தோற்பதிலும் சுகம் எனக்கு .........-கவிதை.



உன்னை முத்தமிட எனக்கு 
விருப்பமில்லை
என் காதலை சத்தமிடுவதிலும்
எனக்கு விருப்பமில்லை
தொடுதலுக்காக மட்டும்
காதலில்லை என்பதில் என் மனம்
என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை
மறதியை வெல்லும் ஆற்றல்
உன் நினைவுக்கு மட்டும்
தானடி உள்ளது

சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப்
போன அத்தனை வார்த்தைகளும்
மௌனத்திற்கு இன்றும் அர்த்தம்
சொல்லிக் கொண்டு தானிருக்கிறது
உன் கண்கள் மட்டும் ஏனோ
அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது
எது வரை …என்பதில் தான் எனக்கும்
உனக்கும் நடக்கிறது ஒரு காதல் யுத்தம்
இதில் தோற்பதிலும் சுகம் இருக்கிறது
என்று நினைக்கிறது இங்கு ஓர் மனம்.

நன்றி : http://vinmugil.blog...og-post_29.html

Comments