நேரம்(time) என்பவற்றை ஒரே வஸ்துவின் தொடர்ச்சி (continuum) என்று கூறுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தில் வெளியானது, முப்பரிமானதால் ஆக்கப்பட்டுள்ளது – நீளம், அகலம் மற்றும் உயரம், இதைதான் நாம் x,y,z என ஆள்கூற்றுத் தளங்களில் குறிப்பிடுவோம். இத்தோடு, நேரத்தை நான்காவது பரிமாணமாக கொண்டு வெளிநேரம்(spacetime) என்ற கணிதவியல் மாதிரியை உருவாக்கி, பல்வேறு பட்ட இயற்பியல் பிரச்சினைகளுக்கு ஐன்ஸ்டின் விடையளித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதில் மிக முக்கியமான ஒன்று, இந்த வெளிநேரத்தில் ஏற்படும் வளைவுகளால் (curvature) உருவாக்கப்படும் ஒரு பக்கவிளைவே ஈர்ப்புவிசை ஆகும். இதை மாற்றி சொல்லவேண்டும் என்றால், திணிவானது வெளிநேரத்தை வளைக்கவல்லது. வெளி நேரத்தின் தொடர்ச்சியாகவும், நேரம், வெளியின் தொடர்ச்சியாகவும் இருப்பதனால் ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு எப்படியெல்லாம் பயணிக்க முடியுமோ, அதைப் போலவே, நேரத்திலும் பயணிக்க முடியும். ஒரு உதாரணத்தை பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
A என்ற இடத்தில் இருந்து B என்னும் இடம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். நாம் மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால் (அதாவது நத்தையை விட மெதுவாக!), ஒரு மணிநேரத்தில் அல்லது 60 நிமிடங்களில் A என்னும் இடத்தில் இருந்து B என்னும் இடத்தை அடைந்து விடுவோம். இதுவே மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால், 6 நிமிடந்த்தில் நாம் A யில் இருந்து B ஐ சென்றடைந்து விடுவோம் இல்லையா? இதே போலத்தான் நேரமும்! இரண்டு நேர இடைவெளிக்கு உள்ள இடைவெளி எப்போதுமே ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. குழப்புகிறேனோ? தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விளக்க முன் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இனி நாம் பார்க்கப் போகும் கோட்பாடுகளும், இயற்கையின் விதிகளும், நமது சாதாரண போது அறிவை (common sense) அசைத்துப் பார்க்கப் கூடியவை. ஆகவே உங்களின் மூளையின் கற்பனைத்திறன் என்ற குதிரையை தட்டி சற்றே ஓட விடுங்கள். நான் சொல்லும் உதாரணங்களை ஒன்றுக்கு இரண்டு முறையாக அலசிப் பாருங்கள். அதுவும் முடியவில்லை என்றால் விட்டு விட்டுவிடுங்கள். டேக் இட் ஈசி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் முன்னரே கூறியது போல, திணிவினால் வெளிநேரத்தில் வளைவுகளை ஏற்படுத்த முடியும். இந்த வளைவுகளே ஈர்ப்பு விசை என்ற ஒன்று இருப்பது போன்ற தோற்றத்தை உருவாகுகிறது. திணிவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதைச்சுற்றியுள்ள வெளிநேரத்தின் வளைவும் அதிகரிக்கும். எந்த அளவுக்கு வெளிநேரம் வளைகிறதோ, அந்த அளவிற்கு வெளியும், நேரமும் வளையும். எந்தளவுக்கு வெளிநேரம் வளைகிறதோ, அந்தளவிற்கு நேரமானது துடிக்கும் வீதமும் மாறுபடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="104" src="https://parimaanam.files.wordpress.com/2015/01/s3-15_anno.jpg?w=1044&h=351" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பிட்ட புள்ளியில் திணிவு அதிகரிக்க அதிகரிக்க அது எவ்வாறு வெளிநேரத்தை வளைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி ஒரு உதாரணத்தை பாருங்கள், பூமியை விட சூரியன் 333,000 மடங்கு திணிவானது. ஆக, பூமியைச்சுற்றி வெளிநேரம் வளைந்துள்ளத்தை விட, சூரியனைச் சுற்றி வெளிநேரம் மிக அதிகமாக வளைந்துள்ளது. ஆகவே ஒரே நேரத்தை காட்டும் கடிகாரங்கள் இரண்டை தயாரித்து, ஒன்றை பூமியிலும், மற்றொன்றை சூரியனிலும் (அதில் வைக்கலாம் என்று எடுத்துக் கொள்வோம்) வைத்துவிட்டு, மீண்டும் இரண்டு கடிகாரங்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், சூரியனில் நாம் வைத்த கடிகாரத்தைக் காட்டிலும் பூமியில் இருந்த கடிகாரம் வேகமாக துடித்திருப்பது தெரியும். அதாவது, சூரியனது திணிவின் காரணமாக வெளிநேரத்தில் ஏற்ப்பட்ட வளைவு, பூமியினால் ஏற்பட்ட வளைவைக் கட்டிலும் அதிகம் என்பதால், அது நேரத்தின் வேகத்தை, பூமியோடு ஒப்பிடும் போது குறைத்துள்ளது! இதை ஈர்ப்புக்கால நேர நீட்டிப்பு (gravitational time dilation) என்று இயற்பியலாளர்கள் அழைகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சுருங்கக் கூறின், ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும் இடத்திற்கு அண்மையில் நேரம் மெதுவாகவும், ஈர்ப்புவிசை குறைந்த இடத்தில் நேரம் வேகமாகவும் துடிக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு இந்த வேறுபாடுகளை அழகாக விளக்குகிறது. நமது நோக்கம் இங்கு கருந்துளைகள் பற்றி ஆராய்வதே என்பதால், அதோடு சம்பந்தப் பட்டவற்றை மட்டும் பார்க்காலாம், முடிந்தவரை அதோடு தொடர்புள்ளவற்றையும் விளக்குகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னைய பகுதியல் கூறிய இந்த “உறைந்த நட்சத்திரங்கள்” பற்றி இப்போது பார்க்கலாம், நாம் மேலே பார்த்த கருத்துக்களை இங்கே 3 சூரியத்திணிவை விட அதிகமாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு பொருத்திப் பார்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியின் திணிவு 3 சூரியத் திணிவைவிட அதிகமாக இருப்பின், இயற்கையில் இருக்ககூடிய எந்தவொரு விதியும், அந்த நட்சத்திரம் சுருங்கி கருந்துளையாவதை தடுக்கமுடியாது என ஓபன்கைமர் நிறுவிக்காட்டினார். அதுமட்டுமல்லாது, ஓபன்கைமருடன் அவரது சகாக்களும் சேர்ந்து சுவர்ட்சில்ட் ஆரை அளவுள்ள அளவிற்கு அந்த நட்சத்திரங்கள் வரும்போது, அந்தக் கோளத்தினுள் துடிக்கும் நேரமும் நின்றுவிடும் என்றும் கூறினார். இதனால் அந்த நட்சத்திரங்களுக்கு இவர்கள் “உறைந்த நட்சத்திரங்கள்” என்று பெயரும் வைத்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி இந்த சுவர்ட்சில்ட் ஆரை வரை வந்த நட்சத்திரமானது மிக மிக அதிகளவான திணிவை ஒரு குறிப்பிட்ட கோள அளவினுள் (பந்து போல என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கொண்டிருக்கும். இது அந்த சுவர்ட்சில்ட் ஆரை கொண்ட கோளத்தினை சுற்றியுள்ள வெளிநேரத்தை மிக மிக அதிகளவாக வளைக்கிறது. எவ்வளவு தூரம் இப்படி வெளிநேரம் வளைகிறது என்றால், நேரம் துடிப்பதே நிற்கும் அளவிற்கு! சுவர்ட்சில்ட் ஆரையின் எல்லையில் நேரம் உறைகிறது. இதுவே ஓபன்கைமர் மற்றும் அவரது சகாக்கள் இந்த நட்சத்திரங்களை “உறைந்த நட்சத்திரங்கள்” என்று கூற வழிவகுத்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சற்று தெளிவாக பார்க்கலாம். சுவர்ட்சில்ட் ஆரை கொண்ட நட்சத்திரத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். தூரத்தில் இருந்து எம்மை இன்னுமொருவரும் அவதானிக்கிறார். எம்மிடமும் ஒரு கடிகாரம் உண்டு, அவரிடமும் ஒரு கடிகாரம் உண்டு, அவரும் நாமும் புறப்படும் போது கடிகாரங்கள் ஒரே நேரத்தை காட்டுகின்றன. ஆனால் நாம் அந்த நட்சத்திரத்தை நெருங்க நெருங்க அவருக்கு எமது கடிகாரம் வேகம் குறைந்து செல்வதுபோல தோற்றம் அளிக்கும். (ஆனால் நமக்கு கடிகாரம் வேகம் குறைவது போல தென்படாது, காரணம், நேரம் என்பது அதை அளப்பவருக்கு சார்பானது, ஆகவே எமக்கு நேரத்தின் வேகம் குறைவது தெரியாமல் இருப்பதற்கு காரணம், நேரம் துடிப்பது என்பது கடிகாரத்துக்கு மட்டுமல்ல, எமது சிந்தனையின் வேகம், வயதாவதின் வேகம், கலங்கள் (cells) புதுப்பிக்கப்படுவதின் வேகம் என எல்லாமே நேரத்தால் மாற்றமடைவதால், எமக்கு நேரம் மெதுவாக துடிப்பதின் வித்தியாசம் தெரியாது.)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="288" src="https://parimaanam.files.wordpress.com/2015/01/black_hole_details.jpg?w=426&h=384" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் அப்படியே முன்னேறி, அந்த நட்சத்திரத்தின் சுவர்ட்சில்ட் ஆரையை அடையும் போது, நாம் பூரணமாக உறைந்து விட்டதுபோலவே எம்மை அவதானித்துக் கொண்டிருபவருக்கு தெரியும். அவருக்கு நமது கடிகாரத்தின் முள் நின்றுவிட்டதுபோலவே தோன்றும். அவரைப் பொறுத்தவரை நாம் நேரம், காலம் என்ற ஒன்றில் இப்போது இல்லை. அவர் நம்மை இறுதியாக பார்த்தது, நாம் இந்த சுவர்ட்சில்ட் ஆரையை கடக்கும் போது தான். எம்மைப் பொறுத்தவரை, நேரம் ஓடிக்கொண்டே இருக்கும், நாம் சுவர்ட்சில்ட் ஆரையைக் கடந்து அந்த நட்சத்திரத்தின் மையத்தை நோக்கி சென்றுகொண்டிருப்போம். அனால் நம்மால் இனி எப்போதுமே இந்த சுவர்ட்சில்ட் ஆரையை விட்டுவெளியே செல்ல முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனால் தான் சுவர்ட்சில்ட் ஆரையை கொண்டுள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்பை நிகழ்வெல்லை (event horizon) என்று அழைகின்றனர். இந்த நிகல்வெல்லை, இடத்திற்கும், நேரத்திற்கும் ஒரு வேலிபோல செயற்படுகிறது. நிகழ்வெல்லைக்குள் அதாவது சுவர்ட்சில்ட் ஆரைக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் சுவர்ட்சில்ட் ஆரைக்கு வெளியே அல்லது நிகழ்வெல்லைக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவர் இந்த நிகழ்வெல்லைக்குள் விழுந்துவிட்டால், அவர் இந்த நிகழ்வெல்லையை கடக்கும் போதே, அவரை நிகழ்வெல்லைக்கு வெளியில் இருந்து பார்ப்பவருக்கு, நிகழ்வெல்லையை கடப்பவரது நேரம் துடிப்பது நின்றுவிடும். இனி அந்த நிகழ்வெல்லைக்குள் விழுந்தவரால் இந்தப் பிரபஞ்சத்தின் வெளிநேரத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அவர்தான் நேரத்துக்கும் அப்பார்ப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுவிட்டாரே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிகழ்வெல்லைக்குள்ளே தான் கருந்துளை என்னும் இயற்கையின் இனம்புரியா விந்தை ஒன்று ஒழிந்துள்ளது. காலம், நேரம், இடம், வெளி என்பவற்றை கடந்து நிற்கும் இந்த இயற்கையின் விந்தை, நம் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவியல் தேடலில் ஒரு தொடக்கமே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்ததாக கருந்துளைகளை நோக்கி பயணிப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
000000000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா?</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாதாரண வாழ்வில், இங்கு பூமியில், நாம் அனுபவிக்கும் அல்லது பார்க்கும் விடயங்கள் அனைத்தும் பிரபஞ்சத்த்சில் நடக்கக்கூடிய, அல்லது அனுபவிக்ககூடிய விடயங்களில் ஒரு துளியளவே. நாம் பிறந்ததிலிருந்தே இந்த பூமியில் வாழ்வதால் நமக்கு தெரிந்த அனைத்தும், நமது “போது அறிவு” உட்பட, எல்லாமே நமது மூளையால் பூமியின் இடத்தில் இருந்தே ஒப்பிடப்படும். நமது சந்திரனைப் பொறுத்தவரை, அதன் ஈர்ப்பு விசையானது பூமியைப் போல ஆறில் ஒரு பங்கு மட்டுமே. அதாவது இங்கு ஒரு மீட்டார் துள்ளக்கூடிய ஒருவரால் சந்திரனில் 6 மீட்டர்கள் துள்ளலாம். கற்பனை செய்து பாருங்கள், 6 மீட்டர் உயரத்துக்கு ஒருவர் அசால்ட்டாக தாவினால் எப்படி இருக்கும். ஸ்பைடர்மேனே தோற்றுவிடுவார் போல! நம்மைப் பொறுத்தவரை அது ஒரு அதிசயம் போலத்தான் ஏனென்றால் பூமியில் அப்படி பாய்ந்த ஒருவரும் இல்லை. நமது அறிவு, பூமியை சார்ந்தே இருக்கிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியை விட சிறிதாக இருக்கும் எம்மை விட பல்வேறு பட்ட வித்தியாசமான உண்மைகள்/நிகழ்வுகள் உண்டு. எமக்கு அது அதிசயமாக இருந்தாலும், இயற்கையைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுதான்! இப்படி இருக்கும் பல்வேறு வித்தியாசமான வஸ்துக்களில், எமது இயல்பறிவுக்கு மிக மிக தொலைவில் இருக்கும் ஒரு விடயம் தான் இந்த கருந்துளைகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்ற பதிவுகளில் நாம் விரிவாக, நேரம், காலம், இடம், ஈர்ப்பு சக்தி என்பனவெல்லாம் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வீதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்று பார்த்தோம். அவை நமது வழமையான, காலம், நேரம், இடம் என்பவற்றைவிட வேறுபட்டு தெரிந்திருக்கலாம். இயற்கையின் விளையாட்டில் இதுவும் ஒன்று. சரி கருந்துளைகளைப் பற்றிப் பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, நட்சத்திரத்தின் மையப் பகுதி, 3 சூரியத் திணிவை விட அதிகமாக இருப்பின், நட்சத்திரப் பெருவெடிப்பின் பின் எஞ்சும் மையப் பகுதியானது தனது சொந்த ஈர்ப்புசக்தியால் சுருங்கிச் செல்வதை இயற்கையில் உள்ள எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது. இப்படி சுருங்கி செல்லும் இந்த கோளவடிவான மையப்பகுதி ஒரு கட்டத்தில், சுவர்ட்சில்ட் ஆரை அளவுள்ள கோளமாக சுருங்கியவுடன், அங்கு கருந்துளை பிறக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைக்கு இவ்வாறு நாம் வரைவிலக்கணம் கூறலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெளிநேரத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம், இங்கு ஈர்ப்பு விசையின் அளவு மிக மிக அதிகமாக இருப்பதனால், ஒளியினால் கூட இவ்விடத்தில் இருந்து தப்பிக்க முடியாது. ஒளியை இங்கு குறிப்பிடக் காரணம், பிரபஞ்சத்தில் மிக மிக வேகமாக செல்லக்கூடியது ஒளிமட்டுமே, ஆக, அதனாலேயே இந்த கருந்துளையின் ஈர்ப்புவிசையில் இருந்து தப்பிக்க முடியாவிட்டால், பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதனாலும் தப்பிக்கமுடியாது! நட்சத்திரங்களில் முடிவில் கருந்துளை ஒன்று பிறக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிக அதிகமாக ஈர்ப்புவிசையை கொண்டிருப்பதனால், இவ்விடங்களில் இருக்கும் வெளிநேரத்தின் பண்புகள் மிக மிக விசித்திரமாக இருக்கின்றன. இவற்றை கருத்தில் வைத்தே இந்த அளவுக்கு அதிகமான ஈர்ப்புவிசை கொண்ட பொருளை, “கருந்துளை” (Black hole) என முதன் முதலில் ஜான் வீலர் (John Wheeler) 1967 இல் அழைத்தார். அதுவே நல்ல கவர்சிகரமான பெயராக இருந்ததால், தொடர்ந்து அந்தப் பெயரே பிரபல்யமாகி விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுவர்ட்சில்ட் ஆரையில் என்னவிதமான மாற்றங்கள் இடம்பெறும் என்று நாம் ஏற்கனவே பார்துவிட்டபடியால், நாம் மேற்கொண்டு கருந்துளைகளைகளின் இயல்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைகள் கருப்பா? ஒரு சின்ன கேள்வி தான்! கருந்துளைகள், நட்சத்திரங்களைப் போல, ஒளியை வெளிவிடுவதில்லை ஆக, அவற்றை தொலைக்காட்டிகளை கொண்டு பார்க்கவோ, அறியவோ முடியாது. அவை கண்களுக்கு புலப்படாதவை. ஆனால் அவை ஒன்று தங்களை முழுதாக மறைத்துக் கொள்ளவில்லை. இந்த கருந்துளைகளின் அளவுக்கதிகமான ஈர்ப்புவிசை, அதை சுற்றியுள்ள பொருட்களின் மீது செலுத்தும் செல்வாக்கை வைத்துக்கொண்டு எம்மால் இலகுவாக இந்த கருந்துளைகளை கண்டுகொள்ளமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படி இந்த கருந்துளைகளை, வானியலாளர்கள் கருவிகளைக்கொண்டு அறிகிறார்கள் என்று பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைகளை நேரடியாக அவதானிக்க முடியாவிட்டாலும், அதனருகில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி, எக்ஸ்கதிர் மற்றும் ரேடியோ கதிர்களைக்கொண்டு அவதானிக்கும் வானியலாளர்கள், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் வேகத்தை அளக்கின்றனர். பின்னர் இந்த வேகத்தை, ஈர்ப்புவிசை தொடர்பான சமன்படுகளோடு ஒப்பிட்டு பார்த்து, இந்த நட்சத்திரத்தின் வேகத்தில் இருக்கும் மாறுதல்களுக்கான காரணத்தை கண்டறிகின்றனர். அதாவது, இந்த நட்சத்திரம் ஒரு கருந்துளையை சுற்றி வருகிறது என்றால், இந்த நட்சத்திரத்தின் வேகம் எவ்வாறு இருக்கும் என இந்த சமன்பாடுகள் நம்மக்கு சொல்கின்றன, இதை வைத்து குறிப்பிட்ட நட்சத்திரம் ஒரு கருந்துளையை சுற்றி வருவத்தை வானியலாளர்களால் துல்லியமாக கூறமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுமட்டுமல்லாது, கருந்துளைகளை சுற்றி அளவுக்கதிகமான ஈர்ப்புவிசை இருப்பதனால், கருந்துளையின் ஈர்ப்பினால் அதனை நோக்கி வரும் பிரபஞ்ச தூசு துணிக்கைகள், வளைவுந்த்தின் காரணமாக கருந்துளையைச் சுற்றி ஒரு தட்டுப் போல ஒரு அமைப்பை (accretion disk) உருவாக்குகின்றது, இந்த துணிக்கைகள் மற்றும் வாயுக்களால் ஆனா அமைப்பு மிக மிக வேகமாக சுழன்றுகொண்டே கருந்துளையை நோக்கி விழுவதால் உருவாகும் அழுத்த சக்தியால் இந்த துணிக்கைகளும் வாயுவும் அளவுக்கதிகமான வெப்பநிலையை அடைகின்றன. இப்படி கருந்துளையின் மேற்பரப்புக்கு அண்மைய பகுதியில் உருவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் எக்ஸ்-கதிர்களாக வெளியிடப்படுகின்றன. இந்த எக்ஸ்-கதிர்களை அவதானிப்பதன் மூலமும் எம்மால் கருந்துளைகளை கண்டுகொள்ளமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://parimaanam.files.wordpress.com/2015/02/bh-xray-radiation.jpg"><img height="180" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/bh-xray-radiation.jpg?w=1044&h=594" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளையில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்வீச்சு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி கருந்துளையின் பண்புகள் என்று பார்த்தால், ஒரு திடமான கருந்துளை ஒன்றுக்கு மூன்றுவிதமான அடிபடிப் பண்புகள் உள்ளன </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திணிவு (mass) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின் ஏற்றம் (electric charge) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுழல் உந்தம் (angular momentum) – அதாவது எவ்வளவு வேகமாக கருந்துளை சுழல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு கருந்துளைக்கு இந்த மூன்று பண்புகள் மட்டுமே உண்டு என “முடியில்லாக் கோட்பாடு” (no-hair theorem) கூறுகிறது. அதாவது இதைத் தவிர மேலதிகமான பண்புகள் இந்த கருந்துளை உருவாகும் போது இருந்திருந்தாலும், இந்த வஸ்துக்கள் அனைத்தும் இப்போது இந்த கருந்துளையால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டதால், அதாவது கருந்துளையின் நிகழ்வு எல்லைக்குள் (even horizon) அவை சென்றுவிட்ட பின்னர், கருந்துளைக்கு வெளியில் இருக்கும் வெளிநேரத்தில் அவை எந்தவிதமான செல்வாக்கும் செலுத்துவதில்லை. ஆக, இந்த மூன்று பண்புகள் மட்டுமே கருந்துளை ஒன்றுக்கு இருக்கக்கூடிய நாம் அவதானிக்கக்கூடிய பண்புகளாகும். எப்படி இருந்தாலும் இந்த முடியில்லாக் கோட்பாடு இன்னும் பூரணமாக கணித ரீதியாக நிருபிக்கப்படவில்லை. அதேபோல இது தவறு என்றும் ஒருவராலும் நிருபிக்கப்படவில்லை. ஆகவே இது கொஞ்சம் சிக்கலுக்குரிய விடயம் தான். இருந்தும் அதிகமான இயற்பியலாளர்களும், கணிதவியலாலர்களும் இந்த முடியில்லாக் கோட்பாடுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் கோட்பாட்டின் படி, நாம் இரண்டு கருந்துளைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இரண்டும், ஒரே அளவான திணிவையும், ஒரே ஏற்றத்தையும் மற்றும் ஒரே மாதிரியான சுழல் உந்தத்தையும் கொண்டிருப்பின், அவை இரண்டும் ஒத்த கருந்துளைகள் எனப்படும் – அதாவது ட்வின்ஸ் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவற்றை வேறுபடுத்தி பிரித்து இனங்கான முடியாது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பொருள் கருந்துளைக்குள் விழுந்தால் என்ன நடக்கும்? அந்தப் பொருளுக்கு என்ன மாற்றம் நடக்கும்? அந்தக் கருந்துளைக்கு என்ன மாற்றம் நடக்கும்? பார்க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
0000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">கருந்துளைகள் 11</span></b> – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் இதுவரை பார்த்த மாதிரிகளில், கருந்துளை ஒன்று நட்சத்திரத்தின் முடிவில் உருவாகலாம் என்று பார்த்தோம். நட்சத்திரங்களில் முடிவில் தான் ஒரு கருந்துளை உருவாகவேண்டும் என்று ஒரு விதியும் இல்லை, ஆனால் மிகத் திணிவான நட்சத்திரத்தின் (சூரியனைப் போல 20 மடங்குக்கு மேல்) முடிவானது ஒரு கருந்துளை உருவாகுவதற்கு தேவையான காரணிகளை உருவாகுகிறது. சிலவேளைகளில், மிக மிக அடர்த்தியான பிரபஞ்ச வஸ்துக்கள், தங்களின் ஈர்ப்பு விசையால் நெருங்கி வரும் போது, அவற்றின் மொத்த திணிவினால் உருவாகிய ஈர்ப்புவிசை அந்த வஸ்துக்களால் கட்டுப்படுத்த முடியாவிடில், அவை சுருங்கத்தொடங்கி கருந்துளையாக மாற சந்தர்ப்பமும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைகளைப் பொறுத்தவரை, அளவை அடிப்படையாக கொண்டு நாம் அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம். </div>
<div style="text-align: justify;">
நட்சத்திரத்திணிவு கருந்துளைகள் (stellar mass black holes) </div>
<div style="text-align: justify;">
மிகப்பாரிய கருந்துளைகள் (supermassive black holes) </div>
<div style="text-align: justify;">
நுண்ணிய கருந்துளைகள் (miniature black holes) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">நட்சத்திரத்திணிவு கருந்துளைகள்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவை சாதாரணமாக நட்சத்திரங்களின் முடிவில் ஏற்படும் சூப்பர்நோவாவின் பின்னர் உருவாகும் கருந்துளைகள். இவை சூரியனைப்போல ஐந்து மடங்கு திணிவில் இருந்து ஐம்பது அல்லது நூறு மடங்குக்குள் திணிவுள்ளதாக இருக்கும். நட்சத்திரங்களின் முடிவில் பிறக்கும் இந்த கருந்துளைகளைப் பற்றி நாம் நிறைய விடயங்களை தெரிந்து வைத்துள்ளோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாக இவ்வகையான கருந்துளைகளை அவதானிப்பது மிக மிக கடினம், அதிலும் தனியாக இருக்கும் நட்சத்திரத்திணிவு கருந்துளைகளை அவதானிப்பது என்பது குதிரைக்கொம்பு. ஆக நாம் கண்டுள்ள இந்த வகையான கருந்துளைகள் பெரும்பாலும் இரட்டை நட்சத்திரத்தொகுதில் இருப்பவையே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரட்டை நட்சத்திரதொகுதி என்பது இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றிவரும் அமைப்பாகும். சூரியனைப் பொறுத்தவரை அது தனிப்பட்ட நட்சத்திரம், அனால் பிரபஞ்சத்தில் பெரும்பாலான நட்சத்திரங்கள் இரட்டைத் தொகுதிகளாகவே காணப்படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றிவரும்போது, ஒன்று கருந்துளையாகிவிட்டால், எம்மால் இதனை இலகுவாக கண்டுகொண்டுவிட முடியும். அதாவது இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றுவது போல இருக்கும், ஆனால் தொலைக்காட்டி மூலம் அவதானிக்கும் போது, அங்கே ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமே தெரியும். எக்ஸ்கதிர் தொலைக்காட்டி மூலம், மற்றைய மறைந்துள்ள நட்சத்திரம் இருக்கும் இடத்தை அவதானிக்கும் போது அங்கே ஒரு எக்ஸ்கதிர் முதல் ஒன்று இருப்பதை காணக்கூடியவாறு இருக்கும். இதன்மூலம் அந்த மற்றைய நட்சத்திரம் ஒரு கருந்துளை என்பதனை அறிந்துகொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு, பெரும்பாலும் மற்றைய நட்சத்திரம் ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கவும் வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில் கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் ஆகியவை உருவாகும் அடிப்படை ஒரே மாதிரி இருப்பதாலும், அதனைச் சுற்றி இயங்கும் அமைப்புக்கள் ஒரே மாதிரி இருப்பதும் மேலும் அவை ஒரேமாதிரியாக எக்ஸ்கதிர்களை வெளிவிடுவதாலும், மற்றும் இரண்டுமே மிக மிக சிரிதாக இருப்பதாலும் அதிகளவான ஈர்ப்புவிசையை தன்னைச் சுற்றியுள்ள வெளிநேரத்தில் செலுத்துவதால் இந்த குழப்பம் ஏற்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படி இருப்பினும், கருந்துளையை விட, நியூட்ரான் நட்சத்திரங்களுக்கு என்று சில தனிப்பட்ட பண்புகள் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலாவது, அளவுக்கதிகமான காந்தப்புலம், நாம் ஏற்கனவே அளவுக்கதிகமான காந்தப்புலத்தை நியூட்ரான் நட்சத்திரங்கள் கொண்டுள்ளன என்று பார்த்துள்ளோம், அதிலும் மிகையான காந்தபுலம் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்கள் மக்னடார் எனப்படும் என்றும் பார்த்துள்ளோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டாவது, இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சுழலும்போது, அதன் பாகங்கள் வேறுபட்ட சுழற்சி வேகத்தை காட்டும், அதாவது துருவங்கள் குறிப்பிட்ட வேகத்திலும், மத்திய பகுதி இன்னுமொரு வேகத்திலும் சுழலும், இது differential rotation அல்லது வேறுபட்ட சுழற்சி (அல்லது வேறுபட்ட பகுதிச் சுழற்சி எனவும் அழைக்கலாம்) எனப்படும். (நமது சூரியன், வியாழன் மற்றும் சனியிலும் இந்த “வேறுபட்ட சுழற்சி” இடம்பெறுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.) ஆனால் கருந்துளையைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட வேறுபட்ட சுழற்சி இல்லை. கருந்துளைகளுக்கு வெறும் மூன்று பண்புகளே உள்ளன என முதலில் நாம் பார்த்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படிப்பட்ட பண்புகளை இந்த இரட்டை நட்சத்திர தொகுதில் உள்ள அந்த மறைவான நட்சத்திரம் காட்டும்போது, அது ஒரு நியூட்ரான் நட்சத்திரம் என உறுதி செய்யப்படும், அப்படி இல்லையேல் அது ஒரு கருந்துளையே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">மிகப்பாரிய கருந்துளைகள்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவை சூரியனைப் போல பல பில்லியன் மடங்கு திணிவானவை. நட்சத்திரக் கருந்துளைகளைப் போல அல்லாது இவை நட்சத்திரப் பேரடைகளின் மையங்களில் இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாக இந்த பாரிய கருந்துளைகள் எப்படி உருவாகின்றது என்று இன்றுவரை ஒரு திடமான ஆராய்ச்சி முடிவில்லை, ஆனால் பெரும்பாலான வானியலாளர்கள் பின்வரும் கருத்தை முன்வைகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நட்சத்திரப் பேரடையின் மையத்தில் தோன்றும் பெரியளவான நட்சத்திரக்கருந்துளைகள், கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றிவரும் தூசுகள், வாயுக்கள் மற்றும் ஏனைய நட்சத்திரங்களை விழுங்கி கொஞ்சம் கொஞ்சமாக பெருத்துக்கொண்டே வரும். அதுமட்டுமல்லாது, மற்றைய நட்சத்திரக் கருந்துளைகளுடன் ஒன்றிணைந்து ஒரு பெரிய கருந்துளையாக உருவெடுக்கும். இதைவிட வேறுபட்ட மாதிரிகளும் இந்த மிகப்பாரிய கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்று சொல்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது நட்சத்திர பேரடையான பால்வீதியின் மையத்தில் தனுசு எ* (Sagittarius A*) எனப்படும் மிக அடர்த்தியான ரேடியோ முதலானது ஒரு கருந்துளையாக இருக்கும் என வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமியில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் இதனது விட்டம் (diameter) 44 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். இது நமது சூரியனைப் போல கிட்டத்தட்ட 4 மில்லியன் மடங்கு திணிவானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த தனுசு எ*, மிகப்பாரிய கருந்துளைகள் என்ற வகையினுள் இருக்கும் ஒரு சிறிய கருந்துளை, ஆம் மிகப்பாரிய கருந்துளை என்ற பெயருக்கே இழுக்கு வருமளவு சிறியது இது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரப் பேரடைகளில் இருக்கும் மிகப்பாரிய கருந்துளைகளின் அளவுகளை வானியலாளர்கள் அளந்துள்ளனர், அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமக்கு மிக அருகில் இருக்கும், அதாவது நமக்கு 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் அன்றோமீடா பேரடையின் மையத்தில் இருக்கும் பாரிய கருந்துளையானது கிட்டத்தட்ட 150-250 மில்லியன் சூரியத்திணிவு அளவானது. பலே பாஸ்கரா! ஆனால் இதையும் விழுங்கிவிடும் அளவுக்கு மேலும் பெரிய கருந்துளைகள் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கிருந்து 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மெஸ்சியர் 87 எனப்படும் ஒரு பெரிய நட்சத்திரப் பேரடையின் மையத்தில் இருக்கும் கருந்துளை, 6.4 பில்லியன் சூரியத் திணிவுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="320" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/m87_jet.jpg?w=700" width="306" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
