மறிக்கிடா -சிறுகதை- தீரன் ஆர்.எம். நௌஸாத்.




X என்கிற அகிலமக்கா பத்து ஆடுகள் வைத்திருந்தாள். எல்லாம் பெட்டைகள்தாம்.. பெட்டைகளுக்கு மறிக்காக என்று வைத்திருந்த பெரிய கிடாவை சென்ற பெருநாளைக்கு முஸ்லிம் சந்தையில் இருபத்தெட்டாயிரம் கொள்ளை விலைக்கு விற்றுவிட்டிருந்தாள். ரொக்கப்பணத்துக்கும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையில் கைச்செயின் வாங்கி அணிந்திருந்தாள்.

X அக்காவுக்கு வயது 45தான். இன்னும் நரைக்கவுமில்லை. சதா வேலைவாடை செய்ததில் கட்டுமஸ்தான உடம்பும்..நல்ல முகவெட்டும்… சதா வெற்றிலை போட்டுச் செக்கச்சிவந்திருந்த உதடுகளும்… முந்தானையை மீறத் துடிக்கும் மார்புகளும்….. கணவர் சின்னப்புவுக்கு அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. என்றாலும் பெயருக்கு கணவர் என்ற லேபலோடு ஏதோ அவள் சொல்வதையெல்லாம் செய்து கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருந்தார். தனது 68 வயதில் அவளுக்கு தன்னால் ஈடு கொடுக்க முடியாதென்பதை தாம்பத்திய இரவுகளில் சந்தேதகமறத் தெரிந்து கொண்டிருந்தார். பிள்ளை குட்டிகளும் இல்லை.

X அக்காவின் ஆட்டுப்பட்டியில் இப்போது எல்லாமே பெட்டைகளாகவே இருந்தன. மறிக்கு ஒரு கிடாய் இல்லை. அப்படியானால் பட்டி பெருகுவது எப்படி… மறிப்படுவதற்கு பெட்டைகள் தயாராக இருந்தன.. அவற்றின் யோனி நீர் வழிந்து தொழுவம் முழுவதும் மணத்தது.. இந்த நேரத்தில் சரியான ஒரு கிடாய் அகப்பட்டால் தப்பாமல் இரண்டிரண்டு குட்டிகளாவது கிடைக்கும்.. Xஅக்கா சின்னப்புவிடம் சொன்னாள்.

இஞ்சப்பாருங்கோ… பெட்டைகளுக்கு மறிக்கு விட நல்ல கிடாய் ஒண்டைப் பாருங்களன்.. சொல்லி எத்தினை நாளாயிற்று… ஒரு வேலைக்கும் உதவாது நீங்க… என்று குத்தி விட்டாள்.
“பாத்துட்டுதானே இரிக்கிறன்.. இந்த ஊர் மாப்புள்ளக் கிடாவெல்லாம் சரிப்பட்டு வரா… சீலைப்பள்ளியில Y உடைய பட்டியில நெல்ல தெரமான ஒரு கிடா இருக்கிதாம்.. எப்படியும் இண்டைக்கிப் போய்ப் பார்த்துட்டு வாரன் புள்ளேய்… “என்று சொன்ன கையோடு புறப்பட்டும் விட்டார்.

எட்டுமைல்தூரம் நடந்து போய் Yயின் ஆட்டுப்பட்டியை அடைந்தார். Yயின் பட்டியைப் பார்த்த போது உண்மையில் அதிசயப்பட்டார். இருபது பெட்டை ஆடுகளும்.. ஒரு மாப்பிள்ளைக் கிடாவும் நின்றன.. Yயின் மாப்பிள்ளைக் கிடாவைக் கண்டு அசந்து போனார்.. ஏறக்குறைய ஒரு மாட்டின் உயரத்தில் தாடியும்.. நீண்டு வளைந்திருந்த கொம்புகளும்…. கழுத்தில் கிண்கிணிமணிகளுடனும் மிக்க கம்பீரத்துடன் நின்று கொண்டு திமிறிக் கொண்டிருந்தது.. அதன் வீச்சம் மூக்கைத் துளைத்தது.. தன்னை நெருங்கும் ஆட்களை முட்டித் தள்ள மூர்க்கம் கொண்டு பாய்ந்தது.

