நிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )

முதற் பதிப்புக்கான ஆசிரியர் முன்னுரை


நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களைத்தான் என்னுடைய கதைகளிலே அதிகமாகச் சந்திக்க முடியும்.
என்னுடைய பிறந்த மண்ணையும், அங்குவாழ் மக்களையும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதையும் ஒன்று!
இப்படிக் காதலிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் அவர்களே. அவருக்கும், இந்த நாவலை எழுதுமாறு ஊக்குவித்த உள்ளுர் இலக்கிய நண்பர்களுக்கும் இதைப் புத்தக வடிவில் வெளியிட்டுப் பேருதவி செய்த வீரகேசரி தாபனத்தாருக்கும், விசேடமாக திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்!
அ.பாலமனோகரன்
(இளவழகன்)
02.05.1973
*********************************************************

நிலக்கிளி
அண்ணாமலை பாலமனோகரன்
முதற்பதிப்பு மே 1973.
வெளியீட்டாளர் - வீரகேசரி, கொழும்பு
இரண்டாவது பதிப்பு செப்டெம்பர் 2003
வெளியீட்டாளர் - மல்லிகைப்பந்தல், கொழும்பு

*************************************************

நிலக்கிளி: அத்தியாயம் - 01  


நிலக்கிளி: அத்தியாயம் - 01 

கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது.

பதஞ்சலிக்கு முரலிப் பழத்தின் மணம் மிகவும் பிடிக்கும். 'ஐயோ, நிப்பாட்டுங்கோவன்..... உங்கை உந்த முரலியிலை பழம் இலுத்துப்போய்க் கிடக்குது!" வண்டியினுள் எழுந்து நின்றுகொண்டு அவள் ஆசையுடன் குதித்தாள். வண்டியின் பிற்பக்கத்தில் உட்கார்ந்திருந்த உமாபதி, 'அவசரப்படாதையம்மா! இன்னும் சரியான முரலிக் காட்டுக்குள்ளை நாங்கள் வரேல்லை!... ஒரு காக்கட்டை கழிஞ்சதும் பிறகு பாரன் முரலிப் பழத்தை!" என அவர் சொன்னபோது, பதஞ்சலி அதைக் கேட்டாற்தானே!

'அங்கை! அங்கை பாரணையப்பு மான் கிளையை!" அவள் சுட்டிக் காட்டிய திசையில் ஒரு கூட்டம் மான்கள் தாவிப் பாய்ந்தன. பதஞ்சலிக்கு ஓரே குதூகலம்! வண்டியின் கிறாதியைப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதித்தாள்.

உறுதியான அந்த வண்டியை இழுத்துச் சென்ற எருதுகள் தலைகளை நிமிர்த்தியவாறே நடைபோட்டுக் கொண்டிருந்தன.

பலம் வாய்ந்த அந்த எருதுகளை இலாவகமாக நடத்திக் கொண்டிருந்தான் கதிராமன். பதஞ்சலியின் குதிப்பும், கும்மாளமும் அவன் முகத்தில் அடிக்கடி முறுவலை வரவழைத்தன. விழிகள்மட்டும் பாதையின் இருமருங்கும் அடர்ந்திருந்த இருண்ட காட்டைக் கவனித்துக் கொண்டிருந்தன. இளமைத் துடிப்புமிக்க அந்த விழிகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது.

பாதை வளைவில் வண்டி திரும்பியபோது பதஞ்சலி ஆச்சரியத்தினால் திகைத்துப் போனாள்! நெருக்கமாக வளர்ந்திருந்த முரலிமரங்கள் மழைநீரினாலும், கணக்கின்றிக் காணப்பட்ட பழங்களினாலும் சுமைதாங்க முடியாது வளைந்து நின்றன. குரங்குகள் வெருண்டு கிளைகளில் பாய்ந்தபோது பொலுபொலுவென முரலிப்பழங்கள் விழுந்து சிதறின!

வவுனியா மாவட்டக் காடுகளில் ஏராளமாகக் காணப்படும் முரலிமரங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் காய்த்துப் பழுக்கும்! முரலி பழுத்தால் காடே மணக்கும்! தின்னத் தின்னத் தெவிட்டாத பழம்! ஒருமுறை சுவைத்தாற் போதும், பின் நினைக்குந்தோறும் இனிக்கும்!

எருதுகளை அவிழ்த்துக் கட்டிய கதிராமன், கோடரியைத் தோளில் வைத்தவாறே அண்மையில் நின்ற முரலி மரங்களடியில் சென்று நிமிர்ந்து மேலே நோக்கினான். மேலே பார்த்தவன் ஒரு குறிப்பிட்ட மரத்தை நோக்கிச் சென்று அதன் கீழே கிடந்த பழமொன்றை எடுத்துக் கடித்தான். தரம் பிடித்திருக்கவே அந்தப் பழத்துக்குரிய முரலி மரத்தைத் தறிக்கத் தொடங்கினான்.

நெருநெருத்துக்கொண்டு மெல்லச் சாய்ந்த மரம் மளார் என்ற ஓலியுடன் நிலத்தில் விழுந்தது. பொன்னிறப்பழங்கள் நாலாபுறமும் சிதறின. பதஞ்சலி ஓடிவந்து ஆசையுடன் பழங்களைப் பிடுங்கிச் சுவைத்தாள். புத்தம்புதிய, தேன் நிறைந்த பழங்கள்!

உமாபதியார் பழங்களைப் பறித்துச் சாக்குகளில் நிறைக்கத் தொடங்கினார். கதிராமன் கோடரியைத் தோளில் வைத்தபடியே 'நீங்கள் இரண்டுபேரும் பழத்தைப் புடுங்குங்கோ, நான் போய் வேறை நல்ல பழம் கிடக்கோ எண்டு பாக்கிறன்!" என்று சொன்னபோது, 'அப்பு! அப்பு! நானும் போகப்போறன்!" என்று கெஞ்சினாள் பதஞ்சலி. அவள் தன் அழகிய முகத்தைச் சரித்து இவ்வாறு கெஞ்சும்போது உமாபதியாரால் எவ்வாறு மறுக்கமுடியும்? 'சரி பிள்ளை போ" என்று விடையளித்தார்.

பதஞ்சலிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்ட காடுகள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப்பறவைகள் - இவையனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை! பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராய் இருக்கும் பதஞ்சலி, நடந்து திரிவது கிடையாது. சதா மான்குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்!

தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி, அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள்ளும்! அத்தனை கம்பீரம்! கதிராமனுடைய நடையிலும் அதே கம்பீரம் காணப்பட்டது. சிறு வயதுமுதல் பாலுந்தேனும், காட்டு இறைச்சிகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட உடல், கடுமையான உழைப்பினால் உறுதிகொண்ட தசைகள், தகப்பன் வழிவந்த உயர்ந்த, நெடிய தோற்றம், கரியமேனி, சுருண்டகேசம் - இவையத்தனையும் ஒன்றாகத் திரண்டு கதிராமன் என்ற உருவில் நடமாடின! காடு அவனுக்குச் சொந்தம். அவன் காட்டுக்கே சொந்தம். காடடோடு அவன் கொண்டிருந்த உறவு அவனுடைய தோற்றத்தில் நன்கு தெரிந்தது.

கதிராமன் முரலிப்பழத்தைத் தேடிக் காட்டினூடாகச் சென்றுகொண்டிருந்தான். பதஞ்சலி தரித்து நின்று, நிலத்தில் கிடந்த பழங்களைப் பொறுக்குவதும், பின் ஓடி நடப்பதுமாக அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். முரலி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து, முகடுபோலக் கிளைகள் பின்னிக் கிடந்ததனால் காடு இருளடைந்துää ஒரே அமைதியாகவிருந்தது. அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டு திடீரெனக் கிளம்பியது ஒரு பயங்கர உறுமல்!

பதஞ்சலி பயத்தினால் நடுநடுங்கிப் போனாள். கதிராமன் சட்டெனப் பதஞ்சலியைப் பிடித்திழுத்து தனக்குப் பின்னே மறைத்தபடி சத்தம் வந்த திசையை நோக்கி, காட்டை உன்னிப்பாகக் கவனித்தான். அந்தப் பயங்கர ஒலியைத் தொடர்ந்து ஓர் அசாதரண அமைதி நிலவியது. காட்டுப் பறவைகளும், குரங்குகளும் திகில்கொண்டு அடங்கிப் போய்விட்டன!

மீண்டும் அவர்களுக்கு மிக அண்மையிலே ஓர் ஒற்றை உறுமல் கேட்டது. காடே கலங்கும் வண்ணம் பயங்கரமான குரலில் கர்ச்சித்தபடி, சிறு மரங்களை உலுப்பி அட்டகாசம் செய்தவாறு வெளிவந்தது ஒரு பெரிய கரடி!

பாதையருகே பழம் பிடுங்கிக்கொண்டிருந்த உமாபதியார் காட்டில் எழுந்த ஒலிகளைக் கேட்டதுமே பதஞ்சலியை நினைத்துப் பதைத்துப் போனார். அவருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 'ஆதி ஐயனே!" என வாய்விட்டு வேண்டியவாறே ஒடுங்கிப்போய் நின்றுவிட்டார்.

பதஞ்சலிக்கு நாவெல்லாம் வறண்டு உடல் நடுங்கியது. கதிராமனுடைய சாறத்தை இறுகப் பற்றியவாறே அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள். கதிராமனோ சற்றும் பதட்டமின்றிக் கோடரியுடன் ஆயத்தமாக நின்றான். அவனுடைய முகத்தில் கலக்கத்தின் அறிகுறி இல்லை. ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு காட்டுவிலங்கு எவ்வாறு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றதோ அவ்வாறே அவனுடைய உடலிலும் ஒவ்வொரு தசையும் முறுக்கேறிச் செயலுக்குக் காத்து நின்றன.
(வளரும்)

(இவ்வத்தியாயத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவியம் முல்லைக் கோணேஸ் அவர்களுடையது.)

*********************************************
நிலக்கிளி: அத்தியாயம் - 02 

மண்ணை வாரி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வந்த கரடி, பின்னங்கால் இரண்டிலும் எழுந்து காடே அதிரும்படி அதட்டியது.

இந்தச் சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த கதிராமன், கண் இமைக்கும் பொழுதுக்குள் தனது பலமனைத்தையும் ஒன்றுகூட்டிக் கரடியின் நெற்றிப்பொட்டு வெள்ளையில் கோடரியினால் ஓங்கியடித்தான். அணுவளவும் இலக்குத் தப்பாத அந்த அசுர அடியைத் தாங்கமுடியாமல் கரடி நிலத்தில் சரிந்தது. அவ்வேளையிலும் அது தனது முன்னங்கால்களை நீட்டி இறாஞ்சியபோது, கூரிய நகங்கள் கதிராமனுடைய வலது தோள்பக்கம் ஆழமாகப் பிய்த்துவிட்டன. அதைச் சற்றும் சட்டை செய்யாமல் கதிராமன் சாய்ந்துபோன கரடியின் தலையில் மீண்டும் ஓங்கியடித்தான். அவனுடைய மூன்றாவது அடியை வாங்கிக்கொள்வதற்கு கரடி உயிரோடு இருக்கவில்லை. குப்புற வீழ்நதுவிட்ட அதன் வாயினூடாகக் குருதி கொப்பளித்தது.