M87 – மஞ்சள் புள்ளி, அதன் மையத்தில் இருக்கும் கருந்துளையில் இருந்து வெளிவரும் ஜெட் போன்ற நீளமான பிளாஸ்மா, இது 5000 ஒளியாண்டுகள் நீளமானது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
NGC 3842 என்னும் நட்சத்திரப் பேரடையின் மத்தியில் இருக்கும் பாரிய கருந்துளை 9.7 பில்லியன் சூரியத்திணிவுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் இதுவரை அவதானித்ததிலே, மிகப்பெரிய கருந்துளை S5 0014+81 என்ற குவஸார் எனப்படும் அமைப்பில் இருக்கிறது, இது கிட்டத்தட்ட 40 பில்லியன் சூரியத் திணிவுகளை கொண்டுள்ளதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். அப்படியென்றால் நம் சூரியனைப் போல 40 பில்லியன் மடங்கு திணிவானது. இந்தப் பிரபஞ்சம் கொஞ்சம் பெரிதுதான்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="240" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/black-hole-feeding-accreting-esa-nasa.jpg?w=700" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
S5 0014+81 எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">நுண்ணிய கருந்துளைகள்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவை மிக மிக சிறிய, அதாவது அணுவைவிட சிறிய கருந்துளைகள். இன்றுவரை இவை எந்தவொரு ஆய்வின் மூலமும் நிருபிக்கப்படவில்லை. குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் அனுமானிக்கப்பட்ட இந்தக் கருந்துளைகள், ப்ரோட்டான் அளவிருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="212" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/mini-black-hole.jpg?w=700" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">நுண்ணிய கருந்துளைகள்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் பெருவெடிப்பின் உருவாகியபோது இருந்த அளவுக்கதிகமான வெப்பநிலையும் அழுத்தமும் இப்படியான கருந்துளைகளை உருவாக்கி இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று வரை இவை இருப்பதற்கான எந்தவொரு சாட்சியங்களும் இல்லதாதிருந்தாலும், கூடிய விரைவிலேயே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்துவிடும் என இயற்பியலாளர்கள் கருதுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது, எம்மிடம் இருக்கும் LHC போன்ற அதி சக்திவாய்ந்த துணிக்கை முடுக்கிகளைப் (particle accelerators) பயன்படுத்தி, இப்படி நுண்ணிய கருந்துளைகள் இருக்கின்றனவா இல்லையா என்ற ஒரு தீர்கமான முடிவை இனி வரும் வருடங்களில் எப்படியும் தீர்மானித்துவிட முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1970 களில் ஸ்டீபன் காவ்கிங் (Stephen Hawking) கருந்துளைகள் பற்றிய ஆராச்சியில் ஈடுபட்டு, கருந்துளைகள் ஒருவிதமான கர்திவீச்சை வெளியிடும் என அறிவித்தார், இன்று அது ஹாவ்கிங் கதிர்வீச்சு என அழைக்கப்படுகிறது. இந்த நுண்ணிய கருந்துளைகளும் இவ்வாறான கதிவீச்சை வெளியிடவேண்டும். அது மட்டுமல்லாது, காவ்கிங், இப்படியான நுண்ணிய கருந்துளைகள், நமது பால்வீதியை சுற்றி நிறைய இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக, இந்த காவ்கிங் கதிர்வீச்சை தேடி ஆராய்வதன் மூலமும் இப்படியான் நுண்ணிய கருந்துளைகள் இருக்குமா என எம்மால் அறிந்துகொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கவ்கிங் கதிர்வீச்சைப் பற்றி நாம் பின்பு இன்னும் தெளிவாக பார்க்கலாம். கவலை வேண்டாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் எப்படி இந்த கருந்துளைகள் அறிவியலாளர்கள் வகைப் படுத்தியுள்ளனர் என்று பர்ர்தோம். இதைத் தவிரவும், சுழலும் கருந்துளைகள், நிலையான கருந்துளைகள் என்றும் சில வகைகள் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைகளின் பண்புகளைப் பார்க்க முன்னர், அவற்றின் வகைகளைப் பார்க்கவேண்டியது கட்டாயம் என்பதனாலேயே நாம் இங்கு வகைகளைப் பற்றிப் பார்க்கிறோம். ஏனென்றால் இந்த வகைகளுக்கு ஏற்ப, கருந்துளைகளின் பண்புகள் மாறும், ஆக இனி இந்தப் பண்புகளைப் பற்றிப் பார்க்கும் போது உங்களுக்கு தெளிவாக எந்தக் கருந்துளைகளைப் பற்றி நான் குறிப்பிடுகின்றேன் என தெளிவாக விளங்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் பயணிப்போம் கருந்துளைகளை நோக்கி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
0000000000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளைகளில் சிறியது தொடக்கம் பெரியது வரை வேறுபடுத்தி அதன் பண்புகளைப் பற்றிப் பார்த்தோம். அதிலும் நுண்ணிய கருந்துளைகள் இன்னமும் கண்டறியப்படாதது. ஆனால் நட்சத்திரதிணிவுக் கருந்துளைகளும், மிகப்பாரிய கருந்துளைகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு. இந்த மிகப்பாரிய கருந்துளைகள் ஒரு நட்சத்திரப் பேரடைக்கு ஒன்று என்ற வீதத்தில் காணப்படும். அதாவது பேரடையின் மையப்பகுதியில் இவை காணப்படும். ஆனால் நட்சத்திரத் திணிவுக் கருந்துளைகள் அப்படியல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது பால்வீதியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்கள் உண்டு. இவற்றில் ஆயிரத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் பாரிய நட்சத்திரங்கள் உண்டு, அதாவது பால்வீதியில் இருக்கும் ஒவ்வொரு ஆயிரம் நட்சத்திரங்களுக்கு ஒரு நட்சத்திரம், சுப்பர்நோவாவாகி வெடிக்கும் போது கருந்துளையாகும் அளவுக்கு பெரிதாக இருக்கும். (சரியாக ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு நட்சத்திரம் இப்படி பெரிதாக இருக்கவேண்டும் என்று இல்லை, இது ஒரு அவதானிப்பு கணக்கீடு மட்டுமே.) ஆக, 200 பில்லியன் நட்சத்திரங்களுக்கு, கிட்டத்தட்ட 200 மில்லியன் கருந்துளைகளாக மாறக்கூடிய நட்சத்திரங்கள் இருக்கவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு மிக முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், பாரிய நட்சத்திரங்கள், வேகமாக தனது எரிபொருளை முடித்துவிட்டு சுப்பர்நோவாவாக மாறிவிடும். நமது பால்வீதியின் வயது, அண்ணளவாக 13.2 பில்லியன் வருடங்கள். சூரியன் போன்ற சிறிய நட்சத்திரங்களே பில்லியன் கணக்கான வருடங்கள் வாழ்க்கைக் காலத்தை கொண்டுள்ளன. அனால் இந்த பெரிய நட்சத்திரங்கள் பெரும்பாலும் சில நூறு மில்லியன் வருடங்களே வாழும். ஆக இதனால் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நமது பால்வீதியில் இருக்கும் பெரிய நட்சத்திரங்களில் 90% மேலானவை ஏற்கனவே கருந்துளையாகிவிட்டன! ஆகவே, நமது பால்வீதியில் அண்ணளவாக 180 மில்லியன் நட்சத்திரத்திணிவுக் கருந்துளைகள் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வளவு கருந்துளைகள் இருந்தால் பூமிக்கு ஆபத்து இல்லாமலா இருக்கும்? கவலை வேண்டாம், பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளையானது, பூமியில் இருந்து 1600 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது என்று 1999 இல் வானவியலாளர்கள் கண்டறிந்தனர்! கொஞ்சம் விசித்திரமான பெயர்தான் இதற்கு – V4641 சஜிட்டாரி (Sajittarii). இது ஒரு இரட்டை நட்சத்திரத் தொகுதியில் இருக்கும் கருந்துளை அதனால தான் இதை நம்மால் கண்டுகொள்ள கூடியதாக இருந்தது. அதாவது இந்த கருந்துளை, அதனருகே சுற்றிவரும் நட்சத்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருஞ்சிக்கொண்டு இருக்கிறது. இப்படி இருஞ்சுவதால் உருவாகும் எக்ஸ்கதிவீச்சை பூமியில் இருந்து வானவியலாளர்களால் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. இந்த கதிர்வீச்சில் இருந்து இந்த இடத்தில் ஒரு கருந்துளையும் இருக்கிறது என்று வானியலாளர்கள் கணித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் இது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று மீண்டும் 2001 இல் கணக்கிட்ட வானியலாளர்கள், முதலில் கூறியதைவிட 15 மடங்கு தொலைவில் இந்த கருந்துளை இருப்பதாக இறுதியாக முடிவுக்கு வந்தனர், அதாவது 24000 ஒளியாண்டுகள். இவ்வளவு தூரத்தில் இருக்கும் கருந்துளையால் நமக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஆகவே நாம் பயப்படவேண்டியதில்லை. இருப்பினும் சிலபல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதாரணமாக, எம்மால் நேரடியாக கருந்துளைகளை அவதானிக்க முடியாது. நமக்கு தெரிந்த இயற்பியல் விதிகள், கருந்துளைகளை சுற்றி இருக்கும் வாயுக்களையும் தூசுகளையும் எப்படி தன்னை நோக்கி கவரும் என நமக்கு சொல்கின்றன. இந்த செயற்பாட்டின் போது உருவாகும் கதிர்வீச்சுக்கள் எப்படிப் பட்டவை என்பதையும் இந்த இயற்பியல் விதிகள் சொல்கின்றன. ஆக, கருந்துளையை சுற்றி நடைபெறும் செயற்பாட்டை வைத்தே அங்கு கருந்துளை இருப்பதை எம்மால் ஊகிக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரட்டை நட்சத்திரத் தொகுதியில் ஒரு கருந்துளைக்கு மிக அருகில் மற்றைய நட்சத்திரம் இருப்பதால், அதனில் இருக்கும் வாயுவை இந்த கருந்துளை உறுஞ்சி எக்ஸ்-கதிர்வீச்சை வெளியிடும், ஆகவே இவற்றை எம்மால் கண்டு பிடிப்பது சற்று இலகுவான காரியம். ஆனால் தனியாக ஒரு கருந்துளை இருந்தால், அதாவது அது சாப்பிடுவதற்கு அதனைச்சுற்றி வாயுக்களும் தூசுகளும் இல்லாவிடில், இருட்டில் வந்த கறுப்புப் பூனைபோல ஆகிவிடும் இந்த கருந்துளை. இதனைக் கண்டுபிடிப்பது என்பது குதிரைக் கொம்பே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக இப்படி தனியான கருந்துளைகள், நமது சூரியத் தொகுதிக்கு அருகில் இருந்தால் இவற்றை நாம் கண்டுபிடிக்க தவறிவிட மிக அதிகமான வாய்ப்புக்கள் உண்டு. ஆனாலும் பூமிக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு அருகில் எந்தவொரு கருந்துளையும் இல்லை என நம்மால் உறுதியாக கூறமுடியும். பூமி என்று இல்லாமல், நமது சூரியத் தொகுதிக்கே ஆபத்து விளைவிக்கும் அளவில் எந்தவொரு கருந்துளையும் அருகில் இல்லை. அப்படி இருந்தால் நிச்சயம் அதன் ஈர்ப்பு விசை நமது சூரியத் தொகுதியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். அப்படி ஒரு மாற்றத்தை நாம் இன்றுவரை அளக்கவில்லை. ஆக இப்போது நீங்கள் ஆழமாக மூச்செடுத்துக் கொள்ளலாம். ஆபத்து இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னுமொரு மிக முக்கியமான விடயம், கருந்துளைகள் எதோ அரக்கனைபோல பிரபஞ்சத்தில் பயணித்து, ஒவ்வொரு நட்சத்திரங்களாக கபளீகரம் செய்து தன வயிற்ரை நிரப்பும் ஒரு உயிரினம் அல்ல. ஒரு நட்சத்திரம் எப்படியோ அதேபோல்தான் இந்த கருந்துளைகளும். ஒரேஒரு வித்தியாசம், கருந்துளைகள் மிக அதிகமான ஈர்ர்புவிசையை கொண்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது சூரியன் இந்த பால்வீதியில் எப்படி பயனிக்கிறதோ, அதேபோல நட்சத்திரங்களாக இருந்து கருந்துளையாக மாறிய நட்சத்திரங்களும் அப்படியே பயணிக்கும். ஒரு நட்சத்திரத்தை கோள்கள் சுற்றுவதுபோல, கருந்துளைகளையும் கோள்கள் அல்லது வேறு பொருட்கள், உதாரணமாக அதை ஆய்வு செய்ய சென்ற விண்கலம் சுற்றிவரலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சூரியனானது நம் பூமியை அதனை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறது, அதாவது வானில் எறிந்த பந்து மீண்டும் நிலத்தை நோக்கி வருவதுபோல பூமியும் சூரியனை நோக்கி விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால் சூரியனில் போய் முட்டிவிடாமல் தடுப்பது இந்த பூமியின் வேகம். பூமியானது சூரியனை ஒரு செக்கனுக்கு 30 கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் சுற்றி பயணிக்கிறது. இதனால் சூரியனின் ஈர்ப்பால் பூமி சூரியனை நோக்கி செல்வதற்குள், வேறு இடத்திற்கு சென்றுவிடும், இப்படி தொடர்ச்சியாக நடைபெறுவதால் பூமி தொடர்ந்து சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது ஒரு அழகான காதல் கதை, இயற்கையின் காதல் கதை. சூரியன் தனது ஈர்ப்பால் பூமியை இழுத்துக் கொண்டே இருக்கும், பூமியும் சூரியனை நோக்கி விழுந்துகொண்டே இருக்கும், ஆனால் பூமி வேகமாக பயணிப்பதால், சூரியனை நோக்கி விழுவதற்கு முன் அதன் திசை மாறிவிடும், இது அப்படியே சூரியனை பூமி தொடர்ந்து சுற்றிவர காரணமாகிறது. இதேபோலத்தான் நம் சந்திரனும் பூமியை நோக்கி விழுந்துகொண்டே இருக்கிறது ஆனால் சந்திரனின் வேகம் அதிகமாக இருப்பதால் அது பூமியை சுற்றிவருமாறு ஆகிவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், ஒருவேளை சூரியனை சுற்றிவரும் பூமியின் வேகம் குறைவாக இருந்தால், சூரியனை சுற்றத் தொடங்கிய பூமி கொஞ்சம் கொஞ்சமாக தனது பாதையை சுருக்கிக் கொண்டு (அதன் பதை ஒரு சுழல் போல தெரியும்) சூரியனில் சென்று மோதிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவே பூமியின் வேகம் மிக அதிகமாக இருந்தால், சூரியனது ஈர்ப்பு விசை பூமியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல், பூமியானது சூரியனை நோக்கி வளைவாக பயணித்து அப்படியே சூரியனது ஈர்ப்பை விட்டு வெளியே சென்றுவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே போலத்தான் கருந்துளையும், அதனை நாமும் சுற்றிவர முடியும். நமக்கு தேவை அதனைச் சுற்றிவர தேவையான சரியான, துல்லியமான வேகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருந்துளையை மெதுவாக சுற்றத்தொடங்கினால், சுழல்போல பாதையில் சென்று கருந்துளையில் மோதிவிடுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="320" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/mod3_q13_1.jpg?w=700" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேபோல மிக அதிகமான வேகத்தில் சென்றால், கருந்துளையின் ஈர்ப்பில் இருந்து விடுபட்டு அப்படியே சென்றுவிடுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="320" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/mod3_q13_2.jpg?w=700" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு குறிப்பிட்ட நடுத்தரமான வேகத்தில் பயணித்தால், எம்மால் கருந்துளையை சுற்றிவரமுடியும் ஆனால் அந்த பாதை வெறும் வட்டமாகவோ, நீள்வட்டமாகவோ இருக்காது. அது பார்ப்பதற்கு மிக சிக்கலான ஒரு பாதையாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="320" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/mod3_q13_3.jpg?w=700" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு குறிப்பிட்ட கருந்துளையை சுற்றிவர ஒரே ஒரு குறிப்பிட்ட வேகம் மட்டுமே உண்டு. அந்த வேகத்தில் பயணித்தால் நிச்சயம் எம்மால் கருந்துளையை வட்டப் பாதையில் சுற்றிவரமுடியும். ஆனால் அந்தப் பாதையிலோ வேகத்திலோ சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், ஒன்று நாம் கருந்துளைக்குள் சென்று மோதிவிடலாம், சற்று அதிர்ஷ்டம் இருந்தால், கருந்துளையின் ஈர்ப்பில் இருந்துவிடுபட்டு கருந்துளையை விட்டு சென்றுவிடலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img height="320" src="https://parimaanam.files.wordpress.com/2015/02/mod3_q13_4.jpg?w=700" width="320" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
0000000000000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி: https://parimaanam.wordpress.com</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
</div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-50222262926773017992016-06-15T12:41:00.000+02:002017-08-25T21:19:31.861+02:00பார்த்திபன் கனவு -புதினம் - 60 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 23 - அருவிப் பாதை . <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
</div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="clear: left; float: left; font-family: "tahoma" , "geneva" , sans-serif; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="" data-cke-saved-src="https://yerumbu.files.wordpress.com/2010/04/dsc05605.jpg" height="240" src="https://yerumbu.files.wordpress.com/2010/04/dsc05605.jpg" width="320" /></span><span style="font-size: 18px;"></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;">நன்றி: https://yerumbu.files.wordpress.com/2010/04/dsc05605.jpg</span></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு விசித்திரமான காட்சியாயிருந்தது. வான வெளியெங்கும் எண்ணிறைந்த பட்சிகளின் கலகல தொனி பரவி ஒலித்தது. அதனுடன் மலையிலிருந்து துள்ளிக் குதித்து ஆடிப்பாடி வந்த அருவியின் இனிய ஒலியும் சேர்ந்து வெகு மனோகரமாயிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நேரத்தில் அந்த மலைச்சாரலுக்கு அருகில் இரண்டு உயர்ஜாதி வெண்புரவிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது ஆரோகணித்திருந்தவர்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கமுள்ளவர்களான சிவனடியாரும் பொன்னனுந்தான். அவர்கள் அந்தக் காட்டாற்றின் கரையோரமாகவே வந்து கொண்டிருந்தார்கள்; பேசிக் கொண்டு வந்தார்கள். சிவனடியார், சற்றுத் தூரத்தில் மொட்டையாக நின்ற பாறையைச் சுட்டிக் காட்டி, "பொன்னா! அந்தப் பாறையைப் பார்! அதைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி! மொட்டைப் பாறை என்று தோன்றுகிறது. அவ்வளவுதான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எனக்கு என்ன தோன்றுகிறது, தெரியுமா? காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா! சிற்பி ஒரு பாறையைப் பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் குறுக்கிட்டு, "சுவாமி! தாங்கள்...." என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்! நான் ஒரு சிற்பிதான்! உலகத்தில் வேறு எந்த வேலையைக் காட்டிலும் சிற்ப வேலையிலேதான் எனக்கும் பிரியம் அதிகம்... இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டேனானால்... இருக்கட்டும், பொன்னா! மாமல்லபுரம் நீ பார்த்திருக்கிறாயா?" என்று சுவாமியார் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். சுவாமி!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை! நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா! ஒரு காலத்தில், பொன்னா! மாமல்லபுரம் மாதிரியே இந்தத் தமிழகம் முழுவதையும் ஆக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்...." "என்ன, தாங்களும் கனவு கண்டீர்களா?" என்றான் பொன்னன். "ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா? அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்.... பார், பொன்னா! புண்ணிய பூமியாகிய இந்தப் பரத கண்டம் வடநாடு, தென்னாடு என்று பிரிவுபட்டிருக்கிறது. கதையிலும், காவியத்திலும் இதிகாசத்திலும் வடநாடுதான் ஆதிகாலத்திலிருந்து பெயர் பெற்று விளங்குகிறது. வடநாட்டு மன்னர்களின் பெயர்கள்தான் பிரசித்தியமடைந்திருக்கின்றன. பாடலிபுரத்துச் சந்திர குப்தன் என்ன, அசோகச் சக்கரவர்த்தி என்ன, விக்கிரமாதித்தன் என்ன! இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள்? நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா? தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன? இந்தத் தென்னாடானது ஆதிகாலம் முதல் சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்து கிடந்ததுதான், காரணம். பெரிய இராஜ்யம் இல்லாவிட்டால், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. பெரிய காரியங்களைச் சாதிக்காமல் பெரிய புகழ் பெறவும் முடியாது. வட நாட்டில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் இராஜ்யமானது. நீளத்திலும் அகலத்திலும் இருநூறு காததூரம் உள்ளதாயிருக்கிறது. இந்தத் தென்னாட்டிலோ பத்துக் காதம் போவதற்குள்ளாக மூன்று ராஜ்யத்தை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை அதாவது - தமிழகம் முழுவதும் ஒரே மகாராஜ்யமாயிருக்க வேண்டும் - தமிழகத்தின் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்று மகேந்திர பல்லவர் ஆசைப்பட்டார். நானும் அந்த மாதிரி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறலாம் என்று ஆசையுடன் நம்பியிருந்தேன். ஆனால், அந்த ஆகாசக் கோட்டையானது ஒரே ஒரு மனுஷனின் சுத்த வீரத்துக்கு முன்னால் இடிந்து, தகர்ந்து போய்விட்டது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சுவாமி! யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எல்லாம் உங்கள் பார்த்திப மகாராஜாவைத்தான்! ஆகா! அந்த வெண்ணாற்றங்கரைப் போர்க்களம் இப்போது கூட என் மனக்கண் முன்னால் நிற்கிறது. என்ன யுத்தம்! என்ன யுத்தம்! வெண்ணாறு அன்று இரத்த ஆறாக அல்லவா ஓடிற்று? பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது? உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்!" என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐயோ! அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா! ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது! உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான்!" என்றார் சுவாமியார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சுவாமி! வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்!" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வீரப்போரைக் குறித்தும், பார்த்திப மகாராஜா அந்திம காலத்தில் சிவனடியாரிடம் கேட்ட வரத்தைப் பற்றியும் எவ்வளவு தடவை கேட்டாலும் அவனுக்கும் அலுப்பதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவனடியாரும் அதைச் சொல்ல அலுப்பதில்லையாதலால், அந்தக் கதையை மறுபடியும் விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள், காட்டாறானது சிற்றருவியாகி மலைமேல் ஏறத் தொடங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். இதற்குமேல் குதிரைகளின் மீது போவது இயலாத காரியம். எனவே மலைச்சாரலில் மரங்கள் அடர்த்தியாயிருந்த ஓர் இடத்தில் குதிரைகளை அவர்கள் விட்டார்கள். இவற்றை "மரத்திலே கட்ட வேண்டாமா?" என்று பொன்னன் கேட்டதற்கு "வேண்டாம்" என்றார் சிவனடியார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா! உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா? இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா?" என்று கூறிவிட்டு இரண்டு குதிரைகளையும் முதுகில் தடவிக் கொடுத்தார். பிறகு இருவரும் அருவி வழியைப் பிடித்துக் கொண்டு மலை மேலே ஏறினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரிதும் சிறிதுமாய், முண்டும் முரடுமாயும் கிடந்த கற்பாறைகளை வெகு லாவகமாகத் தாண்டிக் கொண்டு சிவனடியார் சென்றார். தண்ணீரில் இறங்கி நடப்பதிலாவது ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டுவதிலாவது அவருக்கு ஒருவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவரைப் பின்தொடர்ந்து போவதற்குப் பொன்னன் திணற வேண்டியதாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சுவாமி! தங்களுக்குத் தெரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா?" என்று பொன்னன் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா! கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்" என்றார் சிவனடியார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், "ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை - மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார்!" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதெப்படி, சுவாமி! முன்னேயும் அவ்விதம் சொன்னீர்கள்! பார்த்திப மகாராஜாவினால் உங்களுடைய காரியம் கெட்டுப் போவானேன்?" என்று கேட்டான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வாதாபியிலிருந்து திரும்பி வந்தபோது, தென்னாடு முழுவதையும் ஒரு பெரிய மகாராஜ்யமாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே வந்தேன். இந்தச் சின்னஞ் சிறு தமிழகத்தில் ஒரு ராஜாவுக்கு மேல் - ஒரு இராஜ்யத்துக்கு மேல் இடங்கிடையாது என்று கருதினேன். சோழ, சேர, பாண்டியர்களின் நாமதேயமே இல்லாமல் பூண்டோ டு நாசம் செய்து விட்டுத் தமிழகத்தில் பல்லவ இராஜ்யத்தை ஏகமகா ராஜ்யமாகச் செய்துவிட வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், என்ன பிரயோஜனம்? பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க - சுதந்திர வீர புருஷனாக வளர்க்க - வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது! இப்போது நினைத்தால், ஏன் அந்தப் புரட்டாசிப் பௌர்ணமி இரவில் போர்க்களத்தில் பிரவேசித்து பார்த்திபனுடைய உடலைத் தேடினோம் என்று தோன்றுகிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் சிவனடியாரும் மேலே மேலே ஏறி சென்றார்கள். சூரியன் உச்சி வானத்தை அடைந்தபோது செங்குத்தான பாறையிலிருந்து அருவி 'ஹோ' என்ற இரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அதற்குமேல் அருவிப் பாதையில் போவதற்கு வழியில்லை என்பதைப் பொன்னன் தெரிவிக்க, சிவனடியார் சிந்தனையில் ஆழ்ந்தவராய் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருவி விழுந்தோடிய இடத்துக்கு இரு புறமும் கூர்ந்து பார்த்ததில் காட்டுவழி என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் தென்படவில்லை. இருபுறமும் செங்குத்தாகவும் முண்டும் முரடுமாகவும் மலைப்பாறைகள் உயர்ந்திருந்ததுடன், முட்களும் செடிகளும் கொடிகளும் நெருங்கி வளர்ந்து படர்ந்திருந்தன. அந்தச் செடி கொடிகளையெல்லாம் சிவனடியார் ஆங்காங்கு விலக்கிப் பார்த்துக் கொண்டு கடைசியாக அருவி விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சமீபமாக வந்தார். அருவியின் தாரை விழுந்த இடம் ஒரு சிறு குளம் போல் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது. தாரை விழுந்த வேகத்தினால் அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் குளத்தைப் பார்க்கும் போதே மனதில் திகில் உண்டாயிற்று. குளத்தின் இருபுறத்திலும் பாறைச் சுவர் செங்குத்தாக இருந்தபடியால் நீர்த்தாரை விழும் இடத்துக்கு அருகில் போவது அசாத்தியம் என்று தோன்றிற்று. ஆனால் சிவனடியார் அந்த அசாத்தியமான காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த அருவிக் குளத்தின் ஒரு பக்கத்தில் ஓரமாக பாறைச் சுவரைக் கைகளால் பிடித்துக் கொண்டும் முண்டு முரடுகளில் காலை வைத்துத் தாண்டியும், சில இடங்களில் தண்ணீரில் இறங்கி நடந்தும் சில இடங்களில் நீந்தியும் அவர் போனார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்ற பொன்னன், கடைசியாகச் சிவனடியார் தண்ணீர் தாரைக்குப் பின்னால் மறைந்ததும், "ஐயோ!" என்று அலறிவிட்டான். "ஒருவேளை போனவர் போனவர் தானா? இனிமேல் திரும்ப மாட்டாரோ?" என்று அவன் அளவில்லாத ஏக்கத்துடனும் திகிலுடனும் நின்றான். நேரமாக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாயிற்று. சாமியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பதை நினைத்தபோது அவனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. 'அவரை விட்டு விட்டு நாம் திரும்பிப் போவதா? முடியாத காரியம். நாமும் அவர் போன இடத்துக்கே போய்ப் பிராணனை விடலாம். எது எப்படிப் போனாலும் போகட்டும்' என்று துணிந்து பொன்னனும் அந்தக் கிடுகிடு பள்ளமான குளத்தில் இறங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