Yஉம் அந்த ஆட்டுக்கிடாவைப் போலவே ஆஜானுபாகுவாக கம்பீரமாக காட்சியளித்தான்.. சின்னப்புவைக் கண்டதும் வரவேற்று ஆட்டுப்பால் கொடுத்து உபசரித்த பின் விசயத்தைக் கேட்டு விட்டு நக்கலாய்ச் சிரித்தான்.

“சின்னப்பு அண்ணேய்… நம்மட கிடாவப் பாத்தாய்தானே… இதுக்குக் கிட்ட நிக்க ஏலுமா.. ஒரு தரத்தில நாலைஞ்சி பெட்ட வேணும் இதுக்கு… ” என்று தன் மாப்பிள்ளைக்கிடாவின் பாலியல் சக்திப் புராணம் பாடிவிட்டு “நான் எல்லாருக்கும் மறிக்கு விடுறல்ல சின்னப்பண்ணே.. நீ தூரத்துல யிரிந்து வந்திருக்காய் ண்டபடியால பரவாயில்ல உனக்கு தாரன்.. ஆனா ஒருதரம் மறிக்கு விட மூவாயிரம் ரூவாத் தெரணும்..” என்று தயைதாட்சண்யமின்றிக் கேட்டான். அவனே கிடாவைக் கூட்டி வந்து மறிக்கு விட்டுக்கூட்டிப் போக போக்குவரத்துச் செலவு.. தனக்கு சாப்பாட்டுச் செலவு.. கிடாய்க்கு தாராளமாக கிளிசறிபபுண்ணாக்கு… மறியேற முன் கிடாய்க்குச் சாராயம்.. என்று சில உபவிதிகளும் சொன்னான். Yயின் நிபந்தனைகளும் விலையும் மிகமிக அதிகமாகவே இருந்ததாலும் Xவிடம் தன் கெட்டிக்காரத்தனத்தை நிருபிக்க வேண்டி அவன் சொன்னவற்றுக்கெல்லாம் சம்மதித்துத் திரும்பினார் சின்னப்பு.

சொன்னபடியே அடுத்தநாள் அதிகாலையிலேயே Y தன் மாப்பிள்ளைக் கிடாவுடன் Xஅக்காவின் வீட்டுக்கு வந்துவிட்டான். சின்னப்பு எங்கோ போய்விட்டிருந்தார். X தான் வந்து வரவேற்றாள். Xஇன் கட்டுமஸ்தான அழகில் ஒரு கணம் மெய்மறந்தான் Y .இந்த நோஞ்சான் சின்னப்புவுக்கு இப்படி ஒரு பெண்சாதியா… என்று மறுகினான். சட்டெனத் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட Y.

“சின்னப்பு அண்ணர் வரச்சொல்லியிரிந்தாருக்கா… ” என்றான்.

ஓம்..ஓம்.. நீதானா மறிக்கு விட வந்த.. ………..கிடா நல்லாருக்குது …! இது உன்னதா..? ” என்ற Xஅக்கா கிடாயின் அருகே வந்தாள். இடுப்பளவு உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்த கிடாய் Xஅக்காவைக் கண்டதுமே உற்சாகமாகிப் பாய்ந்தது. அதன் உயரத்திலும் பிடரிமயிர்ச்சிலிர்ப்பிலும் கனபரிமானத்துடன் உயர்ந்து நீண்டு சுருண்டிருந்த கொம்புகளிலும் பெரிய வட்டச் செவ்விழிகளில் தெரிந்த ஆவேசத்திலும் X மயங்கித்தான் போனாள்.