காட்டை ஒருதடவை சுற்றி அவதானித்த கதிராமன் பதஞ்சலியின் பக்கம் திரும்பினான். பயத்தினால் விக்கித்துப்போய் விழிகள் பிதுங்க அவள் நின்றுகொண்டிருந்தாள். 'என்ன பதஞ்சலி! பயந்து போனியே?" என்றவாறு அருகில் சென்று அவன் கேட்டதும், பதஞ்சலி அப்படியே அவனுடைய மார்பில் சாய்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். நடுங்கும் அவளுடைய உடலைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு, 'இதுக்கெல்லாம் அழுறதே!" என்று அவளின் முதுகை வருடிக்கொண்டு தேற்றினான் கதிராமன்.

அவனுடைய கைகளின் அணைப்பிலே ஆதரவு நிறைந்த பாதுகாப்பிலே சொல்லமுடியாத ஒரு நிம்மதியையும் சுகத்தையும் கண்டாள் பதஞ்சலி! அவளுடைய அழுகை அடங்கிச் சற்று நேரத்தின் பின்னர்தான் கதிராமனுடைய தோளில் ஏற்பட்ட காயம் அவளின் கண்களில் பட்டது. பதறிப்போய் அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு 'ஐயோ! நல்லாய் விறாண்டிப் போட்டுது! கொஞ்சம் பொறுங்கோ சீலையாலை கட்டிவிடுறன்!" என்றவாறு குனிந்து தன் பாவாடையின் கரையைச் சரேலெனக் கிழித்தாள்.

சற்றுமுன் பயத்தால் துவண்டு குழந்தையைப்போல் வெம்பிய அவளை மறுபடியும் பழைய பதஞ்சலியாகப் பார்க்கையில் கதிராமனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.  அங்கு நின்ற முடிதும்மைச் செடியைப் பிடுங்கிக் கசக்கி கதிராமனுடைய காயத்தின்மேல் வைத்து பாவாடையில் இருந்து கிழித்த துண்டால் பதஞ்சலி மளமளவென்று கட்டினாள். பம்பரம்போல் சுழன்று காரியம் செய்வதில் அவளுக்கு இணை அவளேதான்!

பதஞ்சலி எட்டு வயதுச் சிறுமியாக உமாபதியாருடன் தண்ணிமுறிப்புக்குக் குடிவந்த காலந்தொட்டு அவள் அடிக்கடி கதிராமன் வீட்டுக்கு வந்து போவாள். அவன் என்றுமே அவளைக் கூர்ந்து கவனிக்கச் சந்தர்ப்பம் எழவில்லை. இன்று இருண்ட காட்டின் நடுவே ஒரு பயங்கர ஆபத்தின் விளிம்பில் அவள் தன்னுடைய மார்பில் முகம் பதித்து வெம்பியபோதுதான் கதிராமனால் பதஞ்சலியைப் பதஞ்சலியாகக் காணமுடிந்தது. தண்மை நிறைந்த அவளுடைய சிவந்த கைகளினால் அந்த முரட்டுக் கரங்களைத் தூக்கிப் பிடித்துக் காயத்துக்குக் கட்டுப் போடுகையில் அவள் அவனுக்கு மிகவும் அண்மையில் இருந்தாள். எருக்கும்பியில் முளைக்கும் தளதளவென்ற செங்கீரையின் குளிர்மை நிறைந்த அவளுடைய ஸ்பரிசம் அவனுக்குப் புதியதோர் அனுபவம்!

பரபரவென்று கட்டைப் போட்டுவிட்டு நிமிர்ந்தவள் தன்னையே ஊன்றி நோக்கும் தீட்சண்யம் நிறைந்த அவனுடைய விழிகளைச் சந்தித்தாள். அவன் முகத்தில் சதா தவழும் அந்த இளமுறுவல்! 'உங்களுக்கு கொஞ்சமெண்டாலும் பயமில்லையே?" என்று வியப்புடன் கேட்ட பதஞ்சலியைப் பார்த்து அவன் கடகடவென்று நகைத்தபோது அவனுடைய கரிய முகத்தில் உறுதியான வெண்பற்கள் பளிச்சிட்டன. 'வாருங்கோ அப்புவிட்டைப் போவம்! அது பாவம் என்னமாதிரிப் பயந்துபோச்சுதோ!" என்று கூறிவிட்டு பாதையை நோக்கி ஓடிய பதஞ்சலியைத் தொடர்ந்தான் கதிராமன். எதற்குமே பரபரப்படையாத அவன்ää நிதானமாக மீண்டும் காட்டைக் கூர்ந்து நோக்கியவாறே நடந்து கொண்டிருந்தான்.பதஞ்சலியைக் கண்ட உமாபதி பாய்ந்துவந்து கட்டிக்கொண்டார்.

 -வளரும்

*****************************************
நிலக்கிளி: அத்தியாயம் - 03 

முல்லைத்தீவுக்குத் தென்புறமாகக் கிடக்கும் அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருந்த தண்ணிமுறிப்புக்குளம் மிகவும் பழமையானது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன், அக்ரபோதி என்ற மன்னனினால் வெட்டிக் கட்டப்பட்டிருந்த இக் குளத்தின்கீழ் ஒரு காலத்தில் பலநூறு ஏக்கர் நிலங்கள் வயல்களாகச் செழித்திருந்தன. பெரியதொரு கிராமமே இந்தக் குளத்தையண்டி இருந்தது. காட்டுக் காய்ச்சல் காரணமாகவும், அந்நியர் ஆதிக்கத்தில் குளங்கள் புறக்கணிக்கப்பட்டதனாலும் அந்தக் கிராமம் அழிந்தொழிந்து போயிற்று. முன்பு செந்நெல் கொழித்த வயல்களில் மீண்டும் பாலையும், வீரையும் பலவகை மரங்களும், செடிகளும் மண்டி வளர்ந்தன. காடு மூடிக்கொண்டது. நாளடைவில், சிதைந்துபோன குளக்கட்டைப் பெரியதொரு காட்டாறு முறித்துச் சென்றதனால், தண்ணிமுறிப்பு என்று பெயர்பெற்றுத் தற்போது அழைக்கப்படுகின்றது.

கதிராமனுடைய தந்தையான கோணாமலையரே முதன் முதலில் தண்ணிமுறிப்புக்கு வந்து குடியேறியவர். அச் சமயத்திற்றான் குளத்தைப் புனருத்தாரணம் செய்யும் வேலைகள் ஆரம்பித்திருந்தன. கோணாமலையர் ஒரு முன்கோபி! பிடிவாதக்காரர்! அவருடைய சகோதரர்கள் அவருக்குச் சேரவேண்டிய சொத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்ற ஆத்திரத்தில், வண்டியைக் கட்டிக்கொண்டு கைக்குழந்தையாயிருந்த கதிராமனையும், மனைவி பாலியையும் அழைத்துக்கொண்டு தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டு வந்தவர் அவர்.

சிறந்த உழைப்பாளியான அவருக்குக் காடுவெட்டிக் கழனியாக்கவும், மாடுகட்டிப் பலன்பெறவும் வெகுகாலம் எடுக்கவில்லை. அவருடைய மனைவி பாலி தண்ணீருற்றில் பிறந்தவள். கோணாமலையருடைய ஆக்கேராஷமான முன்கோபத்திற்கு ஈடுகொடுத்து நடக்கும் அவளுடைய ராசியினாற்றான் மலையருக்கு மனைவிமக்கள், மாடுகன்று முதலிய செல்வங்கள் பெருகியதென்பர்.

குளக்கட்டையடுத்த ஒரு மேட்டுநிலத்தில் மலையரின் வீடு அமைந்திருந்தது. மாலும், மாட்டுக் கொட்டகையும், நெல்போடும் கொம்பறையுமாக விளங்கியது அவருடைய மனை. வீட்டைச் சுற்றிச் செழிப்பான தோட்டம். அவருக்கு வேண்டிய புகையிலை முதல் காய்கறிவரை அங்கு தங்கமாக விளையும். தோட்டத்தை ஒட்டியிருந்த இரு வேறு அடைப்புக்களுக்குள் பசுக்கன்றுகளும் எருமைக்கன்றுகளும் துள்ளி விளையாடும்.

பொழுது புலருமுன் மலையர் வீட்டில் மத்தின் ஓசை கேட்கும். பாலியார் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு ஆடை நசிக்கும் அந்த வேளையில் கோணாமலையர் எழுந்து சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கதிராமனுடனும், அவனுக்கு அடுத்தவனான மணியனுடனும் அன்றாட வேலைகளில் இறங்கிவிடுவர். கடைக்குட்டி ராசு காலம் பிந்திப் பிறந்தவன். அவனுக்கு இப்போ ஏழு வயது. இருப்பினும் தகப்பனுக்கும் தமையன்மாருக்கும் உதவியாக இருப்பான்.

000

வளவுக்கு எதிரே பாதையின் மறுபக்கத்தில் இருந்த வயலில் களளை பிடுங்கிக் கொண்டிருந்த கதிராமனின் தம்பி ராசுää வண்டில் வருவதைக் கண்டதும் வரம்பில் ஏறித் துள்ளிக் குதித்துக்கொண்டு, வண்டிலை நோக்கி ஓடினான். வழக்கமாக கும்மாளம் அடித்துக்கொண்டு ராசுவை வம்புக்கு இழுக்கும் பதஞ்சலி அமைதியாகக் காணப்பட்டது அவனுக்குப் புதினமாக இருந்தது. வண்டிலை நெருங்கியதும் கதிராமனுடைய தோளில் போடப்பட்டிருந்த கட்டைக் கண்டான்.

'மூத்தண்ணையின்ரை கையிலை காயம்! கறடி விறாண்டிப் போட்டுதாம்!" என்று உரக்கக் கத்திய ராசுவின் குரல் கேட்டு, பாலியார் படலையைத் திறந்;துகொண்டு, வண்டிலடிக்கு வந்தாள். பின்னால் கோணாமலையரும் நின்றுகொண்டிருந்தார். நிலைமையை அறிந்தபின் இருவரும் ஆறுதலடைந்தனர்.

'ஏதோ குருந்தூர் ஐயன்ரை துணையிலை இண்டைக்குத் தப்பீட்டியள்!" என்று மகிழ்ந்துகொண்ட பாலியார் மறுபடியும் பதஞ்சலியையும், வளர்ச்சியடைந்திருந்த அவளுடைய உடலையும் கவனித்தாள். என்றுமே அவளுக்குப் பதஞ்சலியின்மேல் கொள்ளை ஆசை! தனக்கொரு பெண் இல்லையே என்ற குறையைப் பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின்தான் அவள் மறந்திருந்தாள்.

'உமாபதி! இனிமேல் இவளைக் கண்டபடி காடுவழிய திரியவிடாதை! பக்குவப்படுற வயசிலை அங்கை இஞ்சையெண்டு போகவிடாதை!" என்றாள். பாலியார் கூறியதைக் கேட்ட பதஞ்சலிக்கு முகம் ஓடிச் சிவந்துவிட்டது. ';அப்பு! நான் வளவுக்குப் போறன், நீ வாணை!" எனக் கூறிவிட்டு பதஞ்சலி அங்கிருந்து தன் குடிசையை நோக்கி ஓடினாள்.

உமாபதியார் முரலிப்பழச் சாக்கைத் தலையில் ஏற்றிக்கொண்டே கோணாமலையரிடமும், பாலியாரிடமும் விடைபெற்றுக் கொண்டார். அவருடைய தலையை முரலிப்பழச் சுமை அழுத்தியது. அதைவிடää பாலியார் குறிப்பிட்ட விஷயம் தனக்கிருக்கும் பெருஞ்சுமையை அவருக்கு உணர்த்தியது.