</div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-9182140948002207692016-04-20T22:04:00.005+02:002017-08-25T21:25:51.592+02:00பார்த்திபன் கனவு -புதினம் 59 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 22 - "நிஜமாக நீதானா" ? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<h2 style="text-align: left;">
<br /></h2>
</div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="clear: left; float: left; font-family: "tahoma" , "geneva" , sans-serif; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="" data-cke-saved-src="http://www.noolulagam.com/book_images/21741.jpg" src="http://www.noolulagam.com/book_images/21741.jpg" height="320" width="213" /></span><span style="font-size: 18px;"></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;">நன்றி: http://www.noolulagam.com/book_images/21741.jpg</span></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
மரத்தடியில் வந்து நின்ற குந்தவிதேவி சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள். விக்கிரமன் திரும்பிப் பார்க்கும் வழியாக இல்லை. காவேரியின் நீர்ப் பிரவாகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை. ஒரு சிறு கல்லை எடுத்து விக்கிரமனுக்கு அருகில் ஜலத்தில் போட்டாள். 'கொடக்' என்ற சத்தத்துடன் கல் அப்பிரவாகத்தில் விழுந்து முழுகிற்று. சிறு நீர்த் துளிகள் கிளம்பி விக்கிரமன் மேல் தெறித்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவியின் யுக்தி பலித்தது. விக்கிரமன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் அகல விரிந்தன. கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான். அவனுடைய உதடுகள் சற்றுத் திறந்தன. ஏதோ பேச யத்தனிப்பது போல். ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் காவேரியின் பிரவாகத்தை நோக்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி இன்னும் சற்று நேரம் நின்றாள். பிறகு மரத்தடியிலிருந்து வந்து நதிக்கரையில் விக்கிரமனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் உட்கார்ந்த பிறகு விக்கிரமனும் இரண்டு மூன்று தடவை அவள் பக்கம் திரும்பினான். ஒவ்வொரு தடவையும் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறிது நேரத்துக்குப் பிறகு குந்தவி, "நான் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் மிகவும் அதிசயமடைந்தவனைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்து, "நீ பேசினாயா?" என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம். நான் ஊமையில்லை! என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குன்றாத அதிசயத்துடன் விக்கிரமன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். குந்தவி மறுபடியும் போகத் தொடங்கினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஏன் போகிறாய்?" என்றான் விக்கிரமன் தழுதழுத்த குரலில்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீர் பேசுகிற வழியைக் காணோம். அதனால்தான் கிளம்பினேன்" என்று சொல்லிக் கொண்டே குந்தவி மறுபடியும் விக்கிரமனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எனக்குப் பயமாயிருந்தது!" என்றான் விக்கிரமன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன பயம்? ஒரு அபலைப் பெண்ணைக் கண்டு பயப்படுகிற நீர் தனி வழியே கிளம்பலாமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உன்னைக் கண்டு பயப்படவில்லை."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பின்னே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நான் காண்பது கனவா அல்லது ஜுர வேகத்தில் தோன்றும் சித்தப்பிரமையோ என்று நினைத்தேன். பேசினால் ஒரு வேளை பிரமை கலைந்துவிடுமோ என்று பயந்தேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி புன்னகையுடன், "இப்பொழுது என்ன தோன்றுகிறது? கனவா, பிரமையா?" என்றாள். "இன்னமும் சந்தேகமாய்த்தானிருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால்....?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இருந்தால் என்ன?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நிஜமாக நீதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விதம் சொல்லி விக்கிரமன் தன்னுடைய கையைக் குந்தவியின் கன்னத்தின் அருகே கொண்டு போனான். ஜுரக் கனவுகளில் நிகழ்ந்தது போல் அந்த முகம் உடனே மறைந்து போகவில்லை. குந்தவி தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. விக்கிரமனுடைய உள்ளங்கை, மலரின் இதழ் போல் மென்மையான குந்தவியின் கன்னத்தைத் தொட்டது. பிறகு, பிரிய விருப்பமில்லாதது போல் அங்கேயே இருந்தது. குந்தவி அந்தக் கையைப் பிடித்து அகற்றி, பழையபடி அவனுடைய மடிமீது வைத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புன்னகையுடன், "உம்முடைய சந்தேகம் தீர்ந்ததா? நிச்சயம் ஏற்பட்டதா?" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சந்தேகம் தீர்ந்தது! பல விஷயங்கள் நிச்சயமாயின" என்றான் விக்கிரமன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்னென்ன?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நிஜமாக நீதான் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பிரமையோ கனவோ அல்ல என்பது ஒன்று."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்புறம்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீ கையினால் தொட முடியாத தெய்வ கன்னிகையல்ல; உயிரும் உணர்ச்சியுமில்லாத தங்க விக்கிரகமும் அல்ல; சாதாரண மானிடப் பெண்தான் என்பது ஒன்று."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இன்னும் என்ன?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இனிமேல் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம் என்பது ஒன்று."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு விக்கிரமனைப் பார்த்து, "என்னை உமக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஞாபகமா? நல்ல கேள்வி கேட்டாய்! உன்னைத் தவிர வேறு எந்த ஞாபகமாவது உண்டா என்று கேட்டிருந்தால் அதிகப் பொருத்தமாயிருக்கும். பகலிலும், இரவிலும், பிரயாணத்திலும், போர்முனையிலும், கஷ்டத்திலும், சுகத்திலும் உன் முகம் என் மனத்தை விட்டு அகன்றதில்லை. மூன்று வருஷ காலமாக நான் எங்கே போனாலும், எது செய்தாலும், என் இருதய அந்தரங்கத்தில் உன் உருவம் இருந்து கொண்டுதானிருந்தது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன சொல்கிறீர்? நான் உம்மை மாமல்லபுரத்து வீதியில் சந்தித்துப் பத்து நாள்தானே ஆயிற்று? மூன்று வருஷமா?...." என்றாள் குந்தவி கள்ளச் சிரிப்புடனும் அவ நம்பிக்கையுடனும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்று நேரம் திகைத்துப் போய் மௌனமாயிருந்தான். பிறகு, "ஓஹோ! பத்து நாள்தான் ஆயிற்று?" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பின்னே, மூன்று வருஷம் ஜுரம் அடித்துக் கிடந்தீரா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சரிதான்; ஜுரத்தினால்தான் அத்தகைய பிரமை எனக்கு உண்டாகியிருக்கிறது. உனக்கும் எனக்கும் வருஷக்கணக்கான சிநேகிதம் என்று தோன்றுகிறது!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒரு வேளை மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்ததற்கு முன்னாலேயே எப்போதாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதோ?" என்று குந்தவி கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்று யோசித்து, "எனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி வரவில்லை. மனம் குழம்பியிருக்கிறது, அதிலும்...." என்று தயங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதிலும் என்ன?" என்று கேட்டாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதிலும் உன்னுடைய நீண்ட கரிய விழிகளைப் பார்த்தேனானால் நினைவு அடியோடு அழிந்து போகிறது. என்னையும், நான் வந்த காரியத்தையும், இவ்வுலகத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்! வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உமக்கு இன்னும் ஜுரம் குணமாகவில்லை. அதனால்தான் இப்படிப் பிதற்றுகிறீர். நீர் இங்கே தனியாக வந்திருக்கக் கூடாது?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்லை; எனக்கு ஜுரமே இப்போது இல்லை. நீ வேணுமானால் என் கையைத் தொட்டுப்பார்!" என்று விக்கிரமன் கையை நீட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி கையை லேசாகத் தொட்டுவிட்டு, "அப்பா, கொதிக்கிறதே!" என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இருக்கலாம்; ஆனால் அது ஜுரத்தினால் அல்ல...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இருக்கட்டும்; கொஞ்சம் என் கண்களைப் பாராமல் வேறு பக்கம் பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லும். நீர் யார், எங்கிருந்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா? எல்லாமே மறந்து போய்விட்டதா?" என்று குந்தவி கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; இங்கே வந்து நதிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டேன். செண்பகத் தீவிலிருந்து கப்பலில் வந்தேன். இரத்தின வியாபாரம் செய்வதற்காக....."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்த விஷயமும் ஞாபகம் இருக்கிறதல்லவா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இருக்கிறது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அரண்மனைக்கு வாரும்; சக்கரவர்த்தியின் மகள் இரத்தினம் வாங்குவாள், என்று சொன்னேனே, அது நினைவிருக்கிறதா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இப்போது நினைவு வருகிறது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீர் ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்று நிதானித்து "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இரத்தின வியாபாரிகள் எப்போதாவது உண்மையைச் சொல்லும் வழக்கம் உண்டு என்றால் நீரும் உண்மையைச் சொல்லும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சத்தியமாய்ச் சொல்லுகிறேன் உன்னை இன்னொரு தடவை பார்த்தேனானால், மறுபடியும் உன்னைப் பிரிந்து வருதற்கு மனம் இடங்கொடாது என்ற காரணத்தினால்தான். அது ரொம்பவும் உண்மையான பயம் என்று இப்போது தெரிகிறது...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"செண்பகத் தீவில் இப்படியெல்லாம் புருஷர்கள் பெண்களிடம் பேசி ஏமாற்றுவது வழக்கமா? இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?" என்று குந்தவி ஏளனமாகக் கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீ ஒன்றை மறந்து விடுகிறாய். நான் செண்பகத் தீவிலிருந்து வந்தேனென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தச் சோழ நாட்டில்தான். இந்தப் புண்ணியக் காவேரி நதியின் கரையில்தான் நான் ஓடியாடி விளையாடினேன். இந்த நதியின் பிரவாகத்தில்தான் நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்த அழகிய சோழநாட்டின் குளிர்ந்த மாந்தோப்புகளிலும் தொன்னந்தோப்புகளிலும் ஆனந்தமாக எத்தனையோ நாட்கள் உலாவினேன்! ஆகா! நான் செண்பகத் தீவிலிருந்த நாட்களில் எத்தனை நாள் இந்த நாட்டை நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன்! இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன்! மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன்!... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது! உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்று விக்கிரமன் ஆர்வத்துடன் கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எனக்கு நீர் நன்றி செலுத்துவதில் என்ன பிரயோஜனம்? உண்மையில் நீர் நன்றி செலுத்த வேண்டியது கோமகள் குந்தவிக்கு..."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"யார்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சக்கரவர்த்தியின் மகள் குந்தவி தேவியைச் சொல்லுகிறேன். உம்மை இங்கே அழைத்து வருவதற்கு அவர்தானே அனுமதி தந்தார்? அவருக்குத்தான் நீர் கடமைப்பட்டிருக்கிறீர்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியா? எனக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. என் மனம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. இந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன்; காவேரி நதிக்கரையில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுகிறேன். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. நான் எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தேன் என்பதை விவரமாய்ச் சொல்ல வேண்டும். முதலில், நீ யார் உன் பெயர் என்னவென்று தெரிவித்தால் நல்லது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மாமல்லபுரத்தில் சொன்னேனே, ஞாபகம் இல்லையா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உன்னைப் பார்த்த ஞாபகம் மட்டுந்தான் இருக்கிறது; வேறொன்றும் நினைவில் இல்லை."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என் பெயர் ரோகிணி சக்கரவர்த்தித் திருமகள் குந்தவி தேவியின் தோழி நான்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில், அந்தச் சந்திப்பின் போது குந்தவி தன் பெயர் மாதவி என்று சொன்னாள். அவசரத்தில் சொன்ன கற்பனைப் பெயர் ஆனதால் அவளுக்கே அது ஞாபகமில்லை. இப்போது தன் பெயர் 'ரோகிணி' என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதைக் கேட்ட விக்கிரமன் சொன்னான்: "ரோகிணி! - என்ன அழகான பெயர்? - எத்தனையோ நாள் அந்தச் செண்பகத் தீவில் நான் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. பிறைச் சந்திரனுக்கு அருகில் ரோகிணி நட்சத்திரம் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், உன்னுடைய கண்களின் ஜொலிப்பிற்கு அந்த ரோகிணி நட்சத்திரங்களின் ஜொலிப்பு கொஞ்சமும் இணையாகாது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உம்முடைய வேஷத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்...."என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சிறிது திடுக்கிட்டு, "வேஷமா?....' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம்; உண்மையில் நீர் இரத்தின வியாபாரி அல்ல, நீர் ஒரு கவி. ஊர் சுற்றும் பாணன், உம்முடைய மூட்டையில் இருந்தது இரத்தினம் என்றே நான் நம்பவில்லை!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் சற்றுப் பொறுத்துச் சொன்னான்! - "இப்போது உன்னை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. ஆனால் அந்த மூட்டையில் இருந்தவை இரத்தினங்கள்தான் என்று ஒரு நாள் உனக்கு நிரூபித்துக் காட்டுவேன். நான் கவியுமல்ல, என்னிடம் அப்படி ஏதாவது திடீரென்று கவிதா சக்தி தோன்றியிருக்குமானால், அதற்கு நீதான் காரணம். உன்னுடைய முகமாகிய சந்திரனிலிருந்து பொங்கும் அமுத கிரணங்களினால்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"போதும், நிறுத்தும் உம்முடைய பரிகாசத்தை இனிமேல் சகிக்க முடியாது" என்றாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பரிகாசமா?" என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பிறகு, "உனக்குப் பிடிக்காவிட்டால் நான் பேசவில்லை. நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைச் சொன்னால் ரொம்பவும் நன்றி செலுத்துவேன்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"காஞ்சியிலிருந்து உறையூர் வரும் பாதையில் மகேந்திர மண்டபம் ஒன்றில் ஜுர வேகத்தினால் பிரக்ஞை இழந்து நீர் கிடந்தீர். அங்கு எப்படி வந்து சேர்ந்தீர்? அதற்கு முன்னால் என்னென்ன நேர்ந்தது என்று நீர் சொன்னால், பிறகு நடந்ததை நான் சொல்லுகிறேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் ஒருவாறு சுருக்கமாகச் சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குந்தவி தேவி கூறினாள்: "சக்கரவர்த்தியின் மூத்த குமாரர் மகேந்திரரும், குந்தவி தேவியும் காஞ்சியிலிருந்து உறையூருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். தேவியுடன் நானும் வந்தேன், அந்தக் காட்டாற்றைத் தாண்டி வந்தபோது, மகேந்திர மண்டபத்துக் குள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று அலறும் குரல் கேட்டது. நான் அம்மண்டபத்துக்குள் வந்து பார்த்தேன். மாமல்லபுரத்தில் பார்த்த இரத்தின வியாபாரி நீர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு குந்தவி தேவியிடம் உம்மையும் அழைத்து வர அனுமதி கேட்டேன். அவர் கருணை செய்து சம்மதித்தார். உமக்கு உடம்பு பூரணமாகக் குணமாகும் வரையில் இங்கேயே உம்மை வைத்திருக்கவும் அனுமதித்திருக்கிறார்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஜுரக் கனவுகளில் நான் அடிக்கடி உன்னுடைய முகத்தைக் கண்டேன். அதெல்லாம் கனவல்ல; உண்மையிலேயே உன்னைத் தான் பார்த்தேன் என்று இப்போது தெரிகிறது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இருக்கலாம்; நீர் ஜுரமடித்துக் கிடக்கையில் அடிக்கடி உம்மை நான் வந்து பார்த்தது உண்மைதான். இவ்வளவுக்கும் குந்தவி தேவியின் கருணைதான் காரணம்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். குந்தவி கேட்டாள்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சக்கரவர்த்தியின் மகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன். ஒரு வார்த்தையாவது நீர் நன்றி தெரிவிக்கவில்லையே? அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பல்லவ குலத்தைச் சேர்ந்த யாருக்கும் நான் நன்றி செலுத்த முடியாது!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"குந்தவி தேவியை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர். பிறகு என்னைக்கூட உடனே மறந்து விடுவீர்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சத்தியமாய் மாட்டேன். ஆயிரம் குந்தவி தேவிகள் உனக்கு இணையாக மாட்டார்கள்! இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"யார் இருவரும்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அண்ணனும் தங்கையும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"யுவராஜா மகேந்திரர் இங்கே இல்லை. அவர் திரும்பவும் காஞ்சிக்குப் போய்விட்டார். சீன தேசத்திலிருந்து யாரோ ஒரு யாத்திரிகர் வந்திருக்கிறாராம். அவர் இந்தப் பாரதநாடு முழுவதும் யாத்திரை செய்து விட்டுக் காஞ்சிக்கு வருகிறாராம். 'யுவான் சுவாங்' என்ற விசித்திரமான பெயரையுடையவராம். சக்கரவர்த்திக்கு இச்சமயம் முக்கிய வேலை வந்திருப்பதால், அந்த யுவான் சுவாங்கை உபசரித்து வரவேற்பதற்காக யுவராஜா உடனே வரவேண்டுமென்று செய்தி வந்தது. இங்கு வந்த இரண்டாம் நாளே மகேந்திரர் புறப்பட்டுப் போய்விட்டார். பார்த்தீரா, எங்கள் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் கடல்களுக்கப்பால் வெகு தூரத்திலுள்ள தேசங்களில் எல்லாம் கூடப் பரவியிருப்பதை? நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி?" என்று கேட்டாள் குந்தவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆம்; அங்கேயெல்லாம் கூடப் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் பரவித்தான் இருக்கிறது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படிப்பட்ட சக்கரவர்த்தியின் ஆளுகையில் இருப்பது இந்தச் சோழ நாட்டுக்குப் பெருமையில்லையா? இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே? அது நியாயமா? உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று குந்தவி கேட்டு விக்கிரமனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் அவளை நிமிர்ந்து நோக்கி, "என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தச் சோழநாட்டில் அடிமையாயிருப்பதைக் காட்டிலும், செண்பகத் தீவில் சுதந்திரப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நிச்சயமாகவா? என் நிமித்தமாகக்கூட நீர் இங்கே இருக்கமாட்டீரா?" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, "அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்!" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அறிந்து கொள்ளாதது போல் நடித்தார்கள். இந்த நாடகம் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-72684135588720092882016-04-16T15:12:00.000+02:002017-08-25T22:00:07.005+02:00பார்த்திபன் கனவு- புதினம் 58 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 21 - வஸந்தத் தீவில். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"></span></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<span style="font-size: xx-small;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHxyXUkc6fgRtS2IcT8Kk-Pw_T2_Jty5Z7huZFXCLj-052SrmFzoD5xTX8IeVsqMag1-UBi7S0pVtfvX9bAYuvPN-3nnv8nGtqZz3VOAHe_1zAsvG452997gFiqPZt86NTMiwnBsFue8-1/s1600/Island_near_Fiji.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="458" data-original-width="1600" height="91" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHxyXUkc6fgRtS2IcT8Kk-Pw_T2_Jty5Z7huZFXCLj-052SrmFzoD5xTX8IeVsqMag1-UBi7S0pVtfvX9bAYuvPN-3nnv8nGtqZz3VOAHe_1zAsvG452997gFiqPZt86NTMiwnBsFue8-1/s320/Island_near_Fiji.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "குழந்தாய்! உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா?" என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். "இறங்குவேன் அப்பா!" என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. "ஐயோ! இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது? ஏன் உயிர் போகமாட்டேனென்கிறது? ஏன் உடம்பு அப்படியே இருக்கிறது?" என்று எண்ணி விக்கிரமன் துடிதுடிக்கிறான். திடீரென்று ஒரு குளிர்ந்த கை அவனுடைய எரியும் கரத்தைப் பற்றுகிறது; இன்னொரு குளிர்ந்த கை அவனுடைய கொதிக்கும் மார்பைத் தொடுகிறது. எரிகிற அந்தத் தீயின் நடுவில் செந்தாமரையை யொத்த குளிர்ந்த முகம் ஒன்று தோன்றி அவனைக் கருணையுடன் நோக்குகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் அத்தீயிலிருந்து வெளியே வருகிறான். தன்னை அவ்விதம் கையைப் பிடித்து அழைத்து வந்த தெய்வப் பெண்ணுக்கு நன்றி செலுத்த அவன் விரும்புகிறான். ஆனால், அத்தெய்வப் பெண்ணைக் காணவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் புலிக்கொடி பறக்கும் பெரிய போர்க்கப்பலில் பிரயாணம் செய்கிறான். கப்பலில் நூற்றுக்கணக்கான சோழ நாட்டு வீரர்கள் அங்குமிங்கும் உலாவுகிறார்கள். கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பிய போது பார்த்திப மகாராஜாவும் அருள்மொழி ராணியும் விக்கிரமனை ஆசீர்வதித்து, "வெற்றி வீரனாய்த் திரும்பி வா!" என்று வாழ்த்தி அனுப்பிய காட்சி அவன் மனக் கண் முன்னால் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று பெரும் புயலும் மழையும் அடிக்கின்றன; கப்பல் கவிழ்கின்றது. விக்கிரமன் கடல் அலைகளுடன் தன்னந்தனியாகப் போராடுகிறான். உடம்பு ஜில்லிட்டுப் போய் விட்டது; கைகால்கள் மரத்து விட்டன. "இனித் தண்ணீரில் மூழ்கிச் சாகவேண்டியதுதான்" என்று தோன்றிய சமயத்தில் இந்திர ஜாலத்தைப் போல் ஒரு படகு எதிரே காணப்படுகிறது. படகில் பூரண சந்திரனையொத்த முகமுடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். எங்கேயோ, எப்போதோ, எந்த ஜன்மத்திலோ பார்த்த முகந்தான் அது. அந்தப் பெண் அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் விடுகிறாள். அவள் முகமெல்லாம் நனைந்திருக்கிறது. அலைத்துளிகள் தெறித்ததனாலா, கண்ணீர் பெருகியதனாலா என்று தெரியவில்லை. அவளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று விக்கிரமன் ஆசைப்படுகிறான். பேச முயற்சி செய்கிறான், ஆனால் பேச்சு வரவில்லை. தொண்டையை அடைத்துக் கொள்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிரமன் ஒரு கொடிய பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கிறான். வெயிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. கால் ஒட்டிக் கொள்கிறது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நா வரண்டுவிட்டது, சொல்ல முடியாத தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் மரம், செடி, நிழல் என்கிற நாமதேயமே கிடையாது. எங்கேயோ வெகு தூரத்தில் தண்ணீர் நிறைந்த ஏரி மாதிரி தெரிகிறது. அதை நோக்கி விரைந்து செல்கிறான். எவ்வளவு விரைவாகச் சென்றாலும் ஏரி இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. "ஐயோ! கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா?" என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் 'இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்!' என்ற எண்ணம் உண்டாகிறது. கீழே கொதிக்கும் மணலில் விழுந்தவனை யாரோ மிருதுவான கரங்களினால் தொட்டுத் தூக்கும் உணர்ச்சி ஏற்படுகிறது. யார் என்று பார்ப்பதற்காகக் கண்ணைத் திறக்க முயற்சி செய்கிறான். கண்கள் திறந்துதானிருக்கின்றன - ஆனால் பார்வை மட்டும் இல்லை. "ஐயோ! இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ?" என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. "ஆகா! காவேரி நதியின் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது!" என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. 'ஆகா! எதிரில் தன் முகத்தருகில் தெரியும் அந்த முகம், மாதுளை மொட்டைப் போன்ற செவ்விதழ்களில் புன்னகை தவழ, விரிந்த கருங் கண்களினால் தன்னைக் கனிந்து பார்க்கும் அந்த முகம். தான் ஏற்கெனவே பார்த்திருக்கும் அந்த முகம்தான். எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து தன்னைத் தப்புவித்த தெய்வப் பெண்ணின் முகந்தான். அந்த இனிய முகத்தைத் தொடவேண்டுமென்ற ஆசையுடன் விக்கிரமன் தன் கையைத் தூக்க முயன்றான்; முடியவில்லை. கை இரும்பைப் போல் கனக்கிறது. மறுபடியும் கண்கள் மூடுகின்றன, நினைவு தவறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படியெல்லாம் சுவர்க்க இன்பத்தையும், நரகத் துன்பத்தையும் மாறி மாறி அநுபவித்த பிறகு கடைசியில் ஒருநாள் விக்கிரமனுக்குப் பூரணமான அறிவுத் தெளிவு ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. காட்டாற்றங்கரையில் மகேந்திர மண்டபத்தில் அன்றிரவைத் தானும் பொன்னனும் கழித்தது வரையில் நினைவுபடுத்திக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான், ஏதோ ஏற்கனவே தெரிந்த இடம்போல் தோன்றியது. நன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்துக்கு எல்லையில்லாமற் போயிற்று. ஆமாம்; உறையூரில் காவேரித் தீவிலுள்ள வஸந்த மாளிகையில் ஒரு பகுதிதான் அவன் படுத்திருந்த இடம். "இங்கே எப்படி வந்தோம்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாபஜ்வரத்தின் வேகத்தில் தான் கண்ட பயங்கர இன்பக் கனவுகளெல்லாம் இலேசாக ஞாபகம் வந்தன. அந்த அதிசய மாயக்கனவுகளில் அடிக்கடி தோன்றிய பெண்ணின் முகம் மட்டும் கனவன்று - உண்மை என்று அவனுக்கு உறுதி ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பாதச் சிலம்பின் ஒலி கேட்டபோது, அவள் தானா என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை; யாரோ பணிப்பெண்கள், முன்பின் பார்த்தறியாதவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். பணியாட்களும் பணிப்பெண்களும் அடிக்கடி வந்து வேண்டிய சிசுருஷை செய்தார்கள். ஆனால், பொன்னன் வரவில்லை; அந்தப் பெண்ணையும் காணவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பணியாட்களிடமும், பணிப்பெண்களிடமும் விவரம் எதுவும் கேட்பதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவர்களோ ஊமைகளைப் போல் வந்து அவரவர் களுடைய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விதம் ஒரு பகல் சென்றது. இரவு தூக்கத்தில் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து விக்கிரமனுக்கு அங்கே படுத்திருக்க மனம் கொள்ளவில்லை. உடம்பில் நல்ல பலம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்; எழுந்து நடமாடினான். ஒருவிதக் களைப்பும் உண்டாகவில்லை, திடமாகத்தான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து தோட்டத்தில் பிரவேசித்தான். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனைத் தடுக்கவில்லை. விக்கிரமன் மேலும் நடந்தான். நதிக்கரையை நோக்கி மெதுவாக நடந்து சென்றான் பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குளிர்ந்த காவேரித் தீவைப் பார்க்கப் பார்க்க, அவன் மனம் பரவசமடைந்தது. அந்த மாமரங்களின் நிழலில் நடப்பது அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. மெள்ள மெள்ள நடந்து போய்க் காவேரிக் கரையை அடைந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனுடைய மனதில் சாந்தியும் இன்ப உணர்ச்சியும் மேலிட்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காவேரி நதியின் இனிய நீர்ப்பிரவாகத்தை விக்கிரமன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் ஒரு முகம் பிரதிபலித்தது! அது அந்தப் பழைய தெய்வப் பெண்ணின் முகந்தான். காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் தன்னைக் கருணையுடன் நோக்கிய முகந்தான். தாபஜ்வரக் கனவுகளில் தோன்றிச் சாந்தியும் குளிர்ச்சியும் அளித்த முகமும் அதுதான். அந்தப் பெண்ணை மறுபடியும் காணப் போகிறோமா என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில், அவனுக்குப் பின்புறமாக வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு குந்தவி தேவி நின்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-14821769128312663452016-04-11T15:00:00.000+02:002017-08-25T22:03:33.117+02:00பார்த்திபன் கனவு -புதினம் 57 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 20 - பொன்னனும் சிவனடியாரும். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="clear: left; float: left; font-family: "tahoma" , "geneva" , sans-serif; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="" data-cke-saved-src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkgdi8H8jnfC4EYyqBjviBF0Ad0214MowVphw3kJeWQOFLZcZ4RHZxAUa7ZGQdT6CmMJfiNh4mOyMq_Hei-Z18A8smTOdRpObjqOOlA5a-mn5dDXhMzKohyphenhyphenbsab7qZ0m6kv9STZFMh6vHp/s1600/ASC_6867.JPG" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkgdi8H8jnfC4EYyqBjviBF0Ad0214MowVphw3kJeWQOFLZcZ4RHZxAUa7ZGQdT6CmMJfiNh4mOyMq_Hei-Z18A8smTOdRpObjqOOlA5a-mn5dDXhMzKohyphenhyphenbsab7qZ0m6kv9STZFMh6vHp/s320/ASC_6867.JPG" width="320" /></span><span style="font-size: 18px;"></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவனடியாரைப் பார்த்த பொன்னன் ஏன் அவ்வளவு ஆச்சரியமடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. குதிரையிலிருந்து இறங்கி அந்தச் சிற்ப வீட்டுக்குள் நுழைந்தவர் ஒருவராயும், வெளியில் வந்தவர் இன்னொருவராயும் இருந்ததுதான் காரணம். இரண்டு பேரும் ஒருவர்தானா, வெவ்வேறு மனிதர்களா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் பொன்னன் முகத்தில் வெளிப்படுத்திய போதிலும் வார்த்தைகளினால் வெளியிடவில்லை. வெளியிடுவதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவனைப் பார்த்தவுடனேயே, சிவனடியார், "பொன்னா! எவ்வளவு சரியான சமயத்தில் வந்தாய்? இப்போதுதான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன். உறையூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் சற்று நேரம் கழித்து வந்திருந்தாயானால் என்னைப் பார்த்திருக்க மாட்டாய்..." என்று பரபரப்புடன் பேசிக் கொண்டே போனார். திண்ணையில் அவர்கள் உட்கார்ந்து கொண்டதும், "பொன்னா! சீக்கிரம் உன் சமாசாரத்தைச் சொல்லு! ரொம்ப முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். மகாராணியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" என்று கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன், "தெரிந்தது, சுவாமி!" என்றான். பிறகு, தான் கொல்லிமலை அடிவாரத்துக்குப் போனது. அருவியைப் பிடித்துக்கொண்டு மேலேறியது, அங்கே ஒற்றைக் கை மனிதனும் குள்ளனும் வந்ததைக் கண்டு மறைந்திருந்தது. அவர்கள் திரும்பி வருவார்களென்று எதிர்பார்த்து மூன்று நாள் காத்திருந்துவிட்டுத் திரும்பியது ஆகிய விவரங்களைச் சொன்னான். காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனைக் காப்பாற்றியது முதலியவற்றைச் சொல்லவில்லை. சிவனடியாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமென்று இருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒற்றைக் கை மனிதனுடைய தோற்றத்தைப் பற்றி விவரமாகச் சொல்லும்படி சிவனடியார் கேட்க, பொன்னன் அவ்விதமே அவனுடைய பயங்கரத் தோற்றத்தை வர்ணித்து விட்டு, "சுவாமி! அந்த மனிதன் யார்? உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! பார்த்திப மகாராஜாவின் பத்தினி அந்தக் கொல்லி மலையிலேதான் எங்கேயோ இருக்கிறாள் சந்தேகமில்லை. இதுவரையில் எனக்கு அர்த்தமாகாத விஷயங்கள் பல இப்போது அர்த்தமாகின்றன. அந்த மனிதன் யார் என்றா கேட்கிறாய்? - மகா புருஷர்களும் பக்த சிரோமணிகளும் தோன்றிய இந்தப் புண்ணிய நாட்டில் நரபலி என்னும் பயங்கர வழக்கத்தைப் பரப்பி வரும் மகா கபால பைரவன்தான் அவன். நானும் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறேன். அவனை நேருக்கு நேர் காண வேண்டுமென்று. இன்று வரையில் முடியவில்லை. அவனைப் பற்றி இன்னொரு சந்தேகம் எனக்கிருக்கிறது. பொன்னா! ஏன் என் கண்ணில் அகப்படாமல் அவன் தப்பித் திரிகிறான் என்பதை ஒருவாறு ஊகிக்கிறேன்; எல்லா உண்மையையும் சீக்கிரத்தில் நாம் இரண்டு பேருமாகக் கண்டுபிடிக்கப் போகிறோம். "பொன்னா! அதற்கு முன்னால் நமக்கு இன்னும் முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. உனக்கு இப்போது ரொம்பவும் ஆச்சரியமளிக்கும் விஷயம் ஒன்றைத் சொல்லப் போகிறேன். சோழநாட்டு இளவரசர் திரும்ப வந்திருக்கிறார்" என்று சொல்லிச் சிவனடியார் பொன்னனுடைய முகத்தை உற்றுப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனுடைய முகத்தில் சிறிது வியப்புக் குறி காணப்பட்டதே தவிர, குதூகலமும் மகிழ்ச்சியும் தோன்றாதது கண்டு, சிவனடியார், "என்ன பொன்னா உனக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் இன்னும் சிறிது ஜாக்கிரதையுடன், "தங்களுடைய வார்த்தையில் எனக்கு அவநம்பிக்கை ஏற்படுமா, சுவாமி? ஆனால், இவ்வளவு அபாயத்துக்குத் துணிந்து இளவரசர் ஏன் வந்தார் என்றுதான் கவலையாயிருக்கிறது" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உண்மைதான் பொன்னா! இளவரசருக்கு ஏதோ அபாயம் நேர்ந்துவிட்டது. உறையூருக்குப் போகும் பாதையிலேதான் ஏதோ நேர்ந்திருக்கிறது. நாம் உடனே கிளம்பிப் போய்ப் பார்க்க வேண்டும். அருள்மொழித் தேவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இளவரசரைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன் இப்போது உண்மையாகவே பேராச்சரியம் அடைந்தவனாய், "சுவாமி! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? இளவரசரை நீங்கள் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? அவருக்கு வழியில் ஆபத்து என்று என்ன முகாந்திரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! இதென்ன உன்னிடம் இந்த மாறுதல்? நான் சொல்வதில் சந்தேகப்பட்டு முகாந்திரம் கேட்கக் கூட ஆரம்பித்து விட்டாயே? - நல்லது, சொல்கிறேன் கேள்! இளவரசரை நானே பார்த்தேன்; பேசினேன். நான்தான் உறையூருக்கும் அனுப்பினேன்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எதற்காக சுவாமி?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எதற்காகவா? ஜன்ம தேசத்தைப் பார்த்துவிட்டு வரட்டும் என்றுதான். பொன்னா! ஒருவனுக்குத் தன்னுடைய பிறந்த நாட்டில் அன்பு எப்போது பூரணமாகும் என்று உனக்குத் தெரியுமா? கொஞ்ச காலமாவது அயல் தேசத்திலிருந்து விட்டுத் திரும்பிவரும் போதுதான். இரண்டு மூன்று வருஷம் அயல்நாட்டிலிருந்து விட்டு ஒருவன் திரும்பித் தன் தாய்நாட்டுக்கு வரும்போது, பாலைவனப் பிரதேசமாயிருந்தாலும், அது சொர்க்க பூமியாகத் தோன்றும். வளங்கொழிக்கும் சோழ நாட்டைப் பற்றிக் கேட்க வேண்டுமா? உங்கள் இளவரசருக்கு திரும்பவும் இந்நாட்டை விட்டுப் போகவே மனம் வராதபடி செய்ய வேணுமென்று விரும்பினேன்; பார்த்திப மகாராஜாவுக்குப் போர்க்களத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு. ஆனால் வழியில் இப்படி விபத்து ஏற்படக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. ஐயோ பகவானே! நாளை அருள்மொழி ராணி கேட்டால் நான் என்ன செய்வேன்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சுவாமி! இளவரசருக்கு என்ன ஆபத்து நேரிட்டது? அது எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று பொன்னன் கேட்டான். "இன்றைக்கு ரொம்பக் கேள்விகள் கேட்கிறாயே, பொன்னா! என்ன ஆபத்து நேர்ந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ நேர்ந்து மட்டும் இருக்கிறது. அதோ அந்தக் குதிரைக்கு, பகவான் பேசும் சக்தியை மட்டும் அளித்திருந்தால், அது சொல்லும்.... ஆமாம், இந்தக் குதிரைமேல் ஏறிக்கொண்டுதான் உங்கள் இளவரசர் கிளம்பினார். இதே இடத்திலிருந்துதான் புறப்பட்டார். ஆனால், இரண்டு நாளைக்குப் பிறகு குதிரை மட்டும் தனியாகத் திரும்பி வந்திருக்கிறது. இளவரசருக்கு எங்கே, என்ன நேர்ந்தது என்பதை நாம் இப்பொழுது உடனே போய்க் கண்டுபிடிக்க வேண்டும். நீயும் என்னோடு வருகிறாயல்லவா, பொன்னா! உனக்குக் குதிரை ஏறத் தெரியுமா?" என்று சிவனடியார் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"தெரியும் சுவாமி! ஆனால், நான் தங்களுடன் வருவதற்கு முன்னால் தங்களிடம் இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றான் பொன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன?" என்று சிவனடியார் தம் காதுகளையே நம்பாதவர் போல் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம் இன்னும் சில விவரங்கள் தெரியவேண்டும். முக்கியமாகத் தாங்கள் யார் என்று சொல்ல வேண்டும்" என்றான். சிவனடியாரின் முகத்தில் புன்னகை அரும்பியது. "ஓஹோ! அப்படியா?" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சற்று முன்னால் சாலையிலிருந்து தாங்கள் குதிரைமீது வந்ததை நான் பார்த்தேன். அப்போது வேறு உருவம் கொண்டிருந்தீர்கள்; இந்த வீட்டுக்குள்ளேயே போய் வெளியே வரும்போது வேறு ரூபத்தில் வந்தீர்கள். ஆனால், இந்த இரண்டு உருவங்களும் தங்களுடைய சொந்த உருவம் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் சந்தேகம் சுவாமி, எனக்கு வெகுநாளாகவே உண்டு. ஆனால், இப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. உண்மையில் தாங்கள் யார் என்று சொன்னால்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சொன்னால் என்ன?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சுவாமி, மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... தாங்கள் அறிந்து கொள்ள விரும்பக்கூடிய விஷயம் எனக்குத் தெரியும், அதைச் சொல்லுவேன், இல்லாவிட்டால் என் வழியே நான் போவேன்...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவனடியார் சற்று யோசித்தார். பொன்னனுடைய முகத்தில் உள்ள உறுதிக் குறியைக் கவனித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பொன்னா! அவசியம் நீ தெரிந்து கொண்டுதான் தீர வேண்டுமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாம், சுவாமி."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியானால், சொல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் சொல்லக் கூடாது. பரம இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியே செய்கிறேன், சுவாமி."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்வாயா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்கிறேன், சுவாமி!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்படியானால், இதோ பார்!" என்று சிவனடியார் அன்று போர்க்களத்தில் பார்த்திபன் முன்னால் செய்தது போல தம்முடைய ஜடா மகுடத்தையும் மீசை தாடிகளையும் நீக்கினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னன், "பிரபோ! தாங்கள் தானா?" என்று சொல்லி, அவர் முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இதற்கு முன்னால் வள்ளி உனக்குச் சொல்லவில்லையா? பொன்னா!" என்று சிவனடியார் (மீண்டும் ஜடாமகுடம் முதலியவற்றைத் தரித்துக் கொண்டு) கேட்க, "வள்ளி பெரிய கள்ளியாயிற்றே? நிஜத்துக்கு மாறான விஷயத்தைச் சொன்னாள். தங்களைத்தான் அவள் சொல்கிறாளா என்று நான் சந்தேகித்துக் கேட்டேன். இல்லை தாங்கள் பார்த்திப மகாராஜா என்று ஒரு பெரிய பொய் புளுகினாள். அவளை இலேசில் விடுகிறேனா, பாருங்கள்! எனக்கும் இப்போது ஒரு பெரிய இரகசியம் தெரியும். அதை அவளுக்குச் சொல்வேனா?" என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகு, பொன்னன் காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கி இளவரசரைக் காப்பாற்றியது முதல் அவரைக் குந்தவிதேவி தன் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றது வரையில் எல்லா விவரங்களையும் சவிஸ்தாரமாய்ச் சொன்னான். இதற்கு முன்னாலெல்லாம் எதற்கும் ஆச்சரியம் அடையாதவராயிருந்த சிவனடியார் இப்போது அளவிட முடியாத வியப்புடன் பொன்னன் கூறிய விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "பொன்னா! உங்கள் இளவரசரைப் பற்றிய கவலை தீர்ந்தது விக்கிரமன் பத்திரமாயிருப்பான். நாம் அருள்மொழி ராணியைத்தான் தேடி விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்</div>
</span></div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-89421940085153793192016-03-27T15:02:00.000+02:002017-08-25T22:47:33.351+02:00பார்த்திபன் கனவு -புதினம் - 56 -மூன்றாம் பாகம் - அத்தியாயம் 19- பொன்னனின் சிந்தனைகள். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="clear: left; float: left; font-family: "tahoma" , "geneva" , sans-serif; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="" data-cke-saved-src="http://www.tamilhindu.com/wp-content/uploads/sithbavanandar011.jpg" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/sithbavanandar011.jpg" height="320" width="320" /></span><span style="font-size: 18px;"></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="color: #222222; font-family: 'Helvetica Neue', Arial, Verdana, sans-serif; font-size: 14px;">
<span style="font-size: 18px;"><span style="font-family: "tahoma" , "geneva" , sans-serif;"><br /></span></span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
பொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத பக்தியும் மரியாதையும் அவளிடம் அவனுக்கு உண்டாயிற்று. தெய்வீக சௌந்தரியம் பொருந்திய இந்தத் தேவியின் உள்ளமும் தெய்வத் தன்மை கொண்டதாக வல்லவா இருக்கிறது? வழியில் அநாதையாய்க் கிடந்தவனைக் தூக்கித் தன்னுடைய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கருணை, தயாளம், பெருந்தன்மை வேண்டும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்றிரவு பொன்னன் அவ்வூர்க் கோயில் பிராகாரத்தில் படுத்துக் கொண்டே மேலே செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தனை செய்தான். இளவரசரோ சரியான சம்ரக்ஷணையில் இருக்கிறார். குந்தவி தேவியைக் காட்டிலும் திறமையாக அவரைத் தன்னால் கவனிக்க முடியாது. இளவரசர் எங்கே போக விரும்பினாரோ அவ்விடத்துக்கே குந்தவிதேவி அவரை அழைத்துப் போகிறார். ஏதோ சோழ வம்சத்தின் குலதெய்வமே இவ்விதம் ஏற்பாடு செய்ததென்று சொல்லும்படி எல்லாம் நடந்திருக்கிறது. எப்படியும் இளவரசருக்கு உடம்பு நன்றாய்க் குணமாகச் சில தினங்கள் ஆகும். அதுவரைக்கும் அவரைத் தான் பார்க்கவோ, பேசவோ சௌகரியப்படாது. பின்னர், அவருக்கு உடம்பு குணமாகும் வரையில் தான் என்ன செய்வது? பின்னோடு தொடர்ந்து போவதினாலோ, உறையூருக்குப் போய் உட்கார்ந்திருப்பதினாலோ என்ன பிரயோஜனம்? அதைக் காட்டிலும் ராணி அருள்மொழித் தேவியை விடுதலை செய்ய வேண்டிய காரியத்தைப் பார்ப்பது நலமல்லவா? இதற்குச் சிவனடியாரைப் போய்ப் பார்த்து அவருடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அருள்மொழித் தேவியைப் பற்றி ஏதாவது துப்புத் தெரிந்தவுடன் தம்மிடம் வந்து தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறார். தம்மைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். மாமல்லபுரத்துக்குச் சமீபத்தில் அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் சிற்பியின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். அங்கே போய் அவரைச் சந்தித்து எல்லா விஷயங்களையும் சொல்லி, அவருடைய யோசனைப்படி நடப்பதுதான் உசிதம் என்று தீர்மானித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுநாள் காலையில் இராஜ பரிவாரங்கள் பராந்தகபுரத்தை விட்டுக் கிளம்பி உறையூர்ச் சாலையில் போவதைத் தூர இருந்து பொன்னன் பார்த்து, "பகவானே! எங்கள் இளவரசரைக் காப்பாற்று; நான் மாமல்லபுரத்திலிருந்து திரும்பி வருவதற்குள் அவர் உடம்பு பூரணமாய்க் குணமாகி விடவேண்டும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான். பரிவாரங்கள் மறைந்ததும், எதிர்த் திசையை நோக்கி நடக்கலானான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனுடைய கால்கள் மாமல்லபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதிலும் உள்ளம் மட்டும் இளவரசர் படுத்திருந்த பல்லக்குடன் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குந்தவி தேவியின் பராமரிப்பில் இளவரசர் இருப்பதினால் ஏற்படக்கூடிய அபாயம் அவனுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. பல்லக்கில் படுத்திருக்கும் நோயாளி உண்மையில் சோழநாட்டு இளவரசர் என்பதைக் குந்தவி அறிந்தால் என்ன ஆகும்? ஜுர வேகத்தில் இளவரசர் பிதற்றும்போது அந்த உண்மை வெளியாகி விடலாமல்லவா? அல்லது வஸந்த மாளிகையில் அவர் நல்லுணர்வு பெற்றதும், திடீரென்று பழைய இடங்களைப் பார்க்கும் வியப்பினால் தாம் இன்னார் என்பதை வெளியிட்டு விடலாமல்லவா? - அதனால் ஒருவேளை ஏதேனும் விபரீதம் விளைந்துவிடுமோ? குந்தவிதேவிக்கு உண்மை தெரிந்தால் அவளுடைய தமையனுக்கும் தெரிந்துதான் தீரும். பிறகு, சக்கரவர்த்திக்கும் தெரியாமலிராது. சக்கரவர்த்தியினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் அல்லவா இளவரசர்? அதை மீறிப் பொய் வேஷத்தில் வந்ததற்குச் சிட்சை மரணமேயல்லவா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால், கடவுள் அருளால் அப்படியெல்லாம் ஒன்றும் நேராது என்று பொன்னன் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். குந்தவி தேவிக்கு ஒருவேளை உண்மை தெரிந்தால், அவர் இளவரசரைக் காப்பாற்றவே முயல்வார். முன்னம், தேசப் பிரஷ்ட தண்டனை விதிக்கப்பட்ட போதே அவருக்காக மன்னிப்புக் கோரி மன்றாடியதாகக் கேள்விப்பட்டிருக் கிறோமே? அதைப் பற்றிச் சிவனடியார் அருள்மொழி ராணியிடம் எவ்வளவெல்லாம் சொன்னார்?....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவனடியாரையும் குந்தவி தேவியையும் பற்றிச் சேர்ந்தாற் போல் நினைத்ததும், பொன்னனுக்கு நேற்றிரவு மகேந்திர மண்டபத்தின் வாசலில் நடந்த சம்பாஷணை நினைவு வந்தது. மனதில் இன்னதென்று சொல்ல முடியாத கவலையும் திகிலும் உண்டாயின. சிவனடியாரைப் பிடித்துக் கொண்டு வரும்படி குந்தவி தேவி மாரப்ப பூபதிக்குக் கட்டளையிட்டிருக் கிறாராமே? இது எதற்காக?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தச் சிவனடியார்தான் யார்? அவர் உண்மையில் உத்தம புருஷர்தானா? அல்லது கபட சந்நியாசியா? சோழ குலத்துக்கு அவர் உண்மையில் சிநேகிதரா? அல்லது சிநேகிதர் போல் நடிக்கும் பகைவரா? இளவரசர் திரும்பி வந்திருப்பது பற்றியும், இப்போது குந்தவி தேவியின் பராமரிப்பில் வஸந்த மாளிகைக்குப் போயிருப்பது பற்றியும் அவரிடம் சொல்லலாமா, கூடாதா! - ஐயோ அதையெல்லாம் பற்றி இளவரசரிடம் கலந்து பேசாமற் போனோமே என்று பொன்னன் துக்கித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னொரு விஷயம் பொன்னனுக்கு வியப்பை அளித்தது. இளவரசரை ஒற்றர் தலைவன் ஆபத்திலிருந்து விடுவித்த பிறகு அன்றிரவு காட்டில் ஒரு சிற்பியின் வீட்டில் தங்கியதாக அல்லவா சொன்னார்! தன்னைச் சிவனடியார் வந்து காணச் சொல்லியிருப்பதும் காட்டின் நடுவில் உள்ள சிற்பியின் வீட்டில்தானே? அடையாளங்களைப் பார்த்தால் இரண்டும் ஒரே இடமாகவல்லவா தோன்றுகிறது? ஒற்றர் தலைவனுக்கும் சிவனடியாருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவனடியார் ஒரு மகான் என்ற எண்ணம் பொன்னனுக்குப் பூரணமாக இருந்தது. அவர் தன்னை ஒரு சமயம் மாரப்பனிடம் அகப்படாமல் காப்பாற்றியதை அவன் எந்த நாளும் மறக்க முடியாது. இன்னும் அருள்மொழி ராணி அவரிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனாலும், அவர் உண்மையான சிவனடியார் அல்ல - அவ்விதம் வேடம் பூண்டவர் என்று சந்தேகிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தன. வள்ளி இவ்விதம் சந்தேகத்துடன் அவர் யார் என்பதைப் பற்றியும் ஒரு ஊகம் கூறினாள். அதாவது அவர் உண்மையில் பார்த்திப மகாராஜாதான் - மகாராஜா போர்க்களத்தில் சாகவில்லை - தன்னந்தனியே தாம் உயிர் தப்பி வந்ததை அவர் யாருக்கும் தெரிவிக்க விரும்பாமல் சிவனடியார் வேஷம் பூண்டிருக்கிறார் என்று வள்ளி சொன்னாள். அவளுடைய மதியூகத்தில் பொன்னனுக்கு எவ்வளவோ நம்பிக்கை உண்டு என்றாலும் இதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனுடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான இன்னொரு சம்பவம் நேரிட்டிருந்தது. அருள்மொழி ராணி தீர்த்த யாத்திரை கிளம்பிச் சென்ற பிறகு பொன்னன் பெரிதும் மனச்சோர்வு அடைந்திருந்தான். தோணித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் காட்டிலிருந்த ஐயனார் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்யலாமென்று அவன் போனான். அங்கே சந்நிதியில் வைத்திருந்த மண் யானைகளில் ஒன்று உடைந்து விழுந்திருப்பதைக் கண்டான். அதனருகில் அவன் சென்று பார்த்தபோது, மண் குதிரையின் வயிற்றுக்குள் ஒரு துணி மூட்டை இருந்தது. அதிசயத்துடன் அவன் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதற்குள் புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகள் இருக்கக் கண்டான். அப்போது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. யோசிக்க, யோசிக்க இது சிவனடியாருடைய வேஷப் பொருள்கள்தான் என்பது நிச்சயமாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த வேஷதாரி யார்? அவர் நல்லவரா, பொல்லாத சூழ்ச்சிக்காரா? அவரை நம்பலாமா, கூடாதா? அந்தப் பயங்கர மகா கபால பைரவர் மாரப்பன் காதோடு, சிவனடியாரைப் பற்றி ஏதோ சொன்னாரே அது என்ன? கருணையும், தயாளமும் உருக்கொண்ட குந்தவி தேவி எதற்காக அச்சிவனடியார் மேல் வெறுப்புக் கொண்டிருக்கிறாள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதெல்லாம் பொன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அவன் ஒன்று நிச்சயம் செய்து கொண்டான். இந்தத் தடவை சிவனடியாரைச் சந்தித்ததும் அவரைத் தெளிவாக "சுவாமி! தாங்கள் யார்?" என்று கேட்டுவிட வேண்டியதுதான். திருப்தியான விடை சொன்னால் இளவரசர் திரும்பி வந்ததைப் பற்றியும், அருள்மொழி ராணி இருக்குமிடத்தைப் பற்றியும் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். தகுந்த மறுமொழி கூறித் தன் சந்தேகத்தைத் தீர்க்காவிட்டால் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்துவிட வேண்டும். இளவரசருக்கு உடம்பு குணமான பிறகு அவரை எப்படியாவது சந்தித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மேற்காரியங்களைச் செய்ய வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விதம் பலவிதமாக யோசனைகளும், தீர்மானங்களும் செய்துகொண்டு பொன்னன் வழி நடந்து சென்றான். ஆங்காங்கே போக்கு வண்டிகள் கிடைக்கும் போதெல்லாம் ஏறிக்கொண்டு போனான். கடைசியில், மாமல்லபுரம் போகும் குறுக்குப் பாதையிலும் இறங்கிச் சென்றான். காட்டின் மத்தியிலுள்ள சிற்பியின் வீட்டுக்குச் சிவனடியார் மிகத் தெளிவாக அடையாளங்கள் சொல்லியிருந்தார். அந்த அடையாளங்கள் புலப்படுகின்றனவா என்று வெகு கவனமாய்ப் பார்த்துக் கொண்டு அவன் போய்க் கொண்டிருக்கையில் அவனுக்கு எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு குதிரை வருவதையும், அது சட்டென்று குறுக்கே காட்டில் புகுந்து போவதையும் பார்த்தான். குதிரை மேலிருந்த வீரன் தன்னைக் கவனித்தானா இல்லையா என்பது பொன்னனுக்குத் தெரியவில்லை. ஆனால் இளவரசர் சொன்ன அடையாளத்திலிருந்து அவன் ஒற்றர் தலைவனாயிருக்கலாமென்று தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரும்ப வேண்டிய இடத்தைப் பற்றிச் சிவனடியார் கூறிய அடையாளங்கள் அதே இடத்தில் காணப்படவே பொன்னன் அங்கேயே தானும் திரும்பினான். படர்ந்து தழைத்திருந்த செடிகொடிகளை உராய்ந்து கொண்டு குதிரை போகும் சத்தம் நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வழியைத் தொடர்ந்து பொன்னனும் போனான். ஒரு நாழிகை நேரம் இவ்விதம் போன பிறகு கொஞ்சம் திறந்தவெளி காணப்பட்டது. அதில் ஒரு அழகான சிற்ப வீடு தோன்றியது. அவன் சாலையில் பார்த்த குதிரை அவ்வீட்டின் பக்கத்தில் நிற்பதைக் கண்டான். அதே சமயத்தில் அவ்வீட்டிற்குள்ளிருந்து சிவனடியார் வெளியே வந்து புன்னகையுடன் அவனை வரவேற்றார். பொன்னனோ, அளவில்லாத வியப்புடனும் திகைப்புடனும் அவரை உற்று நோக்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
</div>
koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-1379278682410879352016-03-24T05:57:00.002+01:002017-08-25T23:14:17.955+02:00வட்டம்பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் - முடிவு -பாகம் 14 -21<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;">
<img height="160" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEiF3N-oZrvV-6n6jD2PfTdIan6NgQRnbwyaDwX37wahAo8vcMPpSwx1JrSC9B3_EJbMazX1druzb23cZA-ckPRpA3N6V3VXscbvDdW98r5ar8GR85G01RP4inCTSMP2sbgTGqWJjjSrSFbrkEsA5RPDZhmL3nL-DF1um2JcaLv63aReTsHwceZCyoTr=" width="320" /></div>
<br />
<div>
<b style="font-size: x-small;"><span style="color: #3d85c6;">வட்டம்பூ அத்தியாயம் 14 </span></b></div>
<div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