“எங்கக்கா சின்னப்பண்ணரைக் காணல்லை..?” என்று கேட்ட Y, X அக்காவின் கட்டுடலில் வைத்த பார்வையை மீட்டிக் கொள்ள முடியாமல் மறுகினான்…


“கொத்து பறிக்க கரப்பத்துக்குப் போயிட்டாரு.. வந்துருவாரு…”. Yதன்னை கள்ளத்தனமாகக் குறுகுறுவெனப் பார்ப்பதை உணர்ந்து கொண்ட Xஅக்கா உள்ளுர நகைத்துக் கொண்டாள். ஏதோ கொஞ்சம் சந்தோஸமாகவும் கர்வமாகவும் இருந்தது.

“இத பட்டியடிப்பிட்டிக்கே போய் சின்னக்குட்டியா வாங்கி வந்து வளத்தது.. நெல்ல திறமான சாப்பாடு போட்டு வளத்த கிடா… ஒருநாளைக்கிச் சாப்பாட்டுக்கே அய்நூறு போகுதுக்கா..” என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் Yயின் பார்வை Xஅக்காவின் அங்கங்களில் இரகசியமாக மேய்ந்தது.. மறிக்கிடாவின் பார்வை தூரத்திலிருந்த பெட்டைஆடுகளின் தொழுவத்தின் மீதிருந்தது.

“விலைக்கு கேட்டா குடுக்க மாட்டியா..?”Xஅக்கா நழுவும் முந்தானையைச் சரிசெய்யாமலே கேட்டாள்.

“ல்லக்கா.. லச்சம் தந்தாலும் சரியான்.. அது நம்முட மாப்பிள்ள… புள்ள மாயிரி வளக்கன். நான்…”

ஆட்டுத் தொழுவத்துள் அடைபட்டுக் கிடந்த பெட்டைகளின் மதனநீர் நாற்றத்தில் கவரப்பட்ட கிடா Yயின் பிடியிலிருந்து விடுபட கால்களை உயர்த்திக் கிளம்பித் திமிறியது. “ஞ்ங்ங்ஙமேமமய்ங்ங்ங்” என்று விசித்திரத்தொனியில் கத்தி Y யின் தோளில் கால்களை உயர்த்தித் துள்ளியது. அவனை நெட்டித்தள்ளியது. அதன் உயர்த்திய கால்களிடையே வெளித்தள்ளிய கிடாயின் ஆண்குறி செஞ்சிவப்புக்கலரில் விறைத்துக் கிளம்பி நீண்டிருந்தது.

“குறியப் பாத்தியாக்கா… ?” என்று சாதாரணமாகத்தான் கேட்டான் Y. “ம்ம்..ம்..” என்ற Xஅக்கா அதனைப் பார்த்துக் கிறுகிறுத்துப் போனாள்.. ஏதோ சிலீரிட்டு மனதுக்குள் பாய்ந்தது…

“அக்கா கிடாய்க்கு கொஞ்சம் சாராயம் வேணுமக்கா…”

“சாராயமா..?”

“ஓமக்கா… கொஞ்சம் குடிச்சா நெல்ல திறமா மறிப்படுமக்கா..”

Xஅக்கா வியப்புடன் சின்னப்பு குடிக்க வைத்திருந்த அரைப்போத்தலைக் கொணர்ந்து கொடுத்தாள். உபசாரங்கள் முடிந்ததும் இருவருமாக கிடாவை தொழுவத்துக்குள் கூட்டிப் போனார்கள்.. ஆனால் மதனநீர் வாசத்தால் கம்பேறியிருந்த கிடா பெட்டைகளைக் கண்டதுமே Yயின் பிடியிலிருந்து திமிறிக் கிளம்பி அவனை முட்டிக் கொண்டு பாய்ந்தது.