இவ்வளவு காலமும் பதஞ்சலிக்குத் தாயும் தந்தையுமாகவிருந்து வளர்த்துவிட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், எட்டே வயதான பதஞ்சலியுடன் அவர் தண்ணிமுறிப்புக்குக் குடிவந்தார். இப்போ அவளுக்குப் பதின்மூன்று வயது. பதினைந்துக்குரிய மதமதவென்ற வளர்ச்சி! அவளை உரிய பருவம்வரை வளர்த்து, ஒருவனுடைய கையிற் பிடித்துக் கொடுக்கும்வரை தனக்குள்ள பொறுப்பை நினைத்து நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே தலையிற்; சுமையுடன் நடந்தார் உமாபதியர். வயதேறிய காரணத்தினால் உடல் சற்றுத் தளர்ந்திருந்தாலும், அவர் நடையில் உறுதியும்ää வேகமும் இருந்தன. அப்பு! அப்பு! என்று  தன்னை வாஞ்சையுடன் சுற்றிவரும் தன் பேத்தி பதஞ்சலியை நினைக்கையில்ää கூடவே  அவளுடைய தாயின் ஞாபகமும் ஓடி வந்தது. மகள் முத்தம்மாவையும் அவளுடைய அவச்சாவையும் எண்ணிய அவருடைய விழிகள் கவலையினால் கலங்கின.

(வளரும்)

*****************************************
நிலக்கிளி: அத்தியாயம் - 04-05 

முல்லைத்தீவுக்குத் தென்புறமாகக் கிடக்கும் அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருந்த தண்ணிமுறிப்புக்குளம் மிகவும் பழமையானது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன், அக்ரபோதி என்ற மன்னனினால் வெட்டிக் கட்டப்பட்டிருந்த இக் குளத்தின்கீழ் ஒரு காலத்தில் பலநூறு ஏக்கர் நிலங்கள் வயல்களாகச் செழித்திருந்தன. பெரியதொரு கிராமமே இந்தக் குளத்தையண்டி இருந்தது. காட்டுக் காய்ச்சல் காரணமாகவும், அந்நியர் ஆதிக்கத்தில் குளங்கள் புறக்கணிக்கப்பட்டதனாலும் அந்தக் கிராமம் அழிந்தொழிந்து போயிற்று. முன்பு செந்நெல் கொழித்த வயல்களில் மீண்டும் பாலையும், வீரையும் பலவகை மரங்களும், செடிகளும் மண்டி வளர்ந்தன. காடு மூடிக்கொண்டது. நாளடைவில், சிதைந்துபோன குளக்கட்டைப் பெரியதொரு காட்டாறு முறித்துச் சென்றதனால், தண்ணிமுறிப்பு என்று பெயர்பெற்றுத் தற்போது அழைக்கப்படுகின்றது.

கதிராமனுடைய தந்தையான கோணாமலையரே முதன் முதலில் தண்ணிமுறிப்புக்கு வந்து குடியேறியவர். அச் சமயத்திற்றான் குளத்தைப் புனருத்தாரணம் செய்யும் வேலைகள் ஆரம்பித்திருந்தன. கோணாமலையர் ஒரு முன்கோபி! பிடிவாதக்காரர்! அவருடைய சகோதரர்கள் அவருக்குச் சேரவேண்டிய சொத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்ற ஆத்திரத்தில், வண்டியைக் கட்டிக்கொண்டு கைக்குழந்தையாயிருந்த கதிராமனையும், மனைவி பாலியையும் அழைத்துக்கொண்டு தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டு வந்தவர் அவர்.

சிறந்த உழைப்பாளியான அவருக்குக் காடுவெட்டிக் கழனியாக்கவும், மாடுகட்டிப் பலன்பெறவும் வெகுகாலம் எடுக்கவில்லை. அவருடைய மனைவி பாலி தண்ணீருற்றில் பிறந்தவள். கோணாமலையருடைய ஆக்கேராஷமான முன்கோபத்திற்கு ஈடுகொடுத்து நடக்கும் அவளுடைய ராசியினாற்றான் மலையருக்கு மனைவிமக்கள், மாடுகன்று முதலிய செல்வங்கள் பெருகியதென்பர்.

குளக்கட்டையடுத்த ஒரு மேட்டுநிலத்தில் மலையரின் வீடு அமைந்திருந்தது. மாலும், மாட்டுக் கொட்டகையும், நெல்போடும் கொம்பறையுமாக விளங்கியது அவருடைய மனை. வீட்டைச் சுற்றிச் செழிப்பான தோட்டம். அவருக்கு வேண்டிய புகையிலை முதல் காய்கறிவரை அங்கு தங்கமாக விளையும். தோட்டத்தை ஒட்டியிருந்த இரு வேறு அடைப்புக்களுக்குள் பசுக்கன்றுகளும் எருமைக்கன்றுகளும் துள்ளி விளையாடும்.

பொழுது புலருமுன் மலையர் வீட்டில் மத்தின் ஓசை கேட்கும். பாலியார் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு ஆடை நசிக்கும் அந்த வேளையில் கோணாமலையர் எழுந்து சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கதிராமனுடனும், அவனுக்கு அடுத்தவனான மணியனுடனும் அன்றாட வேலைகளில் இறங்கிவிடுவர். கடைக்குட்டி ராசு காலம் பிந்திப் பிறந்தவன். அவனுக்கு இப்போ ஏழு வயது. இருப்பினும் தகப்பனுக்கும் தமையன்மாருக்கும் உதவியாக இருப்பான்.

000

வளவுக்கு எதிரே பாதையின் மறுபக்கத்தில் இருந்த வயலில் களளை பிடுங்கிக் கொண்டிருந்த கதிராமனின் தம்பி ராசுää வண்டில் வருவதைக் கண்டதும் வரம்பில் ஏறித் துள்ளிக் குதித்துக்கொண்டு, வண்டிலை நோக்கி ஓடினான். வழக்கமாக கும்மாளம் அடித்துக்கொண்டு ராசுவை வம்புக்கு இழுக்கும் பதஞ்சலி அமைதியாகக் காணப்பட்டது அவனுக்குப் புதினமாக இருந்தது. வண்டிலை நெருங்கியதும் கதிராமனுடைய தோளில் போடப்பட்டிருந்த கட்டைக் கண்டான்.

'மூத்தண்ணையின்ரை கையிலை காயம்! கறடி விறாண்டிப் போட்டுதாம்!" என்று உரக்கக் கத்திய ராசுவின் குரல் கேட்டு, பாலியார் படலையைத் திறந்;துகொண்டு, வண்டிலடிக்கு வந்தாள். பின்னால் கோணாமலையரும் நின்றுகொண்டிருந்தார். நிலைமையை அறிந்தபின் இருவரும் ஆறுதலடைந்தனர்.

'ஏதோ குருந்தூர் ஐயன்ரை துணையிலை இண்டைக்குத் தப்பீட்டியள்!" என்று மகிழ்ந்துகொண்ட பாலியார் மறுபடியும் பதஞ்சலியையும், வளர்ச்சியடைந்திருந்த அவளுடைய உடலையும் கவனித்தாள். என்றுமே அவளுக்குப் பதஞ்சலியின்மேல் கொள்ளை ஆசை! தனக்கொரு பெண் இல்லையே என்ற குறையைப் பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின்தான் அவள் மறந்திருந்தாள்.

'உமாபதி! இனிமேல் இவளைக் கண்டபடி காடுவழிய திரியவிடாதை! பக்குவப்படுற வயசிலை அங்கை இஞ்சையெண்டு போகவிடாதை!" என்றாள். பாலியார் கூறியதைக் கேட்ட பதஞ்சலிக்கு முகம் ஓடிச் சிவந்துவிட்டது. ';அப்பு! நான் வளவுக்குப் போறன், நீ வாணை!" எனக் கூறிவிட்டு பதஞ்சலி அங்கிருந்து தன் குடிசையை நோக்கி ஓடினாள்.

உமாபதியார் முரலிப்பழச் சாக்கைத் தலையில் ஏற்றிக்கொண்டே கோணாமலையரிடமும், பாலியாரிடமும் விடைபெற்றுக் கொண்டார். அவருடைய தலையை முரலிப்பழச் சுமை அழுத்தியது. அதைவிடää பாலியார் குறிப்பிட்ட விஷயம் தனக்கிருக்கும் பெருஞ்சுமையை அவருக்கு உணர்த்தியது.

இவ்வளவு காலமும் பதஞ்சலிக்குத் தாயும் தந்தையுமாகவிருந்து வளர்த்துவிட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், எட்டே வயதான பதஞ்சலியுடன் அவர் தண்ணிமுறிப்புக்குக் குடிவந்தார். இப்போ அவளுக்குப் பதின்மூன்று வயது. பதினைந்துக்குரிய மதமதவென்ற வளர்ச்சி! அவளை உரிய பருவம்வரை வளர்த்து, ஒருவனுடைய கையிற் பிடித்துக் கொடுக்கும்வரை தனக்குள்ள பொறுப்பை நினைத்து நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே தலையிற்; சுமையுடன் நடந்தார் உமாபதியர். வயதேறிய காரணத்தினால் உடல் சற்றுத் தளர்ந்திருந்தாலும், அவர் நடையில் உறுதியும்ää வேகமும் இருந்தன. அப்பு! அப்பு! என்று  தன்னை வாஞ்சையுடன் சுற்றிவரும் தன் பேத்தி பதஞ்சலியை நினைக்கையில்ää கூடவே  அவளுடைய தாயின் ஞாபகமும் ஓடி வந்தது. மகள் முத்தம்மாவையும் அவளுடைய அவச்சாவையும் எண்ணிய அவருடைய விழிகள் கவலையினால் கலங்கின.

(வளரும்)

**************************************************

முரலி மரங்களில் பழங்கள் முடிந்துவிட்டன. வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராய்க் கிடந்தன. உமாபதியரின் சின்னக் குடிசை, கோணாமலையரின் வீட்டுக்கு வடக்கே குமுளமுனைக்குச் செல்லும் பாதையோரமாக அமைந்திருந்தது. அவர் தன் பேத்தி பதஞ்சலியைக் கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாய்த் தண்ணிமுறிப்புக்கு வந்தபோது, மலையரின் உதவியோடுதான் இந்தக் குடிசையைப் போட்டுக் கொண்டார்.

வேட்டை நாய்களால் துரத்துப்பட்ட குழிமுயல் பற்றைக்குள் ஓடிப் பதுங்கிக் கொள்வதுபோல உமாபதியரும் ஏதோவொன்றால் துரத்தப்பட்டவராகத்தான் தண்ணிமுறிப்புக்கு ஓடிவந்தார்.

அந்தச் சிறு குடிசையையும், வளவையும் மிகவும் துப்பரவாகவும், அழகாகவும் வைத்திருந்தாள் பதஞ்சலி. பாலியாரைப் பார்த்துப் பல நல்ல பண்புகளைப் பழகிக் கொண்டிருந்த அவள், அடிக்கடி அங்கு சென்று வாழைää கத்தரி, மிளகாய்க் கன்றுகளை வாங்கிவந்து குடிசையைச் சுற்றிலும் செழிப்பான தோட்டம் போட்டிருந்தாள். சிறிய வளவாயினும் அவளுடைய அயராத உழைப்பின் பயனாக அங்கு அழகு மிளிர்ந்தது. படலையிலிருந்து குடிசைக்குச் செல்லும் சிறிய நடைபாதையின் ஓரங்களிலே அழகிய பூக்கள் சிரித்தன. பசிய இலைகளைப் பரப்பியவாறே குடிசையின் கூரையில் பூசணிக்கொடி படர்ந்திருந்தது. வெண்மணல் பரப்பப்பட்டிருந்த சிறிய முற்றம் பளிச்சென்று பெருக்கப்பட்டிருந்தது. அழகோடு ஆரோக்கியமும் நிலவிய சூழல்!