அந்த அகலமான நதியில் முழங்காலளவு நீரில் இறங்கி வருகையிலேயே கே.பி. அக்கரையில் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டையும், அதன் பின்னணியில் பூத்துநின்ற வட்டம்பூ செடிகளையும் மிகவும் இரசித்தவராய், அது என்ன பூ என சேனாதியிடம் வினவினார். 'அதுதான் சேர் வட்டம்பூ!" என்று சேனாதி பதிலளித்ததும், அவர் சிரித்துக்கொண்டே 'இதற்கு வட்டம்பூ என்ற பெயரைக் காட்டிலும் இரத்தம் பூவென்று பெயர் வைத்திருக்கலாம்!" என்று சொன்னவர் நடப்பதை நிறுத்தி, 'இந்தப் பூவையும் இரத்தம்போன்ற அதன் நிறத்தையும் பார்த்ததுமே நான் படித்து ரசித்த கதையொன்று எனக்கு ஞாபகம் வருகின்றது!" என்றார். காந்தி ஆவலுடன் 'சொல்லுங்கோ சேர்!" எனக் கேட்டபோது, ஆற்றினூடாக மெல்ல நடந்தபடியே அவர் அந்தக் கதையைக் கூறலானார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னே கடலாலும், உயர்ந்த மலைகளினாலும் வளைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பிரதேசத்தில் ஒரு கூட்டம் மக்கள் வாழ்ந்திருந்தார்களாம். நாளடைவில் அங்கு உணவு, நீர் ஆகியவற்றுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நீண்ட வறட்சியின் காரணமாக இந்த அவலநிலை ஏற்பட்டபோது அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். ஒருபக்கம் ஏறவே முடியாத குத்தென்ற உயர்ந்த மலைகள், மறுபக்கம் அலையடிக்கும் ஆழக்கடல். இன்னொரு பக்கம் அப்பிரதேசத்தை வளைத்துக் கிடந்த பயங்கரமான இருண்ட வனம். இவற்றால் வளைக்கப்பட்ட அந்த மக்கள் மத்தியில் வீரமும், துணிவும் மிக்க ஒரு இளைஞன் இருந்தான். எவருமே இதுவரையில் நுழைந்திராத, நுழைய அஞ்சிய அந்தக் கொடிய வனத்தைக் காட்டி அவன் சொன்னான். 'இங்கிருந்தாலும் நாம் சில நாட்களில் பட்டினியால் இறந்து போவோம்!.. வாருங்கள்! இந்தக் காட்டினுள் நுழைந்து வழி சமைப்போம்!.. இந்தக் காட்டுக்கும் அப்பால் நிச்சயமாக ஒரு புதிய, ஒளிமிக்க, வளம்படைத்த உலகம் இருக்கின்றது!" என அழைத்தான். ஆனால் மக்களோ அந்தக் காட்டினுள் பிரவேசிப்பது என்று நினைக்கவே பயந்தனர். சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவர்களுடைய முன்னோர்கள் அவர்களுக்கு அந்தக் காட்டின் பயங்கரத்தைக் கூறிப் பயமூட்டியிருந்ததனால், அவர்கள் தாம் செத்தாலும் பரவாயில்லை, அந்தக் காட்டிலாவது போவதாவது என மறுத்தார்கள். ஆனால் அந்த இளைஞனோ தனது எண்ணத்தைக் கைவிடவில்லை. அந்தக் கொடிய வனத்துக்கும் அப்பால் வளமான வாழ்க்கை உள்ளது என நிச்சயமாக நம்பினான். அயராது பேசிப் பேசி, தன் வயதை ஒத்த இளைஞர் சிலரை ஒன்றுகூட்டி, அந்தக் காட்டில் நுழையப் புறப்பட்டான். மக்களில் பலர் இந்த இளைஞர்களைக் கண்டித்தனர். சிலர் கேலி செய்தனர். மற்றும் பலர் ஏனோதானோ என ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அந்த இளைஞனோ நெஞ்சுரம் மிக்கவனாய், முன்னே சென்று அந்தக் காட்டினுள் நுழைந்து, எதிர்ப்பட்ட பற்றைகளையும், செடிகளையும் வெட்டிச் சரித்தவாறு வழி சமைத்துக்கொண்டே சென்றான். வெகுதூரம் அவர்கள் இவ்வாறு வந்துவிட்டபோது, ஒரு பயங்கரமான இருள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அந்த அந்தகாரத்தில் சிக்கிய இளைஞனுடைய நண்பர்கள் திகிலடைந்து போயினர். வந்தவழியே திரும்பிச்சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் எனச் சொல்லிக்கொண்டனர். இந்நேரம் அவர்கள் இதுவரை முன்னர் கேட்டிராத அந்நியமான ஒலிகளும் பயங்கர ஓசைகளும் கேட்கவே, அவர்கள் பின்வாங்கித் தட்டுத்தடுமாறி அந்த இருளைவிட்டு ஓடமுயன்றபோது, அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த இளைஞன் அவர்களைத் தடுத்து, 'இந்த இருளும் அந்தகாரமும் தற்காலிகமானவைதான்! இந்தப் புதிய சத்தங்கள் நமக்கு அந்நியமானதால் எமக்குப் பயத்தை உண்டுபண்ணுகின்றன, வாருங்கள், மெல்ல மெல்ல, சிறிது சிறிதாகவேனும் முன்னே செல்வோம்!" எனக் கூறியபோது, அவர்கள் தங்களுக்குள்ளே ஒன்றுகூடி, இவனைக் கொன்றுபோட்டால் எமக்குப் பிரச்சனையில்லை! வந்தவழியே திரும்பிச்சென்று ஊரை அடைந்துவிடலாம்", என அவனை வெட்டிக் கொன்றுவிட்டனர். ஆனால் அவர்களுடைய வெட்டால் மார்பு பிளந்துபோய் மல்லாக்காகக் கிடந்த அவனுடைய உடலில் இருந்து ஒரு ஒளிக்கீற்று தெரிவதைக் கண்டு, அவர்கள் அண்மையில் சென்று பார்த்தபோது, இளைஞனுடைய மார்புக் கூட்டினுள் கிடந்த அவனுடைய இதயம் ஒளிமயமாய் பிராகாசித்ததாம்! அந்த ஒளியில் அவர்களைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது. அவர்களில் ஒருவன் இறந்துகிடந்த அந்த இளைஞனின் இதயத்தை எடுத்து, முன்னே நடந்து, 'வாருங்கள்! அவனுடைய இதயம் நமக்கு வழி காட்டுகின்றது! இந்த ஒளியிலேயே வழிசமைத்து அந்தப் புதிய உலகத்துக்குச் சென்றுவிடலாம்!" என்று கூறவே, அவர்கள் தைரியத்துடன் வழியமைத்து முன்னேறி, பாலுந்தேனும் பெருக்கெடுத்தோடும் ஒரு புதிய பூமியை வந்தடைந்தனராம். அங்கு, தம்மை வழிநடத்தி வந்த அந்த இளைஞனின் இதயத்தை மண்ணிலே புதைத்தபோது, நாளடைவில் அந்த இடத்தில் ஒரு செடி, இரத்தத் துளிகள் போன்ற சிவப்புப் பொட்டுக்கள் உடைய இதயவடிவத்தில் அமைந்த இலைகளுடன் தோன்றியதாம். அந்தச் செடியை இன்றும் பிளீடிங் ஹாட், அதாவது இரத்தம் பாயும் இதயம் என்ற பெயரில் அழைக்கின்றார்கள்", எனக் கே.பி கதையைக் கூறி முடித்தபோது, அவர்கள் பாலையடியிறக்க வெண்மணல் திட்டை அடைந்திருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் கே.பி க்கு அந்த இடம் மிகவும் பிடித்துப்போகவே, அவர்கள் அந்த வெண்மணலில் சற்றுநேரம் ஆறி அமர்ந்துகொண்டனர். கே.பி கூறிய கதையில் ஆழ்ந்து தன்னை மறந்திருந்த சேனாதி, அந்த வெண்மணலில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைக் கண்ணுற்றபோது களிப்பில் அவனுடைய இதயம் துள்ளியது. அவை நந்தாவினுடையவை, சில நிமிடங்களுக்கு முன்னராகத்தான் அவை இங்கே பதிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்த அவன், நந்தா தனக்காக இங்குவந்து காத்திருந்துவிட்டு, அந்நியர் வருகைகண்டு மறைந்திருக்க வேண்டும் என அனுமானித்துக் கொண்டான். அவளுடைய அழகிய பாதச்சுவடுகள் ஓடிச்சென்று வட்டம்பூச் செடிகளின் பின்னே மறைவதை அவதானித்துக் கொண்டே, அவன் நந்தாவின் காலடி மண்ணை கைகளில் ஆசையுடன் அளைந்துகொண்டான். கே.பியின் கதையைக் கேட்டுத் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த காந்தியின் நெஞ்சில் ஒரு வினா உதயமாகியிருந்தது. அமைதியாக அமர்ந்திருந்து அந்த அழகிய சுற்றாடலை இரசித்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் அவன் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'எனக்கென்னவோ இந்த அற்புதங்களில் நம்பிக்கை இல்லை சேர்! எங்காவது செத்துப்போனவனின் இதயம் ஒளி வீசுமா?" எனக் கேட்டபோது கே.பி சிரித்துவிட்டுப் பதில் சொன்னார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'காந்தி!.. அந்தக் காலத்தில் ஏடோ, எழுத்தாணியோ இருக்கவில்லை.. அவர்கள் தங்கள் கதைகளை எழுதிவைப்பதற்கு!.. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு, பின் அவர் தன் பிள்ளைகளுக்கு அந்தக் கதையைக் கூறி, இப்படிக் கர்ணபரம்பரையாகவே இந்தக் கதைகள் நம் முன்னோர்கள் மத்தியில் பரவி, நிலவி வந்திருக்கின்றன. உண்மையில்.. அந்த வழிகாட்டியான தலைவன் தன் இதயத்தில் உதித்த உயர்ந்த, புதிய, முற்போக்கான கருத்துக்களைத் தனது மக்கள்முன் வைத்தபோது, அவர்கள் அவனை நம்பாது கொன்றுவிட்டிருந்தனர். பின்னர், அவனுடைய உயிர்த்தியாகம், அவனுடைய உன்னத கருத்துக்களை அவர்கள் பின்பற்றி நடக்கச் செய்திருக்கின்றது. இந்தக் கதை பரம்பரை பரம்பரையாகச் செவிவழிக் கதையாக வருகையில், கற்பானா சக்தி உiடையவர்களும், அந்தக் கருத்துக்கள் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியவேண்டுமென விழைந்தவர்களும், அந்தக் கதைக்கும், கருவுக்கும் கற்பனையான தெய்வீகங்களை இணைத்திருப்பர். எல்லா அவதார புருஷர்களின் கதைகளும் இவ்வாறுதான் காலப்போக்கில் மாற்றமடைந்தன என நான் எண்ணுகின்றேன். நாளடைவில் அவர்கள் சொன்ன உயர்ந்த, உன்னதமான கருத்துக்களையும், கொள்கைகளையும் கோட்டை விட்டுவிட்டு, அந்த அவதார புருஷர்களைத் தெய்வங்களாக்கி, கண்மூடித்தனமாய் சாரத்தை நழுவவிட்டு, வெறும் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் முதலிடம் கொடுத்து வாழ்கின்றனர் மக்கள்!" எனச் சொல்லிக்கொண்டே, செடியிலிருந்து தான் பறித்துக் கையில் வைத்திருந்த வட்ம்பூவைப் பார்த்த கே.பி சிந்தனையில் ஆழ்ந்துபோனார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின்பு சட்டென்று முகத்தில் ஒளிதோன்ற, 'காந்தி! இந்தப் பூவுக்கு வட்டம்பூ எனப் பெயர் வந்தது மிகவும் பொருத்தமே!" எனச் சிரித்தபோது, 'ஏன் சேர்?" என ஆவலுடன் கேட்டான் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'சொல்கிறேன் கேள்!" எனச் சுவாரஷ்யமாகத் தொடர்ந்தார் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வாழ்க்கை வட்டம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உனக்குத் தெரியும், மனித இனத்தின் ஆரம்பகாலந் தொட்டே அவர்கள் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், உயர்ச்சியும் தாழ்ச்சியும் மாறி மாறி சகடமாக, சக்கரம்போல வந்திருக்கின்றது. சுரண்டலும், துன்பமும், தன்னலமும் மிக்க இருளான காலகட்டத்தினுள் அவர்கள் வருகையில், திசை தெரியாமல், ஒளியில்லாமல், வழிதெரியாமல் அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் வீழ்ந்து பீறிப்போடுகின்றார்கள். இந்த அவலமும் துன்பமும், அவர்கள் மத்தியில் ஒரு தலைவனை, வழிகாட்டியை உருவாக்குகின்றன. அந்தக் காலத்தின் அவசர, அவசியத் தேவை அப்படியானதொரு தலைவனை உருவாக்குகின்றது. அதேசமயம் அவனுடைய உன்னதமான, பொதுநலம் பயக்கும் கருத்துக்களும், கொள்கைகளும் அவன் காலத்தில் வாழும் சமுதாயத்தையும் மாற்றவே செய்கின்றன. அனேகமாக இந்த ஒப்பற்ற தலைவன் தன் உயிரைத் தியாகம் செய்தே தனது கொள்கைகளை நிலைநாட்டி ஒரு புதிய மார்க்கத்தைக் காட்டுகின்றான். அவன் காட்டும் வழிழயைப் பின்பற்றி புதியதொரு நல்ல மாற்றத்தை அடையும் மனித இனம் காலப்போக்கில் அவனது கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் இருளுக்குள்ளும் அவலமிக்க அந்தகாரத்தினுள்ளும் சிக்கிக்கொள்கின்றது. ஆனால் அந்த அவலமே மீண்டும் ஒரு தலைவனை அவதரிக்க வைக்கின்றது அல்லது உருவாக்குகின்றது. இதுதான் வாழ்க்கை வட்டம் என்பதை மனித இன வரலாறு எமக்குச் சொல்கின்றது. ஆனால், நிச்சயமாக யாரோ ஒருவரோ, ஒரு இனமோ கொடுமையான துன்பங்களை அனுபவித்து தமது இரத்தத்தைச் சிந்தித்தான் ஒரு புதிய உலகம் பிறக்கின்றது. எனவே வாழ்க்கை வட்டத்தை எமக்கு ஞாபகப்படுத்தி நிற்கும் இந்த இரத்தவண்ண மலருக்கு, வட்டம்பூ என்ற பெயர் மிகப் பொருத்தமே!" எனச் சொல்லி முடித்தார் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இனிப் போவம் சேர்!" எனச் சேனாதி அழைத்தபோது அந்த இரம்மியமான இடத்தைவிட்டு அகலவே மனதில்லாமல் ஆசிரியர் கே.பி, காந்தி உடன்வர கிராமத்தை நோக்கி நடந்தார். நந்தாவதி எங்கு சென்றிருப்பாள் என்ற எண்ணமே மனதில் மேலோங்கி நிற்கச் சேனாதி, ஆசிரியரையும், காந்தியையும் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலைக்காட்டு ஓரமாக உயர்ந்து நின்றதொரு பட்டமரத்தில் இரவைக் கழித்து, இப்போதும் சுகமாக வெய்யில் காய்ந்தபடி இருந்த மயில் தோகையன் ஒன்று அகவியபோது கே.பி நின்று அதைப் பார்த்தார். பின்னர் மேலே தொடர்ந்து அவர்கள் நடந்போது, மலைக்காட்டுப் பக்கமாக மான் ஒன்று குய்யிட்டது. அது என்ன சத்தம்? என்பதுபோல் கே.பி சேனாதியைப் பார்த்தார். 'இதுதான் சேர், மான் குய்யிடுற சத்தம்!" என அவன் பதிலளித்தான். 'ஆகா! மானும் மயிலும், கானும் கடலும் சூழ்ந்த இந்தக் கிராமம் உண்மையில் அழகுதான்!" என அவர் மனம்விட்டுப் பாராட்டியபோது, சேனாதிக்கு மனதினுள் சிரிப்புத்தான் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏனெனில் மலைக்காட்டினுள் குய்யிட்ட மான் நிஜ மானல்ல! நந்தாதான் மான்போலக் குய்யிட்டவள் என்பது சேனாதிக்குத் தெரிந்திருந்தது. ஆசிரியரும், காந்தியும் காணாதவண்ணம் அவர்கள் பின்னே வந்த சேனாதி மலைக்காட்டுப் பக்கமாக கையை அசைத்து, நந்தா அங்கே மறைந்து நிற்பது தனக்குத் தெரியும் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு, ஒன்றும் அறியாதவன்போல் அவர்களைப் பின்தொடர்ந்தான் சேனாதிராஜன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலைக் காட்டினுள் ஒரு சிறிய பாறையின் பின்னே ஒளிந்து நின்று, சேனா கம்பீரமாக நடந்து செல்வதையே கண்கொட்டாது பார்த்து நின்ற நந்தாவதி, தனது இரகசிய சமிஞையை அவன் புரிந்துகொண்டு கையை அசைத்தபோது மகிழ்ச்சியில் மிதந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாலைக் கறந்து கொண்டுபோய் செல்லம்மா மனைவியிடம் கொடுத்துவிட்டு நின்ற சிங்கராயர், நாய்கள் குரைப்பதைக் கேட்டுப் பனைகளின் பக்கம் பார்த்தார். யாரோ ஒரு புதிய மனிதர் சேனாதியுடனும், காந்தியுடனும் வரவே, நாய்களை அதட்டி அடக்கிவிட்டு வளவு வாசலுக்கு வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்குள் அவர்கள் நெருங்கி வந்துவிட்டனர். 'அப்பு! இவர்தான் எங்களைப் படிப்பிக்கிற பானுதேவன் சேர்! ஆண்டாங்குளம் பாக்க வந்திருக்கிறார்!" என அறிமுகப்படுத்தினான் சேனாதி. 'அப்பிடியோ! அச்சா!.. வாருங்கோ வாத்தியர்!" என அன்புடன் அதிர்ந்த சிங்கராயரைச் சற்று வியப்புடனேயே பார்த்தார் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆறடி உயரம். தலையில் கட்டுக்குடுமி. சற்றே நரைதிரை தென்பட்டாலும் கருங்காலி மரமாய் மின்னிய வைரம்பாய்ந்த உடல். உறுதியான பல்வரிசையின் வெள்ளைச் சிரிப்பு. அதிரும் குரல். நிமிர்ந்த நடை. நேரிய பார்வை. இவை அத்தனையையும் உள்வாங்கிச் சிங்கராயரை வியந்தபடி அவரின் பின்னால் சென்ற கே.பி, முற்றத்தில் வந்து அக்கினிக் கொழுந்துபோல் நின்று, 'வாருங்கோ!" என்று முகம் மலர்ந்து வரவேற்ற செல்லம்மா ஆச்சியைக் கண்ணுற்றபோது, உன்னதமான சிலவற்றைத் தரிசிக்கும்போது பெறும் உணர்வை அனுபவித்தார் கே.பி ஆசிரியர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பசுவின் சாணமும், முருக்கமிலைச் சாறும், கரியும் சேர்ந்து அழுத்தி மெழுகி மினுக்கிய மால்திண்ணை ஆசிரியருக்குச் தண்ணென்று குளிர்ந்தது. பனையோலையால் அறுக்கையாக வேயப்பட்டிருந்த மால். பக்கத்தில், சிறிதாக ஆனால் மிகவும் தூய்மையாகவும் ஒழுங்காகவும் காணப்பட்ட அடுப்படி, வெண்மணல் முற்றத்தில் வேப்பமரத்துக்கு அருகே கம்பீரமாய் நின்ற நெல்போடும் கொம்பறை என்பவற்றின் நேர்த்தியை மனதுக்குள் வெகுவாகச் சிலாகித்த கே.பி., எளிமையும் தூய்மையுமாய் வாழும் இந்த முதிர்வயதுத் தம்பதிகள்தான் எவ்வளவு பாக்கியசாலிகள் என எண்ணிக்கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'மனுசி! வாத்தியாருக்கும் பொடியளுக்கும் பால் குடு! சேனாதி!.. இப்பதான் மலைக்காட்டுப் பக்கமாய் காட்டுக்கோழிச் சாவல் ஒண்டு கத்திக் கேட்டுது! பன்பையுக்கை நாலம்நம்பர் தோட்டா கிடக்குது.. எடுத்துக்கொண்டுபோய் வெடிவைச்சுக் கொண்டு வா!.. நீங்கள் பாலைக் குடியுங்கோ வாத்தியார்! கிணத்தடிக்குப் போய்க் குளிச்சிட்டு வந்திடுறன்.." என மளமளவென உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, சேனா அகமகிழ்ந்து போனான். இவர்களை எப்படிக் கழற்றிவிட்டு மலைக்காட்டுக்கு நந்தாவிடம் போவது என்று குழம்பிக்கொண்டிருந்த அவனுக்கு சிங்கராயரின் கட்டளை பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இருங்கோ வாத்தியார்! வந்திடுறன்!" என விடைபெற்ற சேனாதி, நாய்களையும் அழைத்தபடி துவக்குடன் மலைக்காட்டுக்கு ஓடினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாய்களுடன் சேனாதி ஓடிவருவதைக் கண்டுகொண்ட நந்தாவும் கிளைகளை விலக்கிக்கொண்டு மலைக்காடடோரம் இறங்கி வந்தாள். அவன் அருகில் வந்ததுமே ஆசையுடன் அவனுடைய கையைப் பற்றி, 'என்ன சேனா துவக்கோட வர்றீங்க! என்னைச் சுடவா போறீங்க?" எனக் கேலியாகக் கேட்டுச் சிரித்தாள். 'ஓம் நந்தா! நான் அப்போதை வரேக்கை இஞ்சை மலைக்காட்டுக்கை பொட்டைமான் ஒண்டு குய்யிட்டுது! அதைத்தான் வெடிவைக்க வந்தனான்!" என அவன் சிரித்தபோது, 'ஓகோ! அதுதான் நீங்க அந்த மானைப் பாத்து.. நிண்டுக்கோ!.. உன்னைச் சுடறதுக்கு துவக்கு எடுத்திட்டு வர்ரேன் என்று கை காட்டினீங்களாக்கும்!" நந்தா கேட்டபோது, இருவருமே கலகலவெனச் சிரித்துக் கொண்டனர். காரணமின்றியே சிரிக்க வைப்பதும், காரணமின்றியே அழவைப்பதுமான இளங்காதல், இந்த ஜோடிகளையும் விட்டுவைக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஆரு சேனா ஒங்ககூட வந்த?" என நந்தா கேட்டபோது அவளுக்கு விஷயத்தைச் சொன்ன சேனாதி, சிங்கராயர் இங்கு தன்னைக் கோழி வெடிவைக்க அனுப்பியதையும் கூறினான். 'ஆமா சேனா!.. வாங்க! அதோ அந்தப் பக்கந்தான் கோழி கத்திச்சு!" என்று கூறவே, நந்தாவதி காட்டிய பக்கம் அவளுடைய கையை விடாமலே பற்றிக்கொண்டு காட்டினுள் நுழைந்த சேனாவுடன் அணைந்தவாறே நந்தா சென்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுமார் ஐம்பது யார் தூரம் அவர்கள் காட்டுக்குள் சென்றதுமே நாய்களின் வரவுகண்டு கலைந்து கத்திக்கொண்டே மேலே பறந்த காட்டுக்கோழிச் சேவல், உயரே ஒரு மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, இனிமேல் உங்களால் என்ன செய்முடியும்? என்று கேட்பதுபோல், தலையைச் சரித்து நாய்களைப் பார்த்தது. அதன் கண்ணில் படாமல் நந்தாவதியையும் இழுத்துக்கொண்டு பதுங்கி வந்த சேனாதி, வெடிவைக்கக்கூடிய தூரத்துக்கு வந்ததுமே, நந்தாவை விட்டு மறைந்து நின்றவாறே துவக்கை உயர்த்திக் குறி பார்த்தான். மறுகணம் வெடியோசையில் அந்த இடமே அதிர்ந்தது. ஒரு வினாடியேனும் தாமதிக்காத சேனாதி மின்னல் வேகத்தில் சேவல் இருந்த மரத்தின்கீழ் ஓடிச்சென்று, குண்டடிபட்டு குப்புற விழுந்த சேவல் தரையில் விழுவதற்கு முன்னரே அதைத் தனது கையில் இலாவகமாக ஏந்திக் கொண்டான். இவையெல்லாம் அவன் சிங்கராயரிடம் கற்றுக்கொண்ட பாடம்! வெடிகேட்டு கோழியைக் கௌவிப் பிய்க்கச் சரேலென்று பாய்ந்து வந்த நாய்கள், ஏமாந்தவையாக சேனாவின் கையிலிருந்த சேவலைப் பற்றுவதற்குத் தொங்கிப் பாய்ந்தன. அவற்றைச் செல்லமாக அதட்டி விலகச் செய்துவிட்டு, சேவலைத் தலைக்குமேல் உயரப் பிடித்துக்கொண்டு வந்த சேனாதி, 'எப்பிடி நந்தா என்ரை வெடி!" என்று பெருமிதம் பேசினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நந்தாவுக்கு அவனுடைய வெடி, அவனுடைய குரல், அவனுடைய உதடுகள், அவற்றுக்கும் மேலே இலேசாக அரும்பத் தொடங்கியிருந்த இளமீசை அத்தனையுமே மிகவும் பிடித்திருந்தன. ஆசையுடன் அவனைப் பார்த்த நந்தாவதியிடம், 'வா நந்தா வீட்டை போவம்!" எனச் சேனாதி அழைத்தபோது, 'நீங்க இப்பிடியே போங்க! நா ஒருக்கா வூட்டுக்குப் போயிட்டு வந்திர்ரேன்!" எனக் கன்னங்குழியச் சிரித்துவிட்டு ஓடிமறைந்தாள் நந்தாவதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பழப்புளியிட்டு அழுத்தியழுத்தி தேய்த்துத் தங்கமாய் மின்னிய வெண்கல மூக்குப்பேணிகளில் பசும்பாலை விட்டு செல்லம்மா ஆச்சி மாலுக்குக் கொண்டு வந்தபோது, எழுந்து நின்று இரு கைகளினாலும் மூக்குப்பேணியை வாங்கிக்கொண்டார் ஆசிரியர் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இருங்கோ வாத்தியர்.. அவர் இப்ப வந்திடுவார்! நான் புட்டு அவிக்கிறன், சாப்பிடிலாம்!" என அவர்களிடம் சொல்லிவிட்டு செல்லம்மா ஆச்சி அடுப்படிக்குள் சென்றபோது, அவள் கொடுத்த பாலையே உற்றுநோக்கிய கே.பி, காந்தியைப் பார்த்து, 'இந்தப் பாலும் இங்கு வாழும் மக்களும் ஒன்றுதான்! இவர்கள் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள், இனிமையானவர்கள். கோபம் வந்தால் பால் பொங்குவது போலக் கொதித்துவிட்டு, பாலைப் போலவே சட்டென்று தணிந்து போவார்கள். அதிகமாக வெளியுலகம் தெரியாத இவர்களுடைய தேவைகளும், ஆசைகளும் எளிமையானவை. அவை எளிமையானவையாக இருப்பதனால் இலகுவில் நிறைவேறுகின்றன. எனவே இவர்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்துக்கும் சந்தோஷத்துக்கும் குறைவில்லை!" என்று சொன்னபோது காந்தி சட்டெனக் குறுக்கிட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வெளுத்ததெல்லாம் பாலெண்டு நினைச்சு எல்லாரும் எங்கடை பக்கத்திலை எளிமையாய் இருக்கிறபடியாத்தான் சேர், சில ஆக்கள் லேசிலை எங்களைச் சுறண்டி சீவிக்கிறாங்கள்!.. இவை இப்பிடியே ஒண்டும் தெரியாமல் இருக்க அவங்கள் ஏமாத்தி வாழுறாங்கள்! அதிகாரத்திலையும், பதவியிலையும் இருக்கிறவங்கள் எங்கடை ஆக்களை நெடுகத்தானே அடக்கி ஒடுக்கி அடிமையளாய் வைச்சிருக்கிறாங்கள்! அதுக்கு முதலிலை.. அவங்களுக்கு உதவியாய் இருக்கிற சில கோடாலிக் காம்புகளை அடிச்சு முறிக்கோணும்!.. குட்டக்குட்டக் குனியிறவனும் பேயன்!.. குனியக்குனியக் குட்டறவனும் பேயன்!.. இவங்களையெல்லாம் அழிச்சால்தான் எங்கடை சமுதாயம் உருப்படும்!" என ஆத்திரப்பட்டான் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'உனக்குப் போய் காந்தி எண்டு பேர் வைச்சினமே!" எனச் சிரித்தார் கே.பி. 'எங்களுடைய இலட்சியம் எங்களுக்கு முக்கியந்தான் காந்தி!.. ஆனால் நாங்கள் அந்த இலட்சியத்தைச் சென்றடைகின்ற வழி இன்னமும் முக்கியமானது காந்தி!.. இலட்சியங்களைப் போன்றே எமது வழிகளும் தூய்மையாக இருக்கவேணும்!.. காந்தி மகான் அஹிம்சா வழியைப் பின்பற்றித்தான் போராடி வென்றர்!" என்ற கே.பியை இடையில் மறித்துப் பேசினான் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'சேர்!.. அது விளங்கக்கூடிய, உணரக்கூடிய எதிரிக்குத்தான் பொருந்தும்!.. பன்றிகளுக்கு முன்னால் முத்துக்களைப் போடாதீர்கள்!.. அவற்றின் அருமை அவற்றுக்குத் தெரியாது, அவை முத்துக்களைப் பீறிப்போடும் எண்டு யேசு சொன்னதாய் நீங்கள்தானே சேர் அடிக்கடி சொல்லுவியள்!" என மடக்கினான் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தி இவ்வாறு வினவியபோது, 'உடனேயே பதிலளிக்காது சிந்தனையில் ஆழ்ந்த கே.பி பின்பு சிறிது நேரத்தின் பின்னர் பேசினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div>
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">'காந்தி! பலகோடி வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த மனிதவாழ்வு எனக்கு ஒரு முடிவில்லாத, நீண்ட நெடும்பயணமாகத் தெரிகின்றது! ஏற்றமும் இறக்கமும், பள்ளமும் படுகுழிகளும் கொண்ட பாதையில் முன்னே நகரும் மனித இனம், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமநிலத்துக்கு வரும்போது துன்பங்கள் அற்றதாய், சந்தோஷம் நிறைந்த ஒரு நிலையை அனுபவிக்கின்றது. இந்த நெடும்பயணம் நின்றுவிட்டதுபோல் தோன்றும் இந்தக் காலத்தில் மறுபடியும் சுரண்டலும், சுயநலமும் தலைதூக்குகின்றன. இந்த நிலையில் அங்கு வாழும் ஒருசிலர், குறிப்பாக இளைஞர்கள், இந்த நிலைக்கு எதிராக, இந்த அவலநிலையை மாற்றுவதற்குக் குரல் கொடுக்கின்றனர். தற்சமயம் வசதியாக வாழ்பவர்களுக்கு இந்த இளைஞர்களின் செயல்கள் பிடிக்காது! இவர்களைப் புரட்சிக்காரர் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் கண்டனஞ் செய்வார்கள். சௌகரியத்தை அனுபவிக்கும் வேறு சிலரும், நமக்கேன் பொல்லாப்பு! என ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் புரட்சி, மறுபடியும் மனித இனம் இன்னும் மேன்மையான நிலையை நாடித் தன் பயணத்தைத் தொடர்கின்றது எனலாம். இரத்தமும், துன்பமும், சித்திரவதைகளும் மலிந்த இந்தப் பயணத்தின் முன்னோடிகள் உனக்காகவும், எனக்காகவும் காத்திருப்பதில்லை காந்தி!.. இயேசு, மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர்கிங், இப்படிப் பல சமய, சமூக சீர்திருத்தவாதிகளையும் அவர்களுடைய வழிகளையும் நீ அறிவாய்தானே காந்தி! அஹிம்சைதான் அவர்களுடைய பலமான ஆயுதமாக இருந்தது. உடற்பலம் அற்றவர்கள்கூட அந்தப் புனித ஆயுதத்தைப் பயன்படுத்தி வெற்றிகாணக் கூடியதாகவிருந்தது."</span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஆனால் அவர்கள் யாவரையும் கொன்றுதானே சேர் போட்டாங்கள்!" எனக் குறுக்கிட்டான் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஆமாம்! உன்னதமானதொன்றை நாம் அடைவதற்கு அதேயளவு உன்னதமான இன்னொன்றை இழக்க ஆயத்தமாக இருத்தல் வேண்டும். இது இயற்கையின் எழுதா விதிகளில் ஒன்று காந்தி!" என்றார் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தி தனது மெலிந்த உடல்; இலேசாக நடுங்க, 'இவ்வளவு அறிவும், வழிகாட்டக்கூடிய வல்லமையும் கொண்ட நீங்கள் ஏன் சேர் ஒரு இயக்கத்தைத் தொடங்கி வழி காட்டக்கூடாது?" என உணர்ச்சி மேலிடக் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தி இவ்வாறு பதட்டப்பட்டுக் கேட்டபோது அமைதியாகவே பதிலளித்தார் கே.பி. 'காந்தி! உண்மையைச் சொன்னால், எனக்கே வழி எதுவெனச் சரியாகப் புலப்படவில்லை. உன்னுடைய இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றேதான்! நான் தீபங்களை ஏற்றி இருளை அகற்ற விரும்புகின்றேன். நீயோ யாவற்றுக்கும் தீ வைத்தே ஒளிகாணத் துடிக்கின்றாய்!" எனக் கே.பி சொல்லிக் கொண்டிருக்கையில் சிங்கராயர் கிணற்றடியிலிருந்து வந்தார். அதேசமயம் சேனாதியும் தான் வெடிவைத்த காட்டுச் சேவலைக் கையில் கொண்டு வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதைத் தனது கரத்தில் வாங்கிப் பார்த்த கே.பி, 'இந்த வனங்களில் வாழும் பிராணிகள்தான் எத்தனை அழகாக, ஆரோக்கியமாக இருக்கின்றன!" என வியந்தபோது சிங்கராயர், 'நானும் என்ரை வயதுமுழுக்கக் காட்டிலைதான் திரிஞ்சிருக்கிறன். ஆனால் ஒரு நொண்டி மரையையோ, கிழட்டுப் பிராணிகளையோ காணேல்லை!" எனக் கூறினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஓமோம் பெரியவர்! காடுகளில் வலிமை குன்றியவை, ஊனமானவை, முதுமை அடைந்தவை யாவும் வேறு விலங்குகளுக்கு இரையாகி விடுவதால் நீங்கள் அவற்றைக் காணவில்லைப் போலும்!.. காட்டில் வாழும் பிராணிகள் சதா எச்சரிக்கையுடனும், இயற்கைக்குக் கட்டுப்பட்டும் வாழ்வதாலேயே அவை இவ்வளவு அழகும், ஆரோக்கியமும் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன போலும்!" என விளக்கினார் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'நல்லாய்ச் சொன்னியள் வாத்தியார்!.. காட்டிலை வாழுற சீவன்கள் மட்டமல்ல.. இந்தக் காட்டுக்கை இருக்கிற நாங்களும் எப்பவும் கவனமாய்த்தான் சீவிக்கவேணும்! கொஞ்சம் கவலையீனமாய் இருந்தால் காடு வீட்டுக்கை வந்திடும்!.. பழையாண்டாங்குளத்துக் குழுவன் ஒண்டு இப்ப எங்களுக்குப் பெரிய இடைஞ்சலாய் வந்திட்டுது! அதைப்போலை ஒரு குழுவனை நான் என்ரை சீவியகாலத்திலை சந்திக்கேல்லை!.. இஞ்சை பாத்தியளே இந்தக் காயத்தை?.. அந்தக் கலட்டியனை நான் மடக்கப் பாத்தபோது அது துடையிலை வெட்டி என்னைக் கொல்லப் பாத்தது!.. என்ரை பட்டி மாப்பிளை நாம்பன்ரை கொம்பை முறிச்சுது!.. வாருங்கோ காட்டுறன்!.." எனக் கே.பியையும், காந்தியையும் அழைத்துச்சென்று, பின் வளவில் ஒற்றைக் கொம்பனாக நின்ற கேப்பையானைக் காட்டினார் சிங்கராயர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சின்ன யானையளவு பெரிதாய் நின்ற கேப்பையானைப் பார்த்தபோது ஆசிரியர் கே.பிக்கு, அந்தப் பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் எத்தனை அசுரபலமும், மூர்க்கமும் உடையதாக இருக்கும் என்பது புலப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கே இரண்டு பனைகளில் நீளமாக இழுத்துக் கட்டப்பட்ட மான்தோல் வார்களைக் காட்டிய சிங்கராயர், 'அண்டைக்கு என்ரை வார்க்கயிறு அறுந்தபடியால்தான் கலட்டியன் ஆளிலை வந்திட்டுது!.. அதுக்குத்தான் இண்டைக்கு ஒரு புது வார்க்கயிறு திரிக்கப்போறன்!.. " எனச் சிங்கராயர் சொல்லிக் கொண்டிருக்கையில் நந்தாவதி வந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்தே அவள் ஒரு சிங்களப்பெண் என்பதை உணர்ந்துகொண்ட கே.பி, இது யார்? என்பதுபோலச் சிங்கராயரைப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இதுதான் வாத்தியார் நந்தாவதி! இஞ்சை சேவையர் பாட்டியிலை வேலை செய்யிற கங்காணி குணசேகராவின்ரை மோள்!.. தாய் செத்தபிறகு கண்டியாலை வந்து இஞ்சை தேப்பனோடை நிக்கிறாள்.. அருமையான பொடிச்சி!.." எனச் சிங்கராயர் நந்தாவதியை அறிமுகப்படுத்தியபோது அவள் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பருவத்தின் தலைவாசலில் பூரித்து நின்று, ஒரு தேவதைபோல் தோன்றிய அவளுடைய பெயரைக் கேட்டதுமே காந்திக்குப் பொறிதட்டியதுபோல் ஒரு ஞாபகம் வந்தது. அன்று சேனாதிராஜன் மாணவர் ஒன்றியத்தில், 'நந்தா நீ என் நிலா!", என உருகிப் பாடியது நினைவில் பளீரிட்டது. அவன் திரும்பி வேலியருகில் காட்டுக்கோழியை உரித்துக் கொண்டிருந்த சேனாதியைப் பார்த்தான். நந்தாவதியை அவன் பார்க்கும் பார்வையிலேயே காந்தி விஷயத்தைப் புரிந்துகொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வாத்தியார்! நீங்கள் இண்டைக்கு காந்தியையும் கூட்டி;கொண்டு வந்தது நல்லதாய்ப் போச்சுது! வார்க்கயிறு திரிக்க என்னோடை சேர்த்து நாலுபேர் வேணும். நான் கயித்தைத் திரிக்க மூண்டுபேர் மூண்டு புரியைப் புடிக்கவேணும். நீங்கள் இந்த வேப்பமர நிழலிலை சாக்குக் கட்டிலிலை இருங்கோ. நான் கயித்தைத் திரிக்கிறன். நந்தாவதியும் வந்தது நல்லதாய்ப் போச்சுது!.. தம்பி சேனாதி!.. கெதியிலை கோழியை உரிச்சுக் ஆச்சீட்டைக் குடுத்திட்டு வா!.. கயித்தைத் திரிப்பம்!" எனச் சொல்லிக்கொண்டே சிங்கராயர் மளமளவென கயிறு திரிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளலானார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தி, சேனாதி, நந்தா மூவரும் ஆளுப்பொரு வார்புரியைப் பிடிக்க, உறுதியும் பருமனும்கொண்ட வார்க்கயிறு சிங்கராயரின் அனுவபம் மிக்க செயற்றினால் மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் கே.பி சாக்குக் கட்டிலில் அமர்ந்தவாறே வார்க்கயிறு உருவாவதை அவதானித்துக் கொண்டிருந்தார். சேட்டைக் கழற்றிவிட்டு வெறும் மேலுடன் வெகு எளிமையாகக் காணப்பட்ட அவருடைய தீட்சண்யம் மிக்க விழிகளைக் கவனித்த காந்தி, இவருடைய அறிவுக்கும், கல்விக்கும் எங்கேயோ உயர் பதவியில் இருக்கவேண்டியவர், ஏன்தான் இந்தக் காட்டுப் பகுதியில் வந்து கிராம வாழ்க்கையில் இன்பம் காண்கின்றார் எனச் சிந்தித்தான் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span></div>