“ஞ்ங்ங்ஙமேமமய்ங்” என்று கத்தி ஆவேசப்பட்டது. “விடுவிடு..” என்றாள் X அக்கா.. Yபிடியை விட்டதும்… எகிறிப் பாய்ந்த கிடா ஒருபெட்டையின் பின்பக்கத்தை நோக்கி ஒரே பாய்ச்சலில் பாய்ந்தது. பெட்டையின் பின்புறம் தன்னிரு கால்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மேல் உயர்ந்தது. அதன் செந்நிறக் குறி ஒரே கணத்தில் கம்பீரமாக வெளிப்பட்டுப் பெட்டையின் பின்புறத்தைத் துளைத்துக் கொண்டு மறைந்தது.. மறிக்கிடா மிக ஆவேசத்துடன் ஆடியது. அதன் ஆக்ரோசத்தையும் ஆவேசத்தையும் கண்ட Xஅக்காவின் பார்வை தன்னிச்சையாகவே Xயின் மயிரடர்ந்திருந்த பரந்த தொடைகளின் மீது பட்டு மீண்டது…..

“என்னக்கா எப்பிடி மறியேறுது பாத்தியாக்கா..?” என்ற Y ஒடுக்கமான தொழுவத்துக்குள் Xஅக்காவை மிகநெருங்கி அவளது வெற்றிலைவாசம் மூக்கருகே மணக்குமளவுக்கு நின்றிருந்தான்..அவனது தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்த சாரனுக்கு வெளிப்புறம் தெரிந்த கால்களில் மறிக்கிடாவின் ரோமக்கற்றைகள் போலவே அடர்ந்திருந்தது.

“ம்…” என்ற Xஅக்கா தன்வசத்திலில்லை. மறியாடும் கிடாவின் கம்பீரத்தில் இலயித்திருந்தாள்…

மறிக்கிடா ஒரு பெட்டையை முடித்துவிட்டு அடுத்ததை நோக்கித் தாவ… Yகிடாவை இழுத்துப் பிடித்துக் கொண்டு சிரித்தான்..

“ஒரு பெட்டைக்கு மூவாயிரமக்கா.. மத்ததுக்கு ஏறணுமெண்டால் வேறயா ரெண்டாயிரம் தெரணுமக்கா…”

“காசிலேயே குறியா இரி…. பாத்துத் தாரண்.. விடு.. விடு…”என்று அவசரப்படுத்தி தற்செயலாகப்படுவது போல கயிற்றைப் பிடித்திருந்த அவனது கையைப் பிடித்து உலுக்கி விட்டாள் Xஅக்கா…

“விட்டா ஆக்கள்ளயும் ஏறுமக்கா இது.. சரியான மறி…! ஆனா பொருத்தமான பெட்டை ல்லக்கா உங்கிட்ட..” என்ற Y “ஒரு மணித்தியாலத்துல மூணு தெரம் ஏறுமக்கா.. பட்டியடியில ஒருநாள் நாலு பெட்டையளுக்கு ஏறிச்சக்கா…” என்று பெருமை கூறியவாறே ஒரு விசமப் புன்னகையுடன் Y அக்காவை கடைக்கண்ணால் பார்த்தான்.

அக்காவோ, Yதன்னை உரசும் அளவுக்கு நெருங்கி நின்றிருந்ததை ஆட்சேபிக்கவுமில்லை.. தள்ளிப்போகவுமில்லை.. அவனிடமிருந்து வீசிய ஒருவகையான வியர்வை நெடி அவளைத் தள்ளிப் போகச் செய்யவில்லை. அவனது ஆட்டுவாசத்தை உள்ளுர ரசித்துச் சுவாசித்தபடி… வெளிப்படைக்கு மூக்கைப் பொத்திக் கொண்டிருந்தாள்..