கிழக்கு வெளுக்கும் நேரத்தில் பதஞ்சலி முற்றத்தைப் பெருக்கும் ஓசையைக் கேட்டு எழுந்த உமாபதியர், வேலி வேம்பில் குச்சியை முறித்துப் பல்துலக்கியவாறே வளவுக்கும் செம்மண் சாலைக்கும் இடையே சலசலத்தோடும் வாய்க்காலை நோக்கிச் சென்றார். கால்முகங் கழுவித் துண்டால் துடைத்துக் கொண்டு குடிசைப் பத்தியில் கட்டப்பட்டிருந்த சுரைக்குடுவைக்குள் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றி நிறையப் பூசிக்கொண்ட அவரின் விழிகளில் குடத்தடியில் நின்ற செவ்விளை தட்டுப்பட்டது.

அங்கு அவர் குடிவந்த சில நாட்களில் அந்தத் தென்னம்பிள்ளையை நட்டிருந்தார். பதஞ்சலியின் பராமரிப்பில் செழித்து வளர்ந்த அந்தச் செவ்விளை சில நாட்களுக்கு முன்தான் முதற்பாளையைத் தள்ளியிருந்தது. இதுவரை இயற்கையின் இறுக்கத்தில் இருந்த அந்தத் தென்னம் பாளை இன்று வெடித்து மெல்லச் சிரித்து நின்றது. அவ் வெடிப்பினூடாகத் தெரிந்த அழகிய முத்துக்கள் உமாபதிக்கு அவருடைய மகள் முத்தம்மாவின் சிரிப்பை ஞாபகப்படுத்தின. பதஞ்சலியும் முத்தம்மாவையே உரித்துப் பிறந்திருந்தாள். அதே செவ்விளை நிறம்! அதே பாளைச் சிரிப்பு!

முத்தம்மா இறக்கும்போது பதஞ்சலிக்கு மூன்று வயது. முத்தம்மா அந்தச் சின்ன வயதிலேயே இறந்திருக்க வேண்டுமா? இல்லை! அவளைச் சாகடித்துவிட்டனர் அவ்வூர் மக்கள்! கள்ளங் கபடில்லாமலிருந்த முத்தம்மா அநியாயமாகக் கிணற்றில் விழுந்து செத்துப் போனாள். அவளை வெளியே தூக்கிப் போட்டு 'நீ ஏனம்மா இன்னொருவர் கதையைக் கேட்டுச் சாகவேணும்? நான் ஒருத்தன் உனக்கு எண்டைக்குமே துணையாய் இருப்பனே!" என்று கதறியழுதார் உமாபதியார். ஆனால் அவற்றையெல்லாம் கேட்பதற்கு அவளுடைய உடலில் உயிர் இருக்கவில்லை. மூன்றே வயதான பதஞ்சலி எதற்கென்றே தெரியாமல் கோவென்று அழுதாள். இறந்துவிட்ட மகளை எண்ணிப் பாசத்தையெல்லாம் பதஞ்சலிமேல் சொரிந்து வளர்த்தார் உமாபதி. உரிய பருவத்தில் பாடசாலைக்கும் அனுப்பினார். எட்டு வயதுவரைதான் அவள் அங்கு படிக்க முடிந்தது. என்றைக்கு அவளுடைய பிஞ்சு மனம் நொந்துபோய்க் கண்கள் குளமாக, உதடுகள் துடிக்கப் பாடசாலையால் ஓடிவந்து உமாபதியரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாளோ, அன்றே அவளையும் கூட்டிக்கொண்டு தண்ணிமுறிப்புக்குக் குடிவந்தவிட்டார் உமாபதியார்.

கடந்தகால நினைவுகளில் ஆழ்ந்திருந்த உமாபதியாரை பதஞ்சலியின் குரல் இவ்வுலகத்திற்கு இழுத்து வந்தது. குடிசையை ஒட்டியிருந்த சிறிய குசினிக்குள்ளிருந்து கேட்ட அவளுடைய குரலில் வழமையான துடுக்கும், துடிப்பும் காணப்படவில்லை. 'அப்பு! ஒருக்காப் போய்ப் பாலியரம்மாவைக் கூட்டிக்கொண்டு வாணை!" என்று அவள் சஞ்சலத்துடன் கூறியதும் உமாபதியார் கலவரப்பட்டுப் போனார். 'ஏன் மோனை! ஏதும் சுகமில்லையோ?" என்று கேட்டதற்கு 'நீ போய் அவவைக் கூட்டிக்கொண்டு வாவன்!" என்று மீண்டும் பதட்டத்துடன் பதஞ்சலி கூறவே, உமாபதியார் மனம் பதைபதைத்தவராகக் கோணாமலையரின் வளவை நோக்கி வேகமாக நடந்தார்.

அந்தக் காலைப் பொழுதில் உமாபதியாருடன் விரைந்து வந்த பாலியார் வளவுப் படலையைத் திறந்துகொண்டு முன்னே வந்தாள். குசினிக்குள் பதஞ்சலியைக் காணாததால் விடுவிடெனக் குடிசைக்குள் நுழைந்தாள். என்னவோ ஏதோவென்று பயந்து போனவராய் ஏதுமறியாது உமாபதியார் வெளியே நின்றுகொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த பாலியார்ää 'பதஞ்சலி பெரிய மனுசியாய் விட்டாள்!" என்று சொன்னதும் உமாபதியாரின் முகம் உவகையினால் மலர்ந்தது. மறுகணம் அவரின் மனம்ää இந்த மங்கலச் செய்தியைக் கேட்க தனது மகள் முத்தம்மா உயிரோடு இல்லையே என்று நினைத்துப் புழுங்கிக் கொண்டது. இன்பமும் துன்பமும் ஒருங்கே அவருடைய முகத்தில் சுழியிட்டன.

5

பாலியார் தனக்கு மகளில்லாத குறையை அடியோடு மறந்துவிட்டாள். அடிக்கடி அங்கு வந்து பதஞ்சலிக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்தாள். பல வகையான உணவுப் பண்டங்களைப் பதஞ்சலிக்கென விசேடமாகத் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள். கண்டிப்பு நிறைந்த கணவனுக்கும் வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டுப் பின், பதஞ்சலி வீட்டுக்கும் வந்து உதவ பாலியார் போன்ற ஒருத்தியாற்றான் முடிந்தது.

அவளுடைய மேற்பார்வையில் ஆகவேண்டியவை யாவும் ஆகிää அன்று பதஞ்சலிக்குப் புனித நீராட்டும் வைபவமும் சிறப்பாக நடந்தது. தண்ணிமுறிப்பில் வாழும் அத்தனைபேருமே அன்று உமாபதியாரின் குடிசை முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலின்கீழ் கூடியிருந்தனர். கோணாமலையரின் குடும்பம், தண்ணிமுறிப்புக் குளத்தை மேற்பார்வைசெய்யும் காடியர்ää உமாபதியாரும் அவருடைய பேத்தி, பதஞ்சலி இவர்கள்தான் அந்தச் சிறிய காட்டுக் கிராமத்தின் குடிமக்கள்.

பாலியார் காலையில் எழுந்த தன்வீட்டுக் காரியங்களை முடித்துக்கொண்டு உமாபதியரின் வளவுக்கு வந்து பதஞ்சலியை நீராட்டிää புடவையுடுத்தி, பின்னர் விருந்துச் சமையலில் ஈடுபட்டிருந்தாள். குடிசைக்குள் ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த பழைய பாயில் அடக்கமாக அமர்ந்திருந்த பதஞ்சலிää அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த மலையர் வீட்டுக் குத்துவிளக்கின் ஒளியில் மங்களகரமாகத் திகழ்ந்தாள். முழுகிவிட்டுத் தலையை ஈரம் உணர்த்திää முடியாது அவிழ்த்து விட்டிருந்தாள். அந்தக் கருங்குழற் காட்டின் பகைப்புலத்தில் அவளுடைய சிவந்த முகம் காலைச் சூரியனைப்போன்று ஒளி வீசியது. உமாபதியார் இவ்வளவு நாட்களாகத் தான் சேமித்ததை எடுத்துச்சென்று தண்ணீருற்றுச் சிவானந்தப் பத்தரிடம் செய்வித்து வந்த இரண்டு பவுண் சங்கிலி அவளுடைய கழுத்தை அலங்கரித்தது. கூடவே அவர் வாங்கிவந்த நீலவண்ணச் சேலை அவளுடைய செவ்விளை நிறத்துக்கு மவுசு கூட்டியது.

குடிசைக்கு வெளியே ஒரே கலகலப்பு! மலையரும், காடியரும்ää உமாபதியரும் சேர்ந்துகொண்டு, முல்லைத்தீவிலிருந்து வாங்கிவந்த சாராயப் போத்தல் சகிதம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

உள்ளே குடிசைக்குள் அமர்ந்திருந்த பதஞ்சலி தன் தங்கச் சங்கிலியையும், புதுச் சேலையையும் அடிக்கடி தொட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டாள். பாலியாரின் கடைக்குட்டி ராசு குடிசைக்குள் வருவதும், அவளை விநோதமாகப் பார்த்து 'ஏன் இண்டைக்குச் சீலை உடுத்திருக்கிறாய்? ஏன் இண்டைக்குச் சங்கிலி போட்டிருக்கிறாய்?" என்பது போன்ற வினாக்களைக் கேட்பதுமாய் விளையாடினான்.

பதஞ்சலிக்குக் கதிராமனுடைய நினைவு வந்தது. அனைவருமே விருந்துக்காக வந்துவிட்டபோது அவன் மட்டும் இன்னமும் வரவில்லை என்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.

'ஏன் ராசு, இன்னும் மூத்தண்ணையைக் காணேல்லை?" என்று அவள் கேட்டதற்கு, 'அவர் விடிய வெள்ளாப்பிலை நாயளையும் கொண்டு குழுமாடு புடிக்கப் போட்டார்! இன்னும் வரேல்லை!" என்று ராசு பதிலளித்தான். 'நேற்று முழுதும் காட்டிலை திரிஞ்சு உடும்பு பிடிச்சுக்கொண்டு இஞ்சை தந்திட்டு அவர் ஏன் இன்னும் வரேல்லை? எல்லாரும் சாப்பிடுற நேரமாய்ப் போச்சுது!" என்று தனக்குள் சொல்லிக் கொண்ட பதஞ்சலிக்குää அன்று முரலிப் பழத்திற்குத் தானும் வருவேனென்று அடம்பிடித்துச் சென்றதும், காட்டில் கரடி வந்ததும் தான் பயந்து நடுங்கியதும் ஞாபகம் வரவே, தனக்குள் மெல்லச் சிரித்துக்கொண்டாள். அவனுடைய வலிமைமிக்க கரங்களின் அரவணைப்பில், அவனுடைய இளம் மார்பில் தனது முகத்தைப் பதித்துக் குழந்தைபோல் தேம்பியழுததை நினைக்கையில் பதஞ்சலிக்கு அடக்கமுடியாத நாணம் கிளர்ந்தெழுந்து உடலெங்கும் பரவியது. நாணமும் புன்னகையும் மாறி மாறிக் கோலமிட்ட பதஞ்சலியின் முகத்தை உற்றுக் கவனித்த சிறுவன் ராசு வியப்புடன்ää 'ஏன் சும்மாய் சிரிக்கிறாய்?" என்று கேட்டதற்கு, 'ஒண்டுமில்லையிடா!" என்று கூறி மீண்டும் மெல்லச் சிரித்தாள் பதஞ்சலி. 'உனக்கென்ன விசரே?" என்று அவன் கேலி செய்தபோதுங்கூட அவள், 'போடா, ஒண்டுமில்லை!" எனக் கூறிவிட்டுச் சிரித்தாள்.

