பசியாறல்-கவிதை.




அரிசி நன்றாக பூத்திருந்தது
முன் விரிக்கப்பட்ட இலையில்
பக்கத்தில் துணையாக காய்கறிகள்
கரண்டியின் அளவைக் காட்டிச் சிரித்தது
அரைத்தும் நிறம் மாறா பருப்புகள்
நிறைந்த பிளாஷ்டிக்குள்ளிருந்து
நீர் விளாவி உண்ணச் செல்ல
மணம் ஈர்த்தது
மதுவாகினி மழையாய் நைய் பொழிந்தாள்
பசியடங்குதல்
பரிமாறப்படும் பதார்த்தங்களால் மட்டுமல்ல…

ந . பெரியசாமி பண்புடன் இணயதிற்காக




 

Comments