<div>
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">தலைக்கு மேலே வந்துவிட்ட சூரியனின் கிரணங்கள் கடுமையாகத் தகித்தன. அந்த வெய்யில் தனக்குச் சுட்டதேயன்றி, சேனாதிக்கும் நந்தாவதிக்கும் நிலவுபோல் இருப்பதை நேரில்கண்டு வியந்தான் காந்தி. அவர்களின் விழிகள் அடிக்கடி சந்தித்து ஒன்றையொன்று கௌவிப் பின் பிரிந்துகொண்டிருந்தன. நாடு இருக்கும் நிலையில் இந்தக் காட்டுக்குள் இப்படியொரு காதலா? இதன் முடிவுதான் எப்படி இருக்கப் போகின்றது? என அவன் தனக்குள் எண்ணிக்கொண்டான்.</span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வார்க்கயிற்றைத் திரித்தவாறே சிங்கராயர், தான் கலட்டியனைப் பிடிக்கப்போகும் திட்டங்களை ஆசிரியர் கே.பிக்குக் கூறிக்கொண்டிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வாத்தியார்! எனக்குத் துடையிலை வெட்டின கலட்டியன் இப்ப பழையாண்டாங்குளத்து நடுப் புல்லுக்கை இருக்கிற தண்ணி மோட்டைக்கை கிடக்குது.. சேனாதி அதுக்கு வெடிவைச்ச குண்டு எங்கையோ பட்டு, அந்தக் காயம் ஆறத்தான் அது அங்கை கிடக்குது.. அந்தப் பெரிய குளம் முழுக்க ஆளுயுரப் புல்லு காடாய்க் காஞ்சுபோய்க் கிடக்குது.. கலட்டியன் கிடக்கிற நடுக்குளத்துக்குத் தண்ணி வாற பவுர் மட்டும் புல்லில்லாமல் ஒரு மணல் ஓடையாய் இருக்குது.. என்ரை திட்டம் என்னெண்டால், எட்டுப் பத்துப் பேராய்ப்போய், குளத்தைச் சுத்திவர ஒரே நேரத்திலை புல்லுக்கு நெருப்பு வைக்கவேணும்.. நெருப்பு நல்லாய்ப் பத்தி, மோட்டையைச் சுத்தி எரிய, கலட்டியன் தப்பி ஓடப்பாக்கும்.. எந்தப் பக்கமாய் அவர் ஓடுவார்?.. அந்தத் தண்ணிவாற மணல் ஓடைவழியாலைதான் அவர் ஓடித் தப்போணும்!.. வேறை வழியே இல்லை!.. அவர் அப்பிடி ஓடிவர, அவர் வாற வழியிலை நிக்கிற முதிரை மரத்திலை நான் வார்க்கயித்தோடை இருப்பன்!.. இந்தக் கயித்தின்ரை ஒரு பக்கத்தை முதிரை மரத்திலை கட்டியிருப்பன்.. தலைப்புச் சுருக்காலை கழுத்துக்குப் படுப்பன்!.. கலட்டியன் புள்ளை தப்பவே முடியாது!.. எப்பிடி என்ரை திட்டம்?" எனப் பெருமிதத்துடன் விளக்கினார் சிங்கராயர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சேனாதி தன் பாட்டனார் வகுத்திருந்த திட்டத்தைக் கேட்டுப் பிரமித்துப் போனான். சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பழையாண்டாங்குளம் அவன் கண்ணில் தெரிந்தது. ஆளுயுரத்திற்கு வளர்ந்து வைக்கோலாய்க் கிடக்கும் புல்லுக்காடு. அதன் நடுவே ஒரு சிறிய ஒழுங்கைபோல் செல்லும் மணற்பவர்... நாற்புறமும் புசுபுசுவெனப் பற்றிக்கொள்ளும் நெருப்பு, காட்டுத் தீபோலக் கொழுந்துவிட்டு எரிந்து கலட்டியன் கிடக்கும் மோட்டையை வளைத்துக்கொள்ள, அது மிரண்டுபோய், தப்புவதற்காக அந்த மணற்பாதை வழியாக ஓடிவரும் காட்சி அவன் மனதில் அப்படியே தெரிந்தது. அவன் தன்னருகில் நின்றுகொண்டிருந்த நந்தாவைக்கூட மறந்து, தன் பார்வையாலேயே சிங்கராயரைப் பார்த்துப் பாராட்டி மகிழ்நது கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்லம்மா ஆச்சியின் கைப்பாங்கில், எருமை நெய்யில் பொரித்தெடுத்த காட்டுக்கோழி இறைச்சியை வெகுவாக அனுபவித்து உண்டு மகிழந்தார் கே.பி. அவர் வயிறார உண்ட களைதீர, வேப்பமர நிழலில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தபின்னர், ஆசிரியரும் காந்தியும் தண்ணீரூற்றுக்குப் புறப்பட்டனர். செல்லம்மா ஆச்சி தன் கையாலே உருக்கிய புத்துருக்கு நெய்யில் ஒரு போத்தலை ஆசிரியருக்குக் கொடுத்தார். சிங்கராயர் சேனாதியை அழைத்து, 'வாத்தியாரை குமுளமுனைமட்டும் கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு, நான் சொன்னதெண்டு சொல்லி குமுளமுனை மணியத்திட்டை மூண்டுபோத்தில் வடிசாராயம் வாங்கிக்கொண்டு வா! நாளைக்கு குழுவனைப் புடிச்சபிறகு குணசேகராவின்ரை ஆக்களுக்குக் குடுக்கவேணும்! அவங்கடை உதவியில்லாமல் ஒரே நேரத்திலை குளத்தைச் சுத்தி நெருப்புக் குடுக்கேலாது!" எனக் கட்டளையிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் புறப்படும் சமயத்தில் மீண்டும் நந்தாவதி வந்தபோது, 'மங் கீல நங்கி!" என அவளுடைய பாஷையிலேயே ஆசிரியர் விடைபெற்றபோது, 'போயிட்டு வாங்க சார்!" என அவள் தான் பழகியிருந்த இனிய இந்தியத் தமிழில் கூறியபோது யாவரும் சிரித்துக் கொண்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர், ஆச்சி, நந்தாவதி மூவரும் தட்டிக்கண்டாயம் வரையில் வந்து வழியனுப்ப அவர்கள் புறப்பட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாலை வெய்யில் பொன்னாக அடித்துக்கொண்டிருந்த பசும்புற்றரையில் நடந்து பாலையடி இறக்கத்தை அடைகையில் சிந்தனையில் ஆழ்ந்தவனாய் நடந்துவந்த காந்தி திடீரென்று, 'சேர்! சிங்களவரும் தமிழரும் திருமணம் செய்துகொண்டால் இன ஒற்றுமை பிறக்குமா?" எனக் கேட்டபோது சிரித்த கே.பி, 'அப்படித் திருமணஞ் செய்துகொண்டால் பிள்ளைதான் பிறக்கும்!.. இன ஒற்றுமை பிறக்காது என்று ஒரு தமிழ்த் தலைவர் சொன்னது உனக்குத் தெரியுமா?" எனக்கூறி மீண்டும் சிரித்துக்கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோனதி சட்டடென உஷாராகி கே.பி மேலே சொல்வதைக் கேட்பதற்காகக் காதைத் தீட்டிக்கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாலையடியிறக்க வெண்மணல் மேட்டில் நின்ற கே.பி, 'காந்தி! ஒவ்வொரு இனத்துக்கும் தனித்துவமான சில குணாதிசயங்கள் உண்டு. பனையையும் தென்னையையும் நாம் மாங்கன்று ஒட்டுவதுபோல் ஒட்டிவிட முடியுமா? பனை பனையாகத்தான் இருக்க முடியும். தென்னை தென்னையாகத்தான் இருக்க முடியும். அது பனைக்கும் நல்லது, தென்னைக்கும் நல்லது. சிங்களவர்களும் தமிழர்களும் மனித இனமாகிய ஒரே குடும்பம் என்றபோதும் அவரவர் தத்தம் தனித்துவம் கெடாது வாழ்ந்து சமூகத்திற்குப் பயன்தர வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்!" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஆனால் எமது தனித்துவம்தான் பதவிவெறி கொண்டவர்களினால் நாளுக்கு நாள் நசித்துக்கொண்டு போகின்றதே சேர்! அப்படி எமது இனத்தையும் கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் அழிப்பவர்களை நாம் பொங்கியெழுந்துது அழிப்பதுதான் நியாயம் சேர்!" எனத் துடித்தான் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முகஞ்சிவக்க உணர்ச்சிவயப்பட்டு நின்ற அவனைத் தோளில் தட்டிய ஆசிரியர் கே.பி, 'காந்தி! இனவெறியை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டது யார்? இன்று எல்லா அதிகாரங்களிலும் நாட்டை ஆள்கின்ற அதிகராமே மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. அரசியல்வாதிகள், எமது நாட்டில் குறுக்குவழியில் மிகவிரைவாகப் பதவிக்கு வந்துவிட இனம், மொழி, மதம், சாதி போன்ற உணர்ச்சியைத் தாக்கும் விஷயங்களை மக்கள்முன் வைக்கின்றார்கள். இந்த விஷயங்களில் மக்களுக்கு இயல்பாக உள்ள அபிமானத்தையும், பற்றையும் இவர்கள் வெறியாக்கி அவர்களது வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். நாட்டின் பொருளாதார அவலம், சமூகச் சீர்கேடு என்பவற்றை மக்கள் கண்டுகொள்ளாதபடி சதா இந்த வெறிக்குத் தூபமிட்டுக்கொண்டே, பிரச்சனைகளைத் தீர்க்க மார்க்கமிருந்தாலும் அவற்றைத் தீர்க்க முயலாமலே அப்பிரச்சனைகளில் தமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள்!" எனக் கே.பி கூறியபோது, 'இப்படியான சமூகத் தூரோகிகளை உயிரோடு விட்டுவைக்கக் கூடாது சேர்!" எனக் குறுக்கிட்டான் காந்தி. 'அரசியல் ஒரு துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே ஏமாற்றியும், சுரண்டியும் வாழ்பவர்கள்தான் இன்றைய உலகில் பெரும்பான்மையினராக உள்ளனர்! சுயநலவாதிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் இந்த விஷயத்தில் நெருங்கிய உறவுக்காரரே! இந்த நிலைக்கு உண்மையான காரணம் மக்கள் மத்தியில் நிலவும் வறுமையும், அறியாமையுமே! மனிதன் ஒன்றில் தானாக உணர்ந்து திருந்தவேண்டும் அல்லது இன்னொருவர் சொல்வதைக் கேட்டுத் திருந்த வேண்டும்! இல்லையேல் தண்டனைகளுக்குப் பயந்து, பின்விளைவுகளுக்குப் பயந்து திருந்த வேண்டும்!" என்றார் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆற்றைக் கடந்து அவர்களுடன் கூடவே நடந்துகொண்டிருந்த சேனாதிக்கு இவர்களுடைய உரையாடல் ஓரளவு புரிவதுபோல இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கே.பி யை இடைமறித்துச் சட்டென்று சொன்னான் காந்தி: 'மனிதன் தானாகத் திருந்துவது நடக்காத ஒன்று! இன்னொருவர் சொல்லியும் இவர்களைப் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள்! அப்படியான சமய, சமூக சீர்திருத்தவாதிகளைத்தான் அவர்கள் கொன்று விடுகின்றார்களே!" எனக் கூறிக்கொண்டு வந்தபோது, 'நீ சொல்லும் மூன்றாவது வழியான தண்டனைகூட நெடுநாட்களுக்குப் பயனளித்ததாய் சரித்திரமே கிடையாதே!" என்றார் கே.பி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அப்ப என்ன சேர் செய்யச் சொல்லுறியள்? கையைக் கட்டிக்கொண்டு நடக்கிற அநியாயங்களைச் சும்மா பாத்துக் கொண்டிருக்கச் சொல்லறியளே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'எனக்கும்கூடத்தான் வழி எதுவென்று இன்னமும் புரியவிலலை காந்தி! மனித வரலாற்றின், இப்படியான இடர்சூழ்ந்த காலகட்டத்தில், பொதுநல நோக்கமும், உன்னத இலட்சியங்களையும் உடைய ஒப்பற்ற ஒரு தலைவன் தோன்றி, மக்களை நல்வழியில் இட்டுச்சென்று சுபீட்சமடைய வைப்பது, நிச்சயமான ஒரு விஷயமாக இருக்கின்றது. உன்னைப்போன்ற உன்னதமான மனம் படைத்த வாலிபர்களினதும், யுவதிகளினதும் இதயங்கள் இந்தக் கொடுமைகளில் கருகி, வதைகளினால் நசுக்கப்படும்போது, அவை வைர நெஞ்சங்களாகின்றன. காட்டுத்தீயில் கருகிய மரம் எப்படிப் பூமியின் அடியில் அழுந்தி அமுக்கத்தால் வைரமாகின்றதோ, அதைப்போன்றே இந்த இளநெஞ்சங்களும், இப்படியான சூழ்நிலைகளில் கறுப்பு வைரங்களாகி விடுகின்றன. வலிமை மிக்க இந்த வைரநெஞ்சங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி எத்தனையோ இலட்சியங்களை அடைந்துவிடலாம்! அவர்களை அப்படியானதொரு புனித போராட்டத்தில் ஈடுபடவைக்கும் ஒரு தலைவன் நிச்சயமாக எம்மத்தியில் உருவாகியே ஆகவேண்டும்! நாம் ஏன் நசுக்கப்படுகின்றோம், எவ்வாறு நசுக்கப்படுகின்றோம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதே, பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதற்கட்டம்! எமது வாலிபர்களுக்கும், யுவதிகளுக்கும் அறிவையூட்டி அவர்களை ஆயத்தம் செய்வதொன்றே இப்போது என்முன் உள்ள ஒரே வழியாக எனக்குத் தோன்றுகின்றது!" எனச் சொன்ன கே.பியின் முகம் சிந்தனையில் இறுகிப்போய்க் கிடந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தியின் மனதில் காலையில் ஆசிரியர் கே.பி, வட்டம்பூவைப் பார்த்துவிட்டுக் கூறிய அந்த வழிகாட்டியான வாலிபனின் கதை நினைவுக்கு வந்தது. இரத்தம் சிந்தித் தன் உயிரையே இழந்து தன் இனத்தை வாழவைத்த அந்த இளைஞனின் ஞாபகம் காந்தியின் மனதில் இறுகப் பதிந்து போயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் கே.பியையும், காந்தியையும் குமுளமுனையில் வழியனுப்பிவிட்டு சேனாதி ஆண்டாங்குளம் திரும்பியபோது கிராமத்தை இருள் கவ்விக் கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நந்தாவின் குடிசைப் பக்கமாகப் பார்த்தான். குப்பி விளக்கின் ஒளி தெரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயரும் அவனுமாக அன்று பகல் திரித்திருந்த பருமனான வார்க்கயிற்றில், கொக்கை போன்ற பலமான ஒற்றை மரைக்கொம்பை அடுத்துக் கட்டிவிட்டுப் படுக்கையில் சரிந்தபோது இரவு பத்து மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளரும் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
00000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b><div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">வட்டம்பூ அத்தியாயம் 15</span></b></div>
</b><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்தநாட் காலையில் சிங்கராயர் மிகவும் உற்சாகத்துடன் தோளில் புதிய வார்க்கயிற்றுடன் அடர்ந்த காட்டினூடாகப் பழையாண்டங்குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். கூடவே சேனாதி கையில் துவக்குடன் பின்தொடர, குணசேகராவும் அவனுடைய ஆட்களும், புல்லுக்குத் தீ வைப்பதற்காக கட்டிய தென்னோலைச் சூள்களை கொண்டு சென்றனர். அன்று வேட்டை நாய்கள் வேண்டாம் எனச் சிங்கராயர் அவற்றைக் கூட்டிச் செல்லவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பழையாண்டங்குளத்தை அடைந்து, அதன் கட்டில் ஏறிநின்று பார்க்கையில் பகல் பன்னிரண்டு மணியாகி விட்டிருந்தது. வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. வைக்கோலாய்க் காய்ந்து கிடக்கும் புற்காட்டையும், அதன் அகன்ற பரப்பின் நடுவே சற்றுப் பச்சனவாகக் காணப்பட்ட நீர் மோட்டையையும், தீர்க்கமாகக் கவனித்த சிங்கராயர், விடுவிடென ஒரு உயர்ந்த மரத்தில் ஏறி, மோட்டையை அவதானித்தார். கலைவு ஏதுமின்றி அங்கே கலட்டியன் தண்ணீரில் படுத்துக் கிடந்தது. திருப்திப் புன்னகையுடன் கீழே இறங்கி வந்தவர், காற்று விழுந்து வெம்மை அனல்விட்ட அந்தச் சமயமே தீ மூட்டுவதற்குச் சிறந்த நேரம் எனக் கணித்துக்கொண்டு, குணசேகராவையும் அவன் சகாக்களையும் அழைத்து, தணிந்த குரலில், செய்யவேண்டிய பணியை அவர்களுக்கு விளக்கினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள், தமது கையில் வைத்திருந்த தென்னோலைச் சூள்களுடன் குளத்தை வளைத்துச் சென்று, சிங்கராயர் குறிப்பிட்ட இடங்களில் நின்றுகொண்டனர். காற்று வீசாதபடியினாலும், உயர்ந்த புற்களின் நடுவே கலட்டியன் நீரில் கிடந்ததாலும், அது வரும் ஆபத்தை அறியாதிருந்தது. சிங்கராயர் தான் ஏற்கெனவே குறித்து வைத்திருந்த முதிரை மரத்தில் ஏறி, தனது புதிய வார்க்கயிற்றை அந்த மரத்தின் பருமானான கிளையொன்றில் சிக்கராகக் கட்டிவிட்டு, சைகையைக் காட்டினார். குணசேகராவும் அவனது ஆட்களும் ஒரே சமயத்தில் பற்றவைத்த நெருப்பு கிசுகிசுவென, கலட்டியன் கிடந்த மோட்டையைச் சுறு;றிப் பரவிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கொழுந்துவிட்டு எழுந்த தீ, மோட்டையை அண்மிக்க முன்னரே நெருப்பின் நெடியை உணர்ந்துகொண்ட கலட்டியன் வெகுண்டெழுந்து நாலாபக்கமும் ஓடி, தலையை உயர்த்தி சுவடித்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குள் மளமளவென ஆளுயுரத்திற்குப் பரவிய தீ மோட்டையடிக்கும் வந்துவிடவே, திகிலடைந்த கலட்டியன், சிங்கராயர் கணித்தபடியே மணற்படுக்கையாகக் கிடந்த ஆற்றுப்பவரில் வேகமாக ஓடியது. அதன் பின்னங்கால்களில் ஒன்று நொண்டுவதை அவதானித்துக் கொண்டே, மரத்தின்கீழ் கலட்டியன் வந்ததும் வீசுவதற்கு சித்தமாகச் சிங்கராயர் உஷார் நிலையில் இருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதோ அவர் இருந்த மரத்திலிருந்து சுமார் பத்து யார் தொலைவில் வந்துவிட்ட கலட்டியனுக்கு மரத்திலிருந்த சிங்கராயரின் வாடை விழுந்திருக்க வேண்டும். அது தன் பாதையில் சட்டெனத் தன் முன்னங்கால்களை ஊன்றி வேகத்தைக் கட்டுப்படுத்தித் தலையை உயர்த்தி, விழிவெள்ளை புரள சிங்கராயரைப் பார்த்தது. மறுகணம் கலட்டியன் சிங்கராயர் கற்பனை செய்யாதிருந்த ஒன்றைச் செய்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் தனது உயரத்துக்கு, அகலமாக, மரங்களை தறித்து தானிருந்த முதிரை மரத்தின் இருபக்கங்களிலும் அரண்போல அமைத்திருந்தார். கலட்டியனை மரத்தின் கீழாக வரச்செய்வதற்கு அவர் அந்த வெட்டுவேலியை அமைத்திருந்தார். நன்றாகக் காய்ந்துகிடந்த அந்த அரண்போன்ற அமைப்பும் இப்போது தீப்பிடித்துத் திமுதிமுவென எரிந்து கொண்டிருந்தது. சிங்கராயர் வியப்பு மேலிட்டவராய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கலட்டியன் தனது அசுரப் பலத்தைப் பிரயோகித்து, எரியும் அரணை மோதிப் பிளந்துகொண்டு கண்ணிமைக்கும் பொழுதினில் காட்டினில் பாய்ந்தது. அதன் உடலில் இருந்த முரட்டு உரோமம் தீயில் பற்றிப் பொசுங்கி மணத்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'சே! தப்பீட்டுது!" என உறுமிய சிங்கராயர் மரத்தால் இறங்கி, யாவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினார். கலட்டியன் தீக் காயங்களுடன் பழையாண்டங்குளத்துக்கு மேற்கே காடுகலங்க ஓடிக்கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயரின் முகத்தைப் பார்த்ததுமே செல்லம்மா ஆச்சிக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்த நேரம் அவரிடம் எதாவது கேட்டால் கொதித்துச் சீறுவார். எனவே ஒரு செம்பு நிறைய சில்லென்ற மோரை எடுத்துச்சென்று அவரிடம் கொடுத்தபோது, அதை வாங்கி மடக்கு மடக்கென பருகிமுடித்த சிங்கராயர் சற்றுக் கொதிப்பு அடங்கியவராய், 'மனுசி!.. இண்டைக்கும் கலட்டியன் தப்பீட்டுது! எப்பிடியும் அடுத்த விதைப்புக்கு முன்னம் அதை நான் புடிச்சுப்போடுவன்!.. இனி நாயளைக் கொண்டுபோய் கலட்டியனிலை ஏவிவிட்டுத்தான் புடிக்கப்போறன!" என உரத்துச் சொன்னார். அப்படியான முயற்சியில் உள்ள பேராபத்தை அறிந்த செல்லம்மா ஆச்சி உடனே வெளியே எதுவும் கூறாவிடினும், தன் மனதுக்குள் ஆதி ஐயனே! என வேண்டிக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span></div>
<div>
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">சேனா தண்ணீரூற்றுக்குப் புறப்படுகையில் மான்குட்டி மணியுடன் பனைகளினூடாக ஓடிவந்த நந்தாவதி, தன்னால் இப்போது பாலையடி இறக்கம்வரை வந்து வழியனுப்ப முடியாததையிட்டுக் கூறிவிட்டு, குடிசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தையிடம் ஓடிவிட்டாள்.</span></div>
<span style="font-size: xx-small;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சேனாதிக்கும் அன்று அவர்கள் கலட்டியனைப் பிடிக்க முயாமற்போனது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அடுத்த சனிவரை நந்தாவைக் காணமுடியாது என்ற எண்ணமும் அவனை உள்ளுக்குள் வருத்தியது. இத்தகைய மனநிலையில் உற்சாகம் குன்றியவனாய் குமுளமுனைக்கு வந்து, பஸ்சேறி தண்ணீரூற்றை வந்தடைந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளரும் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
000000000000000000000000000000</div>
<br /><div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">வட்டம்பூ அத்தியாயம் 16</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தண்ணீரூற்றில் சேனாதியின் தந்தை பூதன்வயல் தெருவில்; கடந்த ஆண்டு வெட்டித் வெளியாக்கிய செய்த ஐந்து ஏக்கர் காணி இருந்தது. அந்தப் புதுப்பிலவில் இம்முறை கச்சான் பயிர்செய்ய அவன் திட்டமிட்டிருந்தான். ஆடியில் பெய்கின்ற முதல் மழைக்க கச்சானை விதைத்தால் மூன்று மாதங்களில் அது விளைந்துவிடும். அதிற் கிடைக்கும் பணம், நெல்வயல்களுக்கு பசளை முதலியவற்றை வாங்க உபயோகப்படும் என்ற எண்ணத்தில், மந்துகள் வளர்ந்திருந்த அந்தக் காணியை அவன் மீண்டும் துப்பரவு செய்ய ஆரம்பித்திருந்தான். எனவே சேனாதியும் மாலையில் பாடசாலை விட்டதும் வந்து அந்த வேலைகளில் பங்குகொள்ள வேண்டியிருந்தது. அதனால் அடுத்தடுத்து இரண்டு சனிஞாயிறு அவனால் ஆண்டாங்குளம் செல்ல முடியவில்லை. வானொலியை வைத்துக்கொண்டு சினிமாப் பாடல்கள் கேட்பதில் பொழுதை ஒருவாறு போக்கிக்கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்திக்கும் பல்கலைக்கழகப் பிரவேசப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் தன் முழுக் கவனத்தையும் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதில் செலுத்திக்கொண்டான். ஆசிரியர் கே.பிஇ பரீட்சை எடுக்கின்ற மாணவர்களை இரவிலும் பாடசாலைக்கு அழைத்து இலவசமாகவே பாடம் நடத்தினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்று வாரங்களில் பூதன்வயல் புதுப்பில வெளியாக்கும் வேலைகள் முடிந்திருந்தன. இனிமேல் முதல்மழை விழுந்ததுமே பாத்தியமைத்து கச்சானை நடவேண்டியதுதான். ஒரு வெள்ளிக்கிழமை அந்த வேலைகள் யாவும் முடிவடைந்திருந்தன. வேலையைச் சிறப்பாகச் செய்துமுடித்த திருப்தியில், சிறிது கொண்டாட்ட மனநிலையில் இருந்த சேனாதியின் தந்தை அவனிடம் மாலை ஏழு மணியளவில் போத்தலையும் காசையும் கொடுத்து சாரயம் வாங்கி வரும்படி அனுப்பினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்களுடைய வீட்டுக்குச் சற்றுத் தொலைவில்தான் சாரயம் விற்கும் சின்னையரின் வீடு இருந்தது. அவருக்கும் சிங்கராயரின் வயதுதான் இருக்கும். ஆனால் சிங்கராயரைவிட சின்னையர் தளர்ந்தவராய், பல் விழுந்து பொக்கை வாயுடன் காட்சியளிப்பார். உடலால் வருந்தி உழைக்க முடியாமையால், அவர் தினமும் காலையில் முல்லைத்தீவுக்கு பஸ்ஸில் சென்று இரண்டு போத்தல் சாராயம் வாங்கிவந்து இலாபம் வைத்து விற்பார். சாராயம் வாங்கி வருவதுதான் அவருடைய வேலை. விற்பனைசெய்வது அவருடைய மகள்தான். சுமார் முப்பத்தைந்து வயதான அவளுக்குச் சிறுபிராயத்தில் இருந்தே இடுப்புக்குக் கீழே கால்களிரண்டும் வழங்காமல் போய்விட்டிருந்தன. இருப்பினும் தரையில் அரக்கி அரக்கிச் சென்றெ அவள் எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்துவிடுவாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போ சேனாதி அங்கு சென்றபோது சின்னையர் தனது சிறிய ஓலைக் கொட்டிலுக்குள், தொய்ந்து போனதொரு சாக்குக் கட்டிலில் தளர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் அவர் மாலைக் குளியலை முடித்திருக்க வேண்டும், நெற்றியில திருநீறு பளிச்சிட்டது. அவருடைய மகள் சேனாதியைக் கண்டதும்,'தம்பி இண்டைக்குச் சாரயம் முடிஞ்சுது! சில்வா மாமா பின்னேரமே சைக்கிளிலை முல்லைத்தீவுக்குப் போட்டுது! இப்ப வந்திடும்.. இருந்து வாங்கிக்கொண்டு போ!" என்றபோது, சேனாதி நன்கு பெருக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய முற்றத்தில் அமர்ந்துகொண்டான். தரையில் சின்னையரின் மகள் வீட்டுக்கும் அடுக்களைக்குமாய் கால்களை இழுத்துப் போய்வந்த அடையாளங்கள் தெரிந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குப்பிவிளக்கின் ஒளியில், சாக்குக் கட்டிலில் தொய்ந்துபோய் இருந்த சின்னையர் தனது மடியில் கிடந்த உடுக்கைத் தனது கையினால் மெல்ல வருடிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் அவர் இந்தப் பகுதியிலேயே பெயர்பெற்ற அண்ணாவியாய் இருந்தவராம். சதா காத்தான் கூத்தும், அரிச்சந்திராவும் போட்டுப்போட்டு நாடகங்களையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருந்த அண்ணாவியாருக்கு இப்போ எஞ்சியதெல்லாம் ஊனமாகிய அவர் மகளும், அவருடைய உடுக்குந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது வேலை முடிந்ததுமே சாக்குக் கட்டிலுக்கு வந்துவிடும் அவர் சிறிதுநேரம் கண்களை மூடிக்கொண்டே இருந்துவிட்டு பின் உடுக்கை எடுத்து அடித்துக் கொண்டே பாட ஆரம்பிப்பார். பற்கள் விழுந்துவிட்டதனால் பாடலின் சொற்கள் யாவருக்கும் எளிதில் புரியாது. அந்தப் பாடல்கள் தெரிந்த பழையவர்களுக்குத்தான் அவற்றை இரசிக்கமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சேனா இப்போது சாராயம் கொண்டுவரச் சென்ற சில்வா மாமாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, சின்னையர் தனது மடியில் வைத்து ஆசையுடன் வருடிய உடுக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாளலயம் தப்பாது மெல்ல எழுந்த உடுக்கின ஓசை உயர்ந்தும், தாழ்ந்தும், பம்மியும் ஒலிக்கையில், அந்த இசையில் ஒன்றிப்போனான் சேனா. அவனுக்கு அந்த உடுக்கின் ஓசையில், சின்னையர் தனது இளமைக்காலத்தை நினைத்து மகிழ்வதை, மீட்பதை உணர்ந்தான். பின்பு, கால் வழங்காத தன் பெண்ணின் வெறுமையான வாழ்க்கையை நிநை;து அழுவதை உணர்ந்தான். சின்னையரின் உடுக்கு ஓசை அவனுக்குப் பல சங்கதிகளை சொல்வதுபோன்ற மயக்கத்தில் இருந்தான் சேனாதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த மனமயக்கத்தில் நந்தாவின் இனிய மழலையும், இளந்தேகத்தின் நறுமணமும், இனிமையாகச் சுவைத்த அவளுடைய சிவந்த இதழ்களும் மறுபடியும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. கூடவே ஆசிரியர் கே.பியும் காந்தியும் பேசிக்கொண்ட விஷயங்களும் நெஞ்சில் வந்த நின்றன. இந்த சங்கதிகள் யாவுமே, உடுக்கோசையின் பின்னணியில் வார்த்தையில் சொல்லி விளக்கமுடியாத எல்லையற்ற சோகத்தில் தன்னை ஆழ்த்துவதை சேனாதி உணர்ந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது படலையைத் திறந்து தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் மீன்வியாபாரி சில்வா. இந்தப் பகுதியில் சற்று வயதான எல்லா சிங்களவரையுமே மாமா என்றுதான் அழைப்பார்கள். கிராமத்துக்கு இப்படி ஒரு சிங்களவர் இருப்பதே மிகவும் அபூர்வம். இப்போது, சில்வா மாமாவை ஏதோ முதன்முதலில் பார்ப்பதுபோன்று சேனாதி ஏறிட்டுப் பார்த்தான். நந்தாவின் உறவு இப்போ தமிழ்சிங்கள உறவுகளில் அவனை அக்கறை காட்டத் தூண்டியது. இதுவரை அவன் அரசியலையோ அல்லது உலோகாயுதமான விஷயங்களையோ சிரத்தையுடன் சிந்தித்ததே கிடையாது. வீட்டுக்கு வந்தால் சினிமாப் பாட்டு, பாடசாலைக்குச் சென்றால் படிப்பு, ஆண்டாங்குளம் போனால் மாடுகண்டு, வேட்டை எனக் காடும், மாடும், பாட்டுமே முக்கியமாக இருந்த அந்த இளங்குமரப் பருவத்துச் சேனாதிக்கு, உணர்வுகளை அனுபவிக்க முடிந்ததேயன்றி, அவற்றின் காரண காரியங்களைப் பகுத்தறியும் பக்குவம் இருக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சில்வா மாமாவும் ஒரு சிங்களவர்தானே! இவருக்குத் தனது ஊர், குடும்பம், மனைவி, பிள்ளைகுட்டி என எதுவிதத் தொடர்புகளோ உறவுகளோ இல்லையா? எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் சில்வா மாமா சின்னையர் வீட்டில்தானே இருக்கின்றார். யாருடனும் அதிகம் பேசாது ஒரு சன்னியாசிபோன்று தானும் தன்பாடுமாய் இருக்கும் இந்தச் சில்வா மாமாவின் வாழ்க்கையின் இரகசியம் என்ன? சின்னையரின் சப்பாணி மகளுக்கும் சில்வா மாமாவுக்கும் எதாவது உறவு இருக்குமா?.. அது சாத்தியமானதா?.. என, பல வடிவம் புரியாத வினாக்கள் அவனுடைய மனதை அலைக்கழிக்க, சேனாதி சாராயத்தை வாங்கிக்கொண்டு போனான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சின்னையரின் உடுக்கின் ஒலி வெகுநேரமாய் அவன் நெஞ்சுக்குள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அது சின்னையரின் மகளுக்காகவும், சில்வா மாமாவுக்காகவும், தனக்காகவும், நந்தாவதிக்காகவும் அழுது அரற்றுவது போன்று அவனுக்குத் தோன்றியது. வெதும்பிய இதயத்துடன் அவன் நித்திரையாயப் போனான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சின்னஞ்சிறு காட்டுக் கிராமமாகிய ஆண்டாங்குளத்தில் சிட்டுக்குருவி போன்று வாழ்ந்த நந்தாவதி, சேனாவைவிட வயதிற் குறைந்தவளாய் இருந்ததாலும், இன்னமும் குழந்தைத்தன்மை அவளிடம் குடியிருந்ததனாலும், தன் இயல்புக்கேற்ப எப்போதும் சந்தோஷமாகவே இருந்தாள். சேனாவின் அண்மைக்கும், அணைப்புக்கும் இயல்பாகவே ஏங்கிய அவளுடைய இதயத்தில் துன்பத்தின் சுவடே விழவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் தன் தந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு ஓடோடிப்போய் செல்லம்மா ஆச்சியுடன் இருந்துகொள்வாள். அவள் சொல்கின்ற பழையகாலக் கதைகளைக் கேட்டுச் சிரிப்பாள். சிலசமயம் ஆச்சியின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டே, சின்ன வயதில் சேனா செய்த குறும்புகளை ஆச்சியிடம் துருவித் துருவிக் கேட்டு மகிழ்வாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டுக்கு வந்து, மான்குட்டி மணியைக் கட்டிக்கொண்டு சேனாவுக்காக் காத்திருப்பாள். அவன் வராததுகண்டு, ஆச்சி கூறியதுபோல் அவன் கச்சான் பிலவில் வேலை இருப்பதனால்தான் வரவில்லை, அடுத்த சனி நிச்சயம் வருவான் என ஆறுதல்பட்டுக் கொள்வாள். சேனாவந்துவிடுவான், விரைவில் வந்துவிடுவான் எனக் குதூகலிக்கும் உள்ளத்துடன், கலகலவெனக் கிளுகிளுக்கும் காட்டு நதிபோல அவள் செல்லம்மா ஆச்சிக்கும், சிங்கராயருக்கும் வேண்டியவற்றைச் செய்வதிலே பெரும் இன்பத்தை அனுபவித்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளரும் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