மறிக்கிடா ஆவேசம் அடங்காமல் மறுபடி உயரக்கிளம்பியது… “எங்கக்கா அவரு.. சின்னப்பு…அண்ணர்…?” என்று கேட்டு தன் வலிமையான கரங்களால் மறிக்கிடாவின் கயிற்றைப் பற்றித் திடீரென இழுத்தான் Y.

“கரப்பத்துக்குப் போனவரு..” .என்ற அக்கா தன்னையறியாமலே “அவரு வெர நெல்லாசசுணங்கும்….” என்றும் முணுமுணுத்துவிட்டு பின்” கன பெட்டையளுக்கு விட்டிருப்பாய் போல….” என்றாள் எதையோ நினைத்துக்கொண்டு.

“என்னக்கா… கன பெட்டையளுக்கா…?…ஙிக்கிக்கஹய்… அப்பிடி ல்லக்கா.. கண்டகண்ட எல்லாப் பெட்டையளுக்கும் விடுறயில்லக்கா… பரவாயில்ல…” என்றான் பூடகமாக..

திடீரென மறிக்கிடா Yயின் பிடியிலிருந்து திமிறி விடுபட்டு அக்காவை நோக்கிப் பாய… அக்கா பயந்து கத்தியபடி ஒரு தற்செயல் கணத்தில் Yயின் பின்பக்கமாகப் பாய்ந்து அவனது முதுகைப் பிடித்துக் கொண்டாள். Y சிரித்தபடியே “பயந்துட்டியாக்கா..?” என்று கேட்டு கிடாயை இறுகப் பிடித்து இழுத்து அதன் விறைத்த குறியில் கொஞ்சம் சாராயத்தை ஊற்றினான். பின் அக்காவிடம் “இதக் கொஞ்சம் பிடித்துப் பாரனக்கா… இன்னம் வெறைப்பு அடங்கல்ல…” என்றான் குறும்பாக…

“எ…என.ன…ந..நா..னா…புடிக்கவா….?” பயத்துடன் அக்கா தயங்கியபடியே கையை நீட்ட… “அப்பிடி ல்லக்கா ந்தா இப்பிடிப் பிடிச்சுப் பாருக்கா..” என்றY திடீரென வெகு சுவாதீனமாக அக்காவின் கையோடு தன் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு . கிடாயின் விறைத்த குறியைப் பிடிக்கச் செய்தான்.. ~~ஆ..என்ன நீட்டமும் பெரிசும்…”

கிடாயின் குறியில் கைபட்டதுமே அக்காவுக்குள் ஒரு பூகம்பம் வெடித்து மனதெல்லாம் சிலீரிட்டுப் பரவியது.. அக்காவின் கைபட்ட கூச்சத்தில் கிடாய் திமிறி ஆவேசத்துடன் அக்காவை நோக்கி அசுர வேகத்துடன் தாவ “கடவு..ளே…ய்…” என்று கத்திக்கொண்டே நிலை தடுமாறித் தரையில் விழுந்தாள் அக்கா. Yயும் தடுமாறி சமநிலை குலைந்து அக்காவின் மீது இடறினான். மறிக்கிடா விடுபட்டு அடுத்த பெட்டையை நோக்கித் தாவியது.

“ச்சீ.. நாசமத்துப் போன மறிக்கிடாதான் இது.” என்று கிடாயைத் திட்டியபடியே எழுந்த Y “உளுந்துட்டியாக்கா..?” என்று கேட்டு அக்கா எழத் தன் கைகளை நீட்டினான்.. அவனது கைகளைப் பற்றிப்பிடித்த அக்கா எழும்பாமல் கீழே கிடந்தவாறே “அவரு… வரச் சுண….ங்கு…….” என்று ஏதோ முணுமுணுத்தாள். Y ஒருநமுட்டுச் சிரிப்புடன் கீழே கிடந்த அக்காவையே உற்றுப்பார்த்தான்…

சின்னப்பர் வரச் சுணங்கும்தானே…? ..

நன்றி : http://eathuvarai.net/?p=5045

Comments