(வளரும்)

**********************************************************

நிலக்கிளி: அத்தியாயம் - 06

அந்த மங்கல நிகழ்ச்சியின் பின்னர் இரண்டு நாள்வரை பதஞ்சலி சற்று அடக்கமாக இருந்தாள். மூன்றாம் நாள் அவளுடைய பழைய துருதுருப்பும் துடுக்குத்தனமும் திரும்பிவிட்டன. பாவாடையை உயர்த்திக் கட்டிக்கொண்டு, கரம்பைக்காய் பிடுங்கவும், சூரைப்பழம் பறிக்கவுமென்று பட்டாம்பூச்சிபோல் இங்குமங்குமாய்ப் பறக்கத்தொடங்கி விட்டாள். உமாபதியார் தடுத்துக் கூறினால் 'சும்மா போணையப்பு!" என்று செல்லமாகக் கூறிவிட்டுத் தன்போக்கில் போய்விடுவாள்.

அவளுக்கு மங்கல நீராட்டு வைபவம் நடந்த அன்று கதிராமன் அவள் வீட்டில் நடந்த விருந்துக்குப் போகவில்லை. அன்று மதியம் திரும்பிய பின்னரே, அவன் காட்டில் குழுவாகத் திரிந்த கடாவைப் பிடித்துத் தங்கள் எருமையுடன் பிணைத்துக்கொண்டு வளவுக்கு வந்திருந்தான். அதன்பின் இரண்டு நாட்கள் பதஞ்சலியும் வெளியே எங்கும் செல்லாததால், அவளை அவனால் காணமுடியவில்லை. மூன்றாம் நாள் கதிராமன் விறகுக்காகக் காட்டுக்குப் போய்விட்டுக் கோடரியும் கையுமாகத் திரும்பும்போதுதான், அவள் குளக்கட்டின்மேல் வந்து நின்றுகொண்டு துருசினூடாகத் தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடன் கூடவந்த நாய்களிரண்டும் பதஞ்சலியைத் தொலைவில் கண்டதும் உற்சாகத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்தன.

பதஞ்சலியைத் தனது நாய்கள் குளக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிடக்கூடும் என்று எண்ணிப் பயந்த கதிராமன் நாய்களை அதட்டினான். அவனுடைய அதட்டலுக்கு அடங்கிய நாய்கள் மீண்டும் அவனிடம் ஓடவே, பதஞ்சலியும் அந்தத் திக்கில் திரும்பினாள்.

இளஞ்சிரிப்புடன் வந்துகொண்டிருந்த கதிராமனின் கரியமேனி மாலை வெய்யிலில் புதியதொரு அழகைக் காட்டியது. அவனை அந்நேரத்தில் பார்த்தபோது பதஞ்சலிக்கு முன்னொரு தடவை, கலிங்கு வெட்டையில் இதேபோன்று ஒரு மாலைநேரம் தான் கண்ட கலைமரையின் ஞாபகம் திடீரென வந்தது. 'இவரும் நெடுகக் காட்டிலை சந்தோசமாய்த் திரியிறார் அந்த மரையைப்போலை' என எண்ணிக் கொண்டவளுக்கு, அவன் அன்று தங்கள் வீட்டுக்குச் சாப்பிட வராததது நினைவுக்கு வந்தது. அவன் அண்மையில் வந்ததும், 'ஏன் அண்டைக்குச் சாப்பிட வரேல்லை?' என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் பதிலளியாது புன்னகை பூக்கவே அவளுக்கும் சிரிப்பு வந்தது. 'நீங்கள் எதுக்கெண்டாலும் சிரிச்சுச் சாமாளிச்சுப் போடுறியள்!' என்ற பதஞ்சலியைச் சமாளிக்கும் நோக்குடன் கதிராமன், 'அண்டைக்கு உன்ரை வீட்டை நான் வாறதெண்டால் உனக்கேதும் கொண்டு வந்திருக்கோணும். என்னட்டை ஒண்டுமில்லை, அதுதான் வரேல்லை!' என்றான். 'அப்ப இனிமேல் வாறதெண்டால் ஏதாவது சாமான் வாங்கிக்கொண்டுதான் வருவியளாக்கும்?' அவள் குறும்பாகக் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் சிரித்தான் கதிராமன். அவளுடைய துடுக்கும் குறும்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

'சரி! இப்ப ஒரு சமான் தரவோ?"
'என்ன, உங்கடை கோடாலியைத் தூக்கித் தரப்போறியளே!'. அவள் அவனைக் கேலி செய்தாள்.

'நீயேன் கனக்கப் பகிடி பண்ணிறாய், என்னோடை கொஞ்சத்தூரம் உந்தக் காட்டுக்கை வா! ஒரு இனிப்பான சாமான் தாறன்!, என்றவாறே அவன் திரும்பிக் குளக்கட்டால் நடந்தான்.

'என்ன? இனிப்பான சாமானோ? என்னது?, என்று ஆர்வத்துடன் கேட்டவாறே துள்ளிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தாள் பதஞ்சலி.

சற்றுத்தூரம் குளக்கட்டுவழியே சென்ற கதிராமன், ஓரிடத்தில் குளக்கட்டின் சரிவால் இறங்கிக் கட்டின்கீழே தெரிந்த காட்டை நோக்கிச் சென்றான். அக் காட்டினுள் நுழைந்தவன் சிறிது தூரம் சென்றதும், பட்டுப்போய் விழுந்துகிடந்த ஒரு சமண்டலை மரத்தடிக்குச் சென்று, அதன் அடிப்பாகத்திலிருந்த பூவாசலைக் கவனித்தான். இதற்குள் பதஞ்சலியும் அவனருகில் நெருங்கி வந்துவிடவே, கொட்டுக்குள் இருந்த தேன்குடி கலைந்து பறந்தது.

பதஞ்சலி குதூகலத்துடன் குதித்தாள்.

'ஆ! எனக்கு இப்பதான் விளங்கிச்சுது!'

'சும்மாய் குதிக்காதை! அங்காலை போய் நில்! இல்லாட்டிப் பூச்சி குத்திப்போடும்!' என்று கதிராமன் கூறிவிட்டுப் பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை இலேசாகத் தட்டிப் பார்த்தபின், மரத்தைத் தறிக்கத் தொடங்கினான். நாய்களிரண்டும் உடும்போ ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. 'கவனம்! பூச்சி குத்திப்போடும்!' என்று பதஞ்சலி கூறியதைக் கவனியாது அவன் குனிந்து, வெட்டப்பட்டிருந்த வெளியினூடாக வாயால் ஊதினான். அவன் ஊதவும் தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல்லக் கையைவிட்டு தேன்வதைகளை எடுத்தவாறே பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவை இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருந்ததில்லை.

'இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது' என்ற கதிராமன், அவளுடைய கைநிறையத் தேன்வதைகளை அடுக்கிவிட்டு, 'போதுமே என்ரை பரிசு?' எனக் கேலியாகக் கேட்டான். அவள் 'ஓ' வென்று தலையை அசைத்துவிட்டு அழகாகச் சிரித்தாள்.

அவள் சிரிக்கையில் அன்றொருநாள் இருண்ட காட்டில் அவனுக்கு மிக நெருக்கத்தில் அவள் இருந்த நினைவு கதிராமனுக்கு வந்தது. அவளுடைய சிவந்த விரல்களையும், செழுமையான முகத்தையும், வண்டுபோன்ற விழிகளையும் பார்க்கையில் அவனுக்குப் புதியதோர் உணர்வும் சுகானுபவமும் ஏற்பட்டன.

'வாருங்கோ குளக்கட்டிலை வைச்சுத் தின்னுவம்!' என்று கூறி அவள் நடக்க, கதிராமன் இரண்டு சமண்டலை இலைகளைப் பறித்துக்கொண்டு, அவள் பின்னால் சென்று குளக்கட்டின் சரிவில் பசுமையாகப் படர்ந்திருந்த புல் தரையில் அமர்ந்து கொண்டான். சமண்டலை இலைகளில் தேன்வதைகளை வைத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் எடுத்துக் கொண்டாள் பதஞ்சலி. அவளுடைய தளிர் விரல்களினால் பிய்த்தெடுக்கப்பட்ட அந்தத் தேன்வதைகள் அவனுக்கு அன்று மிகவும் இனித்தன.

பொழுது சாயும் நேரத்திலே பதஞ்சலி நாய்களுடன் முன்னால் துள்ளிக்கொண்டு ஓட, கோடரியைத் தோளில் தாங்கி கதிராமன் பின்தொடர்ந்தான். பதஞ்சலி ஓடும்போது அவளுடைய நீண்ட பின்னல் கருநாகம்போல் அங்குமிங்கும் துள்ளியசைந்தது. அவளுடைய ஒவ்வொரு அங்க அசைவும், களங்கமும் கவலையுமற்ற கதிராமனின் வாலிப இதயத்தில் மிகமிக ஆழமாகப் பதிந்து கொண்டன.

தன் வளவுக்கு எதிரேயுள்ள வயல்வரம்பில் புல்வெட்டிக் கொண்டிருந்த கோணாமலையர் தொலைவில் நாய்கள் ஓடிவரும் அரவம் கேட்டு நிமிர்ந்தார். மாiலை வெய்யிலில் கண்கள் கூசின. விழிகளை இடுக்கிக்கொண்டு பார்த்தபோது கதிராமனும், பதஞ்சலியும் வருவது தெரிந்தது. பார்த்தவர் மீண்டும் குனிந்துகொண்டு பசும்புற்களைப் பரபரவென்று அறுத்துத் தள்ளினார். மிகவும் கூர்மையான அரிவாளினால் பழகிப்போன அவருடைய கரங்கள் மளமளவெனப் புல்லை அரிந்து தள்ளும்போது அவருடைய மனம் மட்டும் வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

சாக்கில் அடைந்து கொண்டுவந்த புல்லை மாட்டுத் தொட்டிலுக்குள் கொட்டிவிட்டு கோணாமலையர் வாய்க்காலில் கால்முகம் கழுவிய பின்னர் வந்து முற்றத்தில் கிடந்த மான்தோலில் உட்கார்ந்து கொண்டார். அவருடைய ஒரு கையில் சீனியையும், மறுகையில் சிரட்டை நிறையத் தேநீரையும் கொடுத்த பாலியார், வெற்றிலைத் தட்டத்துடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

உள்ளங்கையிலிருந்த சீனியை நக்கிக்கொண்டு ஒருவாய் தேநீரை உறிஞ்சிய மலையர் ஏதோ நினைத்தவராய், 'உவன் உமாபதியின்ரை பொட்டை இப்பவும் காடுவழியதானே திரியிறாள்! அவளைக் கண்டபடி வெளியிலை விடவேண்டாமெண்டு அவனுக்குச் சொல்லு!' என்றார். அவர் எதற்காக இதைக் கூறுகின்றார் என எண்ணிய பாலியார், 'அந்த ஆளும் நெடுகச் சொல்லுறதுதான். ஆனால் அவள் கேட்டால்தானே! மான்குட்டி மாதிரி எந்த நேரம் பாத்தாலும் பாய்ச்சலும் பறவையுந்தான்!' எனக் கூறிக் கொண்டாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது பதஞ்சலியின் துடியாட்டத்தைப் பற்றித்தான். ஆனால் மலையர் நினைத்துக் கூறியதற்கும், அவருடைய மனைவி குறிப்பிட்டதற்கும் எவ்வளவோ வேறுபாடு இருந்தது.