00000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b><div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">வட்டம்பூ அத்தியாயம் 17</span></b></div>
</b><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த சனிக்கிழமை மாலையில் தாய் கண்ணம்மாவே சேனாவை ஆண்டாங்குளம் அனுப்பியிருந்தாள். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவனாக பஸ்ஸில் இருந்து இறங்கித் துடிக்கம் மனதுடன் ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தவனுடைய விழிகள் தற்செயலாகத் தரையைப் பார்க்கவே, அவன் அதிர்ந்து போனான். பரவைக் கடலோர ஈரத்தில் பதிந்திருந்தத அந்த அழகான சிறிய பாதச்சுவடுகள்? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம்! அவை நிச்சயமாக நந்தாவினுடையவைதான்! முன்னே குணசேகரா நடக்கு அவனைத் தொடர்ந்து அவள் நடந்துவந்த தடத்தைக் கண்டு, எங்கு போயிருக்கிறாள் நந்தா? இன்று காலையில்தான் அவர்கள் போயிருக்கின்றனர் என்பதை அடிச்சுவடுகள் புலப்படுத்தின. அவர்கள் திரும்பிவந்த அடிகள் தெரிகின்றனவா என அவன் தரையையே கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது, 'என்ன தம்பி தேடுறீங்க?.. ஏதாவது தொலைச்சிட்டீகளா?" என அந்தக் கடற்கரையோர மேட்டில் குடிசைபோட்டு வாழும் சாகுல்கமீது, கையில் இறால் வலையுடன் வந்துகொண்டிருந்தான். சேனாதி தன்னைச் சுதாரித்துக்கொண்டு, 'ஒண்டுமில்லை காக்கா! ஆண்டாங்குளத்தாலை ஆரோ கனபேர் காலமை போய்க் கிடக்கு.. அப்புவும் எங்கையோ போட்டாரோ எண்டு அடிப் பாக்கிறன்!" என்றான். 'அவங்க காலையிலை போகல்லை தம்பி!.. மத்தியான பஸ்சிலைதான் போறாக.. ஒங்க அப்பு போகலை!.. குணசேகராவும், மவளும் மக்கைய பொடியளுந்தான் போறானுக... அடுத்த கிழமை எலச்சன் வரூதில்லை!... அதுக்கு வோட்டுப் போடத்தான் தங்க ஊருக்குப் போறாகபோல!" எனச் சாகுல்கமீது விளங்க்கப் படுத்தியபோது, வானமே இடிந்த தலையில் விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனான் சேனாதி. கமீதுவிடம் சொல்லிக்கொண்டு அவன் கனக்கும் இதயத்துடன் ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தான். வழமைபோல் அவனால் இன்று காலை பஸ்சில் வரமுடியவில்லை. அவனுடைய தகப்பனார் முள்ளியவளையில் விதைக் கச்சான் கட்டுவதற்கு அவனையும் அழைத்துச் சென்றிருந்தார். காலையிலேயே வந்திருந்தால் நந்தாவை அவள் ஊருக்குப் பொவதற்குமுன் கண்டிருக்கலாம்... கண்டிக்குப் போய்விட்டவள் ஒருவேளை இனிமேல் ஆண்டாங்குளத்திற்கே வராமல் இருந்துவிட்டால்!... என நினைக்கவே சேனாவின் இதயம் கலங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனுடைய உள்ளத்தைத் துன்பம் கௌவிக்கொண்டது போன்றே, ஆண்டாங்குளத்தை அவன் அடையும்போது இருள் கவிந்து கொண்டிருந்தது. சிங்கராயர் வீட்டிலும் எவரையும் காணாதது மேலும் திகைப்பை ஊட்டியது. பன்பையைத் திண்ணையில் வைத்துவிட்டு, தட்டிக் கண்டாயத்தடி மணலைக் கவனித்தான். சிங்கராயரும் செல்லம்மா ஆச்சியும் விண்ணாங்கம்வெளிப் பக்கம் போயிருப்பதை அவர்களுடைய காலடிகள் தெரிவித்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நந்தா போய்விட்டாள், அவள் இனி இங்கு வரவே மாட்டாள் என்ற எண்ணம் வளரவளர, அவனுடைய கால்கள் அவனையுமறியாமல் நந்தாவின் குடிசைப்பக்கமாக அவனை இட்டுச்சென்றன. குடிசையின் படலையில் ஒரு ஆமைப்பூட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. கால் போனபோக்கில் நடந்தவன், கிணற்றடியைக் கடந்து செல்கையில், அன்று நந்தா குளித்துவிட்டு நீர்முத்துக்கள் உருளும் நிலவு முகத்துடன் சந்தணமாய் மணத்ததும், இவன் நிலவுக்குப் பெயர் நந்தா என்று சொன்னபோது கன்னங்குழியச் சிரித்ததும் நினைவில் வந்து தீய்த்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காட்டு எல்லையின் மேலாகத் தெரிந்த கீழ்வானை நோக்கினான் சேனாதி. ஆம், இன்றும் அங்கு பூரணநிலவு ஒளிரக்கண்டு அவன் இதயம் அழுதது. அவன் மெல்ல நடந்து ஐயன்கோவில் வெட்டைக்குச் சென்று, அங்கே கிடந்த பாறையொன்றில் அமர்ந்தபடி, வானில் சிரித்துக்கொண்டே எழுந்துவரும் நந்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'நந்தா! நீ என் நிலா! நிலா!" என்ற அவனுடைய பாட்டு இதயத்தில் சோகம் சொட்டச்சொட்ட ஒலித்துக் கொண்டேயிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குணசேகரா தேர்தலில் வோட்டுப் போடுவதற்கு செல்லும் தனது சகாக்களுக்குச் சம்பளப் பணத்தை எடுத்துக் கொடுப்பதற்காகவே அன்று முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தான். நந்தாவதிக்கு அன்று காலையும் சேனா ஆண்டாங்குளம் வராதது பெரும் ஏமாற்றமாகப் போயிற்று. தந்தையுடன் தானும் முல்லைத்தீவுக்குச் சென்றால் ஒருசமயம் அவனைத் தண்ணீரூற்றுத் தெருவிலாவது பார்க்கலாம் என்ற ஆசையில், தானும் முல்லைத்தீவுக்கு வருகிறேன், சில துணிமணிகள் வாங்கவேண்டி உள்ளது எனத் தந்தையிடம் கேட்டபோது, அவனும் சம்மதித்து நந்தாவைத் தன்னுடன் கூடவே முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குணசேகரா தானும் கண்டிக்குச் சென்று தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. அவனுடைய அருமை மனைவியின் இழப்புக்குப் பின்னர் அவனுக்குக் கண்டியே பிடிக்காமல் போய்விட்டது. அவர்கள் சென்ற பஸ் தண்ணீரூற்றைக் கடந்து சென்றபோது ஆவலுடன் வெளியே பார்த்திருந்த நந்தாவதியின் கண்களில் சேனாதி தென்படாதது அவளுக்கு ஏமாற்றமாகிப் போய்விட்டது. எனவே அவள் சுரத்தில்லாமல், முல்லைத்தீவில் தனது அலுவல்களைக் கவனித்து, சம்பளப் பணத்தை எடுத்துப் பகிர்ந்து தனது சகாக்களுக்குக் கொடுத்து வழியனுப்பிய குணசேகராவுடன் இருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சேவையரைச் சந்திக்கவும், இந்த ஏற்பாடுகளைக் கவனிக்கவும் வெகுநேரம் எடுத்தமையால், அவர்கள் மாலை பஸ்சைத் தவறவிட்டிருந்தனர். எனவே குணசேகரா ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு, அளம்பில் கிராமத்தினூடாகக் குமுளமுனையை நந்தாவதியுடன் வந்தடைந்தபோது, பொழுது கருகிக் கொண்டிருந்தது. ஆண்டாங்குளத்துக்கு வந்தபோது இருட்டிவிட்டது. விண்ணாங்கம் வெளியில் விறகு சேர்க்கப் போயிருந்த சிங்கராயரும் மனைவியும் அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழமைபோலத் தனது சம்பள நாளன்று ஒரு சாராயப் போத்தலை வாங்கிக் கொண்டு வந்திருந்த குணசேகரா, அதைச் சிங்கராயருடன் சேர்ந்து அனுபவிக்கும் அவசரத்தில் தனது குடிசைக்குச் செல்லாமலே, சிங்காராயர் வீட்டுக்குச் சென்றுவிட்டான். நந்தாவதி கொண்டுவந்த பொருட்களைக் குடிசையில் வைத்துவிட்டு, குளித்துவிட்டு வருவதாக ஆச்சியிடம் சொல்லிச் சென்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் வன்னிச்சியாவயல் வளவுக் கிணற்றடிக்கு வந்தபோது, முழுநிலவு மேலே எழுந்து கொண்டிருந்தது. குளிப்பதற்காக துண்டை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, அவள் அந்த நிலவையும், அன்று நிலவுக்குப் பெயர் நந்தா என்று சொன்ன சேனாவையும் நினைந்து மனம் கசிந்தாள். மனம் சோர்ந்தவளாய், குளிக்கவும் மனதில்லாமல் அங்கு கிடந்த துணிதுவைக்கும் கல்மேல் அவள் துவண்டு போய் இருந்தபோதுதான் ஐயன் கோவிலடிப் பக்கமாகக் காற்றில் மிதந்துவந்த அந்தப் பாடல் அவளுக்குக் கேட்டது. சரேலென எழுந்து காதைத் தீட்டிக்கொண்டு கவனித்தபோது, 'நந்தா, நீ என் நிலா நிலா!" எனச் சேனாவின் குரல் கேட்டதுமே அவள் அந்தத் திக்கில் பறந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விரைந்து ஓடிச்சென்று அந்த இடத்தை அடைந்தபோது, அடக்கமாக ஆனால் அழுத்தமாக உள்ளத்தை உருக்கும் வகையில், நந்தா நீ என் நிலா, நிலா! என்ற சொற்கள் மனதை ஈர்க்கவே, அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு பாறையில் அமர்ந்து, வானத்து நிலாவைப் பார்த்தவாறே தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்த சேனாவைக் குழப்ப மனதின்றி, தான் சென்ற பாதையிலே அப்படியே நின்றுவிட்டாள் நந்தாவதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சேனாதியின் கம்பீரமான இனிமைசெறிந்த குரல் இந்த உலகத்தின் சோகத்தையெல்லாம் சுமந்துகொண்டு, பாலாய்ப் பொழியும் அந்த இரவின் தனிமையில் இசையாய்ப் பிரவகித்தபோது, நந்தாவதி தனது ஊனும் உயிரும் உருகும் ஒரு புதிய உணர்வில் அப்படியே நெகிழ்ந்து போனாள். அவளுக்கு அந்தப் பாடலின் முழு அர்த்தமும் புரியவில்லை. ஆனால் அடிக்கடி, பாசமும் சோகமும் தோய இசைத்த, நந்தா நீ என் நிலா! நிலா! என்ற வரிகள் மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தன. சேனா தன்மேல் வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தினை அந்நேரம் இதயம் பூரிக்கப் புரிந்துகொண்ட நந்தாவதி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனாள். நிலவில் பளபளத்த அவளுடைய அகன்ற கருவிழிகளில் கண்ணீர் குளமாகத் தேங்கிப் பின் செழுமையான கன்னக்கதுப்புக்களில் உருண்டோடி நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தது. மிகவும் உன்னதமானதொரு உணர்வை அனுபவிக்கும் இன்பவேதனையைத் தாங்க முடியாதவளாய் அவள் உடல் நடுங்கியது. இதயத்தின் ஆழத்திலிருந்து தனக்காகவும், சேனாவுக்காகவும் வெடித்துக் கிளம்பிய விம்மல்களை அடக்கமுடியாமல் அவள் அழுதபோது, அந்த அழுகையின் ஒலிகேட்டுப் பாட்டை நிறுத்திச் சட்டெனத் திரும்பிய சேனாதி திகைத்துப் போனான். அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூரணநிலவின் ஒளியிலே மார்புக்குக் குறுக்கே வெறும் துண்டு மட்டும் அணிந்து பளிங்குச் சிலைபோன்று நின்றிருந்த நந்தா அழுது கொண்டிருக்காவிட்டால் அது தன் மனப் பிரமையே என்றுதான் அவன் எண்ணியிருப்பான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது நந்நதாவேதான் எனக் கணத்தினுள் கணித்தவன் பாறையிலிருந்து குதித்து ஓடிவந்து அவளை இறுகத் தழுவிக் கொண்டான். அடக்கமுடியாத ஆதங்கத்துடன் அவனை ஆரத்தழுவிய நந்தாவதியின் கண்ணீரில் நனைந்த கண்களையும் கன்னங்களையும் தன் இதழ்களால் அழுத்திய சேனா, 'நந்தா! ஏன் நந்தா என்னை விட்டிட்டுப் போனனீ?" என மெல்ல முணுமுணுத்து பின் விசும்பி வெடித்துக் கதறியபோது, அவன் முகத்தை அப்படியே தன் மார்பில் சேர்த்து அழுத்திய நந்தாவதியின் இதயத்தில் தாய்மையுணர்வு சுரந்தது. அப்படியே அவனை இழுத்துத் தரையில் அமர்ந்துகொண்டே தன் நெஞ்சில் முகம்புதைத்து அழுது வெடித்தவனின் முதுகை ஆதரவாக வருடிய நந்தா, 'நா ஒங்களை விட்டுப் போகலையே சேனா! நா ஒங்களைவுட்டு போகவே மாட்டன்!" என அவனுடைய முகத்தை நமிர்த்தி, சின்னக் குழந்தையைத் தேற்றுவதுபோல் அவனுடைய ஈரமான விழிகளைத் தன் செவ்விதழ்களால் நந்தா அழுந்தத் துடைத்தபோது அமைதியடைந்த சேனாதி, அவளுடைய இளம் மார்பில் மறுபடியும் முகம் பதித்துக்கொண்டான். அவனை அப்படியே நெஞ்சார அணைத்துக்கொண்ட நந்தாவதி அந்தக் கணத்திலேயே, தாய்மையின் இயல்பெல்லாம் இயற்கையாகவே ஊற்றெடுத்து அவளுள் சுரந்து பெருக, அவனைக் குழந்தையாக்கித் தான் தாயாகிப் போனாள். இதுவரை காலமும் குழந்தையாக இருந்த நந்தா இப்போ சட்டென வயசுக்கு வந்துவிட்ட முதிர்ச்சியுடன், 'வாங்க சேனா! வூட்டுக்குப் போகலாம்! அவங்க தேடுவாங்க!" என அமைதியாக எழுந்து அழைத்தாள். அவளுடன் சேர்ந்து கிணற்றடியை நோக்கி நடந்தான் சேனாதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் குளிக்கும்போது, தான் அவனைப் பார்க்கும் ஆசையில் தந்தையுடன் சென்றதை நந்தா சொல்ல, தான் எப்படி மம்மது காக்கா நந்தாவதி ஊருக்குப் போய்விட்டதாகச் சொன்னதைக் கேட்டுத் துடித்துப்போனான் என்பதைச் சேனா சொல்லிக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நந்தா குளித்து ஆடை மாற்றியதும், தண்ணீர்க்குடத்தை இடுப்பில் ஏற்றியபடி, 'நா இப்பிடியே வூட்டுக்குப் போயிட்ட வாறன் சேனா!" என விடைபெற்றுக் கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிணற்றடியிலிருந்து ஒரே பாதையாகப் புறப்பட்ட ஒற்றையடிப் பாதை கிளைவிட்டு இருவேறு திசைகளில் பிரியும் இடத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து நடந்தார்கள். இருவருடைய இளநெஞ்சங்களும்; ஒரு நிறைவான, புனிதமான அமைதியை அடைந்தவையாய் சிலிர்த்துக்கொண்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்தநாள் முழுவதுமே நந்தா சேனாவைவிட்டுப் பிரியாமல் ஒன்றாகவே இருந்தாள். காலையில் சிங்கராயரும் குணசேகராவும் காட்டுக்குப் போய்விட்டிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போயிற்று. மாலையில் மான்குட்டி சகிதம் சென்று பாலையடி வெண்மணல் மேட்டில் நின்று, சேனாவின் உருவம் மறையும்வரை பார்த்திருந்து கையசைத்து விடைகொடுத்துக் கண்ணில் நீர்முட்ட வீட்டுக்குத் திரும்பினாள் நந்தாவதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளரும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
00000000000000000000000000000</div>
<br /><div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">வட்டம்பூ அத்தியாயம் 18</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேர்தல் முடிந்த அன்று இரவு வானொலியில் தேர்தல் முடிவுகளை இரவுமுழுவதும் விடியவிடிய ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். சேனாதிராஜனுக்குத் தேர்தல் முடிவுகள் முக்கியமாகப் படவில்லை. வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்ட இனிய சினிமாப் பாடல்கள்தான் அவனுடைய மனதை ஈர்த்தன. நிலவைப் பற்றிய பாடல்கள்தான் எத்தனை! அவை அத்தனையும் தன் நந்தாவுக்காகவே பாடப்பட்ட பக்திப் பாடல்கள் என்பதுபோல் சேனாதி இதயம் கனிந்து பரவசப்பட்டுக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்போ இந்த வாரம் முடிந்து அடுத்த சனிஞாயிறு வருமென நந்தாவின் நினைவிலேயே காலத்தைக் கழித்த சேனாதிகூடக் கலங்கும் வகையில், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்த நாட்களில் செய்திகளும், வாந்திகளும் அடிபடத் தொடங்கின. சிங்களக் காடையர்களினால் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட செய்திகள் உண்மையென உர்ஜிதமாயின.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாலைந்து நாட்களுக்குள் முல்லைத்தீவுக் கடற்கரையோரங்களில் வாடி அமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்கள் தமது வலை வள்ளங்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சாரி சாரியாகச் செல்வதையும் சேனாதி அன்று மாலையில் கண்டான். நந்தாவை நினைக்கையில் அவனுக்கு நெஞ்சு திக்கென்றது. ஒருவேளை குணசேகரா இந்தக் கலவர நிலைக்குப் பயந்து, நந்தாவுடன் முல்லைத்தீவுக்குச் சென்று இந்த லாரி ஒன்றில் ஏறிப் போய்விட்டிருந்தால் என்று நினைக்கவே அவனுக்கு நெஞ்சு பதறியது. கூடவே, ஆண்டாங்குளத்தில் அவர்களுக்குக் கெடுதல் விளைவிக்க யார்தான் உண்டு, குணசேகரா பயந்து செல்லவேண்டிய அவசியமே இல்லை, சிங்கராயரும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என அமைதி அடைந்தவனாய் அவன் தங்கள் கச்சான் பிலவை நோக்கிச் செல்கையில், வழியில் மீன்வியாபாரி சில்வா மாமா கையில் ஒரு சிறிய பெட்டியுடன் வருவதைக் கண்டான். அருகே வந்த அவரை வழிமறித்து, 'எங்கை மாமா போறியள்?" எனக் கேட்டான் சேனாதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'நாங் ஊருக்குப் போறது தம்பி!.. எல்லா இடத்திலும் கச்சால்தானே!" என்ற சில்வா மாமாவின் முகம் இருண்டு கிடந்தது. 'ஏன் சில்வா மாமா! இஞ்சை உங்களுக்கு என்ன பயம்?.. நீங்கள் கனகாலமாய் இஞ்சைதானே இருக்கிறியள்.. எல்லாருக்கும் உங்களைத் தெரியுந்தானே! பிறகேன் பயந்து போறியள்?" என ஆவலுடன் கேட்டான் சேனாதி. சில்வாவின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. 'ஓவ்! இஞ்சை எல்லாரும் மிச்சங் மிச்சங் நல்ல மனுசன்தானே தம்பி!.. ஆனா நாங் இருக்கிற வூடு சாரயங் விக்கிற வூடுதானே! இந்தச் சாராயத்தைக் குடிச்சிட்டுத்தானே இந்தக் காடையங்க கூடாத வேலை செய்யிறது! அங்க நம்ம ஜாதிக் காடையங்க இந்தமாதிரிக் கூடாத வேலை செய்ய இஞ்சை இருக்கிற நல்லவனுக்கும் கோபங் வர்றதுதானே!.. அதிங்தான் நா இப்ப போறது!" என்றான் சில்வா. 'இப்ப போனால் பிறகு திரும்பி வரமாட்டியளெ?" எனச் சேனாதி வினவியபோது, சோகம் ததும்பச் சிரித்தான் சில்வா. 'நம்மடை ஊரிலை எனக்கு யாரும் இல்லை தம்பி! நா சின்னப் பொடியன் சைசிலை இந்த ஊருக்கு வந்ததுதானே!.. கச்சால் முடிய நா வாறதுதானே!" எனச் சொல்லி விடைபெற்றான் சில்வா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோனதியின் மனம் மழைமூட்டம் போட்ட வானமாய் இருண்டு கிடந்தது. அம்மாவுக்கு இந்தப் பிரச்சனையைச் சொல்லி, ஒருக்கால் நாளைக்குக் காலமை ஆண்டாங்குளம் போய்ப் பாத்தால் என்ன? .. ஆமிக்காறரும், பொலிசுக்காறரும் கண்டபடி ஆக்களுக்கு அடிக்கிறாங்களாம்! அவங்கள் சிலவேளை ஆண்டாங்குளத்துக்கும் போவாங்களோ? எதுக்கும் இதைச் சொல்லி அம்மாவிட்டைக் கேட்டுக்கொண்டு காலமை ஆண்டாங்குளம போகவேணும்!.. எனத் திட்டமிட்டு, அந்தத் திட்டம் தற்காலிகமான ஆறுதலில் அமைதியடைந்தவனாய் சேனாதி கச்சான் பிலவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் பொழுதுபட்டு இருண்டு விட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டை நோக்கி நடந்து வந்தவன், சாரயம் விற்கும் அண்ணாவி சின்னையர் வீட்டருகில் வந்தபோது உடுக்கு அடிக்கும் ஒலிகேட்டு அங்கயே நின்றுவிட்டான். அந்த முன்னிரவுத் தனிமையில், எல்லையற்ற சோகத்தைப் பரவும் அந்த உடுக்கின் ஓசை அவன் மனதை எதுவோ செய்தது. அந்த வளவின் வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தான். முற்றத்தின் நடுவில் ஒரு போத்தல் லாம்பு சிந்தும் வெளிச்சத்தில் சாக்குக் கட்டிலில், கூனிய முதுகும் கவிழ்ந்த தலையுமாய் அண்ணாவி சின்னையர் உடுக்கு அடிப்பது தெரிந்தது. கூடவே முற்றத்தின் ஓரமாக மீன்விற்கும் பக்கீஸ் பெட்டியுடன் நிறுத்தப்பட்டிருந்த சில்வா மாமாவின் சைக்கிளுக்கு அருகில், வெறும் தரையில் அமர்ந்திருந்த சின்னையரின் சப்பாணி மகள், வெறித்த பார்வையுடன் அந்தச் சைக்கிளின் பின் சக்கரத்தை மெதுவாக ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் காட்சி சேனாதியின் மனதைக் கலக்கியது. கூடவே அன்று கே.பி ஆசிரியர் சிங்கள தமிழ்க் கலியாணங்கள் நடந்தால் பிள்ளைகள்தான் பிறக்கும், இன ஒற்றுமை பிறக்காது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. .. இஞ்சை பிள்ளiகூடப் பிறக்கவில்லையே!.. என நினைத்தவன், மெல்லச் சுற்றிக் கொண்டிருக்கும் சைக்கிள் சக்கரத்தைக் கவனித்தான். கே.பி பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டு வட்டம் பூக்களைக் குறித்து எதுவோ சொன்னதும், இப்போது புரியாமல் மனதைக் குழப்பியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீடுசென்றதும் தாய் கண்ணம்மாவிடம் நிலமையை விளக்கி, ஒருவாறு ஆண்டாங்குளம் செல்வதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு, சாப்பிட்டதாகப் பேர்பண்ணிவிட்டுப் படுக்கைக்குச் சென்ற சேனாதி வெகுநேரம் வரையிலும் தூங்காமல் விழித்துக்கொண்டே கிடந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தண்ணீரூற்றிலிருந்து மீன் வியாபரி சில்வா தனது ஊருக்குப் புறப்பட்ட அதே மாலைப் பொழுதில், சிங்கராயருடைய வளவில், முற்றத்தில் அமர்ந்திருந்த செல்லம்மா ஆச்சிக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தாவதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர் பெரியதொரு தேங்காய்ச சிரட்டையை அகப்பையாகச் செதுக்கி, அதற்கு மிக நீளமானதொரு பிடியை விண்ணாங்கம் தடியில் செய்துகொண்டிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயரையும் தாத்தா என்றே அழைக்கும் நந்தாவதி, அதைப் பார்த்து வியந்தவளாய், 'ஏன் தாத்தா.. அகப்பகை;கு இம்புட்டு நீளமான புடி?" எனக் கண்களை அகல விரித்தபோது, 'புள்ளை!.. அந்தக் கலட்டியனைப் புடிச்சு ஆடாமல் அசையாமல் கட்டி வைச்சிட்டு, நாலைஞ்சு நாள் இரை தண்ணியில்லாமல் பட்டினிபோட்டு வாடவிடுவன்!.. அதுக்குப் பிறகு அதுக்குப் பக்கத்திலை போய் இரவு பகலாய்ப் புகைபோட்டு, இந்த நீட்டு அகப்பையாலை அதின்ரை முகத்தைத் தடவித்தடவி அதின்ரை குழுக்குணத்தை மாத்தவேணும்!.. அதுக்குத்தன் இது!".. எனச் சிங்கராயர் விளங்கப் படுத்தும்போதே அவருடைய வேட்டை நாய்கள் ஐயன் கோவிலடிப் பக்கமாகப் பார்த்துக் குரைத்தன. அவற்றின் வித்தியாசமான குரைப்பை அவதானித்த சிங்கராயர் எழுந்துநின்று கண்களை இடுக்கிக்கொண்டு அந்தத் திசையில் பார்த்தார். எதையும் காணவில்லை. ஆனால் அவருடைய கூர்மையான செவிகளுக்கு மாட்டு வண்டிகள் வரும் ஓசை மெலிதாகக் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'மனுசி! வட்டுவன் தெருவிலை இரண்டு மூண்டு வண்டில் வரூதுபோலை கிடக்குது!.. நான் போய்ப் பாத்துக்கொண்டு எருமையளையும் சாய்ச்சுக்கொண்டு வாறன்!" எனச் சொல்லிவிட்டு, நாய்களையும் அழைத்துக்கொண்டு ஊரை வளைத்துச் செல்லும் அந்த வண்டிப் பாதையை நோக்கிச் சென்றார் சிங்கராயர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்லம்மா ஆச்சி கண்களை மூடியவாறே நந்தாவதி பேன் பார்ப்பதைச் சுகித்துக்கொண்டிருந்தாள். நந்தாவதியின் உள்ளம் சேனாவை நினைத்து நனைந்து கொண்டிருந்தது. அவளுடைய செவ்விதழ்களில், நந்தா நீ என் நிலா! நிலா! என்ற வரி மிக இலேசாக ஒலித்துக் கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர் வன்னிச்சியா வயல் பனைகளினூடாக நடந்துசென்று வண்டிப்பாதையை அடைந்தபோது, பாதை வளைவில் நான்கைந்து மாட்டுவண்டிகள் கொடிவிட்டு வரிசையாக வருவது தெரிந்தது. யாராக இருக்கும் என அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே வண்டிகள் அவரை நெருங்கிக் கொண்டிருந்தன. அந்த வண்டிகளில், நெல் மூடைகளுக்கு மேல் பெண்களும், குழந்தைகளும் கைகளில் பொருட்களுடன் அமர்ந்திருக்கக் கண்டார். கூடவே வண்டிகளோடு சில ஆண்கள் நடந்து வருவதையும் கண்டு வியப்படைந்தவராய் நின்றார் சிங்கராயர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்களின் முகங்கள் அடையாளம் தெரியுமளவிற்கு வந்ததுமே, .. அட கொக்குத்தொடுவாய்க் கந்தையன்!.. எனச் சிங்கராயர் தனக்குள் சொல்கையில், முதலில் வந்த வண்டி அவரருகில் நின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'என்ன கந்தையா! நெல்லு 5ட்டை முடிச்சொடை பெரிய பயணமாய்க் கிடக்கு!" எனச் சிங்கராயர் விசாரித்தபோது, 'உங்களுக்கு விசயம் தெரியாதுபோலை! எலெச்சன் முடிஞ்ச கையோடை நாடு முழுக்கச் சிங்களக் கலாதி தொடங்கீட்டுது!.. ஆரோ அறுவாங்கள் எங்கடை பக்கத்திலை சிங்களவங்கள் விட்டிட்டுப்போன மீன் வாடியளுக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள்!.. ஆமி பொலிசு முழுக்கச் சிங்களவங்கள்தானே!.. அவங்கள் இணடைக்கு இராவைக்கு வந்து எங்கடை வீடு வாசல் எல்லாத்துக்கும் நெருப்பு வைக்கப்போறாங்கள் எண்டு கதையாய்க் கிடக்கு!.. இதுக்கிடையிலை பதவியாச் சிங்களவரும் வந்து வெட்டுவாங்கள் எண்டு சனம் பயப்பிடுது!.. அதுதான் பொண்புரசுகளையும், புள்ளையளையும், விதை நெல்லையும் ஏத்திக்கொண்டு வாறம்!.. குமுளமுனை பொன்னாற்றை ராசு வீட்டிலைதான் சனமெல்லாம் போய் நிக்குது! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்ட சிங்கராயரின் முகம் சினத்தினால் இறுகியது. 'டே கந்தையா! அதுக்கு இப்பிடிப் பயந்து ஊரை விட்டிட்டே ஓடினால் வாறவங்களுக்கு அது வசதியாய் அல்லோ போகிடும்!.. உயிர்போனாலும் உங்கடை இடத்தை விட்டிட்டு ஒரு முழமெண்டாலும் அரக்கக் கூடாது! உங்களுக்கு வெக்கமில்லையோ?".. எனக் கர்ஜித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கந்தையரின் பின் நின்ற வாலிபர்களில் ஒருவன் சிங்கராயரைப் பார்த்து, 'நாங்கள் எங்கடை உயிருக்குப் பயந்து ஓடேல்ல அப்பு!.. பொண்டு புள்ளையளைப் பாதுகாப்பாய் ஒரு இடத்திலை விட்டிட்டு, உடனை திரும்பி ஊருக்குப் போகத்தான் போறம்!".. எனச் சற்றுச் சூடாகவே பதிலளித்தான். இதைக் கேட்ட சிங்கராயரின் முகம் மலர்ந்தது. 'அச்சா! அதுதான் ஆம்பிளக்கு அழகு!.. பயந்தால் ஒண்டும் சரிவராது! நீங்கள் போங்கோ! பொழுதுபடப் போகுது!" என அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய சிங்கராயர், திருக்கோணம் வயலில் நின்ற மாடுகளையும் சாய்த்துக்கொண்டு வீடு திரும்பினார். மாலையில் குமுளமுனைக்கு சாமான்கள் வாங்கச்சென்ற குணசேகராவை இன்னமும் காணவில்லையே என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் மாடுகளை அடக்கி, ஒல்லைகளுக்குள் எருமைக் கன்றுகளை அடைத்து, பட்டி Nவைலையை முடித்துக்கொண்டு திரும்பியபோது, முற்றத்தில் கவலையும், கலவரமும் மிக்க முகத்துடன் குணசேகரா உட்கார்ந்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'என்ன குணசேகரா, குமுளமுனையிலை என்ன புதினம்?" என்று சிங்கராயர் வினவியபோது, நாட்டில் நடக்கும் சம்பவங்களையிட்டுப் பயந்தவனாய்ப் பேசினான் குணசேகரா. 