ஓய்ந்த மழை-கவிதை.




பட்சிகளின் அயர்ச்சிகளை
ஒன்றுக்கொன்று
சீண்டிக்களைத்த மேகங்கள்
தன்னிலை மாற்றி ஒழிகிறது
களைகூட்டி காடு செய்த
வானம்
முன்பொருபோதுமில்லாத
சிறகுகளிழந்து
வெறித்துக் கிடக்கின்றது
இரவைக் காத்து
புத்தகங்களுக்குள் மறைத்த
புகைப்படங்கள்
காட்டும் புன்னகையும்
பொருத்தமில்லாது
பொய்த்து விடுகையில்
விடுபட்ட சுவர்களுக்கிடையே
குடிகொண்ட்ட கரப்பான்களின்
ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள்
நிலமூர்கிறது
அங்கொரு மழை ஓய்கிறது..

யாழினி பண்புடன் இணையத்திற்காக

Comments