தேநீரைக் குடித்துவிட்டுச் சிரட்டையை ஒரு பக்கமாகக் கவிழ்த்து வைத்த மலையர், 'காலமை மம்மது காக்கா என்னட்டை ஒரு விசயம் பறைஞ்சவன். குமுளமுனைச் சிதம்பரியருக்கு ஒரு பொட்டை இருக்குதாம். வீடுவளவோடை சிதம்பரியாற்றை உழவுமெசினும் பொடிச்சிக்குத்தான் குடுக்கிறதாம். எங்கடை கதிராமனுக்கு அந்தப் பொட்டையைச் செய்யிற விருப்பம் சிதம்பரியாருக்கு இருக்காம் எண்டு மம்மது சொன்னான்.... ஆனால் பொட்டைக்குக் கொஞ்சம் வயசு குறைவு... வாறவரியம் மட்டிலை செய்வம் எண்டு கதைச்சவராம்...' என்று கூறி நிறுத்தினார்.

அதற்கு ஒன்றுமே பேசாமல் எழுந்த பாலியார் சிரட்டையை எடுத்துக் கொண்டு குடத்தடிக்குச் சென்று குடத்திலிருந்து தண்ணீரை ஊற்றிச் சிரட்டையை அலம்புகையில், தூரத்தே உமாபதியரின் குடிசையில் பதஞ்சலி விளக்கேற்றுவது தெரிந்தது. '.... என்னமாதிரி பம்பரம்போலை சுழண்டு சுழண்டு வேலை செய்வாள்.... கிளிக்குஞ்சு மாதிரிப் பொட்டை..' எனப் பாலியாரின் மனம் எண்ணிக்கொண்டது.

(வளரும்)

************************************************

நிலக்கிளி: அத்தியாயம் - 07-8

பதஞ்சலி பருவமடைந்து விளையாட்டுப்போல் மூன்று வருடங்கள் சென்றுவிட்டன. அந்த மூன்று வருடங்கள் பதஞ்சலியில் மட்டுமன்றி அந்தச் சின்னக் காட்டுக் கிராமத்திலேயும் எத்தனையோ மாறுதல்களை ஏறபடுத்திவிட்டுச் சென்றிருந்தன.

பதினாறு நிறைந்த பதஞ்சலி தண்ணிமுறிப்புக் காடுகளிலே தன்னிச்சையாகத் திரியும் பெண் மான்களைப் போன்று அழகும் நளினமும் நிறைந்தவளாக விளங்கினாள். கிடுகிடுவென வளர்ந்து மதாளித்துக் குலை தள்ளவிருக்கும் வாழையின் செழுமை அவளுடைய உடலில் தெரிந்தது.

  வயல்வெளி, அதன் ஓரத்திலே அடர்ந்திருந்த காட்டை வெகு தூரத்திற்குப் பின்னே தள்ளிவிட்டாற் போன்று, விசாலித்திருந்தது. குளத்தினின்று செல்லும் வாய்க்காலும், அதையொட்டி அமைந்திருந்த செம்மண் சாலையும் செப்பனிடப்பட்டுச் சீராகக் காணப்பட்டன. உயர்த்தப்பட்டுக் காணும் குளக்கட்டில் இப்போது ஏறிநின்று பார்த்தால், ஒருபுறம் குளத்தில் நீர் நிறையத் தேங்கி அலையடிப்பதைக் காணலாம். மறுபுறம் குளக்கட்டின் கீழே விசாலித்துக் கிடக்கும் வயல்களில் பச்சைப் பசேலெனப் பயிர்க்கடல் தளும்புவதைப் பார்க்கலாம்.

  குளத்துக்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த காடியர் பஙகளா, விரிந்துகொண்டே போகும் வயல்வெளி, அதன் நடுவே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணப்படும் சிறு குடிசைகள், இவை யாவுமே தண்ணிமுறிப்பு இப்போது ஒரு குக்கிராமம் அல்ல, மெல்ல வளரும் ஒரு குடியேற்றத் திட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லி நின்றன.

  கோணாமலையர்கூடச் சற்று மாற்றமடைந்தவராகக் காணப்பட்டார். கதிராமனும், மணியனும், ராசுவும் வேலைகள் அத்தனையையும் கச்சிதமாகக் கவனித்துக் கொள்ளவே, அவருக்கு ஓய்வுநேரம் அதிகமிருந்தது. காடியர் மிகவும் குஷியான பேர்வழி! எனவே ஓய்வு நேரங்களில் காடியருடன் பலதையும் பேசிச் சந்தோஷமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டார் மலையர்.

  உமாபதியரிடம் முதுமையின் தளர்ச்சி கூடுதலாகத் தென்பட்டது. இருந்தும் வழமைபோலக் கூலிவேலை செய்வதும், கதிராமன் முதலியோருடன் காட்டுக்கு வேட்டைக்குச் செல்வதுமாக அவருடைய காலம் போய்க் கொண்டிருந்தது. பதஞ்சலியின் திருமணம் ஒன்றே அவர் தன்னுடைய வாழ்வில் எதிர்பார்க்கும் முக்கிய விஷயமாக இருந்தது. தன்னை முதுமை முழுமையாகப் பற்றிக் கொள்வதற்கு முன் எப்படியாவது கொஞ்சப் பணத்தைச் சேர்த்து, யாராவது நல்ல உழைப்பாளி ஒருவனுடைய கையில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் அயராது உழைத்தார்.

  அன்றும் எங்கோ ஒருவருடைய வயலில் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் வீட்டை நோக்கி உமாபதியார் வந்துகொண்டிருந்தார். அவர் தூரத்திலேயே வரும்போது கண்டுகொண்ட பதஞ்சலி குசினிக்குள் தேநீரை ஆற்றிக் கொண்டிருந்தாள். வாய்க்காலில் உடலைக் கழுவிக்கொண்டு வளவுப் படலையைத் திறக்கும்போது, உமாபதியரின் காலில் திடீரென நெருப்பால் சுட்டது போலிருந்தது. வலியில் ஓவென்று அலறிய அவர் குனிந்து நோக்கியபோது வாய்க்கால் ஓரத்தில் மண்டி வளர்ந்திருந்த புற்களிடையே நாகபாம்பொன்று விரைந்து செல்வதைக் கண்டார். அவருடைய அலறலைக் கேட்டுப் பதறித் துடித்து ஓடிவந்த பதஞ்சலி 'என்னணையப்பு?' எனக் கேட்போது, 'பாம்பு கடிச்சுப் போட்டுதம்மா!' என்றவாறே வலி பொறுக்க முடியாமல் துடித்தார் உமாபதியர். அவருடைய வலது புறங்காலில் நாலு இடங்களில் பொட்டுப்போல இரத்தம் சிறிதாகக் கசிந்து கொண்டிருந்தது.

  'ஆதி ஐயனே! நான் என்னணையப்பு செய்வன்!' என்று அரற்றிய பதஞ்சலி, 'இஞ்சைவிடப்பு! நான் வாயாலை கடிச்சு நஞ்சை உறிஞ்சித் துப்பிவிடுறன்!' எனக் கூறி அவருடைய காலை நோக்கிக் குனிந்தாள். 'சீ என்ன மடைவேலை செய்யப் பாக்கிறாய்! இஞ்சைவிடு காலை!' என்று பேத்தியைக் கடிந்து கொண்டவர், சிரமத்துடன் நடந்து சென்று குடிசைத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். 'புள்ளை! அந்த மான் கொடியை எடுத்து இதிலை நல்லாய் இறுக்கி ஒரு கட்டுப் போடு!' என்று அவர் சொன்னதும், பதஞ்சலி கொடியை எடுத்துக் கெண்டைக் காலில் இறுகக் கட்டினாள். அப்போது அவளுடைய விரல்கள் நடுங்கியதைக் கண்ட உமாபதியார், 'பயப்பிடாதை மோனை! எனக்கொண்டும் செய்யாது! நீ ஓடிப்போய் மலையரைக் கூட்டிக்கொண்டு வா!' என்றதும் பதஞ்சலி மலையர் வீட்டை நோக்கி விரைவாக ஓடினாள்.

  இரண்டுங்கெட்ட நேரத்தில் பதைபதைக்கப் பதஞ்சலி ஓடி வருவதைக் கண்ட பாலியார் பயந்து போனாள். 'என்ன புள்ளை?' என அவள் கேட்கமுன்பே, 'அப்புவுக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதம்மா!' என்று தேம்பியழத் தொடங்கிவிட்டாள் பதஞ்சலி. பட்டிக்குள் எருமைக் கன்றுகளைக் கட்டிக்கொண்டிருந்த கதிராமன், பதஞ்சலி சொன்ன செய்தியைக் கேட்டு உமாபதியரின் குடிசையை நோக்கிப் பாய்ந்து சென்றான். 'தம்பி மணியம்! ஓடிப்போய்க் கொப்புவைக் கூட்டிக்கொண்டு வா! காடியர் வீட்டிலை இருப்பர்!' என்று பாலியார் மணியனை நோக்கிக் கூறிவிட்டு, பதஞ்சலியுடன் உமாபதியாரின் வீட்டுக்கு வேகமாகப் புறப்பட்டாள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற ராசு பயந்தவனாகப் பதஞ்சலியையும் தாயையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டான்.

  உமாபதியாருக்கு நாக்குத் தடிக்க ஆரம்பித்துவிட்டது. அங்கு முதலில் சென்ற கதிராமன், விளக்கை எடுத்துவந்து கடிவாயைக் கவனித்தான். நான்கு பற்களுமே மிக ஆழமாக இறங்கியிருந்ததைக் கண்டதும் அவனுடைய முகம் இருண்டது. 'என்ன பாம்பு?' என்று கேட்டதற்கு, 'சர்ப்பம்!' எனத் திக்குத் திணறிக் கூறினார் உமாபதியார். இதற்குள் பதஞ்சலியும் பாலியாரும் அங்கு வந்துவிட்டனர். பதஞ்சலி வெளிறிய முகத்துடன் கதிராமனை நோக்கினாள். 'ஒண்டுக்கும் பயப்பிடாதை! நான் போய் ஒதியமலை வைத்தியத்தைக் கூட்டிக்கொண்டு வாறன்' என்று அவன் புறப்பட்டதைக் கண்ட பதஞ்சலிக்கு வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது.

  காடியரின் வீட்டு விறாந்தையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கோணாமலையரிடம், ஓடிவந்த மணியன் 'உமாபதியருக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதாம்! உங்களை உடனை வரட்டாம்!' என்றதும், 'என்னடா கடுமையாய்க் கடிச்சுப் போட்டுதே? நீ ஓடிப்போய் வீட்டு மாடத்துக்கை பார், புதூர் மருந்து ஒரு சரை கிடக்குது, எடுத்துக்கொண்டு வா!' என மணியனுக்குக் கட்ளை பிறப்பித்துவிட்டு, உமாபதியாரின் குடிசையை நோக்கி விரைந்தார் மலையர்.