'நம்ம சிங்கள ஆக்கள் எல்லாங் போனதுதானே ஐயா!.. இனி முல்லைத்தீவுக்கு நாம போறது கஸ்டந்தானே!.. பஸ் ஓட்டமும் இல்தை;தானே!.. நம்ம நந்தாவதியோடை எப்பிடிப் போறது ஐயா!.. நாங் தனிய எண்டால் செத்தாலும் பறுவாயில்லைத்தானே!.. அது பாவங் சின்னப் புள்ளைதானே!" எனக் கலங்கினான் குணசேகரா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆச்சியுடன் அடுப்படியில் சமையலுக்கு உதவி செய்துகொண்டிருந்த நந்தாவதிக்கு நெஞ்சு திக்கிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர் செருமிவிட்டுச் சொன்னார்: 'குணசேகரா! இஞ்சை பார்! நான் குழுவன் வெட்டிக் காயத்தோடை கிடக்க நீயும் உன்ரை ஆக்களுந்தான் என்னை உங்கடை தோளிலை சுமந்துகொண்டு போய் உயிர் தந்தனீங்னள்! ந்ந்தாவதி என்னை புள்ளைபோலை!.. உனக்கோ அவளுக்கோ எங்கடை ஆக்களாலை ஏதும் ஆபத்து வருமெண்டால், என்னைக் கொண்டுபோட்டு என்ரை சவத்திலை மிரிச்சுத்தான் ஆரும் உன்னடிக்கு வரவேணும்!.. ஒரு பெட்டி தோட்டா வைச்சிருக்கிறன்!.. என்ரை நாலு நாயள் காணும்.. நாப்பது பேரைச் சரிக்கட்ட!.. நீ ஒண்டுக்கும் பயப்பிடாமல் இரு!.. இஞ்சை ஆண்டாங்குளத்துக்கு ஆர் வரப்போறாங்கள்!" என உணர்ச்சி மேலிடச் சொன்னார் சிங்கராயர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்கையில் நந்தாவதியின் இதயம் சற்று ஆறுதலடைந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அதிங் இல்லை ஐயா நாங் சொல்லுறது!.. நீங்க எண்டை அண்ணை மாதிரித்தானே!.. நா வாறபோது நாலைஞ்சு மாட்டு வண்டில் போனதுதானே.. அவங்க என்னைப் பாத்திட்டு.. அவங்களுக்கை கதைச்சது எனக்குக் கேட்டதுதானே!.. நாங்க சிங்களவனுக்குப் பயந்து எங்கடை ஊரை விட்டிட்டு போறம்.. இஞ்சை ஒரு சிங்களவன் இருக்கிறான்தானே! எண்டு கதைச்சது எனக்குக் கேட்டதுதானே! ஐயா.. என்னத்துக்கு வீண் கரைச்சல் உங்களுக்கு?" என்று அமைதியாகச் சொன்ன குணசேகரா, தொடர்ந்து, 'ஐயா! எனக்கு ஒரு யோசினை வந்ததுதானே!.. பழையாண்டங்குளம் பக்கம் ஒரு பத்துமைல் காட்டிலை போனால் பதவிய வருந்தானே! அது சிங்கள ஆக்கள் இருக்கிற ஊர்தானே! விடியப் போனால் மத்தியானம் போயிடலாந்தானே!" எனக் குணசேகரா கூறியபோது, நிலைமையை ஆறுதலாக எடைபோட்டார் சிங்கராயர். அவன் பயப்படுவதில் உள்ள நியாயம் அவருக்குப் புரிந்தது. குடிவெறியும் இனவெறியும் கண்ணை மறைச்சால் நல்லவன்கூடச் சிலசமயம் மிருகமாய் மாறிவிடுவான்.. அதோடை நந்தாவதி ஒரு இளம் புள்ளை! எனச் சிந்தித்த சிங்கராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய் கூறினார்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'நீ சொல்லுறது நாயந்தான்!.. ஆனால் நான் ஆருக்கும் பயந்து உன்னைக் காப்பாத்த ஏலாதெண்டு விடேல்லை!.. ஆனால் இவள் புள்ளையை நினைக்கத்தான் எனக்கு நீ சொல்லுறது போலை செய்யிறதுதான் சரியெண்டு படுகுது!", என்றவர் தொடர்ந்து, 'சரி! நீயும் நந்தாவதியும் இப்பவே போய் உங்கiடை சாமான்களை எடுத்துக்கொண்டு இஞ்சை வந்து சாப்பிட்டிட்டுப் படுங்கோ!.. கிழக்கு வெளிக்க முன்னம் நாங்கள் வெளிக்கிட்டால்தான் மத்தியானமளவிலை பதவியாவுக்குக் கிட்டப் போகிலாம்!.. போய் சாமான் சக்கட்டை எடுத்துக்கொண்டு வாருங்கோ!" என அவர்களை அனுப்பியபோது, நந்தாவதி பயமும், துன்பமும் மிக்கவளாய் கலவரப்பட்டுப் போனாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்றிரவு தனக்கு அருகிலேயே குணசேகiராவைப் படுக்க வைத்த சிங்கராயர் சொன்னார். 'இஞ்சை பார் குணசேகரா! நீயா நானோ லெச்சனுக்குத் துண்டுபோடப் போகேல்லை!... ஆனால் எலெச்சன் கலவரம் இந்தக் காட்டுக்கைகூட வந்திட்டுது!... எல்லாம் இந்த லெச்சன் கேக்கிறவங்கள் செய்யிற வேலை குணசேகரா!.. கிராமச்சங்க லெச்சன் வந்தால் சாதிப்புறிவு, ஊர்ப்புறிவு சொல்ல சனத்தைக் கிளப்பிவிடுவாங்கள்!.. யாழ்ப்பாணத்தான் வன்னியான் எண்டு பிரிவினை செய்வாங்கள்!.. பெரிய லெச்சனிலை சிங்களவன் தமிழன் எண்டு சொல்லிச் சனத்துக்கு விசரேத்தி துண்டுபோடப் பண்ணி வெண்டு போடுவாங்கள்!.. இந்தப் பேய்ச்சனம் வெட்டுக் குத்திலை இறங்கி அழிஞ்சுபோகுது!" என்றார். 'அது சரிங் ஐயா! நம்மடை ஆக்களுங் இந்தமாதிரித்தானே!.. ஆனா இந்த றஸ்தியாதிக்காறன்தானே இந்தக் கூடாத வேலை எல்லாங் செய்யிறது!.. எல்லாச் சிங்கள ஆக்களுங் கெட்வங்க இல்லைத்தானே ஐயா!.. மிச்சங்பேர் நல்லவங்கதானே!" எனப் பதிலளித்தான் குணசேகரா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுப்படி மோடையில் நந்தா படுத்திருந்தாள். வாசலில் செல்லம்மா ஆச்சி படுத்திருந்தாள். சேனாதி ஆண்டாங்குளம் வந்தால் வழமையாகப் படுக்கும் இடத்தில்தான் இப்போது நந்தாவும் படுத்திருந்தாள். சேனாவைப் பிரிந்து செல்லப் போகின்றோமே... மீண்டும் அவனை எப்போது காண்பது?... காணத்தான் முடியுமா? என்ற ஏக்கம் அவளுடைய நெஞ்சைப் பிழிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலங்க மலங்க விழித்தவளுடைய கண்களில் மேலே கட்டியிருந்த கொடியில், சேனாதியின் சாறம் தொங்கியது. சட்டென எழுந்து அதை இழுத்துத் தன் முகத்தை அதிற் புதைத்தாள் நந்தாவதி. அவனுடைய வாலிப உடலின் வாடை அந்தச் சாறத்தில் மணக்கவே அதைத் தனது மார்புடன் அணைத்து, ஆறாய்க் கண்ணீர் பெருகப் படுத்துக்கொண்டாள் அவள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளரும் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
000000000000000000000000000000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b><div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">வட்டம்பூ அத்தியாயம் 19</span></b></div>
</b><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கீழ்வானில் nவிடிவெள்ளி உதிக்கு முன்னரே சிங்கராயர் அவர்களுடன் புறப்பட ஆயத்தமானார். செல்லம்மா சோறுகறி சமைத்து ஒரு ஓலைப் பெட்டியில் போட்டுக் கொடுத்தாள். கண்ணீர் மல்கத் தன்னைக் கட்டிக்கொண்டு அழுத நந்தாவதியைக் கொஞ்சி, 'நீ போட்டுவா மோனை!.. உன்னை இந்த ஆண்டாங்குளம் ஐயன் எப்போதும் காப்பாத்துவான்!" எனக் கண்ணீருடன் விடைகொடுத்தாள் ஆச்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர் மறந்துவிடாமல் தனது பெரிய வார்க்கயிற்றை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டார். நீண்ட வில்லுக்கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு நாய்களுடன் முன்னே நடந்தார். குணசேகரா ஒரு கையில் துவக்கும் மறுகையில் சிறியதொரு தோல்பையுமாக பின்னே வர, நந்தாவதி தலையில் சாப்பாட்டுப் பெட்டியுடன் நடுவே நடந்து கொண்டிருந்தாள். அந்தப் பெட்டிக்கும் கீழ், தன் தலையில் சேனாவின் சாறத்தை நான்காக மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அதன் அண்மை அவளுடைய வதங்கிய இதயத்துக்கு ஓர் ஆறுதலை அளித்தது. புறப்படுகின்ற சமயத்தில், தானே அவனுடைய சாறத்தை எடுத்துச் செல்வதை அவனுக்கு உணர்த்தவும், தன் நினைவாக அவனிடத்தில் இருக்கவும், தன் கரங்களில் எப்போதுமே அணிந்திருக்கும் கறுப்பு வளையல்களைக் கழற்றி, அவன் வழமையாகச் சாறத்தைப் போடுகின்ற கொடியில், ஒரு சிறு நூலினால் கட்டிவைத்துவிட்டே வந்தீரந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொழுது உதிக்கும் சமயத்தில் அவர்கள் பழையாண்டங்குளத்தை அடைந்திருந்தனர். விரைந்து நடந்த சிங்கராயரைத் தொடர்ந்த நந்தாவதி களைத்துப் போனாள். ஆனால் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைந்து விடவேண்டும் என்ற ஆவல் குணசேகராவை உந்தித் தள்ளியது. நந்தாவோ எதிலுமே ஒரு பிடிப்பு இல்லாதவளாய் இயந்திரமாய் நடந்து கொண்டிருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலை பத்துமணி போல வழியில் குறிக்கிட்ட ஒரு நீர்மடுவில் அவர்கள் கைகால் கழுவிக்கொண்டு ஆச்சி தந்துவிட்ட கட்டுச்சோற்றை உண்டனர். சிங்கராயரும் குணசேகராவும் கையில் சமண்டலை இலைகளை வைத்திருக்க, நந்தா பெட்டிச் சோற்றைக் கறியுடன் பிசைந்து அவர்களுக்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயரும் குணசேகராவும் புகையிலை பிடித்து ஆறிக்கொள்கையில், சாப்பாடு கொண்டுவந்த பனையோலைப் பெட்டியைக் கழுவி, தான் உடுத்திருந்த துண்டின் முனையினால் ஈரம்போகத் துடைத்துவிட்டு, சேனாவின் சாறத்தை அதற்குள் பக்குவமாக மடித்து வைத்தாள் நந்தாவதி. அந்தப் பெட்டி செல்லம்மா ஆச்சி தனது கையாலேயே அழகுற இழைத்தது. அவளுடைய ஞாபகமாகப் பெட்டியும், சேனாவின் நினைவாகச் சாறமும் கிடைத்ததற்கு மகிழ்ந்து, அவற்றைப் பெரும் பொக்கிஷமாய் எண்ணிக்கொண்டாள் அந்தப் பேதைப்பெண்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதிரவன் உச்சிக்கு வந்து பின்னர் மேற்காகச் சரிந்தசமயம் அவர்கள் ஆண்டாங்குளத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தனர். சிலநிமிடங்களில் அவர்கள் ஒரு ஒற்றையடிப் பாதையைக் கண்டு அதன்வழி சென்றபோது, ஒரு வயல்வெளியை அவர்கள் கண்டனர். அங்கே தொலைவில் ஒரு உழவுமிசின் தெரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர் திரும்பிக் குணசேகராவையும், நந்தாவதியையும் பார்த்தார். 'பதிவயா வந்திட்டுது!.. அந்த உழவு மிசினடிக்குப் போனால்.. நீங்கள் ஊருக்கை போகிடிலாம்!.. பிறகு அங்கையிருந்து கண்டிக்குப் போகிலாந்தானே!.. ம்ம்.. நேரம் போட்டுது!.... இருட்டமுதல் நான் ஆண்டாங்குளம் போகவேணும்!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தாவதி கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டாள். சிங்கராயரின் பாதங்களடியில் முழங்காலிட்டு கைகூப்பி, கண்ணீர் ஆறாகப் பெருக அவரிடம் விடைபெற்ற நந்தாவதியின் தலையில் தன் கையை வைத்த சிங்கராயர், 'அழாமல் போட்டு வா அம்மா!" எனச் சொல்லிவிட்டு, குணசேகராவிடமிருந்து துவக்குத் தோட்டாவை வாங்கிக்கொண்டார். குணசேகரா பெண்களைப்; போன்று வாய்விட்டு அழுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'சரி! வாறன்!" எனச் சொல்லிச் சட்டெனத் திரும்பிக்கொண்ட சிங்கராயர் கண்ணிமைக்கும் பொழுதுக்குள் காட்டில் மறைந்துவிட்டதைக் கண்ணீர்த் திரையிட்ட விழிகளினூடாகப் பார்த்தனர் தந்தையும், மகளும். இபபோதும் முழந்தாளிலேயே நின்றிருந்த நந்தாவதியை ஆதராவாக எழுப்பி அணைத்துக்கொண்டு மேலே நடந்தான் குணசேகரா. அவனைப் பின்தொடர்ந்த நந்தாவின் கண்களில் இப்போதும் நீர் வழிந்து கொண்டுதான் இருந்தது. அவள் தனது நெஞ்சோடு இறுகச் சேர்த்தணைத்துக் கொண்டிருந்த சின்னப் பனையோலைப் பெட்டியை நனைத்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நந்தாவதியின் பாசம் இரும்பு இதயம் படைத்த சிங்கராயரையே சற்று நெகிழச் செய்திருந்தது. நெஞ்சிலிருந்து அதைச் சட்டென அகற்றிவிட்டு, சாயும் சூரியனைப் பார்த்து ஆண்டாங்குளம் இருக்கும் திசையைத் தீர்மானித்துக் கொண்ட அவர், அந்தத் திக்கில் நேரே காட்டில் நுழைந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில நிமிடங்கள் கழிந்திருக்கும். முன்னே சென்ற நாய்கள் திடீரென எதையோ துரத்துவதையும், பெருமிருகம் ஒன்று காடு கலங்கப் பாய்வதையும் உணர்ந்த சிங்கராயர், மெல்லோட்டமாக முன்னோக்கி ஓடினார். ஓடும்போதே அவருடைய கூர்மையான விழிகள் தரையைக் கவனிக்கத் தவறவில்லை. சொற்ப நேரத்திற்குள்ளாகவே நாய்கள் எகிறிப் பாய்ந்த இடத்தை அடைந்துவிட்ட அவர், அங்கே தனக்கு முன்பாகத் தரையில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைக் கண்டதும் குந்தியிருந்து அவற்றை மிகவும் கவனமாக அவதானித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது மெல்ல மெல்ல அவருடைய முகம் மலர்ந்தது. ஆமாம்! அத்தனை பெரிய காற்குளம்புகளைக் கொண்ட எருமை வேறு ஏதுமில்லை, பழையாண்டாங்குளத்துக் கலட்டியனே என அவருடைய இதயம் களித்தது. அவருடைய எண்ணத்தை உர்ஜிதம் செய்வதுபோன்று அந்த எருமை பின்னங்காலொன்று ;ழுபட ஓடியிருந்தது. இன்றைக்கு எப்படியும் கலட்டியனை மடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைய, அவர் உற்சாகத்துடன் அடிவழியே ஓடலானார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பதுங்கிப் பதுங்கி மறைவில் முன்னேறிய சிங்கராயருக்கு சற்றுத் தொலைவில் நாய்கள் குரைப்பது கேட்டது. அந்த நாய்களின் குரைத்தல் ஒலியிலேயே அங்கு நடப்பது இவருக்கு இங்கு புரிந்தது. கலட்டியன் நாய்களின் தொல்லை தாங்கமுடியாமல் ஏதோ ஒரு ஆழமான நீர் மடுவில் இறங்கி நிற்கின்றது. அவருடைய வேட்டை நாய்கள் இச்செய்தியை தமது குரைப்பொலி மூலம் தமது எசமானுக்குத் தெரியப்படுத்தின.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காற்றின் திசையைக் கவனத்திற் கொண்டு, தனது வாடை கலட்டியனுக்குப் போகாத வகையில், மரங்களின் மறைவில் விரைந்து சென்றார் சிங்கராயர். அங்கு நின்ற ஒரு பெரிய காட்டாமணக்கு மரத்தின்பின் மறைந்தவாறு பார்த்தபோது, கலட்டியன் ஒரு பெரிய மடுவில் நின்று நாய்களை முறைப்பதையும், மடுவைச் சுற்றிவந்த நாய்கள் ஆக்ரோமாகக் குரைப்பதையும் கண்டு ஆனந்தத்தில் மிதந்தார் சிங்கராயர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது ஆவல் நிறைவேறும் நாள் வந்துவிட்டதென மகிழ்ந்த அவர், மறைந்திருந்தவாறே துவக்கை நீட்டிக் கலட்டியனின் தலைக்கு மேலே, அதன்மேல் குண்டு பட்டுவிடாதபடி ஒரு சத்தவெடியைத் தீர்த்தார். வெடி தீரும்போதே சூ வென நாய்களை ஏவியவண்ணம் முன்னே பாய்ந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயரின் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்த வேட்டை நாய்கள் மிகவும் சாதுரியமானவை. துவக்குவெடி தீர்ந்ததும் திகிலடைந்த கலட்டியன் மடுவைவிட்டு வெளியே பாய்ந்தது. சிங்கராயரும் உரத்த குரலில் நாய்களை ஏவவே கலட்டியன் புயலெனக் காட்டில் பாய்ந்தது. கலட்டியனுக்குக் குண்டடி பட்டுவிட்டது, இனி மிக இலகுவாகப் மடக்கிப் பிடித்துவிடலாம் என்ற பிரமையை நாய்களுக்கு ஏற்படுத்தவே அவர் அந்தச் சத்தவெடியைத் தீர்த்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரைக் கண்ட வெருட்சியில் கலட்டியன் மேலும் மிரண்டு பாய, சிங்கராயரும் கூடவே துரத்தி வருவதைக் கண்டு புதிய உற்சாகம் பெற்றனவையாகத் துரத்தின வேட்டை நாய்கள். கலட்டியனுடைய பின்னங்கால் ஒன்று சேனாதியின் வெடிபட்டு பலவீனமடைந்திருந்தது. அதன் காரணமாக அதனால் வேகமாக வெகுதூரம் ஓடமுடியவில்லை. போதாக்குறைக்கு அது ஓடிய காட்டுப்பகுதியின் நிலம் சுனைத்து ஈரமாக இருக்கவே, கலட்டியனின் கால்கள் அதன் இராட்சத நிறையின் காரணமாக புதையத் தொடங்கிவிட்டன. வெகு சுPக்கிரமே வேட்டைநாய்கள் அதன் தொடையைப் கவ்விப் பற்ற ஆரம்பித்துவிட்டன. நான்கு நாய்களும் போட்டி போட்டுக்கொண்டு கடித்துக் குதற, பின்னாலேயே சிங்கராயரும் நிழல்போலவே ஓடிவரக் கலட்டியன் இன்னமும் வேகத்தை அதிகமாக்கி, கண்மண் தெரியாமல் ஓடியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயரின் முகம், கலட்டியன் பாய்கின்ற திசையை அவர் அவதானித்தபோது மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஆமாம்! அவருடைய அருமை நாய்கள், கலட்டியனை ஆண்டாங்குளம் பக்கமாகவே துரத்துவதைக் கண்டு அகமகிழ்ந்தவராய், தனது வேகத்தை மேலும் அதிகப்படுத்தி நாய்களையும் உற்சாகமூட்டி ஏவினார் சிங்கராயர். அவருடைய சிம்மக் குரல், நாய்களின் பயங்கர உறுமல்கள், கலட்டியனின் சூறாவளி வேகம் என்பவற்றினால் காடே அதிர்ந்தது. மந்திகள் மரங்களில் பயத்துடன் ஒட்டிக்கொண்டன. பறவைகள் கலைந்து சிதறிப் பறந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர் ஒருவரைத் தவிர வேறு யாருமே இப்படியானதொரு முயற்சியில் இறங்கவே தயங்குவார்கள். காலையில் இருந்தே வெய்யிலில் கிட்டத்தட்டப் பதினைந்து மைல்கள், அந்தப் பெரிய வார்க்கயிற்றைச் சுமந்த சிங்கராயர், இப்போது தனது துவக்கையும் தூக்கியவாறு ஓடிக்கொண்டிருந்தார். அடர்ந்த காட்டில் வழியே இல்லாத திசையில் இவ்வளவு பாரத்தையும் சுமந்து, கலட்டியனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட, சிங்கராயர் ஒருவரினாலேயே முடியும். இன்று எப்படியும் கலட்டியனை மடக்கிக் கட்டில் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கை வலுக்க வலுக்க, தனது வேகத்தை மேலும் அதிகரித்து நாய்களை ஏவிக்கொண்டிருந்தார் சிங்கராயர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தண்ணீரூற்றில் சேனாதிராஜன், 'இந்தக் கலவரநேரம் நீ போகவேண்டாம்!" என்று, காலையில் மனம்மாறிய தாய் கண்ணம்மாவைச் சரிக்கட்டிப் புறப்படுவதற்குள், காலை பஸ்நேரம் கடந்துவிட்டிருந்தது. பத்துமணி பஸ்சுக்காவது போகலாம் எனத் தெருவுக்கு வந்தவனுக்கு, பஸ் ஓட்டம் இல்லையென்பது பன்னிரண்டு மணியளவிலேயே தெரிந்தது. இனி வீட்டிற்குப் போனால் தாய் ஆண்டாங்குளம் போகவே விடமாட்டாள் எனத் தெளிவாக உணர்ந்த சேனாதி, தெருவிலேயே ஏதாவது டிரக்டர் வாகனமாவது குமுளமுனைக்குப் போகாதா எனக் காத்திருந்தபோது, நேரம் நழுவி ஒரு மணியாகி விட்டிருந்தது. இனிமேலும் காத்திருந்து பயனில்லை என உணர்ந்தவனுக்கு, ஏன் நடந்தே குமுளமுனைக்குச் சென்றால் என்ன என்று தோன்றவும், தன் எண்ணத்தைச் செயலாக்கினான். கொதிக்கின்ற வெய்யிலில் அந்த ஆறுமைல் தூரத்தையும் அவன் நடந்து குமுளமுனை மலைவேம்படிச் சந்தியை அடைந்தபோது, பொழுது சரிந்து நிழல் சாயத் தொடங்கிவிட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாலை மயங்குவதற்குள் நந்தாவைக் கண்டுவிடலாம் என்ற இனிய எதிர்பார்ப்புக்களுடன், எஞ்சிய இரண்டுமைல் தூரத்தையும் அவன் கடந்து, பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டை மிதித்தபோது, மாலை வெய்யிலின் உக்கிரம் தணிந்திருந்தது. ஆறாகப் பெருகிய வியர்வையைத் துடைத்து ஆற்றுநீரில் முகத்தைக் கழுவிக்கொண்டான் சேனாதி. கடைசியாக ஆண்டாங்குளத்தை விட்டுச் செல்கையில் நந்தா இந்த வட்டம் பூக்களின் அருகே நின்று, அழகாகச் சிரித்துக் கையசைத்துத் தனக்கு விடை தந்ததை நினைத்தவாறே சேனாதி வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பனைகளினூடாக விரைந்து வீட்டை அடைந்தபோது செல்லம்மா ஆச்சி தொடுவானத்தை வெறித்துப் பார்த்தவாறு வெறுந்தரையில் அமர்ந்திருக்கக் கண்டு திகைத்துப் போனான். ஆச்சியின் முகம் இப்படி இருண்டுகிடந்ததை அவன் ஒருபோதும் கண்டதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவளை நெருங்கிய சேனாதிக்கு ஆச்சி சொன்ன செய்தியைக் கேட்டதுமே இடி விழுந்தது போலாகிவிட்டது. அப்படியே அதிர்ந்துபோய் அமர்ந்துவிட்டான். ஆச்சிகூடத் தனது வழமைப்படி சேனா வந்ததுமே அவனை அழைத்துச் சாப்பிடச் செய்யாமல், பிரமை பிடித்தவள்போல் இருந்தாள். துயரிலும், களைப்பிலும் துவண்டுபோன சேனாதி ஒன்றுஞ் செய்யத் தோன்றாது, தான் வழமையாகப் படுக்கின்ற அடுக்களை மோடையில் போய் விழுந்தான். அந்தத் திண்ணையின் தண்மை அவனடைய கொதிக்கும் மனதுக்கும், உடலுக்கும் சற்று நிம்மதியைத் தந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளரும் </div>
<br />0000000000000000000000<br /><br /><div style="text-align: justify;">
<b><span style="color: #3d85c6;">வட்டம்பூ அத்தியாயம் 20 - 21</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மத்தியானம் கலட்டியனை விரட்டத் தொடங்கிய சிங்கராயர், இப்போ பொழுது சயாயும் சமயத்திலும் தனது வேகத்தைச் சிறிதும் குறைக்காமல், நாய்களை ஏவியபடியே தொடர்ந்து கலட்டியனின் பாதையில் ஓடிக்கொண்டிருந்தார். நாய்களும் வெகுவாகக் களைத்திருந்த போதிலும், ஆண்டாங்குளம் சமீபித்துவிட்டதை உணர்ந்து, கலட்டியனை விடாமல் துரத்தின.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் இப்போ நன்றாகக் களைத்து விட்டிருந்தது. வியர்வையில் கன்னங்கரேலென மினுமினுத்த அதன் உடலில், நாய்களின் கோரமான பற்கள் பிடுங்கிய இடங்களிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது. செவிகள் இரண்டும் அடிக்கடி நாய்கள் கடித்துப் பிடுங்கியதால் இரணமாய்ச் சிதைந்து காணப்பட்டன. வாயில் நுரைதள்ள, சோர்ந்துபோன கலட்டியன் எங்காவது நீர்நிலை தென்படாதா, அதில் இறங்கியாவது இந்தக் கொடிய நாய்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என ஏங்கி ஓடிக்கொண்டிருக்கையில், காற்றில் தண்ணீரின் வாடை அதற்கு விழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரேலென அந்தத் திக்கில் கலட்டியன் தனது பாதையை மாற்றியபோது, பின்னாலேயே வந்து கொண்டிருந்த சிங்கராயர், 'அச்சா!" என மனதுக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டார். கலட்டியன், திருக்கோணம் வயலருகில் உள்ள சுனையை நோக்கி ஓடுகின்றது, நாய்களின் கொடுமையும், களைப்பும் தாங்காது அந்தச் சுனையில் போய் விழப்போகின்றது, என்ற அனுமானம் அவருக்கு அசுரபலத்தைக் கொடுக்கவே, பதிய உற்சாகம் பீரிட அவர் நாய்களுக்கும் முன்னே, வார்க்கயிற்றுடன் ஓடவே அவையும்; ரோஷமம் மிக்கவையாக அவரைத் தொடர்ந்தன:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுனையைக் கண்டதுமே முன்பின் யோசிக்காது கலட்டியன் அதனுள் பாய்ந்தது. அவ்வளவுதான்! ஆடுசுனையாகக் கிடந்த அந்த மடுவின் நடுவே நான்கு கால்களும் குத்தெனப் புதைய, கலட்டியன் அசையமுடியாத வகையில் சேற்றில் சிக்கிக் கொண்டது. நேரத்தைச் சிறிதும் விணாக்காது, துவக்கைத் தரையில் போட்டுவிட்டு, துணிந்து கலட்டியனை நெருங்கிய சிங்கராயர், அதன் தலைக்கு வார்க்கயிற்றின் சுருக்கை எறிந்து இறுக்கி, சுனையருகில் நின்ற மரத்தில் கெட்டியாகக் கட்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுனையில் புதைந்த கலட்டியன் மிரள்வதற்குக்கூடச் சக்தியின்று, சரணாகதியடைந்த பகைவனைபபோல விழித்தது. கலட்டியன் கட்டுப்பட்டு நிற்பதைக் கண்ட நாய்கள் நான்கும் நாக்குகளைத் தொங்கப்போட்டு, அப்பாடா! வேலை முடிந்தது! என்பதுபோல, சுனையருகு ஈரத்தில் நீளமாக நெஞ்சில் கிடந்து வெம்மையைப் போக்கிக்கொண்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவைரை தன்னையே உணராது கலட்டியனை மடக்கிவிட வேண்டும் என்ற வெறி உந்த ஓடிவந்த சிங்கராயர், தலையிலிருந்து முகத்தில் ஆறாகப் பாய்ந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு கலட்டியனைப் பார்த்தார். இந்தச் சேற்றிலிருந்தும், தனது வார்க்கயிற்றிலிருந்தும் இனிக் கலட்டியன் தப்பிப் போவதென்றால் இது இயலாத காரியம் என முடிவசெய்த சிங்கராயர், தனது நாய்கள் ஒவ்வொன்றினதும் அருகில் சென்று, அவற்றைப் பாசத்துடன் வருடிப் பாராட்டியபோது, அவை முனகக்கூடப் பலமற்றுக் களைத்தவையாய்க் கிடந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது இலட்சியத்தை நிறைவேற்றிய களிப்பில் சிங்கராயரின் முகத்தில் வெற்றிச் சிரிப்புப் படர்ந்தது. கொல்லன் உலைத் துருத்திபோல எகிறிக்கொண்டிருந்த தனது ஓநாய் வயிற்றை அப்போதுதான் அவர் பார்த்தார். கொஞ்ச நஞ்சத் தூரமா! எனச் சிரித்துக்கொண்டே அருகில் இருந்த புல்மேட்டில் அமர்ந்த சிங்கராயர், கலட்டியனைப் பெருமிதத்துடன் பார்த்தார். மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளி பரவ ஆரம்பித்த அவ்வேளையில், அந்த ராஜநாம்பனின் அழகை மனதார மாந்திக்கொண்ட சிங்கராயருக்கு இலேசாகத் தலைசுற்றவது போன்றிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
21.<br /><br /><div style="text-align: justify;">
அடுக்களைத் திண்ணையில் படுத்தபடி முகட்டை வெறித்தவாறே கிடந்த சேனாதியின் கண்கள் ஏதேச்சையாக மேலே கட்டியிருந்த கொடியில் பதிந்தபோது, அதில் மெல்லிய நூலினால் பிணைக்கப்பட்டு அசைந்த, நந்தாவின் கறுப்பு வளையல்கள் தென்படவே சட்டென எழுந்து அவற்றைப் பிடுங்கியெடுத்தான் சேனாதி. அதைத் தன் விழிகள்மேலும், இதழ்களிலும் தேய்த்தவனுக்கு, என் நந்தா இங்கே வந்து எனக்காகவே இவற்றை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள் என உணர்ந்து கொண்டான். மீண்டும் அந்தக் கொடியைப் பார்த்த சேனாதி, தனது சாறத்தை எனது நினைவாக எடுத்துச் செல்லும் நந்தா, அவளுடைய ஞாபகமாக எனக்கு இந்த வளையல்களை விட்டுப் போயிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடனேயே, அவளுடைய காலடி உள்ள இடங்களையாவது காணவேண்டும் என்ற தவிப்பில் சேனா எழுந்து நந்தாவின் குடிசைக்கு ஓடினான். அங்கு அவளுடைய அழகிய சிறிய பாதச்சுவடுகள் பதிந்துகிடந்தன. அவற்றைப் பார்த்த சேனாவின் இதயம் ஓவெனக் கதறியது. பொழுது சாய்ந்துவிட்ட வேளையில் அன்று, நிலவொளியில் நந்தா தன்னை தனது இளமார்புடன் இறுக அணைத்து, 'நா ஒருநாளும் ஒங்களைவுட்டு போகமாட்டேன் சேனா!" எனத் தேற்றியது நினைவுக்கு வரவே, சேனாதி வெறிபிடித்தவன் போன்று கையில் நந்தாவின் கறுப்பு வளையல்களுடன் ஐயன் கோவிலடியை நோக்கி ஓடினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் இருவரும் அமர்ந்து ஆரத்தழுவிக்ககொண்ட இடத்தில் அவன் சென்று நின்றுகொண்டு கிழக்கு வானைப் பார்த்தான். அங்கு நந்தாவைக் காணவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாலையும் இருளும் சங்கமிக்கும் அந்தச் செக்கல் பொழுதில், தனியே ஐயன்கோவில் வெட்டையில் நின்ற சேனாதியின் செவிகளில் அந்த ஒலி விழுந்தபோது விக்கித்துப் போனான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாய்கள் பரிதாபமாக ஓலமிடும் அந்த ஒலிவந்த திக்கை நோக்கி ஓடினான் சேனாதி. எதிர்ப்பட்ட பற்றைக் காட்டினூடாகப் பாய்ந்து, அவன் சுனையடி வெட்டையில் திடீரென வெளிப்பட்டபோது, அங்கு கண்ட காட்சி அவனை அப்படியே உலுக்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரவைக் கடலுக்கும் அப்பால் குருதியில்; தோய்ந்த பந்தாய் கதிரவன் சரிகையில், அந்த இடம் முழுவதுமே இரத்தச் சிவப்பாய் காட்சியளித்தது. அங்கே, புல்மேட்டின்மேல் சிங்கராயர் நீட்டிநிமிர்ந்து படுத்திருந்தார். அவரைச் சுற்றி அமர்ந்திருந்த அவருடைய அருமை நாய்கள், குருதிக் கடலாய்க் கிடந்த வானத்தை நோக்கி ஓலமிட்டுக் கொண்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுனையின் நடுவே பொன்முலாம் பூசிய கருங்குன்று போலக் கலட்டியன் வார்க்கயிற்றில் கட்டுண்டு கிடந்தது. அந்தக் காட்சியைச் சில கணங்கள் ஜீரணிக்கமுடியாமல் மலைத்து நின்ற சேனாதி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு சிங்கராயரிடம் ஓடினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கராயர் முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் விழிகள் மூடிப் படுத்திருந்தார். காட்டினூhடாக ஓடிவருகையில் தடியும், முள்ளும் கிழித்த காயங்களிலிருந்து வடிந்த குருதி காய்ந்திருந்தது. மடியும் சூரியனின் செங்கதிர்களில் அவருடைய கரிய உடல் அற்புதமான தேஜசுடன் மின்னியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தான் எண்ணியதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் சாதித்து முடித்த வட்டம்பூத் தலைவனுடைய கதை சேனாதியின் நினைவுக்கு வந்தது. போர்க்களத்தில் வீரமணம் எய்திய ஒரு மாவீரன் போன்று, கம்பீரமாய்க் கிடக்கும் அந்த மாமனிதனாம் சிங்கராயரின் வாரிசு நான் என்ற எண்ணம் சேனாதியைச் சட்டென, அந்த ஒரு கணத்தினுள், ஒரு முழு மனிதனாக்கியது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நந்தாவின் கறுப்பு வளையல்களைத் தனது சேட்டுப்பைக்குள் வைத்து இதயத்தோடு சேர்த்து அழுத்திய சேனாதிராஜன், குனிந்து, சிங்கராயரின் வலது கையில் இறுகப் பற்றியிருந்த துவக்கை மெல்ல விடுவித்துக் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நிமிர்ந்து நின்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓரு முழுமனிதனாக மாறியிருந்த சேனாதிராஜன் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்தவனாக வினைமுடிக்கப் புறப்பட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முற்றும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி : http://www.appaal-tamil.com/index.php</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
</div>
</div>
</div>
<!-- Blogger automated replacement: "https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2Fimg.dinakaran.com%2Fdata1%2FDNewsimages%2FTamil-Daily-News_32201349736.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*" with "https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEiF3N-oZrvV-6n6jD2PfTdIan6NgQRnbwyaDwX37wahAo8vcMPpSwx1JrSC9B3_EJbMazX1druzb23cZA-ckPRpA3N6V3VXscbvDdW98r5ar8GR85G01RP4inCTSMP2sbgTGqWJjjSrSFbrkEsA5RPDZhmL3nL-DF1um2JcaLv63aReTsHwceZCyoTr=" -->koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.com0