  அங்கே குடிசைத் திண்ணையில் படுத்திருந்த உமாபதியாரின் தலைமாட்டில் பாலியாரும், காலருகே பதஞ்சலியும் உட்கார்ந்திருந்தனர். பதஞ்சலியின் முகத்தில் களையே இல்லை. எதற்கும் இலகுவில் உணர்ச்சி வசப்பட்டுப்போகும் அவள் உமாபதியாரின் நிலையைக் கண்டு மிகவும் பயந்து போயிருந்தாள். அவருடைய உடலில் வினாடிக்கு வினாடி விஷம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. நிலைமையை அவதானித்த கோணாமலையர், 'கதிராமன் எங்கை?' என்று கேட்டார். 'அவன் வைத்தியத்தைக் கூட்டிக் கொண்டுவர ஒதியமலைக்குப் போட்டான்' என்று பாலியார் சொன்னதும், 'இந்த ரா இருட்டியிலை என்னண்டு  உந்தக் காட்டுக்காலை போகப்போறான்.... கையிலை லைற்றுக் கொண்டு போனவனே?' என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மணியன் காகிதப் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தான். குடத்தடிக்குச் சென்று வாயைக் கொப்பளித்துவிட்டுப் பயபக்தியுடன் புதூர் நாகதம்பிரான் கோவிலிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை எடுத்து உமாபதியரின் உச்சியிலும், கடிவாயிலும் பூசிவிட்டு அவரின் வாயினுள்ளும் சிறிது போட்டார்.

  பதஞ்சலி உமாபதியரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய முகத்திலே எந்தவிதச் சலனமுமில்லை. விழிகள் மெல்ல மெல்ல மேலே சொருகிக் கொண்டிருந்தன. அவளுக்கு நினைவு தெரிந்த நாள்முதல் மார்பிலும் தோளிலும் அவளையேந்தி அவளுக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்த அவளுடைய அப்பு பேசாமல் கிடப்பதைக் கண்டு அவளின் மனம் வெந்து வெதும்பியது!

  உமாபதிக்கு அவர்கள் பேசிக்கொள்பவை எங்கோ வெகு தொலைவில் கேட்பது போலிருந்தது. அவரால் எதையும் தொடர்ச்சியாகக் கவனிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு அந்தகாரம் அவரை வந்து மூடுவது போலிருந்த அந்த வேளையிலும் பதஞ்சலியின் முகம் அவர்முன் தோன்றி 'என்னை விட்டிட்டுப் போகாதை அப்பு! நீயும் போனால் எனக்கு ஆர் இருக்கினம்?' என்று தேம்பியழுவது போலிருந்தது. அவளுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டுமென்று அவர் உன்னியபோதும் எதுவுமே பேசமுடியவில்லை. வாய் நிறைய நாக்குத் தடித்துப்போய்க கிடந்தது.

 8.

அமாவாசை இருள்....! தண்ணிமுறிப்புக் குளத்துக்கு மேலிருந்த காட்டினூடாகச் செல்லும் வண்டிப்பாதையில் கதிராமன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். மையிருட்டைக் கிழித்துச் சென்றது அவனுடைய கையிலிருந்த ரோச்சின் ஒளி. காட்டு யானைகளும், கரடிகளும் உலவும் அந்தக் காட்டினூடாக இந்த இருட்டிலே தனியே போகும் துணிவு கதிராமன் ஒருவனுக்குத்தான் இருக்கமுடியும். வாழ்நாளெல்லாம் அப் பகுதிக் காடுகளிலே திரிந்த அவனுக்குக் காட்டில் செல்வதென்றால் மீன்குஞ்சு தண்ணீரில் நீந்துவது போன்றதுதான்! அவ்வாறிருந்தும் இப்போ அவனுடைய புலன்களெல்லாம் எந்த நிமிஷமும் ஆபத்தை எதிர்நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தன.

  தண்ணிமுறிப்பிலிருந்து ஆறுகல் தொலைவிலிருக்கும் ஒதியமலை என்னும் சிறிய கிராமத்தில் ஒதியமலை வைத்தியம் என்ற பெயர்பெற்ற சேனாதியார் இருந்தார். அவர் மனம் வைத்து வைத்தியம் செய்வதற்கு முன்வந்துவிட்டால் எந்தக் கொடிய விஷமும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்பர். விஷகடி வைத்தியத்தில் அத்தனை திறமைசாலி!

  கதிராமனுடைய ரோச் வெளிச்சத்தில் பாதையைக் குறுக்கறுத்துச் செல்லும் காட்டு விலங்குகளின் கண்கள் தீப்பந்தங்கள் போல் ஒளிர்ந்தன. பச்சைப் பளீரென ஒளிவிடும் கண்கள் மான்களுக்குரியவை. பழுப்பு நிறமாக மங்கித் தெரிபவை முயல், மரநாய்களுக்குச் சொந்தம். இவ்வாறு தரம்பிரிக்கப் பழகியவன் கதிராமன்.

  ஒதியமலையை நெருங்கும் சமயம் பாதையின் நடுவே நெருப்புத் துண்டங்கள் போன்று இரண்டு விழிகள் சுடர் விட்டபோது, கதிராமன் சட்டென்று நின்று, சூய்! என்று அதட்டினான். பாதையின் நடுவே குந்திக் கொண்டிருந்த ஒரு சிறுத்தைப்புலி எகிறிப் பாய்ந்து காட்டுக்குள் மறைந்தது.

  கதிராமன் ஒதியமலைக் கிராமத்தினுள் நுழைந்த வேளை அங்குள்ள மக்கள் நித்திரைக்குச் சென்றிருந்தனர். ஊர் நாய்கள் இவனுடைய வரவு கண்டு இடைவிடாது குரைத்தன. அவன் வைத்தியரின் வளவுக்கு முன்னால் போய் நின்றபோது, அவர் வீட்டு நாயும் பலமாகக் குரைக்க ஆரம்பித்தது. நாய்களின் குரைத்தல் கேட்டு விழித்துக்கொண்ட வைத்தியர் சேனாதியார் விஷயத்தை ஊகித்து அறிந்து கொண்டார். அர்த்தராத்திரியிலும் அவருடைய உதவியை நாடி வேற்றூர் மக்கள் வந்து எழுப்புவது மிகவும் சாதாரண விஷயம்.

  எழுந்து விளக்கை ஏற்றிய சேனாதியார், 'ஆர் மோனை அது?' என்று கூப்பிட்டதும், கதிராமன் உள்ளே சென்று திண்ணையில் உட்கார்ந்து கொண்டான். கையில் விளக்கை எடுத்துவந்து அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார் ஒதியமலை வைத்தியர். விஷகடி வைத்தியரிடம் முதலில் எதுவுமே கூறக்கூடாது என்ற வழக்கம் கதிராமனுக்கு நன்கு தெரியும். எனவேதான் அவன் ஒன்றுமே பேசாமலிருந்தான். அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தபின், விளக்கைத் திண்ணையின்மேல் வைத்துவிட்டு ஒரு சுருட்டை எடுத்துப் பற்றிக் கொண்டார் சேனாதியார். நெருப்புக் குச்சியின் சுவாலை ஒளியில் அவருடைய முகத்தைக் கவனித்தான் கதிராமன். அதில் எந்தவிதக் குறிப்பையுமே அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. நன்றாகப் பற்றிக்கொண்ட சுருட்டைக் கையில் எடுத்துக் கொண்டவர் புகையை ஊதிவிட்டு, 'நாலு பல்லும் வாளமாய்ப் பட நாகம் தீண்டிப் போட்டுது! இனி நாமொன்றும் செய்வதிற்கில்லை" என அமைதியாகச் சொன்னபோது, கதிராமன் உள்ளம் குன்றிச் செயலிழந்து போனான்.

  ஒதியமலை வைத்தியம் கையை விரித்து விட்டாரேயானால் இனிமேல் ஒன்றும் செய்வதிற்கில்லை என்பது கதிராமனுக்கு நன்கு தெரியும். இருப்பினும், 'நீங்கள் ஒருக்கா வந்து பாருங்கோவன்' என்று கெஞ்சினான்.

  'தம்பி! நான் வந்து ஒரு பிரயோசனமும் இல்லையெண்டு உனக்கு நல்லாயத் தெரியும்' என அவர் உறுதியாகக் கூறினார்.

 கதிராமன் கையில் லைற்றையும் எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிமுறிப்பை நோக்கி ஏமாற்றத்துடன் நடக்க ஆரம்பித்தான. சற்று ஓய்ந்திருந்த ஊர்நாய்கள் கோஷ்டியாகக் குரைத்து அவனை வழியனுப்பி வைத்தன.

வளரும் 

******************************************************

நிலக்கிளி: அத்தியாயம் - 09-10

வவுனியா மாவட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்திருந்த ஒதியமலை வைத்தியர் சேனாதியாருக்குக் கொக்கிளாய், கொக்குத்தொடுவாயிலிருந்து முறுகண்டியீறாகப் பலபேரைத் தெரியும்.

ஏறக்குறையப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் தண்ணீருற்றில் வைத்தியம் செய்வதற்காக சேனாதியார் சென்றிருந்தபோதுதான், உமாபதியரின் மகள் முத்தம்மா கிணற்றிலே விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்திருந்தது. அந்த ஈமச் சடங்குகளிலே கலந்து கொண்டபோது சேனாதியார் முத்தம்மாவின் கதையைக் கேள்விப்பட்டார்.

முத்தம்மாவுக்குத் தாய் இல்லை. உமாபதியர்தான் அவளுக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து வளர்த்து வந்தார். உமாபதியார் வேலைக்குப் போகும் நேரமெல்லாம் முத்தம்மா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். அந்தத் தனிமையையும், அவளின் பருவத்தையும் பயன்படுத்திக்கொண்டு அவளைக் கெடுத்துவிட்டான் ஒருவன். மலேரியாத் தடுப்புக்கு நுளம்பெண்ணெய் விசிறவரும் ஆட்களை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தன் அவன். அவனுடைய அழகான தோற்றமும், கம்பீர தோரணையும், ஆசை வார்த்தைகளும் கிராமத்துப் பெண்ணான முத்தம்மாவை மிகவும் கவர்ந்தன. அவனோ அவளுடைய பருவத்தைப் பதம் பார்த்துவிட்டு, விஷயம் முற்றியதும் தலைமறைந்துவிட்டான். ஆனால் அவன் முத்தம்மாவின் வயிற்றில் விட்டுச்சென்ற வித்து முளைக்க ஆரம்பித்தது. நடந்ததை அறிந்கொண்ட உமாபதியார் கொதித்தார்,குமுறினார், மகளை நையப்புடைத்தார். ஈற்றில் அவனைத் தேடிப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தார். ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த கல்வியறிவில்லாத உமாபதியாரால் என்னத்தைச் செய்துவிட முடியும்? மனம் சோர்ந்துபோய்த் திரும்பி வந்தார்.

முத்தம்மா அவமானத்தால் குன்றிப் போனாள். அவளையே உரித்துப் படைத்துக்கொண்டு தங்க விக்கிரகம் போன்றதொரு பெண் அவளக்குப் பிறந்தாள். முத்தம்மா தன்னுடைய தாயாரின் பெயரையே அந்தக் குழந்தைக்கு வைக்க வேண்டுமென விரும்பியபோது, உமாபதியார்தான் பதிவுகாரரிடம் சென்று பதஞ்சலி என்ற பெயரைப் பதிந்தார்.

பதஞ்சலி வளர்ந்தாள். அவளடைய தளர்நடை அழகிலும், மழலை மொழியிலும் மனதைப் பறிகொடுத்து நடந்தவற்றை மறக்கப் பழகிக் கொண்டார் உமாபதியார். ஆனால் முத்தம்மாவுக்கு, தன் வாழ்வே அஸ்தமித்துவிட்டது போன்றதொரு உணர்வு.

காலத்தைவிட இவ்வகைப் புண்களை ஆற்றுவதற்குச் சிறந்த மருந்து எதுவுமேயில்லை. சிறிது சிறிதாக மனப்புண் ஆறிக்கொண்டுவர, முத்தம்மாவிடம் இளவயதுக்கேயுரிய வாளிப்புத் திரும்பிவிட்டது. நல்ல அழகியான அவள், சீவிமுடித்துப் பொட்டிட்டுப் புனிதமாக இருந்தது இனத்தவர்க்கும்,அயலவர்க்கும் பொறுக்கவில்லை. ஒருத்தி வாழ்வில் கெடவேண்டி நேரிட்டுவிட்டால், சதா தன் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு, மூலைக்குள் அடைந்து கிடந்து வேதனைப்பட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் முத்தம்மாவோ காலப்போக்கில் தானடைந்த வேதனையை மறந்து மீண்டும் சிரிப்பதற்கு முயன்றபோது அயலவர்கள் தாறுமாறாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே கெடுக்கப்பட்ட ஒரு இளம்பெண்அதுவும் தந்தையைத் தவிர வேறு நாதியற்றவள், சிரித்துச் சந்தோஷமாக இருக்க முற்பட்டபோது, மழைக் காளான்கள் போன்று பல கதைகள் முளைத்தெழுந்து நாற்றம் பரப்பின.

முத்தம்மா இந்த விஷயங்கள் தெரியாமல், குழந்தையையும் தூக்கிக்கொண்டு, குமாரபுரம் சித்திர வேலாயுதர் கோவிற் திருவிழாவுக்குப் போய்விட்டாள். இளமங்கையான அவள், திருவிழாவுக்குப் போக ஆசைப்பட்டது குற்றமா? அல்லது அங்கு போகையில் தன்னை ஏதோ கொஞ்சமாவது அலங்கரித்துக் கொண்டது குற்றமா? ஊர்ப்பெண்கள் வெகுண்டு எழுந்துவிட்டார்கள், ஏதோ தங்களுடைய கற்பே பறிபோனதுபோல்! திருவிழாக் கும்பலில் பெண்கள் மத்தியில் குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாய் இருந்துகொண்டு, வாணவேடிக்கையைப் பார்த்துத் தன் முத்துப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டாள் முத்தம்மா. அவ்வளவுதான்!

ஏற்கெனவே மனம் புழுங்கிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்துப் பெண்கள், 'வம்பிலை ஒண்டு பெத்தது காணாமல், மற்றதுக்கும் ஆள்பிடிக்க அலங்காரி வெளிக்கிட்டிட்டா!" என்று முத்தம்மாவைத் தமது நெருப்புக் கொள்ளிகள் போன்ற நாக்குகளால் சுட்டுத் தீய்த்துவிட்டார்கள். அப் பெண்களின் சொல்லம்புகளின் கொடுமையைத் தாங்கமுடியாது, கண்ணீரும் கம்பலையுமாகத் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டவளை மறுநாள் காலையில் பிணமாகத்தான் கண்டார்கள் அண்டை அயலிலுள்ள பத்தினிப் பெண்டிர்கள்.

அவளுடைய சாவு உமாபதியாரின் நெஞ்சிலே பெரியதொரு இடியாக விழுந்துவிட்டது. அந்தப் பேரிடியைத் தாங்க இயலாது அவரும் அப்பொழுதே போய்விட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் முத்தம்மா விட்டுச்சென்ற அந்த இளங்குருத்து, 'அப்பு! எணையப்பு! அம்மாவை எங்கை கொண்டு போகினம்?" என்று கல்லுங்கரையக் கேட்டபோதுதான் அவர், தான் வாழவேண்டிய அவசியத்தை உணர்ந்தார். வாழ்வில் எத்தனையோ அடிகளைத் தாங்கிக்கொண்ட அவர்ää இதையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டார்.

நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்ட இந்த நேரத்தில் வைத்தியம் சேனாதியார், உமாபதியின் பேத்தி பதஞ்சலியின் நிலை என்னவாகும் என்று யோசித்துக்கொண்டே மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

10.

'பதஞ்சலி இனி என்ன செய்யப்போகின்றாள்?" என்ற வினா இன்னொரு நெஞ்சையும் குடைந்து கொண்டிருந்தது. ஒதியமலையிலிருந்து தண்ணிமுறிப்பை நோக்கிச் செல்லும் காட்டுப் பாதையில் நடந்துகொண்டிருந்த நெஞ்சுதான் அது!

பதஞ்சலி இனி என்ன செய்ப் போகிறாள்? அப்பு! அப்பு! என்று சதா வாஞ்சையுடன் சுற்றிவரும் அவள் இனி யாரைத் தன் வாய்நிறைய அப்பு என்று அழைக்கப் போகின்றாள்? என்று அவனுடைய நெஞ்சு வேதனைப்படவே செய்தது. ஆனாலும் அந்த இருளோடு இருளாகக் கலந்து தண்ணிமுறிப்பை நோக்கி விரைந்துகொண்டிருந்த அவனுடைய முகத்தில்மட்டும் எந்த வேதனையும் தெரியவில்லை. அவனுக்குத் தன் வேதனையைக் காட்டிப் பழக்கமேயில்லை. நிலம் தெரியாத அந்த வேளையில் அவன் உமாபதியரின் குடிசையை நெருங்கவும், பதஞ்சலியின் பரிதாபமான ஓலம் உயர்ந்து ஒலிக்கவும் சரியாக இருந்தது.

'என்னை விட்டிட்டுப் போட்டியே என்ரை அப்பு!" என்று அழுத அவளுடைய கதறல் அவனுடைய நெஞ்சை உருக்கியது. படலையைத் திறந்துகொண்டு அவன் உள்ளே போனதுதான் தாமதம், பாலியாரின் அணைப்பில் கதறியழுது கொண்டிருந்த பதஞ்சலி, பாய்ந்து சென்று கதிராமனுடைய காலில் விழுந்து கோவென்று கதறினாள். கதிராமன்  திண்ணையில் வளர்த்தியிருந்த உமாபதியாரின் சடலத்தையே அசையாது நோக்கினான். அங்கு வந்த நாள்முதல் அவனுடன் பற்பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்ட அந்த உழைப்பாளியின் உடல் ஓய்ந்துபோய்க் கிடந்தது.

அழுதழுது குரல் கம்மிப் போயிருந்த பதஞ்சலி, மேலும் அழமுடியாமல் சோர்ந்து போனாள். கலைந்த கூந்தலும், சிந்திய மூக்குமாக அவளைப் பார்க்கையில் பாலியாருக்கு வயிறு பற்றியெரிந்தது. 'இனி என்ன மோனை செய்யிறது! நாங்கள் இருக்கிறந்தானே, நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை!" என்று அவள், அடிக்கடி பதஞ்சலியை ஆதரவோடு தேற்றிக்கொண்டாள்.

பிற்பகல் இரண்டு மணிக்கும் மேலாயிற்று. குமுளமுனைக்குச் சென்ற கதிராமனும் பொருட்களுடன் திரும்பிவிட்டான். இழவுச் செய்தி கூறப்போயிருந்த மணியனும் வந்துவிட்டான். 'என்ன உமாபதியின்ரை ஆக்களுக்கெல்லாம் அறிவிச்சியே?" என்று மலையர் கேட்டபோது  'ஓமப்பு! ஆனால் அவையள் வாற நோக்கத்தைக் காணேல்லை!" என்றான் மணியன்.

'ம்ம்... சரி, சரி... அப்ப பிறகேன் நாங்கள் வைச்சுப் பாத்துக் கொண்டிருப்பான்.... பொழுது படக்கிடையிலை எல்லாத்தையும் முடிச்சுப் போடுவம்!" என்று கூறியபடியே அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்தார் மலையர். அவருடைய முடிவைக் கரடியரும் அங்கு கூடியிருந்த மற்றவர்களும் ஆமோதிக்கவே விஷயங்கள் துரிதமாக நிறைவேறின.

பிரேதத்தைத் தூக்கிப் பாடையில் வைக்கும் வேளையில்தான் தண்ணீருற்றிலிருந்து இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் உமாபதியரின் ஒன்றுவிட்ட சகோதரர். மற்றவர் அடிக்கடி அங்கு வந்துபோகும் மம்மதுக் காக்கா.

தகனக் கிரியைகளை முடித்துக்கொண்டு அவர்கள் திரும்பி வருகையில் பொழுது சாய்ந்து விட்டது. இதற்குள் பாலியார் பதஞ்சலியை வாய்க்காலில் முழுகச் செய்து,  உடை மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டு, அன்றைய இரவுக்கான உணவைத் தயாரிப்பதற்குத் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். கதிராமனுடைய தம்பி ராசு குடிசைக்குள் பதஞ்சலியுடன் இருந்தான். அவனுடைய சின்ன உள்ளத்தில், தான் அந்நேரம் பதஞ்சலியுடன் இருக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதால் பாயில் அவளுடன் ஒண்டிக் கொண்டிருந்தான். எல்லையற்ற துன்பம் நேர்கையில் யாருடனாவது அணைந்து கொண்டிருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் ஆறுதலாக இருக்கும் என்பதைப்போல், பதஞ்சலியும் ராசுவை அணைத்தவாறே அமர்ந்திருந்தாள். அவளது நினைவுகள் ஒவ்வொன்றும் உமாபதியையே சுற்றி வந்தன. அவர் உபயோகித்த பொருட்கள், அவர் அவளுக்கு ஆசையுடன் வாங்கிக் கொடுத்தவைகள், என்பவற்றைப் பார்க்கையில் மீண்டும் அவளுடைய விழிகள் கண்ணீரினால் நிறைந்தன.

வளரும் 

நன்றி : http://www.appaal-tamil.com



Comments

  1. நான் படித்திருக்கின்றேன்! நிலக்கிளி, குமாரபுரம் அனைத்தும் ஈழத்தமிழ் எழுத்துக்கே பெருமை சேர்க்கும்! நிலக்கிளி நாவல் மூலம் அந்த மக்களின் மண் வாசனையையும் அறிய முடிந்தது, இப்போது தொடராய் மீண்டும் படிக்க கிடைத்ததிலும் மகிழ்ச்சி. தொடருங்கள்... தொடர்வோம்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஷா .அ .பாலமனோகரன் எமது இலக்கியப்பொக்கிஷம் .இன்று அவர் பலரால் மறக்கப்பட்டு விட்டார். .இளைய சந்ததிக்கு அவரை மீள்நினைவுப்படுத்தவே இந்தத்தொடரை ஆரம்பித்தேன் .இந்த மண்ணும், அதன் புழுதிவாசமும் ,கதைமாந்தர்களது உயிர்ப்பும் எமக்கு மீண்டும் கிடைக்காது. ஆனால் நினைவில் மட்டுமே எங்கோ ஓர் ஓரத்தில் இருக்கின்றன .தொடருடன் தொடர்ந்து இருங்கள் நன்றி.

      Delete

Post a Comment